Friday, December 2, 2011

டிசம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து வருகை கால இரண்டாம் ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 1

1. முன்னுரை
திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: 2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி வாசகங்கள், கடவுளுக்கு ஆயத்தமாகுங்கள் என்று சொல்கிறது -- அவர் நமக்கு எது கொடுக்க விரும்பினாலும், நமக்காக எதனை செய்தாலும், நம்மை எது வேண்டுமானாலும் செய்ய சொன்னாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது; அவரிடம் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது, அதன் மூலம் நாமெல்லாம் உண்மையான அர்த்தமுள்ள கடவுளின் குழந்தைகளாக , இவ்வுலகை மீட்ட கிறிஸ்துவோடு இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இனைந்தால் தான், நமது இயல்பான ஆற்றலுக்கான கடமையை முழுதும் நல்வழிக்கும், பரிசுத்த பாதைக்கும் நாம் நிறைவேற்ற முடியும்.
நாம் சரியான பாதையில் தான் இருக்கிறோம் என்பது நமக்கு எப்படி தெரிவது? அந்த பயனத்தின் கணிகளை , அதன் பலன்களை கொண்டு நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பது நாம் அறியலாம். பரிசுத்த வழிகள் எப்பொழுதுமே நல்ல கனிகளை தான் கொடுக்கும்.
கிறிஸ்துவின் வருகை காலம் நமக்கு கிறிஸ்துமஸ்ஸுக்கு தயாராகும் காலமாகும். மேலும், கடவுளை நாம் மீண்டும் புதிதாக சந்திக்கும் நேரமாகும். நமது பாவங்களை கழுவ நமக்கு இது நல்ல சமயாமாகும், கடவுளோடும் மீண்டும் இணைந்து , யேசுவை பின் சென்று பரிசுத்த பாதையில் செல்லுங்கள். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், கிறிஸ்துமஸ் ஒரு சாதாரண விடுமுறையாக தான் இருக்கும். நமது வாழ்வில் பயிர் செய்ய முடியாத நிலமாக இருந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாமல் இருக்கும். நம்மிடம் ஒன்றும் இல்லாதது போல நாம் நினைப்போம், அடுத்த வருடம் நம்மிடம் ஒன்றும் இல்லை என்று நினைப்போம்.


கடவுளின் பாதையை செம்மையாக்குங்கள்! அவர் உங்களுக்கு கொடுப்பதற்காக அதிகமான அன்பை வைத்திருக்கிறார்! உங்கள் காயங்களை குணப்படுத்தவும், அதிக சந்தோசம் கொடுக்கவும் , உங்கள் தரிசான நிலத்தை கடவுளுக்காக விரைவு சாலையாகவும் மாற்றா கடவுள் தயாராய் வருகிறார்!. நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று பாவ மன்னிப்பு கேட்டு , இயேசு உங்கள் இதயத்தில் சுலபமாக செல்ல பாதையை அகலமாக்குங்கள். அதன் மூலம், மிக விரைவாகவும், மகிமையுடன் உங்களிடத்தில் வருவார். எல்லா மனிதர்களும், புல்லை போல வலிமையற்றவர்கள் தான், மேலும், நமது புகழ், பூக்கள் மலர்ந்து வாடுவது போல ஆகிவிடும். கடவுளின் மகிமை மட்டும் தான் எப்பொழுதும் புகழோடும், கீர்த்தியோடும், புகழொளியோடும் இருக்கும்.

இந்த கிறிஸ்து வருகை காலத்தில், உங்களின் போரட்டங்களும், ப்ரச்னைகளும் என்ன? அதற்கு தான் இயேசு இறைசேவை செய்ய விரும்புகிறர், இந்த ப்ரச்னைகளில் தான், உங்களை பாவங்கள் தாக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் எது வெல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது? எந்த செயல்கள், நல்ல பலன்களை கொடுக்கிறது? பஞ்ச நாட்களில் ஓடி போய் விட கூடிய செயல்களாக இருக்கிறது? இன்றிலிருந்து இன்னும் 100 வருடங்களுக்கு அந்த செயல்கள் ப்ரதி பலனை கொடுக்குமா?
கடவுள் உங்களுக்கு சில திறமைகளை கொடுத்து, அந்த திறமைகளை கொண்டு நீங்கள் சில முக்கியமான வேலைகளை செய்ய சொல்கிறார். கண்டிப்பாக, நீங்கள் பல பலன்களை கொடுக்க கூடிய முழுமையான வாழ்வு வாழ உங்களை அழைக்கிறார். அதன் மூலம், என்றென்றும் ஒரு வேறுபாட்டை காட்ட முடியும். நாம் அன்னை மேரியை போல கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொடுக்க நாம் அழைக்க பட்டிருக்கிறோம். இயேசு நம் வாழ்வில் மிக பெரிய வித்தியாசத்தை கொண்டு வர நம்மிடம் நேராக வர ஆசைபடுகிறார்.

உங்கள் நேரத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால், நற்கருணை அருட்சாதனத்திற்கு சென்று , மனந்திருந்தி, கடவுளின் பாதையை ஆயத்தமாக்குங்கள். உங்கள் மூலம் மிகப்பெரிய நித்திய வாழ்வில் மிக பெரிய வேறுபாட்டை காட்ட இயேசு ஆசைபடுகிறார்.

© 2011 by Terry A. Modica

Friday, November 25, 2011

நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 27 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17,19b;64:2-7
Ps 80:2-3,15-16,18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13


மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35 அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37 நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். '
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறு கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறாக நாம் தொடங்குகிறோம். உங்கள் வாழ்வில் உள்ள முக்கியமான ரொம்பவும் நெருங்கிய நபர்களுக்கு உங்கள் ப்ரியத்தை எப்படி கான்பிக்க போகிறோம் என்றவாறே , அவர்களுக்கு பிடத்தமான அன்பளிப்பை , அவர்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும் என்று இந்த கிறிஸ்துமஸ் காலத்தை தொடங்குங்கள். ஆனால் அவர்களது வாழ்க்கையில் நல்லதோரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?


இயேசு பிறந்த நாளை நாம் கிறிஸ்துமசாக கொண்டாடுவதால், அவருக்கும் ஒரு அன்பளிப்பு கொடுப்போம். மற்றவர்களை விட கடவுளுக்கு தான் நாம் அதிக அன்பளிப்பு கொடுக்க வேண்டும், ஏற்கனவே பல செல்வங்களை வைத்துள்ளவர்களுக்கு இன்னும் அன்பளிப்பு ஏன் கொடுக்கிறீர்கள்.? இயேசு என்ன அன்பளிப்பு கொடுத்தால், அது என்றென்றும் நிலைத்திருக்கும்? அதே அன்பளிப்பை வேறு யாரும் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். அவரிடம் இல்லாத அன்பளிப்பை உங்களால் கொடுக்க முடியுமா? இயேசுவிடம் கொடுக்க வேண்டியதை இன்னும் என்ன வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? என்ன திறமை அல்லது சேவை அல்லது உங்கள் வாழ்வில் மாற்றம் அவருக்கு பிடித்தமானதாக இருக்கும்?
இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்தில், கடவுள் நமது தந்தை என நினைவுறுத்துகிறது. பதிலுரை பாடல் கடவுளிடம் நம்மை திருப்ப வேண்டும் என ஜெபமாக சொல்கிறது. இரண்டாவது வாசகமோ கடவுள் நமக்கு செய்த எல்லாவற்றிர்கும் நன்றி சொல்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும் நீங்கள் என்ன கைமாறு செய்ய போகிறீர்கள்?


இன்றைய நற்செய்தியில், நாம் தயாராக/ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவுறுத்தபடுகிறது. - கிறிஸ்துவின் வருகைக்காக , ஏதாவது ஒன்றை செய்து வித்தியாசத்தை காமிக்க வேண்டும் . இது ஒன்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை குறிப்பதல்ல. நாம் இறுதி மூச்சை விடும் நேரம் போன்றானது இந்த கிறிஸ்துமஸ். கிறிஸ்துவாக இந்த கிறிஸ்துமஸ்சில் உன்னிடம் வருவதற்கான வருகை இது. இப்பொழுதே , இன்றே உங்களிடம் கிறிஸ்து வருகிறார்.

உங்களிடமிருந்து புதிதாக ஒன்றை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் அதனை உங்களிடம் கொடுக்கும்பொழுது, நிங்கள் சரியானதை செய்கிறீர்களா? (முதல் வாசகத்தில் கூறியிள்ளது போல) , அவரின் ஆன்மிக அன்பளிப்புகளை நீங்கள் உபயோகிப்பதை கிறிஸ்து கான்பாரா? (இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல) நீங்கள் எதற்கும் தயாரக இருக்கிறீர்களா? (நற்செய்தியில் உள்ளது போல ).


கிறிஸ்துவின் வருகை காலம் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்புகளை கொடைகளை நாம் நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. அதே போல, அவருக்கும் நாம் கொடுக்கும் அன்பளிப்பும் அவரிடத்தில் இல்லாத ஒன்றாக இருக்க நாம் இக்காலத்தை உபயோகிக்க வேண்டும். இது தான் என்றென்றும் வித்தியாசமாக இருக்கும், நமக்கும், அவருக்கும்.

© 2011 by Terry A. Modica

Friday, November 18, 2011

நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து அரசர்
Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)
நாம் ஆயர்களை என்றுமே அரசர்களாக மன்னர்களாக நினைப்பதில்லை. ஆனால் இன்றைய நற்செய்தியோ, நமது நல்லாயன் இயேசுவின் ஆற்றலை, சக்தியை இங்கே விளைக்கி சொல்கிறது. மன்னர்கள் தனது படை பலத்தினால், தனது ராஜ்ஜியத்தை பெரிதாக்கி, தனது ஆட்சியை நல் வழியில் நடத்துவார்கள். அதனால் தான் இயேசு சொல்கிறார். "சிறியோர்களுக்கு நீங்கள் செய்த அனைத்தும் எனக்காக செய்தீர்கள்".

எடுத்து காட்டாக, நமது நல்லாயனும், மன்னருமாகிய இயேசு பசியாய் இருப்போருக்கு உணவளிக்க விரும்பினால், அவர் இறையரசிடமிருந்து எப்படி கொடுப்பது? நம்மில் சிலருக்கு அதிகமான உணவை கொடுத்து , யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்.


அரசரின் கட்டளைகளை நாம் செய்யா விட்டால் என்ன ஆகும்? பசியாய் இருப்போர் , கடவுள் தயாள குணமுடையவர் என்று நினைப்பார்களா? கடவுள் என்ன செய்ய சொன்னாரோ, அதனை நாம் செய்யும் பொழுது தான், அவர்கள் கடவுள் இரக்கமுள்ளவர் என்று நினைப்பார்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நினைத்து பாருங்கள். ஒவ்வொருவரும், நமக்கு கடவுள் நல்லவர் என்று கான்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளனர்.

உங்களுக்கு அதிகம் பிடிக்காதவர்கள் யார்? அவர் உங்களை கோபப்படுத்தியிருக்கலாம் அல்லது பயமுறுத்தியிருக்கலாம், அல்லது காய்ப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் இருக்கட்டும்: அவர் எதனை அடைய ஆசைப்பட்டார்? உங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் பரிசுத்த ஆவியை கேளுங்கள் , அந்த நபரை நன்றாக கவனித்து, அவர் அடிமனதில் என்ன வலியோடும், பயத்தோடும் இருக்கிறார் என்று அறிய முற்படுங்கள்.


அவருக்கு கொடுப்பது மாதிரி , உங்களிடத்தில் கடவுள் அளவிற்கு அதிகமாக எதனை கொடுத்திருக்கிறார் , மேலும் கிறிஸ்து அரசரிடமிருந்து நீங்கள் பெற்று அவரிடம் நமது அரசர் எவ்வளவு தாராள குணமுள்ளவர் என்று நீங்கள் கான்பிக்க வேண்டாமா?
நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை , நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் மறுக்கும் பொழுது, ஆயனிடமிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஆட்டினை போல் ஆகிறோம். மாறாக நாம் கடவுளின் பணிக்கு ஆம் என்று சொல்லி அதில் ஈடுபடும்பொழுது கடவுள் அரசரின் நல்ல விசயங்கள் எல்லா இடமும் பரவும், மேலும் நாம் எல்லோரும் ஆசிர்வதிக்கபடுவோம்.

© 2011 by Terry A. Modica

Friday, November 11, 2011

நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 13, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Proverbs 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30
தாலந்து உவமை
(லூக் 19:11 - 27)
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே qபெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்

இன்றைய நற்செய்தியில், நமக்கு கடவுள் கொடுத்த திறமைகளை, அன்பளிப்புகளை, புதைத்துவிட வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. அப்படி செய்தால், "பொல்லாதவர்களாகவும், சோம்பேறியாகவும்" நாம் இருப்போம்.

நாம் எல்லோருமே, சில புதைக்கப்பட்ட திறமைகளை கொண்டுள்ளோம். இறையரசிற்காக இன்னும் நிறைய நாம் செய்யலாம், ஆனால், நாமோ "என்னால் முடியாது, எனக்கு போதுமான திறமைகள் இல்லை" அல்லது "வேறு யாராவது என்னை விட நன்றாக செய்ய முடியும்" அல்லது "கடவுள் எனக்கு இதனை செய் என்று சொல்ல முடியாது " அல்லது " எனக்கு நேரமில்லை, பணமில்லை, எப்படி செய்வது என்று தெரியாது, உடல் நலமில்லை" அல்லது " நாம் ரிடையர் ஆகிவிட்டேன், என்னுடைய சுய தேவைகளை செய்து கொள்ள வேண்டும்" என்றும் நாம் சொல்கிறோம்.
கடவுள் கொடுத்த எதையும் வீனாக்க நாம் எந்த ஒரு சாக்கு போக்கையும் சொல்ல முடியாது, ஆனால், இது அடிக்கடி நடக்கிறது, ஏனெனில், நமது திறமைகள் இறையர்சிற்காக, திருச்சபைக்காகவும், கிறிஸ்துவை இவ்வுலகிற்கு கொண்டு செல்லவும் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை.
உங்கள் அன்பளிப்புகளும், திறமகளும் உங்களை எங்கே இட்டு செல்கிறது? இறையரசிற்கு உங்கள் திறமைகள் உபயோகபடாமல் இருக்க எது உங்களை தடுக்கிறது? இது தான் சரியான தருணம்/சமயம், உங்கள் திறமைகளை கடவுளின் திட்டத்திற்காக நாம் களமிறக்க வேண்டும்.
இறையர்சிற்காக நாம் செய்ய வேண்டிய அளவிற்கு, நமக்கு திறமைகள் உள்ளன. ஏனெனில், அந்த திறமைகள் கடவுளிடமிருந்து வருகிறது. நாமெல்லாம் அவருடைய சேவகர்கள், கடவுள் தான் நம்மால் என்ன செய்ய முடியும் என்று நிர்ணயிப்பவர். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் கூட கடவுளுக்காக செய்ய வேண்டிய வேளைகள், அதனை, அவர்கள் வேதனைகளோடு, க்ஷ்டட்தோடு செய்ய முடியும். அடிக்கடி, இவைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்த ஜெபமாகவும், இவ்வுலகில் நாம் பெறும், ஞானமாகவும் அமையும்.

"கடவுள் நன்மை செய்பவராக இருந்தால், ஏன் அவர் சாத்தானை , கெட்ட செயல்களை இவ்வுலகில் அனுமதிக்கிறார்? " என்ற கேள்வியை சிலர் நம்மிடம் கேட்டிருக்கலாம். அதற்கு பதில்: "கடவுள் இதனை அனுமதிக்கவில்லை, நாம் தான் அனுமதிக்கிறோம்!, நாம் கிறிஸ்து உடலின் ஒரு அங்கமாக இவ்வுலகில் இருக்கிறோம். அவருடைய கைகள், கால்களாக, குரலாக இருக்கிறோம். இயேசு உண்மையிலே இவ்வுலகை மோட்சமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார், ஆனால் நம்மில் பலர், நமது திறமைகளை புதைத்து விட்டு, எந்த வித்தியாசத்தை இவ்வுலகில் காட்ட வேண்டுமோ, அதை விட்டு விட்டு, நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம்.


© 2011 by Terry A. Modica

Friday, November 4, 2011

நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 6, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
Wisdom 6:12-16
Ps 63:2-8
1 Thes 4:13-18
Matt. 25:1-13

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25

பத்து தோழியர் உவமை
1 ' அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.6 நள்ளிரவில், ' இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ' என்ற உரத்த குரல் ஒலித்தது.7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ' எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள் ' என்றார்கள்.9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது ' என்றார்கள்.10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ' ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றார்கள்.12 ' அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது ' என்றார்.13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நாம் படித்தோமானால், இது பெரிய முட்டாள் தனமாக தெரியும். நாம் கிறிஸ்துவை நம்புகிறோம் - ஜெபம் செய்கிறோம்!, நமது விசுவாசத்தை வளர்க்க நேரம் செலவிடுகிறோம், விசுவாசத்திற்கான புதிய வாய்ப்புகளில் நாம் பங்கு கொள்கிறோம். இவையெல்லாம் புத்திசாலித்தனமானது. நாம் கடவுளை நம்புகிறோம் என்று சொல்கிறோம்!

ஆனால், நாம் கேட்கும் வரங்களை கேட்ட உடன் கடவுள் கொடுக்கவில்லையென்றால்? சாத்தானிடமிருந்து, கிறிஸ்து நம்மை காத்து அரவணைத்து கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைபடும்பொழுது, அது கிடைக்க வில்லை என்றால், இயேசு கிறிஸ்து எங்கே?
எப்பொழுதுமே, கடவுள் நாம் நினைக்கின்ற நேரத்தில், அவர் வருவதில்லை. சரியான நேரத்தில் தான் அவர் வருவார். கடவுள் எவ்வளவு சீக்கிரம் நம் ப்ரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நேரம் தான் சரியான நேரம் என்று நாம் நினைக்கலாம். ? ஆனால், கடவுள் அவர் எண்ணங்களின் வழி, அது சரியான நேரமாக இருக்காது!. (பிறகு ஏன் நாம் கடவுளிடம் நமது ப்ரச்னையை அவரிடத்தில் கொண்டு செல்கிறோம்? )
நாம் கேட்டது கிடைக்காத பொழுது, அதனால் நாம் நம்பிக்கை இழக்கும் பொழுது, கடவுளின் சரியான காலத்திற்கு நாம் தயாராகமல், நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று நாம் மணம் நொந்து போகிறோம். அறிவிலிகளான மணமகள்கள், அவர்களது எண்ணெய் தீருவதற்குள் மணமகன் வந்து விடுவார் என நினைத்தனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டனர். நாமும் அப்படிதான் இருக்கிறோமோ?
மேலும், கடவுளின் திட்டம் நமக்கு முரண்பாடாக இருந்தால், நாம் அதனை நம்புவதில்லை. பிறகும், நாமே நம் ப்ரச்னையை கையாள ஆரம்பிக்கிறோம்.

நாமே நமக்கு பொருத்தமான திட்டத்தை நம்ப வேண்டியதில்லை. நம்முடைய புரிதலை, நாமாக ஒன்றை நினைத்து கொள்வதும் தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிக்கு நாம் உடன்படுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கடவுளின் வழிகள் நாம் நினைத்தை விட மேலானது, அற்புதமானது என்று புரியும்.!
நமது கற்பனைக்கு எட்டாத வழியாக அது இருக்கும்.!
© 2011 by Terry A. Modica

Saturday, October 29, 2011

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Mal 1:14b-2:2b, 8-10
Ps 131:1-3
1 Thes 2:7b-9, 13
Matt. 23:1-12

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 23

மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38 - 40; லூக் 11:37 - 52; 20:45 - 47)
1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8 ஆனால் நீங்கள் ' ரபி ' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்
(thanks to www.arulvakku.com)


"இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்" இன்றைய நற்செய்தியில் உள்ள இந்த வசனத்தை வைத்து கொண்டு, ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை , அவர்கள் குருவானவர 'தந்தை' என அழைப்பதால், கண்டனம் செய்கிறார்கள். இயேசு "இவ்வுலகில் யாரையும் தந்தை என அழைக்காதீர்கள்" என்று கூறுகிறார் அப்படி என்றால், நம்மை பெற்றெடுத்த தந்தையும் சேர்த்தா? சூசையப்பரை இயேசு தந்தை என அழைத்ததில்லையா? இயேசு தச்சு தொழில் கற்று கொண்ட பொழுது, சூசையப்பரிடம் அம்மாவை திருமணம் செய்தவர் யார் என கேட்டிருக்க வாய்ப்பில்லை.
நற்செய்தியில், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்த்தோமானால், முழு அதிகார்த்தையும் நாம் படிக்க வேண்டும்: எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும். நாம் யாரையும் நம்மை விட பெரியவர் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பதை தான் இயேசு கூற வருகிறார். கடவுள் தான் பெரியவர். அவரை தவிர வேறு யாருமில்லை.

இயேசு இவ்வாறு சொல்கிறார்: "உங்களுள் பெரியவர் உங்களுக்கு தொண்டராக இருக்க வேண்டும்". மேலும் "நீங்கள் பெரியவராக இருக்க விரும்பினால், நாம் எல்லோருக்கும் தொண்டராக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார். மேலும், இன்றைய போதனையாக, நாம் மற்றவர்களை விட குறைந்தவராக நாம் நினைத்து விட கூடாது. நம் தாழ்வான மனப்பான்மையையும் போக்கவே இவ்வாறு இயேசு கூறுகிறார்.

போப்பாண்டவரை விட நீங்கள் தாழ்வானவர் இல்லை, என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் இறை சேவை செய்பவர்களுக்கெல்லாம், சேவை செய்பவர் என்று அழைக்கப்படுகிறார். மக்களின் ஊழியர் என்று அழைக்கபடுகிறார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக , போப் ஆண்டவர், எல்லோருக்கும் ஊழியம் செய்கிறார், திருப்பலி நடத்துவதாக இருந்தாலும், திருச்சபை சட்டதிட்டங்கள் தயாரிப்பதாக இருக்கட்டும், முக்கியமான முடிவாக இருந்தாலும், அவர் மக்களுக்காக செய்யும் இறை சேவை தான்


கடவுள் எவ்வளவு அதிகாரங்கள், குருக்களுக்கும், திருச்சபை தலைவர்களுக்கு கொடுத்திருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எலோருக்கும் பிடித்தமானவராக இருந்தாலும், எல்லோருமே ஒரே அளவில் தான் கடவுளால் அன்பு செய்யபடுகிறோம். எல்லோருமே கடவுளுக்கு முக்கியமானவர்கள் தான். கடவுளின் கண்கள் மூலமாக நம்மை பார்க்க கற்றுகொண்டால் தான், நமக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

© 2011 by Terry A. Modica

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

30, அக்டோபர், 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Mal 1:14b-2:2b, 8-10
Ps 131:1-3
1 Thes 2:7b-9, 13
Matt. 23:1-12

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 23

மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38 - 40; லூக் 11:37 - 52; 20:45 - 47)
1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.4 சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்.5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்;7 சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8 ஆனால் நீங்கள் ' ரபி ' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.9 இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.10 நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.12 தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்
(thanks to www.arulvakku.com)


"இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்" இன்றைய நற்செய்தியில் உள்ள இந்த வசனத்தை வைத்து கொண்டு, ப்ராடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்களை , அவர்கள் குருவானவர 'தந்தை' என அழைப்பதால், கண்டனம் செய்கிறார்கள். இயேசு "இவ்வுலகில் யாரையும் தந்தை என அழைக்காதீர்கள்" என்று கூறுகிறார் அப்படி என்றால், நம்மை பெற்றெடுத்த தந்தையும் சேர்த்தா? சூசையப்பரை இயேசு தந்தை என அழைத்ததில்லையா? இயேசு தச்சு தொழில் கற்று கொண்ட பொழுது, சூசையப்பரிடம் அம்மாவை திருமணம் செய்தவர் யார் என கேட்டிருக்க வாய்ப்பில்லை.
நற்செய்தியில், இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்த்தோமானால், முழு அதிகார்த்தையும் நாம் படிக்க வேண்டும்: எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும். நாம் யாரையும் நம்மை விட பெரியவர் என்று நாம் நினைக்க வேண்டியதில்லை என்பதை தான் இயேசு கூற வருகிறார். கடவுள் தான் பெரியவர். அவரை தவிர வேறு யாருமில்லை.

இயேசு இவ்வாறு சொல்கிறார்: "உங்களுள் பெரியவர் உங்களுக்கு தொண்டராக இருக்க வேண்டும்". மேலும் "நீங்கள் பெரியவராக இருக்க விரும்பினால், நாம் எல்லோருக்கும் தொண்டராக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார். மேலும், இன்றைய போதனையாக, நாம் மற்றவர்களை விட குறைந்தவராக நாம் நினைத்து விட கூடாது. நம் தாழ்வான மனப்பான்மையையும் போக்கவே இவ்வாறு இயேசு கூறுகிறார்.

போப்பாண்டவரை விட நீங்கள் தாழ்வானவர் இல்லை, என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் இறை சேவை செய்பவர்களுக்கெல்லாம், சேவை செய்பவர் என்று அழைக்கப்படுகிறார். மக்களின் ஊழியர் என்று அழைக்கபடுகிறார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக , போப் ஆண்டவர், எல்லோருக்கும் ஊழியம் செய்கிறார், திருப்பலி நடத்துவதாக இருந்தாலும், திருச்சபை சட்டதிட்டங்கள் தயாரிப்பதாக இருக்கட்டும், முக்கியமான முடிவாக இருந்தாலும், அவர் மக்களுக்காக செய்யும் இறை சேவை தான்


கடவுள் எவ்வளவு அதிகாரங்கள், குருக்களுக்கும், திருச்சபை தலைவர்களுக்கு கொடுத்திருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், எலோருக்கும் பிடித்தமானவராக இருந்தாலும், எல்லோருமே ஒரே அளவில் தான் கடவுளால் அன்பு செய்யபடுகிறோம். எல்லோருமே கடவுளுக்கு முக்கியமானவர்கள் தான். கடவுளின் கண்கள் மூலமாக நம்மை பார்க்க கற்றுகொண்டால் தான், நமக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

© 2011 by Terry A. Modica

Friday, October 21, 2011

23 அக்டோபர் 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

23 அக்டோபர் 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Ex 22:20-26
Ps 18:2-4, 47, 51
1 Thes 1:5c-10
Matt 22:34-40

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22

முதன்மையான கட்டளை
(மாற் 12:28 - 34; லூக் 10:25 - 28)
34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.37அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.39 ' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நம்மையும் , நமது சகோதரர்களையும் அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்ய முடியாது என்பதனை நமக்கு நினைவுபடுத்துகிறது.


நமது முழு உள்ளத்தோடும், ஆண்மாவோடும், எல்லா நேரங்களிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கடவுளை அன்பு செய்ய நமக்கு கடினமாக இருந்தால், நாம், நமது நேரத்தை நமது சுய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காகவும், நம் திட்டங்களுக்காகவும் செலவழிக்கிறோம்.


கண்டிப்பாக நாம் மற்றாவர்களை அன்பு செய்ய அவர்களோடு நேரம் செலவிட வேண்டும். நம் தேவைகளுக்காகவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும், அதன் மூலம் நாம் நம்மை அன்பு செய்வது போல மற்றாவர்களை அன்பு செய்ய முடியும். நமது தேவைகளை நாம் தான் செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் அதிகமாக இருந்தால் தான், மற்றவர்களோடு அதனை பகிர்ந்து கொள்ள முடியும், போதுமான ஆற்றல், உற்சாகம், இரக்கம், பொறுமை, இன்னும் பல நமக்கு தேவயாக இருக்கிறது. அதே போல நாம் நம்மையே , நம் தேவைகளையே பார்த்து கொண்டிருந்தால், மற்றவர்களின் தேவைகளை நாம் ஒதுக்கி தள்ளிவிடுவோம்.

அதனால் இப்போது ஒரு கேள்வி எழுகிறது: எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்து செய்ய வேண்டும்: மாறாக, கடவுளுக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? நமக்கு எவ்வளவு நேரம் செலவிடவேண்டும்? மற்றவர்களுக்காக நாம் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும், தியாகம் செய்ய வேண்டும் ?

கடவுளை முதலில் வைத்து, அவரோடு கூட உள்ள உறவிற்கு முதல் வாய்ப்பாக கொடுத்தால், நமக்கு சரியாக எதற்கு எப்பொழுதெல்லாம் நேரம் செலவிட வேண்டும் என்று தெரியும். கடவுளோடு உள்ள உறவு தான், நம்மில் இல்லாத தேவைகளை பூர்த்தி செய்யும். கடவுளோடு உள்ள நட்புறவு தான், மற்றவர்கள் மேல் அன்பை பகிர கஷ்டமாக இருந்தாலும் , நமக்கு உற்சாகம் தந்து மற்றவர்களை அன்பு செய்ய வைக்கும்.கடவுளோடு நாம் முழு நாளும் கடவுளோடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.


கடவுளை நம்பியே, அவரை சார்ந்து இருந்தால், மற்றவர்களையும், நம்மையும் நம்மால் அன்பு செய்ய முடியும். அவருடைய வழிகாட்டுதலுக்காக நாம் அவரிடம் வேண்டினால், குணப்படுத்த வேண்டினால், ஆற்றல் கொடுக்க வேண்டினால், முழு உள்ளத்தோடும், முழு ஆண்மாவோடும் அவரை அன்பு செய்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணீத்துளியும் அன்புடன் இருந்தால், நம்மால் நம்மையும் , மற்றவர்களையும் அன்பு செய்ய முடியும்.

© 2011 by Terry A. Modica

Friday, October 14, 2011

அக்டோபர் 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thes 1:1-5b
Matt 22:15-21

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 22
சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13 - 17; லூக் 20:20 - 26)
15 பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.16 தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.17 சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும் ' என்று அவர்கள் கேட்டார்கள்.18 இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, ' வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?19 வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள் ' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.20 இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார்.21 அவர்கள், ' சீசருடையவை ' என்றார்கள். அதற்கு அவர், ' ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.22 இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு "நீங்கள் வரி கொடுக்கும் பொற்காசினில் பொறிக்கப்பட்டுள்ள உருவம் யாருடையது" என்று கேட்கிறார். இதனை வைத்து உங்கள் இதயத்தில் ஒரு உருவத்தை செதுக்க நமக்கு போதனை செய்கிறார். நமது இதயம் கடவுளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரோமானியர்கள் அவர்களுடைய அரசர்கள் தான் தெய்வம் என்று நினைத்திருந்தனர். அதனால், ரோமானியார்களின் பொற்காசுகளை வைத்திருந்தால், அவர்களின் மனித கடவுளை தாம் வைத்திருப்பதாக அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர். பரிசேயர்களுக்கு இயேசுவிடம் கேள்வி கேட்கும்போது, இந்த ரோமானியக் கடவுளை பத்தி தெரியும்.

சீசருக்கு வரி கொடுப்பது என்பது , அரசிற்கு வரி கொடுப்பதை விட அதற்கு மேல் பரிகாரமாக கொடுக்கிறோம் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சமயத்தோடு வரி கொடுப்பதை இனைத்திருந்தார்கள். அவர் யூதர்களுக்கு எதிராக பேசவேண்டும் என்றும், வேறு நாட்டின் அரசாங்கத்தையும், அதன் வரி கொடுமையையும் இயேசு மெசியாவாக விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.
நாம் கடவுளின் மக்களாக இருந்தால், இயேசு தான் நம் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். பாவத்தின் அழிவிலுருந்து நம்மை மெசியாதான் காப்பாற்றினார். நமது பாவங்களினால் உண்டான அழ்விலிருந்து இயேசு நம்மை காப்பாற்ற நாம் அவருக்கு அனுமதி அளித்தோம்.
மற்றவர்கள் உங்களை பார்க்கும்பொழுது, இயேசுவை தான் உங்களில் அவர்கள் பார்க்கினறனரா? இயேசு உங்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்கிறார்களா? ஓரளவிற்கு இயேசுவை பார்ப்பார்கள், அதே அளவிற்கு நீங்கள் இறையரசோடு இணைந்து உள்ளீர்கள்!

© 2011 by Terry A. Modica

Friday, October 7, 2011

அக்டோபர் 9, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 9, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு

Is 25:6-10a
Ps 23:1-6
Phil 4:12-14,19-20
Matt 22:1-14


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 22


திருமண விருந்து உவமை
(லூக் 14:15 - 24)
1 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:2 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.4 மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.5 அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.6 மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.7 அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.8 பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.9 எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார்.10 அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.11 அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.12 அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.13 அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார்.14 இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, போலியானவர்களின் ப்ரச்னையை பற்றி கூறுகிறது. அது என்னவென்றால், சிலர் இயேசுவின் நட்பை பெற, திருப்பலிக்கு ஒழுங்காக செல்வதும், ஆனால், கடவுளோடு உண்மையான, இயல்பான நட்புடன் வாழ அவர்கள் முயல்வதில்லை.

உங்களுக்கு ஒரு சிலரின் பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்கும்: சிலர், அவர்களுக்கு தேவையான விசயங்கள் பயன் பெறும் வரை நம்மோடு நட்பாக இருப்பார்கள். அவர்களுக்கு தோதாக இருக்கும்பொழுது தான் நல்ல விசயங்களை செய்வார்கள். கத்தோலிக்க நெறிமுறைகளை திருப்பலியில் மட்டும் தான் பின் பற்றுவார்கள், ஆனால் வீட்டிலோ அவர்கள் சிறிது நேரம் கூட ஜெபம் செய்வதில்லை. அவர்கள் விசுவாசம் ஆழமில்லாத, கொஞ்சமாக இருப்பதால், திருப்பலிக்கு கூட அவர்கள் செல்ல முயல்வதில்லை. குருவானவர் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கத்தோலிக்கத்தை விட்டு வெளியே செல்கிறார்கள். அவர்கள் உங்களோடு கொண்டுள்ள உறவில் மணந்திரும்புதல் தேவைபட்டால், அவர்கள் உங்களை ஒதுக்கி தள்ளுகிறார்கள்.


கடவுளோடு உண்மையான நட்புறவை கொண்டுள்ளவர்கள் மேல் கடவுளின் ப்ரசன்னமும் , அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் கடவுளின் அன்பும் , ஆசிர்வாதமும் நமக்கு தெரியும். அதுவும் அன்பே செய்ய முடியாதவர்களிடமும், அன்பு காட்டும்பொழுது நமக்கு தெரியும்.

போலியானவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். விருந்தில் கலந்து கொள்ள எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கபட்டது, ஆனால் அவர்கள் கடவுளின் குழந்தகளாக சந்தோசமாகவே இருக்க விரும்புகிறார்கள், கடவுளின் அன்பை மற்றவர்களொடு பகிர்ந்து கொள்ள வெண்டும் என்கிற பொழுது, அதன் கடினத்தை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள் , கடவுள் அவர்களுக்கு ஒரு எல்லையை வைத்துள்ளார்.

நீங்கள் விருந்துக்கு அழைத்தவர்கள் பற்றி எண்ணி பாருங்கள். அவர்களோடு நட்பு கடவுளோடு இனைந்த , மிகவும் சிறப்பான நட்பாக இருக்கும். ஆனால், அவர்களோ, அவர்களின் தேவைகேற்ப, அந்த நட்புறவை தீமையான பயனுக்கு உபயோக்கிறார்கள். நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும் ஆனால் அதனால் எந்த கெடுதலும் நடந்து விட கூடாது. அந்த நட்புறவை நல்ல உறவாக மாற்ற நாம் முயற்சி செய்ய வெண்டும். மற்றவர்கள் அதனை செய்யாத பொழுது, அவர்கள் இந்த நட்புறவை உதறி தள்ளுகிறார்கள்.

அவர்கள் மணந்திரும்ப , மண மாற்றத்திற்கும் , குணப்படுத்தவும், கடவுள் நம்மை எல்லாவிதங்களிலும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அந்த சிலுவையை நாம் சுமக்க வேண்டும் என்று கடவுள் அழைக்கிறார். எனினும், நமது எல்லைகள் காக்கப்படவேண்டும். நமது முயற்சிகள் பயன் தராவிட்டால், நாம் நமது வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் சொல்கிறார்.
மேலும், எப்பொழுது, கடவுளின் உண்மையான நட்புறவுடன் இருப்பவர்களோடு நமது நட்புறவு தொடர நாம் செல்வோம்.

© 2011 by Terry A. Modica

Friday, September 30, 2011

அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 2, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Phil 4:6-9
Matt 21:33-43

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21


கொடிய குத்தகைக்காரர் உவமை
(மாற் 12:1 - 12; லூக் 20:9 - 19)
33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார்.41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள்.42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்
(thanks to www.arulvakku.com)

"இறையரசு யார் அதற்காக உழைத்து கணி தருகிறார்களோ அவர்களிடமே கொடுக்கப்படும்" என்பதுதான் இன்றைய நற்செய்தியின் மையக்கருத்தாக இயேசு நமக்கு கொடுக்கிறார். நாம் இன்னும் இப்பூமியில் இருக்கும்பொழுது இறையரசு என்பது என்ன? என்ன மாதிரியான கணிகளை நாம் இப்பூமியிலிருந்து தரவேண்டும்?
கிறிஸ்துவை போல நாமும் எந்த செயலையும் செய்து அதன் விளைவாக தரும் கணியுடன், நாம் மோட்சத்தை நோக்கிய நமது பயணத்திற்கு அது உதவுகிறது. கிறிஸ்து அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்து, அவரை போல நாமும் மன்னித்து, மற்றவர்களுக்கு இறைசேவை செய்து, உண்மையை எடுத்துரைத்து, மணக்காயங்களுக்கு மருந்து போட்டு நமது வாழ்வை தொடர்ந்தோமானால், நாம் இறையரசில் இப்பொழுதே வாழ்கிறோம்.

நான் கத்தோலிக்கர்களை பார்த்து 'அவர்கள் மோட்சத்திற்கு போவார்களா? ' என்று கேட்கும்பொழுது, பலர் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்கள், கிறிஸ்துவின் மீட்பை, இனிமேல் நடக்க இருக்கும், சாவான பாவத்தினால் அவர்க்ள் பெறாமல் போய்விடுவார்களோ என்றும், அல்லது 'ஆம் நிச்சயம் மோட்சத்திற்கு போவோம் ' என்று சொல்வது ஆடம்பரமாகிவிடும் என்றோ அவர்கள் நினைக்கின்றனர்.

நாம் கிறிஸ்துவை போல முழுதாக நடந்து கொள்வதில்லை. நம்மில் பலர், உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது பாவங்களை, மோட்சத்திற்கு ஒவ்வாத நம்மில் இருக்கும் குறைகளை முழுமையாக அகற்றிவிட்டு , மோட்சத்திற்கு செல்வோம். இந்த சுத்தப்படுத்துதல் முடிந்த உடன், கடவுளின் முழு மோட்சத்தில் நாமும் வாழ்வோம். நாம் உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்று விட்டால், கண்டிப்பாக நாம் மோட்சத்திற்கு செல்வோம். நாம் கிறிஸ்துவை போல இருக்க வேண்டும் என்ற நமது ஆசை, உண்மையாக இருந்தால், கண்டிப்பாக நமக்கு சாவான பாவங்கள் நடக்க போவதில்லை. கண்டிப்பாக நமது இறப்பின் போது , இயேசுவை அனைத்து அவரோடு மோட்சத்தின் பயனத்தை தொடர்வோம்.
கிறிஸ்துவிற்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் மேல் உள்ள அன்பினால் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், நீங்கள் இறையரசில் வாழ்ந்து கொண்டும், வாழ்வும் போகிறீர்கள்.

© 2011 by Terry A. Modica

Saturday, September 24, 2011

செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 25, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு

Ezek 18:25-28
Ps 25:4-5, 8-10, 14
Phil 2:1-11
Matt 21:28-32

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 21


இரு புதல்வர்கள் உவமை
28 மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32 ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, பக்தியிலும், விசுவாசத்த்லும், சரியாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருபவர்களுக்கு ஒரு அதிர்ச்சையை கொடுக்கும். ஏனெனில் அவர்கள், கடவுளின் விருப்பத்தை எந்த அளவிற்கு சரியாக செய்கிறார்கள் என்று சுய பரிசோதனை செய்தது கிடையாது. வரி வசூலிப்போடும், விலைமகளிரும், (வெட்ககேடான, அசூத்தமானவர்கள் என்று சமூகம் அவர்களை தூற்றியது) ,சமய அறிஞர்களை விட முன்னே இறையரசிற்கு செல்வார்கள் என்று இயேசு சொல்கிறார்

'அறிஞர்கள்" என்று சொல்லப்படுபவர்களுக்கு இயேசு கேட்ட கேள்விக்கு, பதில் தெரியும் - கடவுளுக்காக "ஆம்" என்று பதில் சொல்வார்கள் - ஆனால், சரியான பதில் சொல்வதற்கும், அவர் என்ன கேட்டோரா, அதனை செய்வதற்கும் வித்தியாசம் - மோட்சத்திற்கும், நரகத்திற்கு இடையே உள்ள ஒரு கோடு போன்றது.

கடவுளோ சரியான பதிலை எதிர்பார்க்கவில்லை; சரியான செயலை தான் எதிர்பார்க்கிறார். திருச்சபையின் போதனைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கடவுள் சொல்லவில்லை; அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்ட கீழ்படிதலும், உற்சாகத்துடன் திருச்சபையின் நோக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்கு போவதால் என்ன பயன்? திருப்பலி முடிந்தவுடன் வெளியேயும் பரிசுத்த செயல்களால் உங்கள் வாழ்வு தொடரவில்லையென்றால், திருப்பலியின் பயன் என்ன? கோவிலை விட்டு வெளியே இருக்கும் உங்களுக்கு தெரிந்த வர்களுக்கு, திவ்ய நற்கருணையிலும்,திருச்சபையின் சமூகத்திலும் பிரிந்து இருப்பது பாவம் என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் நல்ல செயல்கள் செய்தால், அவர்கள் கடவுள் மேல் உள்ள அன்பினால் செய்கிறார்கள். தினமும் திருப்பலி செல்பவர்களை விட, இவர்கள் தான் இறையரசோடு விரைவில் இனைவார்கள் என்று கடவுள் சொல்லவில்லை.



கடவுளை வேண்டாம் என்று சொல்பவர்களை, நாம் கண்டிக்கும்பொழுது , நம்மை அவர்களோடு ஒப்பீட்டு கொள்கிறோம்- இதை தான் நாம் எக்காலமும் செய்ய கூடாது . ஒப்பீட்டு பார்க்கும்பொழுது ஒன்று நாம் மற்றவர்களோடு பெரியவர்களாக இருப்போம் அல்லது சிறியவர்களாக இருபோம். நாம் சரியாக இருக்கும் நம்மையே ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும். நாம் எவ்வளவு நெருக்கமாக கடவுளோடு நேற்று இருந்ததை விட இன்று இருக்கிறோம் என்று ஒப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

© 2011 by Terry A. Modica

Friday, September 16, 2011

செப்டம்பர் 18, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 18, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Is 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Rom 1:20c-24, 27a
Matt 20:1-16a

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 20

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். 3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார்.5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார்.7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார்.8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார்.9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள்.13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார்.16இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் ' என்று இயேசு கூறினார்.

(thanks to www.arulvakku.com)

கடவுள் நியாயமற்றவர் என்று எத்தனை முறை நாம் நினைத்திருக்கிறோம்? நமது பார்வையில் இது உண்மையும் கூட. இன்றைய நற்செய்தியில் வரும் உவமை இதற்கு சான்றாக அமைகிறது.

கூலி தொழிலாளர்கள் கண்டிப்பாக அவர் செய்ததை நியாமில்லாதது என்றே நினைப்பர். எனினும், நாம் அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நாம் பெற்றோர் போல நினைத்து கொண்டால், அன்பான தந்தை எல்லா குழந்தைகளையும் சமமாகவே பார்ப்பார். அதிகம் தேவையுள்ள குழந்தைக்கு , அவர் அதிக நேரம் செலவிட்டாலும், மற்ற குழந்தைகளையும் அதே போல சமமாகவே பார்க்கிறார்.

தந்தை கடவுள் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் போல., எல்லோருக்கும் சமமாகவே கொடுப்பவர். நாம் நாமாகவே மோட்சத்திற்கு செல்ல முடியாததால்,, அதிக காலம் மோட்சம் செல்ல ஆயத்தமானவனுக்கு சம நீதி கொடுப்பது ஒன்றும் குறைவானதில்லை. மேலும், கடவுள் அவருடைய முழுமையான பரிசுத்த அன்பை , இறுதி நேரத்தில் மணந்திருந்துபவனுக்கும் கொடுக்கிறார். அவர் ஒன்றும் குறைவாக கொடுக்க மாட்டார்.

முதல் வாசகத்தில், கடவுள் வழி மிக பெரியது, அவரின் எண்ணங்கள் நம் எண்ணங்களை விட உயர்ந்தது என்றும் நாம் பார்க்கிறோம். நாம் நீதியை சமமாக பார்க்கிறோம், பழைய ஏற்பாட்டில், "கண்ணுக்கு கண் " என்று குறிப்புட்டுள்ளது போல, இயேசு நீதியை மிக பெரிய உயர்த்திற்கு கொண்டு சென்றார். அதன் அர்த்தம் என்னவென்றால், எல்லோரையும் சமமாகவும், ஒரே அன்புடனும் கடவுள் நடத்துவார். அவர்கள் அதற்கு தகுதியானவர்களா இல்லையே என்பது ஒரு பொருட்டல்ல.

கடவுளின் உயர்ந்த வழியை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாம் அன்பில்லாமல் இருந்தாலும், கடவுள் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார் என்பதே நமக்கு மகிழ்வை தரும். நாம் அவரது அன்பை பெற நாம் தகுதியற்றவராக இருந்தாலும் , எல்லோருக்கும் போல சம அளவு அன்பையே கடவுள் நமக்கு தருகிறார். மிகவும் புனிதமான புனிதர்களுக்கு காட்டும் அன்பையே உங்களுக்கும் கொடுக்கிறார். அண்ணை மேரியை எவ்வளவு அன்பு செய்கிறாரோ அதே போல ஆசிர்வதிக்கபட்ட கிறிஸ்துவின் தாயாகிய மேரியை அன்பு செய்வது போல் உங்களையும் அன்பு செய்கிறார். "எனது அன்பை நாம் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோனோ , அதை கொடுக்க எனக்கு உரிமையில்லைய " ? என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார்.
© 2011 by Terry A. Modica

Friday, September 9, 2011

செப்டம்பர் 11, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 11, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Sir 27:30--28:9
Ps 103:1-4, 9-12
Rom 14:7-9
Matt 18:21-35

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 18


மன்னிக்க மறுத்த பணியாள் உவமை
21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, ' ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ' ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். 25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ' என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் ' என்றான்.27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். 29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் ' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ' பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். '
(thanks to www.arulvakku.com)

இயேசு நமக்கு சொல்லி கொடுத்த ஜெபத்தில் "எங்களுக்கு தீமை செய்தவர்களை , நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும்" என்று கூறியுள்ளதை, இன்றைய நற்செய்தி விளக்கி சொல்கிறது.

இதில் மிகவும் சக்தி பெற்ற ஒரு வார்த்தை என்னவென்றால், "போல" - நாங்கள் மன்னிப்பது போல, அதே அளவிற்கு, அதே வழியில் என்பது தான்.
நாம் யாரையாவது மன்னியாது இருந்தால், யாருக்காவது , நாம் முழுமையான அன்புடன் ஜெபம் செய்யாமல் இருந்தால், நாம் பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே என்று ஜெபிக்கும் பொழுது, மேற்கூறிய வரிகள் வரும்பொழுது நாம் சொல்லாமலே இருக்கலாம்.
சில நேரங்களில், "மறப்பதும்" , "மன்னிப்பதையும்" சேர்த்து குழப்பிவிடுகிறோம். நாம் கடனாளிகள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. மறப்பது என்பது ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் - ஞாபகத்திலிருந்து நாம் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும் - மீண்டும் பணம் கட்ட சொல்லியோ அல்லது பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்றோ இருக்க கூடாது.

மன்னிக்காமல் இருப்பது ஒரு வகையான தன்டனை ஆகும்: இது திருப்பி செலுத்தும் நேரம் ஆகும். எடுத்து காட்டாக , நாம் கோபத்துடன் இருந்தால், நாம் கோபத்தில் இருக்கும்போது, பாவிகள் திருந்தி விடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் , ஆனால் அது நடக்க போவதில்லை.

அடுத்ததாக இன்னும் பல நீங்கள் செய்தால் அது எதிர்பார்த்தமாதிரி நடக்க போவதில்லை: மேலும் அதிருப்தியை தொடர்ந்து கொண்டிருப்பதும், அந்த தவறான நினைவுகளை , அதனாலும் நமக்கு ஏற்படும் வலியோ பறந்து விடுவதில்லை. இன்னும் அந்த வலி உங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் மற்றவர்களை அவர்களின் குற்றங்களிலிருந்து விடுவித்தால் தான் நமக்கு நம்மை பாதிக்கும் விசயங்கள் நம்மை விட்டு விலகும். (அவர்கள் மனம் திரும்ப நினைத்தாலும், , இல்லையென்றாலும், அவர்கள் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டலும்), நாம் நம்மையே சுதந்திரமாக உணர்வோம், அப்பொழுது நமக்கும் குணம் அடைவோம்.

இது தான் நாம் நமக்கே கொடுக்கும் மிகவும் அன்பான அன்பளிப்பு ஆகும். அதுவே மற்றவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்பு ஆகும். அவர்கள் அதனை புரிந்து கொள்ளாவிட்டால் கூட , கடவுள் புரிந்து கொள்வார்.
© 2011 by Terry A. Modica

Friday, September 2, 2011

செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டம்பர் 4, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 18


பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் வாசகங்கள் நம்மை நீதிக்கும், பரிசுத்த வாழ்விற்கும், உண்மைக்கும் நாம் துணை நின்றால் தான் மற்றவர்களை பாவ வாழ்விலிருந்து மீட்க முடியும் . அப்படி செய்யாவிடில், அவர்கள் பாவத்திற்கு நாமும் துணை புரிந்த பாவத்திற்கு ஆளாவோம். அதற்கான பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. (முதல் வாசகத்தை பாருங்கள்).



இரக்கம், நிபந்தனையற்ற அன்பு, கருணை இவை எல்லாவற்றுடனும் சேர்த்து நாம் பாவத்தை எதிர்த்தால் ஒழிய அது பாவமாகாது, இல்லையெனில், அதுவும் பாவமாகும். (இரண்டாவது வாசகம்). இன்றைய நற்செய்தியில், இயேசு சொல்கிறார். கிறிஸ்தவ குழுவோடு இணைந்து அவர்கள் ஆலோசனையுடனும், ஜெப உதவியுடனும் நாம் பாவத்திற்கு எதிராக போராடவேண்டும் என்று சொல்கிறார்.

முதலில் நாம் பாவியோடு பேசவேண்டும். எல்லா பாவங்களும் ஏதோ ஒரு வகையில் அவர்களை சேதப்படுத்துகிறது. (அவர்களுக்கு தெரியாமலே), இதனை நாம் பாவிகளிடம் எடுத்துரைக்க வேண்டும், இல்லையெனில் நாம் அவர்களை அன்பு செய்யவில்லை , அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என அர்த்தம்.


நாம் உண்மையை அவர்களுக்கு பகிர்ந்து கொண்டபிறகு, பாவிகள் மணம் திருந்தாவிட்டாலும், நாம் நமது பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம். ஆனால், பாவிகளை அன்பு செய்வதை மட்டும் நிறுத்த கூடாது. அதனால், இன்னும் இரண்டு மூன்று பேரை அழைத்து கொண்டு, பாவிகள் திருந்துவதற்கு எது தடுக்கிறது, என்று ஆராய்ந்து அவர்களுக்கு உதவமுடியும்.

அதுவும் தோற்றுவிட்டால், இன்னும் வேறு உதவியுடன் நாம் முயற்சி செய்ய வேண்டும்.


ஒவ்வொரு முயற்சிக்கும், பலன் தரவில்லையென்றால் மட்டுமே, நாம் நமது முயற்சியை கைவிட்டு நாம் நமது வழியில் செல்ல வேண்டும். நாமாக பிரிந்து செல்லவில்லை. பாவிகள் தான் பிரிந்து செல்ல காரணமாக இருக்கின்றனர். இயேசு வரி வசூலிப்போரையும், வெளியாட்களையும் எப்படி அனுகினார் என்பதை நாம் பார்க்கிறோம். : அவர்களை அன்பு செய்வதை என்றுமே அவர் நிறுத்தியதில்லை. அவர்களுக்காக மரணத்தையும் ஏற்றுகொண்டார்.


© 2011 by Terry A. Modica

Friday, August 26, 2011

ஆகஸ்டு 28, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 28, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு

Jeremiah 20:7-9
Ps 63:2-6, 8-9
Rom 12:1-2
Matt 16:21-27

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 16


இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.22பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார்.23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்றார்.24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் முதல் வாசகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஜெரமிய இங்கே என்ன செய்கிறாரோ அதையே தான் நான் அடிக்கடி நினைப்பேன்.
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: " கடவுளே, இது நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எனக்கு ஏன் இந்த சோதனை? " இது மாதிரி நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?

ஏன் கடவுள் நமக்கு இது மாதிரி நடக்க அனுமதித்தார்? கடவுள் நமக்கு கடினமான நிலைமை கொடுத்தாலும், ஏன் அவரை நம்புகிறோம்? இயேசுவை பின் சென்று , நமது உதவியையும், அன்பையும் மற்றவர்களுக்கு கொடுத்தாலும், நமக்கு இன்னல்களும், நமக்கு மன நிம்மதியின்றியும், மேலும் வலியுடையதாக இருக்கும்பொழுது, நாம் இன்னும் ஏன் இயேசுவை பின் செல்கிறோம்?

கடவுளோடு நடந்து, அவரது இறையரசிற்கு சேவை செய்வது என்பது ஒரு வீர செயலாகும். எதிர்பாரதது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம், துரதிஷ்டவசமாக இவ்வேளகளில், துன்பப்படுதலும், - நம் சுய ஆசைகளை உதறிவிட்டு, சிலுவைகளை நாம் துக்க வேண்டியும், மேலும், இயேசுவை கல்வாரி மலை வரை பின் செல்ல வேண்டியிருக்கும், (ஆனால் அதிலிருந்து நாம் மீட்பை அடைவோம் - எல்லா நற்செய்திகளிலும், மீட்பு சொல்லப்பட்டிருக்கிறது).

நாம் கடவுளை அன்பு செய்வதால், இரண்டாவது வாசகத்தில் கூறியுள்ளது போல, நம்மையே அவருக்காக தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இது தான் கடவுளை வணங்குவதில் உயர்ந்தது; திவ்ய நற்கருணையை அடுத்து, இவ்விசயத்தில் தான் நாம் கடவுளோடு தெய்வீக ஒன்றினைப்பில் சேர்கிறோம். யேசுவோடு நாம் ஒன்றினைந்து , நாம் திவ்ய நற்கருணையாகிறோம்.

எரேமியாவின் குற்றச்சாட்டு சொல்வது போல, கடவுளிடம் முறையிடலாம். எவ்வித தண்டனையுமின்றி, அவரோடு வேலை செய்ய நமக்கு பிடிக்க வில்லை என்று கடவுளிடம் சொல்லலாம். எனினும், குற்றம் கூறுதல் ஒரு பாவமாகும், ஏனெனில், இது வம்பளப்பதையும், கடவுள் மேல் தவறான எண்ணதையும் உருவாக்கும். அது கடவுளை தவறான கண்ணோட்டத்தில் காட்டும்.


நமது சோதனை காலங்களில், ஜெபத்தினால், நமக்கு துனை வேண்டி நாம் கேட்பது நமக்கு முக்கியம், மேலும், இதனை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும். ஆனால், கடவுளை பற்றி மற்றவர்களிடம் குறை கூறும்பொழுது, நாம் எவ்வளவு குறைவாக கடவுளை நம்புகிறோம் என்பதை காட்டுகிறது. நமது தியாகத்தினால், வரும் நல்ல பலன்களை விரைவில் பார்ப்போம், அதனை தான் நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

© 2011 by Terry A. Modica

Friday, August 19, 2011

ஆகஸ்டு 21, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 21, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு

Isaiah 22:19-23
Ps 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 16


இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.20பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)



இயேசு இராயப்பரை பாறையாக்கி, அங்கு தான் திருச்சபையை கட்டுவேன் என்று சொல்கிற பொழுது, ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" என்று கூறுகிறார். "அலகையால் எப்பொழுதும் வெற்றி கொள்ள முடியாது" (எபேசியர் 6)

இயேசு, "நரகம்" திருச்சபையை என்றுமே வெல்லாது என்று சொல்ல வில்லை, ஆனால், பாதாளத்தின் வாயில்களே விண்ணரசை வெல்லாது என்று கூறுகிறார். கண்டிப்பாக சாத்தான் வெல்லபோவதுமில்லை; வாயில்கள் என்றுமே தாக்காது, ஆனால் பாதுகாக்கும். ஒரு எல்லைக்குள் உள்ள , சுவருக்குள் உள்ள அனைத்தையும் கதவுகள் பாதுகாக்கிறது. உங்களுக்கு தெரிந்து யாராவது குற்றம் செய்து சிறைக்கு சென்றுள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது சாத்தானின் வேலைகளால் சிறைக்கு சென்றுள்ளார்களா?



சாத்தானில் வேலைகளை செய்பவர்களை, கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களுக்கு எதிராக இருக்க வேண்டியதில்லை. ஆனால், நாம் பாதாளத்தின் வாயில்க்ளை தாக்க வேண்டும். அதனை தாக்கி கீழே தள்ள வேண்டும், மேலும், சாத்தான்கள் இழுத்து செல்லும் நம் சகோதரர்களை நாம் இழுத்து விண்ணரசிற்கு கொண்டு செல்ல வேண்டும்.


2000 வருடங்களுக்கு முன் இயேசு எப்படி சாத்தானிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தாரோ, அதையே, உங்கள் மூலம் இயேசு இன்று செய்கிறார்.
பாவங்களிலிருந்து விடுதலை பெற துடிக்கும் பாவிகளை மீட்க, இயேசு இராயப்பருக்கு சாவியை கொடுத்து, நல்லாயனாக (போப்) கிறிஸ்தவர்களுக்காக அவரை திருநிலை படுத்தினார். இதே சாவி ஒவ்வொரு தலைமுறையாக அடுத்தடுத்த போப்பாண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த சாவிகள் எவை? பாதாளத்தின் வாயில்களை அருட்சாதனங்கள் மூலம் திறக்க முடியும்; அந்த சாவிகள் முடிவில்லா வாழ்விற்கு உள்ள கதவை திறக்கிறது. பாவ மனிதன் பாவ சங்கீர்த்தனத்தில் இருக்கும் பொழுது, குருவானவர் மன்னிபின் அருளை கொடுக்கும்பொழுதும், மணமகனையும், மணமகளையும் திருமணத்தில் இணைக்கும் பொழுதும், இயேசுவே குருவாணவர் மூலம் அதனை செய்கிறார்.

இந்த அருட்சாதனங்களை, நாம் மிகவும் கவனமாகவும், ஆர்வத்துடனும் எடுத்து கொள்ளும்பொழுது, கடவுள் உண்ணத ஆற்றல், சாத்தானை வெற்றி கொள்ள முடியும்.

© 2011 by Terry A. Modica

Friday, August 12, 2011

ஆகஸ்டு 14, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 14, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு

Isaiah 56:1, 6-7
Ps 67:2-3, 5-6, 8 (with 4)
Romans 11:13-15, 29-32
Matthew 15:21-28


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 15

கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மாற் 7:24 - 30)
21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் 'என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் 'என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நாம் மற்றவர்களை பற்றி நாம் மதிப்பிடவும், தீர்ப்பளிக்கவும் நம்மில் ஏற்படும் மனப்போக்கையும் நாம் ஆராய வேண்டும் என்று நமக்கு சவால் விடுகிறது. கானானிய பெண்ணுக்கு அவளுடைய பெண் பாலும், நாடும் அவளுக்கு எதிராக இருந்தது.

கண்டிப்பாக, இயேசு உலகம் எல்லாவற்றிற்கும் இரட்சகர் தான், ஆனால், சீடர்களுக்கு இந்த உண்மை தெரியவில்லை. நமக்கும் தான் தெரியவில்லை. அவர்களுடைய மனதை இன்னும் விசாலாமக்க (நம் மனதையும்) , இயேசு கானானிய பெண் அவளுடைய விசுவாசம் , அவளுக்கு உள்ள தடைகளையெல்லாம் தாண்டவேண்டும் என்று காத்திருந்தார், பிறகு இயேசு குணமாக்கினார்.

இயேசுவிற்கு, வெளியாட்கள் யார் என்றால், இறையரசை ஏற்காதவர்கள் மட்டுமே, ஆவர். ஆனால், நாம் உடனேயே இவ்வாறு நினைப்பதில்லை. நமது திருச்சபையில், நிறைய பேரை தவறாக தான் நாம் மதிப்பீட்டு வருகிறோம். நிறைய பேர் இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டவராகவே நினைக்கின்றனர். நாம் ஒருவரையொருவர் பற்றி தவறான முடிவிற்கு மிக விரைவாகவே வந்து விடுகிறோம்.

எடுத்து காட்டாக, ஒரு பெற்றோராக உள்ளவர்களை, நாம் ஏன் அங்கீகரித்து, அவர்களை நமது கோவிலுக்கு அழைப்பதில்லை. கோவிலில் பல நிகழ்ச்சிகளில், அவர்கள கலந்து கொள்ள அழைத்து, அவர்கள் கலந்து கொள்ளும்பொழுது, அவர்கஆள் குழந்தகளை நாம் பார்த்து கொள்ளலாமே?

நீங்கள் விவாகரத்தானவர்கள் என்றால், மற்றவர்கள் உங்களை ஒதுக்குகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இதுவே தவறான முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஓரினச்சேர்க்கையாளர்களை , திருச்சபை இரக்கத்துடன் அவர்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்தும், அவர்கள் வெளியாட்களாக அவர்கள் நினைக்கிறார்கள்.?

சாதாரன மக்காள், இறைசேவையில் குருவானவரோடு சேராமால் தடுக்கபடுகிறோம் என்று நினைக்கிறார்கள். ?
நமது சக கிறிஸ்தவர்களை நாம் தவறாக தீர்ப்பளிப்பதால், அவர்களை வருத்தப்பட வைக்கிறோம். இதனால், கோவிலில் தேவையான வேலைகள் நடைபெறாமலே போய்விடுகின்றன. யாரையெல்லாம், நாம் தவறாக தீர்ப்பளிப்பதால் அவர்களுடைய திறமைகளை நாம் ஒதுக்கி தள்ளுகிறோம். ஆனால் நாம் நல்ல உணர்வுடன், மற்றவர்களை பற்றி தவறாக எண்ணாமல் இருந்தால், நாம் கிறிஸ்துவை போல இருந்தும், அவர்களிடமிருந்து கிறிஸ்துவை நாம் பெறுவோம்.


© 2011 by Terry A. Modica

Friday, August 5, 2011

ஆகஸ்டு 7, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 7, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு

1 Kings 19:9a, 11-13a
Ps 85:8-14
Roman 9:1-5
Matthew 14:22-33



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 14

கடல்மீது நடத்தல்
(மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர்.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ' என்றார்.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார்.29அவர், ' வா ' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் ' என்று கத்தினார்.31 இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார்.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும், மீண்களையும் பல மடங்காக பெருக்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்த பின் , ஜெபம் செய்வதற்காக தனியே செல்வதை பார்க்கிறோம்.
நீங்கள் பெரிய விருந்தோ, அல்லது, பெரிய திட்ட வேலையை முடித்த பின், அல்லது கஸ்டமான காரியத்தை முடித்த பின்பு, ஆண்டவரோடு சிறிது நேரம் செல்வழித்து, அவரிடம் உங்களை அர்ப்பணித்து, அவர் உங்களுக்கு சேவையாற்ற கோரியதுன்டா?

தந்தை கடவுளிடம் அதிக நேரம் செலவழித்த பின்பு, இயேசு அந்த அனுபவத்தின் மூலம், தண்ணீரின் மேல் நடந்து செல்கிறார்!


இயேசு அடிக்கடி ஜெபம் செய்வார். நற்செய்தி வாசகங்களி கூறப்பட்டவைகளுக்கு அதிகமாகவே, அவர் ஜெபம் செய்திருப்பார். பிறகு ஏன் மத்தேயு இங்கே அவர் ஜெபம் செய்ய சென்றார் என்று கூறுகிறர். மத்தேயு மூலமாக, கடவுள் நமக்கெல்லாம், நல்ல சமமான விசுவாச வாழ்வில் நாம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறார்.


கடவுள் நம்மிடம் என்ன செய்ய சொல்கிறார் என்பதையும், நாம் இழந்த ஆற்றலையும் மீண்டும் பெற, நமக்கு ஜெப வாழ்வு தேவைபடுகிறது. நமது குடும்பத்தில், வேலையிடத்தில், சமூக குழுக்களில், பங்கு கோவிலில், எங்கெல்லாம் ப்ரச்னை ஏற்படுகிறதோ கடவுளுக்காக நாம் சில வேலைகள் செய்ய வேண்டும். நாமே நம்மை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் ஆற்றல் இழந்து விடுவோம்; கடவுளுக்கு உதவ நாம் ஆட்பட்டு, அதில் வளர்ந்தால், கடவுள் நம்மை , ஆற்றலை புதுபிக்க நாம் அனுமதித்தால், அவர் நிச்சயம் செய்வார். இது அப்படியே அடிக்கடி நமது ஜெப வாழ்வின் மூலம் நடந்து கொண்டிருக்க வேண்டும்.


நமக்கு வரும் நாட்களில் நடக்கும் எதையும் நாம் எதிர்நோக்கிட, நம்மை தயார் படுத்துவது ஜெப வாழ்வு தான். நாம் எங்கு நடந்து செல்கிறோம் என்பதை கூட நாம் தெரியாமல், ஜெப வாழ்வில் நம்மால் தைரியமாக செல்ல முடியும். நாம் தந்தை கடவுளோடு தனியாக அவரோடு நேரம் செலவிட்டு , என்ன நமக்கு கிடைக்கிறது என்றால், நமது நலன்களுக்காக தேவைபட்ட அன்பளிப்பும், மற்றவர்களின் தேவகளுக்கு நாம் சென்று நிற்கும்போது கொடுக்க வேண்டியவகளையும் கடவுள் நமக்கு கொடுப்பார். ஜெபம் நம் விசுவாசத்தை உறுதிபடுத்துகிறது. தண்ணீரில் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிகொடுக்கிறது. கரையின் அக்கறைக்கு சென்று கடவுளின் உதவி தேவைபடுவோருக்கு உதவச் செய்கிறது. கடவுள் நம் மூலமாக அவர் களுக்கு உதவ ஆசைபடுகிறார். நீங்கள் ஜெபம் செய்து தயாராய் இருக்கிறீர்களா?


© 2011 by Terry A. Modica

Friday, July 29, 2011

ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Isaiah 55:1-3
Ps 145:8-9, 15-18
Rom 8:35, 37-39
Matt 14:13-21



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 14

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
(மாற் 6:30 - 44; லூக் 9:10 - 17; யோவா 6:1 - 14)
13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.16இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார்.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள்.18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார்.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

(thanks to www.arulvakku.com)


இந்த வாசகங்கள் எனக்கு தாகத்தையும், பசியையும் தூண்டுகிறது!. நாம் திருப்பலி முடிந்து இரவு உணவிற்கு செல்லலாமா?


இன்றைய பதிலுரை பாடலில், "தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்." இதனை தெரிந்து கொண்டும், நமக்கு போதுமானதாக இல்லை. நமக்கு இருக்கிறதே போதும் என்று நாம் இருப்பதில்லை.


வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நமக்கு நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், திருப்தி பட்டு கொள்வதில்லை. முக்கியமாக நமது உறவுகளில் நாம் இன்னும் திருப்தி அடைவதில்லை. நமக்கு இன்னும் அன்பும், நம்மை முக்கியமாக அக்கறையோடு மற்றவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்பிற்கு தாகமாக இருக்கிறோம். இருந்தாலும், அதிருப்தியால் முனுமுனுக்கிறோம். மற்றவர்களீன் அக்கறையய்யும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். யாரெல்லாமிடமிருந்து நமக்கு ஆதரவு தேவையோ ,அவர்களிம் ஆதரவை, கனிவையும் எதிர்பார்க்கிறோம்.


மேலும், நாம் வாழ்வில் அருகில் இருக்கும் மனிதர்கள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடவுளின் அன்பையும், அக்கறையையும், உங்களுக்கு கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், யாருமே முழுமையாகவும் , பிழையற்ற அன்பினை கொடுப்பதில்லை. சிலர் இந்த அழைப்பை அப்படியே நிராகரித்து விடுகின்றனர். இதனால் தான், நாம் இன்பத்தை வெறுத்தும், கோபத்தோடும், செயல் குழைந்து போயும், தனிமைபட்டும், பசியோடும் இருக்கிறோம்.

நாம், பிழையுள்ள மனிதர்களை மன்னித்தும், இயேசுவை நோக்கி நாம் ஜெபித்தால், அவர் சின்னதை கூட பல மடங்காக பெருக்கி தருவார். நாம் பிழையுள்ள மனிதர்களை பார்காமல், இயேசுவை நோக்கி பார்த்தால், இயேசு நம் இதயம் முழுதும் நிரம்ப அன்பை பொழிவார்.

திருப்தியற்ற தன்மை என்பது, இயேசு உங்கள் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார் என்று அர்த்தம்;இயேசு எதையோ கொடுக்க விரும்புகிறார், ஆனால், நாம் அதற்கு இன்னும் தயாரகவில்லை. நமது ப்ரச்னை என்ன வென்றால்: இயேசுவை நாம் பார்க்காமல், அவரை தொடாமால், எப்படி அவர் கொடுப்பதை நாம் வாங போகிறோம்?


கண்ணுக்கு தெரியாத கடவுளை நாம் எப்படி தொட்டு திருப்தியடைய போகிறோம், நாம் எப்பொழுது, ஜெபத்தில், கிற்ஸ்தவ குழுக்களிலும் இனைந்து, கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும். கடவுள் என்ன செய்கிறார் என்பதை கூர்ந்து நோக்கியே இருக்க வேண்டும். மேலும் யார் மூலம் அதனை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். அதிக ஈடுபாடும், எதிர்பாராததை எதிர்பார்த்தும் தயாராக இருக்க வேண்டும்.

© 2011 by Terry A. Modica

Saturday, July 23, 2011

ஜூன் 24, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 13

புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '
முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர்,'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், விண்ணரசை, நிலத்தில் புதைந்துள்ள புதையலுக்கும், விலை உயர்ந்த முத்தாகவும், மீன் வலை பிடித்து, நல்லதை வைத்து கொண்டு, தீயதை தூக்கிபோதுவது போலவும் உவமையாக இயேசு சொல்கிறார். இதையே மாறாக சொல்வதானால், நமது கிறிஸ்தவ வாழ்வு தான், விலை மதிப்புள்ளவை ஆகும். நமது நெஞ்சில் வீனான பொருட்கள் இருந்தால், அதை தூக்கி எறிந்து விட்டு, விலை மதிப்புள்ள பொருட்கள் வைக்க அதனை தயார் படுத்துங்கள். நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் தற்காலிகமனவை, இவ்வுலகில் அதற்கு மதிப்பிருக்கலாம், ஆனால் அதனை வின்னரசிற்காக உபயோகப்படவில்லயென்றால், அவையெல்லாம் மதிப்பில்லாதவை தான்.

உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று கூறுகிறது. தவறான முத்துக்களையும், வீனாய் போன மீன்களையும் நாம் களைந்து தூக்கி எறிந்தால் தான் நாம் கடவுளை போல் ஆக முடியும். நாம் வின்னரசிற்கு உபயோகமாக இருக்க முடியும். இரக்கமுள்ள கடவுளின் கைகளில், ஆற்றல் மிகுந்த கடவுளின் கைகளில் நாம் இருக்கும் பொழுது, நமக்கு கெட்டது நடந்தால் கூட, அது நமது நல்ல முத்துககளை மிண்ன செய்யும், நம்மிடம் உள்ள நல்ல விசயங்களை வெளியே காட்டும்.


முதல் வாசகத்தில், சாலமன், கடவுளிடம் அதிகம் சொத்துக்களும், பொன்னும் பொருளும் கேட்டிருக்கலாம், கடவுளும் கொடுத்திருப்பார். ஆனால், அதற்கு பதிலாக சாலமன், புரிந்து கொள்ளும் இதயத்தையும், ஆற்றலையும் கேட்டார். அதன் மூலம் அவர் ஞாணம் பெற்று அதனால், நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யமுடியும். அவர் அட்சி அவ்வளவு சரியாக செய்யாமல் இருந்தாலும், மிகவும் ஞானமுள்ள , அறிவும் நிறைந்த மன்னர் என்று உலகம் முழுதும் பேசியது. அதன் மூலம் அவர் பல செல்வங்களை பெற்றார்.

கடவுளரசின் செல்வத்தை முதலில் நாம் தேடினால் தான், இவ்வுலகின் பொருட்களை நாம் பாதுகாப்பாக உபயோகிக்க முடியும் என்று இந்த கதை சொல்கிறது. எவ்வளவு அதிகமாக நாம் கிறிஸ்துவை அன்பு செய்து, அவர் வழியில் செல்கிறோமோ, அப்போது தான், எது உண்மையான மதிப்புடையது என்பது நமக்கு தெரியும். நம்மால், கடவுளுக்கு ஆகாத குப்பை பொருள் என்ன என்று நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் வின்னரசிற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் உபயோகிக்க முடியும்.


© 2011 by Terry A. Modica

Friday, July 15, 2011

ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு


Wisdom 12:13, 16-19 - சா ஞா 12 : 13, 16 - 19
Ps 86:5-6, 9-10, 15-16
Rom 8:26-27 - உரோ 8 : 26, 27
Matt 13:24-43 - மத் 13 : 24 – 43



நற்செய்தி வாசகம்
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன.
நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், `முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்'' என்றார்.
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.''
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.''
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு;அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''
(thanks to arulvakku.com)


அமெரிக்க பிஷப்கள் எல்லாம், இணைந்து கத்தோலிக்க மணமாற்றத்தை எப்படி செய்தல் வேண்டும் என்று வறையறுத்துள்ளனர். அதன் தலைப்பு "செல்லுங்கள், சீடர்களை உருவாக்குங்கள்".("Go and Make Disciples." ) இது மூன்று முக்கிய கட்டங்களை குறிப்பிடுகிறது.
1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்:
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள்

இன்றைய நற்செய்தியில், இயேசுவும் இதனையே மணமாற்றத்திற்கான நோக்கங்களாக உவமைகளாக சொல்கிறார்.


1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே உள்ள நல்ல கோதுமை பயிர்களாக இருக்கிறோம். நாம் பரிசுத்த வாழ்வில், மிக சரியாக வளரவில்லையென்றால், களைகள் நம்மை விட அதிகமாக வளர்ந்துவிடும், நம்மை நசுக்கிவிடும், உங்கள் பரிசுத்த வாழ்விலிருந்து களைகளை அகற்ற என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையற்றோரிடமும், சாத்தான் வழி செல்பவர்களிடமும் இடையே நீங்கள் வாழும்பொழுது, உங்கள் விசுவாச வாழ்வு எவ்வாறு பலனடைகிறது? , உங்கள் தந்தை கடவுள் - உலகை படைத்தவர் நீங்கள் பரிசுத்த வாழ்வில் வளர, உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும், அதிகாரத்டையும் வழங்குகிறார்.
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்: இறையரசில், நாம் கடுகை போல மிகச்சிறிய அளவுடன் உள்ளோம், ஆனால் வளர்ந்த பின் எல்லோருக்கும் அதிக பலனும் நன்மையும் கிடைக்கிறது. உங்கள் விசுவாசத்தால் யாரெல்லாம் பலன் அடைகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி, மற்றவர்கள் இயேசுவோடு இனைய எவ்வாறு அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எல்லா ஆற்றலையும் கொடுத்து, அவர்களின் விசுவாசத்தை வளர்க்க உதவிடுகிறார். ஆனால், நீங்கள் மனமுவந்து அவர்களை இறைவனின் பரிசுத்த வாழ்வை அனுபவிக்க அழைக்க வேண்டும்.
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள் : இறையரசில், நாம் எல்லாம் புளிப்பு மாவை போன்றவர்கள். அதனை மற்ற மாவோடு கலந்தால், எல்லா மாவையும் புளிக்க செய்துவிடும், அதே போல, நாம் கிற்ஸ்தவர்களாக , இவ்வுலகை முன்னேற்ற என்ன செய்து கொண்டிருக்கிறோம்? உங்கள் பரிசுத்த வாழ்வு, நீங்கள் வேலை செய்யும் இடத்தில், கோவிலில், சமூகத்தில் என்ன வித்தியாசத்தை கொடுக்கிறீர்கள்? திருப்பலியில் நீங்கள் பெற்று கொள்ளும் திவ்ய நற்கருணையினால், நீங்கள் இவ்வுலகை உங்கள் நன்மைகளால் இன்னும் வளமாக்க முடியும்.
© 2011 by Terry A. Modica

Friday, July 8, 2011

ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு

Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23
அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ,அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.
சீடர்கள் அவர் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது;காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை;ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''

மறையுரை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதிலிருந்து நாம் கற்று கொள்வது என்னவென்றால், விதைக்கப்பட்ட விதை நிலத்தில் விழுந்து பலன் தராவிட்டால், விதை விதைத்ததற்கு உண்டான முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும், அது முன்னாடி இருந்தது போல் இல்லாமல், அழிந்து வேறொரு செடியை கொடுக்க வேண்டும். அந்த விதை மண்ணோடு அழிந்து, புதிய செடியை , தண்டிலிருந்து ஆரம்பித்து, பல மடங்காக பெருகி பெரிய மரமாக பலபேருக்கு உதவக்கூடியதாக மாறும். ஆனால், விதையிலிருந்து, மரமாக ஆகும், வரை தரமான பராமரிப்பு, வேண்டிய ஊட்டசத்தும் கொடுக்க வேண்டும்.


விதை மண்ணிலேயே அழிந்து, சரியான ஊட்ட்சத்துடன் வளரும்பொழுது, அது செடியாக மரமாக வளர்ந்து, பல மடங்காக பெருகி, இயற்கையின் எல்லா வளங்களும், இதன் பலனை அடைவது தான் இதன் நோக்கமாகும்.


இயேசு உவமையை சொல்லி நாம் கேட்கும் பொழுது, நாம் அதற்கு ஆம் என்று சொல்கிறோம். நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பழங்களை தருவோம் என்று இயேசுவிடம் 'ஆம்' என்று சொல்கிறோம். நாம் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது மட்டும், நம்மை அப்படியே மாற்றிவிடாது. நமது வாழ்வின் மண்ணை, எப்படி மாற்றினால், நாம் நல்ல பழங்களை தரமுடியும் ?

இறைவாக்கினர் எசாயா வாசகத்தில், கடவுளே நல்ல விளைச்சலை தரும் மண் என்று சொல்கிறார். கடவுளும், அவர் வார்த்தைகளும், மேலும் அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அதனையெல்லாம் கொடுக்க கூடிய மண்ணாவகே கடவுள் இருக்கிறார். புனித பவுல் இரண்டாவது வாசகத்தில், துன்பப்பட்டால், தான், ஒன்றை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்.(விதைகள் மண்ணில் அழிந்து மீண்டும் செடியாக உருவானால் தான் பழங்களை தரமுடியும்). துன்பத்திலும், இறப்பிலும் தான் நமக்கு மீட்பு கிடைக்கும்.
நாம் மண்ணாக மாறி, கடவுள் நம்மை மாற்றியமைக்க அனுமதித்தால் மட்டுமே, நாம் உண்மையாகவே முழுதுமாக கணி தரும் மரமாக மாறமுடியும்.



© 2011 by Terry A. Modica

Friday, July 1, 2011

ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 3, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு

Zec 9:9-10
Ps 145:1-2, 8-11, 13-14
Rom 8:9, 11-13
Matt 11:25-30


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 11



தந்தையும் மகனும்
(லூக் 10:21 - 22)
25 அவ்வேளையில் இயேசு, ' தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார் ' என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்
28 மேலும் அவர், ' பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது ' என்றார்.
(thanks to www.arulvakku.com)




இயேசுவின் நுகத்தை சுமையை ஏற்று கொண்டதால், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கிறீர்களா? அல்லது கவலையோடு இருக்கிறீர்களா? இயேசுவின் நுகம், சுமை - அவரது வாழ்வில் வெளிப்படுத்தியது போல, சேவை செய்பவராகவும், மற்றவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும், தியாகமுள்ள அன்புடனும் இருப்பது தான் இயேசுவின் நுகம், சுமை ஆகும்.


எனினும், நமக்கு , பல சுய போராட்டங்கள் இருக்கிறது. நமது சொந்த சிலுவைகளை நாமே சுமக்க வேண்டியுள்ளது. பலரின் கவனம் நம் மேல் இருக்கும். அந்த சுமைகளெல்லாம் சேர்ந்து, நம்மை கிழே தள்ளும், சோர்வுற செய்யும். பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில், இயேசு, என் நுகம், எளிதானது, அதன் சுமைகள் அழுத்தாது என்று கூறுகிறார்.?

இயேசுவின் இறைசேவகளில் நாம் பங்கெடுக்கும்பொழுது, அது எப்படி நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ?

நமது வாழ்வின் சுமைகள் நம்மை கீழே தள்ளி விடும், ஏனெனில், கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளை விட, அதிகமாக, நம் பொறுப்புகளை எடுத்து கொண்டு செய்கிறோம்.

அல்லது, இயேசு நம் சுமைகளை எடுத்து கொண்டவுடன், சிலுவைகளை நாம் எடுத்து கொண்டு, அதிகமாக நமது ஆற்றலை செலவிடுகிறோம். இந்த சுமைகளால், நாம் களைத்து போகும்பொழுது, கடவுள் நம்மை சோர்வுறசெய்கிறார். ஏனெனில், அவர் நம்மை எச்சரிக்கிறார். "மெதுவாக செய்யவும்!, உங்கள் வாழ்க்கையை சுலபமாக்குங்கள்!, ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்!. ஜெபத்தில் அதிக நெரம் செலவிடுங்கள்!"


இதெல்லாம், உங்களுக்கு, கோபத்தையும், மனக்கசப்பையும் கொடுத்தால், சுலபமான வாழ்க்கை வாழ விரும்பும், உங்கள் சுய நலத்தினால் தான், உங்கள் வாழ்வு இன்னும் கடினமாகியுள்ளது என்று கடவுள் நமக்கு காட்டுகிறார்.


நமது சுய தேவைகளை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு பிறகு தான் இயேசுவின் சுமையை நம்மால் எடுத்து அவர் கேட்டதை செய்ய முடியும். கிறிஸ்துவின் நுகம், நமக்கு சுமையாக இருக்கும், எப்பொழுது? கிறிஸ்துவிடமிருந்து நாம் எதையும் வாங்காமல், நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான். இயேசு நமக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பார். அவரோடு இனைந்து, நாம் மற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கொடுக்கலாம். அதன் பிறகு, நமது கோபமும், மனக்கசப்பும் நம்மை விட்டு விலகிவிடும். மேலும், பரிசுத்த வாழ்வின் இன்பத்தினை , நமது செயல்கள் மூல்ம் நாம் சுவைப்போம். ஏனெனில், கிறிஸ்துவின் சுமையையும், ஆற்றலையும், சக்தியையும் நாம் இயேசுவோடு இனைந்து, அவரது சுமையையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.


© 2011 by Terry A. Modica

Friday, June 24, 2011

ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் , திரு இரத்த பெருவிழா

Deut 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Cor 10:16-17
John 6:51-58


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 6



மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறில், நாம் கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும் திருவிழாவை கொண்டாடுகிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து உண்மையாகவே திவ்ய நற்கருணையில் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம், விசுவசிக்கிறோம்.


முதல் வாசகத்தில், தந்தை கடவுள் எப்பொழுதுமே, நமது கடினமான காலங்களில் , பாலைவனத்தில், அவர் தண்ணீரும், உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார் என்பதை பார்க்கிறோம். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனை காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்கு செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னம் மூலம், நமக்கு தேவையானவற்றை தந்தை கடவுள் கொடுக்கிறார். கிறிஸ்து நற்கருணையில் மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் மூலமும் நம்மிடம் வருகிறார். பரிசுத்த ஆவியானவர், நமது ஞானஸ்நாணத்தின் மூலம் நம்மில் வந்து தங்கி நம்மை வழி நடத்தியும், நமது பரிசுத்த வாழ்வையும் வளரச் செய்கிறார்.


நற்செய்தி வாசகம், திவ்ய நற்கருணை வெறும் உணவும், திராட்சை ரசமும் அல்ல, உண்மையாகவே கிறிஸ்து தான் என்று சொல்கிறது. இந்த உணவும், இரசமும் நமக்கு எப்படி பாம்பும், தேளும், நீரும் இல்லாத பாலைவனத்தில் நமக்கு உதவப்போகிறது. இயேசு உண்மையாகவே நமது தாகத்தை தீர்க்கிறார் மேலும், நமது பசியை நீக்குகிறார். நாம் அவரை முழுமையாகவே ஏற்றுகொள்வதை போல, அவரும் நம்மை முழுதுமாக எற்றுகொள்கிறார். நாம் அவரை உள்ளிழுப்பது போல, அவரும் நம்மை அவருள் இழுத்து கொள்கிறார். இந்த இனைப்பில், நமது சோதனைகளில் வெற்றியடைகிறோம்.


இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நாம் இயேசுவோடு இனைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு ,இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்கு தேவையானதை இறைவன் கொடுக்கிறார். இந்த இனைப்பில், எதுவெல்லாம் உயிர்ப்புள்ளதோ, அதெல்லாம் உயிர்ப்புடன் இருக்கும், எல்லா திறமைகளும், அன்பளிப்புகளும், பகிர்ந்து கொள்ளப்படுகிற பொழுது , யாரும் குறையுடன் இருப்பதில்லை. மேலும், இந்த இனைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாக கிடைக்க விருக்கிறது.


© 2011 by Terry A. Modica

Friday, June 17, 2011

ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 19, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா

Ex 34:4b-6, 8-9
Dan 3:52-56
2 Cor 13:11-13
John 3:16-18

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 3




16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
(thanks to www.arulvakku.com)

பெந்தகொஸ்தே ஞாயிறில் நாம் பரிசுத்த ஆவி விழ கொண்டாடுகிறோம், அதன் அடுத்த ஞாயிறில், நாம் மூவொரு கடவுள் விழவை கொண்டாடுகிறோம்.

முதல் வாசகம் தந்தை இறைவன் இரக்கமும் பரிவும் கொண்டவர் என்றும், எப்படி அவர் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல காத்தார் என்பதையும் நமக்கு எடுத்து காட்டுகிறது. அவர் "இரக்கமும், பரிவும், கோபம் கொள்ள மிக அதிக நேரமும், நம்பிக்கையும் " கொண்டவர் என்பதை பார்க்கிறோம். -- மிகச் சரியான தந்தை -- . அவரை இப்படி பார்ப்பதில் நமக்கு மிகவும் கடினமாக இருந்தால், நமது ஆண்மாவிற்கு மருந்திட வேண்டும். நமது இவ்வுலக தந்தையிடமிருந்து, கடவுள் தந்தையை முழுமனதுடன் பிரித்து பார்க்க வேண்டும்.



இரண்டாவது வாசகம் மூன்று கடவுளையும் நமக்கு காட்டுகிறது:, இயேசுவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியின் நட்புறவும் நம்மோடு இருப்பதாக. இதோடு, இதனாலும், மகிழ்ச்சியாகவும், நல்ல நடத்தையோடும், மன ஒற்றுமையோடும், அமைதியோடும் நாம் வாழவேண்டும்.



இதையே மாறாக சொல்வதானால், நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து மரணத்தை வெற்றி கொண்டார். நாம் பாவங்களை எதிர்த்து செல்ல நமக்கு தேவையான அருளை கொடுக்கிறார், மேலும் தந்தை கடவுளின் அன்பையும் கொடுத்து, நாம் ஒருவரையொருவர் அன்பு செய்ய உதவி செய்கிறார். மேலும் தூய ஆவியை கொடுத்து, நாம் பரிசுத்த கிறிஸ்தவர்களாக தொடர்ந்து வாழ உதவி செய்கிறார்.


நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை நமக்கு சொல்கிறது. அவர் நமது பாவங்களுக்காக தீர்ப்பளிக்க வரவில்லை, மாறாக, அவர் தமது மகனை கொடுத்து தீர்ப்பிலிருந்து நம்மை காப்பாற்றுகிறார். நமது பாவங்கள் நம்மை இவ்வுலக மரணத்திற்கு இட்டு செல்கிறது, ஆனால், இயேசு, நம் பாவங்களை எடுத்து கொண்டு, நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். ஆனால், நாம் அதற்கு விருப்ப பட வேண்டும். !


© 2011 by Terry A. Modica

Saturday, June 11, 2011

ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுன் 12, 2011 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
பரிசுத்த ஆவியின் ஞாயிறு

Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13
John 20:19-23

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 20




இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


"தந்தையே உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பித்தருளும்." என்று இன்றைய வாசகத்தின் பதிலுரையில், நாம் ஜெபிக்கிறோம். இதனால் தான், திருச்சபை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

பரிசுத்த ஆவியின் துனையின்றி, கிறிஸ்தவம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தழைத்து வளர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கிறிஸ்துவின் ஆவியின் துனையின்றி, நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும் இவ்வுலகில் இப்போது கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மை என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்ய நம்மால் முடியாது.


பரிசுத்த ஆவியின் ஞாயிறு திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறது, அதே போல, நமக்கு இது நமது ஆண்மீக வாழ்விற்கு பிறந்த நாளாகும். அது என்னவெனில், இந்த திருச்சபையின் உறுப்பினாராக, நாம் குழுவாக எல்லோரும் இனைந்து , நமது ஞானஸ்நாணம் நமது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தை குறித்தும், உறுதிபூசுதலில், ஆயர், ஞானஸ்நாணத்தில், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கியதை உறுதி படுத்தியும் இவ்விழாவை கொண்டாடுகிறோம்.


ஞான்ஸநாணத்தின் மூலமும்,உறுதி பூசுதலின் மூலமும், நாம் பெற்ற பரிசுத்த ஆவியின் திருவிழா, நாம் கடவுளின் ஆற்றலை பெற்று , பாவங்களை விட்டு நம்மால் வெளியே வரமுடியும் என்பதை இந்த பெந்த கோஸ்தே திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நம்மை சுற்றியுள்ள உலகை நம்மால் மாற்ற முடியும் என்பதையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. கடவுள் எப்படி இவ்வுலகின் முகத்தை மாற்ற போகிறார்? . நம் மூலமாக!, முதலில், தந்தை கடவுள், இயேசுவிற்கு பரிசுத்த ஆவியை கொடுத்து, இவ்வுலகில் இயேசுவிற்கு கொடுக்க பட்ட அழைப்பை அவர் செய்து முடிக்க உதவினார். இப்போது, தந்தை கடவுள், நமக்கு பரிசுத்த ஆவியை வழங்கி, யேசு விட்ட இடத்திலிருந்து, இப்பூமியை புதுபிக்க, நம்மை தொடர செய்துள்ளார்.

இறைசேவை செய்யவோ, அல்லது தீங்கிற்கு எதிராக , நியாயத்தை பேசவோ, உங்களுக்கு தகுதி குறைவாக உள்ளது என நீங்கள் நினைத்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருப்பதே போதுமானது. பரிசுத்த ஆவியோடு உள்ள தொடர்பில், முன்னேறி செல்லுங்கள். !

© 2011 by Terry A. Modica