Saturday, December 29, 2007

30 ஜனவரி 2007 நற்செய்தி - மறையுரை:

30 ஜனவரி 2007 நற்செய்தி - மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 2

13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் ' என்றார். 14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார். 21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். 22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″ நசரேயன் ″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

thanks www.aruvakku.com



இன்றைய ஞாயிறு திருக்குடும்ப ஞாயிறு. அதோடு சேர்ந்து நாமும் நம் குடும்ப விழாவாகவும் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்களும், நற்செய்தியும், நாம் எப்படி திருக்குடும்பமாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனை கொடுக்கிறது.

முதல் வாசகம் பெற்றோர்களை மரியாதையுடனும், போற்றுதலுடனும் பார்த்துகொள்ள வேண்டும் என்று சிறுவர்களுக்கு (குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களூக்கும்) சொல்கிறது. . பெரியவர்களிடமும், பெற்றோர்களிடமும் அனுசரனையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் பெரிய்வர்களானது, தெளிவில்லாமலும், பலவீனமாயும் இருக்கும்போது அவர்களிடம் கரிசனையோடு இருக்கவேண்டும், அவர்கள் உங்களை அன்பு செய்யாமல் இருந்தால் கூட அவர்களிடம் கோபிக்காமல், அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு எல்ல நேரங்களிலும் கீழ் படிய வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த வாசங்களில் என்கும் "கீழ்படி" என்று கூறவில்லை.

நாம் கடவுள் ஒருவருக்கு மட்டும் தான் கீழ்படிய வேண்டும். நமது பெற்றோர்கள் கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ அதைதான் நமக்கு கட்டளை இடுகின்றனர். மேலும் கடவுள் நம் பெற்றோருக்கு கீழ்படிய சொல்கின்றார். ஆனால், பெற்றோர்கள் கடவுளுக்கு கீழ்படியவில்லை என்றால், அவர்களை நாம் பின் சென்று, பாவத்தில் விழ வேண்டியதில்லை. அவர்கள் கடவுள் படைத்த மனிதனாய், நாம் மரியாதையும் போற்றுதலும் செய்யவேண்டும், ஆனால் அவர்கள் பாவங்களை நாம் மதிப்பதோ, அல்லது பின் செல்வதோ வேண்டியதில்லை.

இரண்டாவது வாசகம்: "உண்மையான அன்புடனும், சரியான பந்தத்துடனும்" கட்டுண்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், கிறிஸ்துவின் அமைதியின் கட்டுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்கிறது. எப்படி இருப்பது? , புனித ப்ரான்சிஸ் இவ்வாறு கூறுகிறார். "அவசரபடாதீர்கள்; ஒவ்வொரு விசயங்களையும் அமைதியாக செய்யுங்கள். உங்களது உள் அமைதியை எதற்காகவும் விட்டு விட வேண்டாம். உங்கள் முழு உலகமே ப்ரசனை கொடுத்தாலும் உள் அமைதியோடு இருங்கள்"

வசனம் 18, மனைவிகளும், கணவர்களூக்கு கீழ்படிய வேண்டும் என்று கூறவில்லை. "கீழ்படிதல்" என்ற வார்த்தையை எடுத்து விட்டு, "மரியாதை" என்ற வார்த்தையை போட்டுகொள்ளுங்கள். கடவுள் கனவரை குடும்பத்தின் காவலனாக நியமித்துள்ளார். (அதனால் தான் மேரிக்கு பதிலாக சூசையப்பருக்கு கனவில் கட்டளை வந்தது என்று நற்செய்தி கூறுகிறது). தெய்வீக காவலாகவும் கனவன் இருக்க வேண்டும். (இது கடவுளை பற்றி குடும்பத்துக்கு எடுத்து சொல்லி அனைவரையும் மோட்சத்திற்கு அழைத்து செல்ல்வேண்டும்). கடவுளின் படைப்பான கனவனுக்கு மனைவி மரியாதை செலுத்தவம், அவளையே கனவனின் காவலில் தன்னை ஈடுபடுத்திகொள்கிறாள். அது தான் கடவுளின் பாதுகாவலாகும்.

மேலும் கணவன் மனைவியை அன்பு செய்ய கடமைபட்டிருக்கிறார். ஏன் மனைவியை கனவனை அன்பு செய்ய வேன்டும் என்று கூறவில்லை? ஏனெனில், இயற்கையாகவே பெண் ஆனவள், கணிவாக அனைவரையும் பார்த்து கொள்பவள். ஆனால், ஆன், காவலாளியாக படைக்கபட்டவன், அவனிடம் போர்க்குணம் தன் இருக்கும், அதனால் தான் கடவுள் அவனிடம் மனைவியிடம் அன்பு செய் என்ரு கூறுகிறார். புனிதத்துடன் இருக்க, கணவன் போர்குணத்தையும் , தனக்கு காவலாய் இருக்கம் எண்னத்தயும் விட்டு, மற்றவர்களுக்காக யேசு செய்த தியாகம் போல தானும் தியாகம் செய்ய வேண்டும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 21, 2007

டிசம்பர் 23 2007 , மறையுரை நற்செய்தி:

டிசம்பர் 23 2007 , மறையுரை நற்செய்தி:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 1

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ' யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ' என்றார். 22 ' இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23 இம்மானுவேல் என்றால் ' கடவுள் நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள். 24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.



thanks to www.arulvakku.com


அன்பு தான் இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். அன்பின் முழு அர்த்தத்தை இன்றைய முதல் வாசகத்தில் வரும் பெயரிலும், நற்செய்தியில், இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியதாக குறிப்பிடுவதிலும் பார்க்கிறோம்: இம்மானுவேல், அதன் பொருள் "கடவுள் நம்முடன் இருக்கிறார்". அன்பை அடைவதற்கான பொருள் கடவுள் நம்மோடு இருப்பது. அன்பை கொடுப்பது என்பது நம்மிடம் உள்ள கடவுளை மற்றவர்களுக்கு கொடுப்பது.

மற்றவர்களை அன்பு செய்ய உன்னிடம் ஏதுமில்லை என என்றாவது நீ நினைத்தது உண்டா? இதுமாதிர் என்றும் நடப்பதில்லை. அன்பான கடவுள் நம்மிடையே இருப்பதால், நாம் நினைப்பதை விட இன்னும் அதிகமாக அன்பை கொடுக்கலாம். சில நேரங்களில், நாம் செலுத்து அன்பின் அளவிற்கு, நமக்கு அன்பு கிடைக்காமல் போகலாம், அதனால் நாம் உறசாகம் இழந்துவிடுவோம். இன்னமும் கூட, நம்மை வேதனையுற செய்பவர்களை நாம் இழிவுபடுத்துவ்வொம். இதனால் நாம் அந்த மனிதருக்கு அன்பு செலுத்த இயலாமல் போகலாம்.
இது மாதிரியான தருணங்களில் தான் நாம் கடவுளின் மிக பெரிய அன்பையும், நமது பகைவர்களிடம் அன்பு செய்யும் ஆற்றலையும் கேட்க வேண்டும். இந்த வேண்டுதலுக்கு எப்போதுமே ஆண்டவரின் அருள் கிடைக்கும். இப்படித்தான், நாம் கடவுளின் தூதுவராக இருந்து, அவரின் அன்பை பரப்பவேஎண்டும். அன்பு செய்ய கடினப்படுபவர்களிடம், நாம் கடவுளின் அன்பை கொடுத்தால், நம்மிடம் உள்ள கடவுளை அவர்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.

நாம் எதிர்பார்க்கும் அன்பு நமக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் போது, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் ஞாபக படுத்திகொள்ள வேண்டும். நாம் இம்மானுவேலை கூப்பிடவேண்டும். ஏற்கனவே முழுமையாகவும், எவ்வித நிபந்தனையுமின்றி கடவுள் நம்மிடையே இருக்கிறார். நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் குறைவாக நமக்கு அன்பு கிடைப்பதால், நாம் சோர்ந்து போகிறோம். அந்த நேரங்களில், யேசுவை நோக்கி நம் பார்வை செல்லட்டும். யேசு நம்மிடம் அன்பின் இடைவெளையை நிரப்புவார். இம்மானுவேல். இந்த பெயரைதான் வருடம் முழுதும், நாம் உபயோகிக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கான உங்கள் தயாரிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள நீங்கள், இம்மானுவேலை நோக்கி உங்கள் பார்வைகள் இருக்கட்டும். இம்மானுவேலுக்கு பாட்டு பாடுங்கள், இம்மானுவேலிடம் ஜெபம் செய்யுங்கள். உஙகளுக்கு இந்த பெயர்தான், கடவுளின் தனிப்பட்ட அன்பளிப்பாகும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 14, 2007

டிசம்பர் 16 2007, ஞாயிறு , நற்செய்தி மறையுரை:

டிசம்பர் 16 2007, ஞாயிறு , நற்செய்தி மறையுரை:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 11

2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். 3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார். 4 அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். 5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் ' என்றார். 7 அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? 8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். 9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. 11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

thanks to (www.arulvakku.com)


சந்தோசம் தான் இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். இன்றைய முதல் வாசகத்தில் கூறுவது போல " திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்" இது தான் நமது சந்தோசத்திற்கு காரனம் ஆகும். நமது பாவங்களுக்காகவும், அதனுடைய அழிவிலிருந்து நம்மை காக்க மிகபெரிய வெகுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. யேசு அவருடைய மிக பெரிய தியாகத்தாலும், சிலுவையில் அதற்கான வெகுமதியை நமக்காக அளித்தார். இதற்காக தான் யேசு இந்த பூமியில் நம்மில் ஒருவராக பிறந்தார். நமக்கு நித்திய வாழ்வில் ஏற்படவிருந்த மிக பெரிய இழப்பை ஈடு செய்யவும் அதிலிருந்து நம்மை மீட்கவும் யேசு இவ்வுலகில் பிறந்தார். நித்திய வாழ்வில், கடவுளின் அன்பையும், அவரையும் இழக்காமலிருக்க யேசு நமக்காக இந்த தியாகம் செய்தார். நித்திய வாழ்வில் நமக்கு ஏற்படும் இழப்பை ஒப்பிட்டு பார்க்கையில், இன்றைய உலகில் நமக்கு உள்ள ப்ரச்னைகள் எல்லாம் மிகவும் சிறியவை ஆகும்.


யேசுவின் மூலம், நமக்கு கிடைத்த வெற்றியில், எந்த ஒரு பாவமும், நமக்கு எதிராக இல்லை என்பதை உணர்ந்து அறிந்தவுடன், நாம் சந்தோசம் அடைகிறோம். கடவுள் நமக்கு செய்யும் ஒவ்வொரு செயலுமே, நமக்கு பயனுள்ளதாகவே இருக்கிறது. அவர் சாத்தானை நமக்காக தோற்கடித்தார்.

மிகவும் மோசமான நேரங்களில் கூட நாம் யேசுவிடம் நமது வாழ்வை ஒப்படைத்து, அவர் வழியில் சென்றால், அது மிக பெரிய ஆசிர்வாதம் ஆகும். கிறிஸ்துவிலும், அவரை போல வாழ்வதிலும், நமது துன்பங்கள், மற்றவர்களுக்காக நாம் செய்யும் சேவைகள், அவர்களுக்க ஆசிர்வாதம் ஆகும். இதனால், இதன்மூலம், நமது சந்தோசம் பல மடங்கு பெரிதாகும்.

அதனால், கிறிஸ்துவில் நமக்கு கடைசி வரை இன்பம்/சந்தோசம் கிடைக்கிறது. நாம் இந்த சந்தோசத்தினால், மகிழ்ச்சி அடைவோம். வருத்தங்கள், துக்கம் எல்லாம் பறந்து போகும். கருணையும், இரக்கமும், விசுவாசமும் உள்ள கடவுளை நினைத்து நாம் சந்தோசம் அடையும் போது, நமது துன்பங்கள் எல்லாம் ஓடோடி போகும்.

இரண்டாவது வாசகம் குறிப்பிடுவது போல, கடவுள் நமது சோதனைகள வெற்றி கொள்ளும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சந்தோச மனநிலையுடன் இருக்க, நாம் நமது விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும். கடவுளின் அன்பின் மேலும், அவர் நம் மேல் உள்ள அக்கறையில், துளியும் சந்தேகமில்லாமல் இருக்க வேன்டும். மேலும் நாம் குற்றம் சொல்லக்கூடாது. குறை கூற கூடாது. ஏனெனில் குறை சொல்வது என்பது, நாம் க்டவுளை நம்பவில்லை என்று அர்த்தம். நாம் கடவுளை விட பெரியவன் என்ற எண்ணம் வரும், எப்படி நமது ப்ரச்னைகளை நாம் தீர்க்கமுடியும் என்ற எண்ணம் வரும்.

கடவுள், நம்மை உண்மையாக பார்த்துகொள்கிறார், நமது நன்மைகளூக்காக உழைக்கிறார் என்கிற நல்ல செய்தியை கேட்கும்ப்போது, நாம் மகிழ்ச்சியடைகிறோம். அந்த மகிழ்ச்சியில் இருத்து நமக்கு சந்தோசம் கிடைக்கிறது. யேசு நற்செய்தியில் கூறுவது போல "என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்",அதனால், நாமெல்லாம் இறைவனின் ஆசிர்வாதத்தை அடைகிறோம்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, December 7, 2007

மறையுரை டிசம்பர் 9 2007

மறையுரை டிசம்பர் 9 2007


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 3

1 அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, 2 ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' என்று பறைசாற்றி வந்தார். 3 இவரைக் குறித்தே, ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். 4 இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 5 எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். 6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். 7 பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ' விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? 8 நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். 9 ″ ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை ″ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். 10 ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். 11 நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 12 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.

www.arulvakku.com





மறையுரை

அமைதிதான், இன்றைய ஞாயிறின் முக்கிய கருத்து ஆகும். முதல் வாசகம், மெசியா யேசு கிறிஸ்து, டேவிட் அரசர் வழிமுறையில் வந்தவர் என்பதை விவரிக்கிறது. மேலும், எப்படி அமைதி பெறுவது என்பதை விளக்குகிறது. எப்படி சோதனைகளிலும், வேதனைகளிலும் அமைதியோடு இருப்பது என்று கூறுகிறது. "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்" இது மிகவும் இயற்கையான செயலாகும். நீங்கள் எப்போதாவது பரிசுத்த ஆவி உங்கள் மேல் தங்கியிருக்கிறார் என்று எண்ணியதுண்டா?

நாம் கடவுளோடு சேர்ந்து அவரில் இணைத்து கொண்டால் தான் நாம் உண்மையான அமைதியை அனுபவிப்போம். அது எப்படி என்றால், கடவுளின் வழியை, அவருடைய திட்டங்களை கடைபிடிக்கும் போது எவ்வித போராட்டமும், தோல்வியுமின்றி இருக்க வேண்டும். நாம் மற்றவர்களோடு நடத்து போராட்டத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாலோ, நமது பண ப்ரச்னைகளிலிருந்து மீண்டு வருவதாலோ, உடல் நோயிலிருந்து சுகமடைவதாலோ அமைதி போவதில்லை. அமைதி இவைகளையெல்லாம் சார்ந்திருப்பதில்லை. நாம் அமைதிக்காக, மிகவும் கடினமாக உழைத்து, சோதனைகளிலிருந்து, போராட்டங்களிலிருந்து, வெற்றி பெற்றாலும், அமைதி நம்மில் கிடைப்பதில்லை.

பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு கிடைக்கும்,ஞானமும், புரிந்துணர்வின் மூலம் நமக்கு அமைதி கிடைக்கிறது. கடவுள் நமக்கு என்ன தெரிய வேண்டும் என நினைக்கிராறோ, அவருடைய முழு அதிகாரத்தை ஏற்றுகொண்டு, அவரிடம் கீழ்படிந்து,வாழ்தல் வேன்டும். இந்த உண்மைகளை ஏற்றுகொண்டு வாழ்வதால், அமைதி வருகிறது.

இன்றைய நற்செய்தியில், ஞானஸ்நானம் கொடுக்கும் யோவான், "2 ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' " மேலும், கடவுள் வருவதற்கான பாதையை செம்மைபடுத்துங்கள் " என்று கூறுகிறார். கடவுளின் ஆவியையும், அமைதியையும் பெறுவதற்கும், திருப்பலியில், யேசுவோடு சேர்வதற்கு, நாம் நம்மையே தயார்படுத்த வேண்டும். எல்லா வழிகளிலும், அவர் நம்மை எப்படி ஏற்றுகொள்வாரோ அவ்வாறு நாம் அவரிடம் தஞ்சம் அடைய வேண்டும். எப்பட்? நமது பாவங்களை கண்டறிந்து, மணம் திரும்பி, நமது கோணலான பாதையை நேராக்க வேண்டும். நாம் யேசுவை பார்ப்பதற்கு தடையாக இருக்கும் தடைகளை தூக்கி எறிய வேண்டும். நமது தீய எண்ணங்களையும், தவறான ஆர்வத்திற்கு தடை கொடுங்கள். அப்போது தான் நாம் அமைதியை தேடி செல்ல முடியும்.

எதுவெல்லாம், கடவுளின் அமைதியையும் நம்மையும் பிரிக்கிறதோ, அதனையெல்லாம், தூக்கி எறிய வேண்டும். திருப்பலியின் மூலமும், பாவ சங்கீர்த்தனத்தின் மூலமாகவோ நாம் அந்த பாவங்களை தூக்கி எறிய வேண்டும். சின்ன பாவமோ கூட இருந்தாலும் நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து கடவுளோடு சேரவேண்டும்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 30, 2007

டிசம்பர் 2 , 2007, ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 2 , 2007, ஞாயிறு நற்செய்தி மறையுரை:



Isaiah 2:1-5
Ps 122:1-9
Rom 13:11-14
Matt 24:37-44

எசாயா

அதிகாரம் 2

1 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந 4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோது 5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்: 6 யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 7 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 8 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந 9 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோது 10 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்:


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 24

37 நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். 38 வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். 39 வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். 40 இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். 41 இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். 42 விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. 43 இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். 44 எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

thanks www.arulvakku.com
இன்று கிறிஸ்து பிறப்பு காலத்தின், முதல் ஞாயிறு. இன்றைய முதல் வாசகத்தில், இசையாஸ், முக்கிய செய்தியை கொடுக்கிறார். 1) கடவுள் மிக அதிகமான, முழுமையான அதிகாரத்தை உடையவர். 2)அவரையும், அவருடைய வழிகளையும் பின்பற்றுவதுதான், மக்கள் அனைவரின் முதன்மையான, முக்கியத்துவம் வாய்ந்த செயலாக இருக்க வேண்டும்.

இந்த அறிவாற்றல் மிகுந்த காட்சி தான், அடிமைபட்ட இஸ்ரேயலர்களுக்கு நம்பிக்கை தந்தது. இந்த மோட்சத்தின் படம், நமக்கும் மிக பெரிய நம்பிகையை தந்தது. உத்தரிக்கிற ஸ்தலமும் நமக்கு கொடுக்கபட வேண்டும், ஏனெனில், நாம் முழுமையாக கடவுளின் பாதையில் செல்லவில்லை. சில நேரங்களில் பாதை தவறி விடுகிறோம். நமது மரணத்திற்கு பிறகு, நாம் கடவுளின் ஒளியில் வாழ்வோம். மேலும், அங்கே எந்த ஒரு போரும் இருப்பதில்லை.

இது நமது எதிகாலம் என்று தெரிந்த பிறகு, நாம் இன்றைய சோதனைகளை, நமக்கு மோட்சத்தின் தயாரிப்பிற்கு உதவுவதாக பார்க்க வேண்டும். இந்த தீய சோதனைகளை தோற்கடிக்கும் ஆயுதங்கள், பூமியை ஏர் உழுது மண்ணை பண்படுத்தும் ஏராக நிணைத்து, அந்த சோதனைகள் இறைவனுக்கு செய்யும் சேவைகளாகும். துன்பத்துற்கு ஆளாகுதல்,இறைவனின் சேவையாகும், அது மற்றவர்களின் துயரங்களை போக்க உதவுவது, நிச்சயம், அது நமக்கு நன்மை தரும்.

மெசியா இஸ்ரேயலிலிருந்து வருவார் என்று இசையாஸ் கூறினாலும், இந்த வேத வாக்குகள், "நாம் இறைவனின் அதிகாரத்திற்கு மதிப்பளித்து, கிறிஸ்துவை போல வாழவது, நமது முக்கிய சாய்ஸாக " இருக்க வேண்டும் என நமக்கு நினைவுபடுத்துகிறது. பேயிடமிருந்து, நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. ஆனால், யேசு ஏற்கனவே, நமக்காக வெற்றியடைந்தார். நமது எதிர்பார்ப்பு, அமைதிக்கு ஆசைபடுவதாக இருக்க கூடாது. நமது எதிர்பார்ப்பு, யேசு என்ன செய்தாரோ, மீண்டும் என்ன செய்வார் என்பதாக இருக்க வேண்டும். "இறைவனின் வீட்டில், சந்தோசமடைவோம்" .

இன்றைய நற்செய்தி, நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. நாம் விழிப்பாக இருந்தால் தான், இறைவன் யேசுவின் நடவடிக்கைகள் நமக்கு தெரியும். நீ எதற்காக நம்பிக்கை இழக்கிறாய். எதனால் மன சஞ்சலம் அடைகிறாய். இதெல்லம் சாத்தானின் வேலைகள், உங்களை கிறிஸ்துவை விட்டு விலகிவைக்க முயற்சி செய்கிறது. இந்த முயற்ச்யில், யேசு ஏற்கனவே நமக்காக வெற்றியடைந்து விட்டர். நாம், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, விழிப்புடன் இருந்து கவனிது, அவருடைய அதிகாரத்து ஏற்று கொண்டு, அவர் வழியில் நடந்தல், நாம் நல்ல எதிர்பார்ப்போடு வாழலாம், நமது விருப்பங்களால் அல்ல, யதார்த்தமான உண்மை நிலையோடு வாழ்வோம்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 23, 2007

ஞாயிறு நவம்பர் 25, நற்செய்தி மற்றும் மறையுரை:

ஞாயிறு நவம்பர் 25, நற்செய்தி மற்றும் மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 23

35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள். 36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, 37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர். 38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. 39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான். 40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான். 42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான். 43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார்.


http://www.arulvakku.com (thanks)


இன்றைய நற்செய்தியில், யேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனை நாம் பிரதிபலிக்கிறோம். யேசு தான் நமது அரசர். மேலும் நமது நித்திய காலத்தை அவரோடு சேர்ந்து அவரது ராஜ்ஜியத்தில் வாழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த எண்ணத்தோடு இருக்கும் வரை, நாம் இறந்த பிறகு, கடவுளரசில் சேர்வோம் என்பதில் எந்த வித ஐயமும் தேவையில்லை.


மோட்சத்தின் அரசராக யேசு இருப்பதினால், யேசுவிற்கு , யாரையெல்லாம் அவரது அரசிற்குள் சேர்க்கலாம் என்ற அதிகாரம் இருக்கிறது. அவருடைய அதிகாரத்தை ஏற்று கொள்கிறவர்கள் அனைவரையும் அவரது அரசில் "பெரிய வெள்ளியின் குற்றவாளியிடம்" சொல்வது போல், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் " என்று சொல்வார்.

யேசுவின் அதிகாரங்களை பார்ப்போம்: கடைசி இரவு உணவு விருந்தில், யேசு ஒவ்வொரு சீடர்களின் பாதங்களையும் கழுவியபோது, மோட்ச ராஜ்ஜியத்தின் சார்ந்த் ஒவ்வொருவருக்கும், மோட்சத்தின் அரசர் சேவை/உதவி செய்வார் என்பதை மிகவும் உறுதியாக கூறுகிறார்.

அந்த பெரிய வெள்ளியின் அடுத்த நாள், தங்க கீரீடம் சூட்டிகொள்வதற்கு பதிலாக, முள்முடி சூட்டிகொண்டார். ஏனெனில், அவருடைய போற்றுதலுக்குரிய அரசு, இந்த பூமியின் பொருட்களால் ஆனதில்லை. அதனுடைய பணத்தால், நகைகளால், மிகுதியான செல்வங்களால் ஆனதில்லை. அன்பின் ஊக்கத்தால் நடைபெறும், சுய தியாகங்களாலும், யேசுவின் அரசு போற்றப்படுகிறது.

யேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின், அவருடைய மரண காயங்கள் ஆறிவிட்டது. ஆனால், உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களும், இன்னும் ஆறவில்லை. இன்றும், அந்த காயங்களை, யேசு வைத்துகொண்டு இருக்கிறார். அவருடைய அதிகாரத்தை, வைத்து, அவர் காயங்களை ஆற்றவில்லை. அந்த காயங்கள் மூலம், அவருடைய நமக்கான தியாகத்தை நினைவுபடுத்துகிறார். இவ்வுலகில் உள்ள அரசர்கள் விலையுயர்ந்த மோதிரத்தை அணிந்து கொள்கின்றனர். நம் மோட்சத்தின் அரசர், அவருடைய தியாகத்தின் குறியீடுகளை அனிந்து கொண்டு இருக்கிறார்.

நமது சகோதரர்களுக்கு, கிறிஸ்துவோடு நாம் சேவை செய்யும் போது, நாம் கடவுளரசை சேர்ந்தவர்கள் என்பது நமக்கு தெரியும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதால் வரும் இன்பத்தையும், சுய தியாகத்தால் வரும் சந்தோசத்தையும், நமது அன்புக்கு தகுதி இல்லாதவர்களிடம், அன்பு செய்வதும் நாம் கடவுளரசில் இருக்கிறோம் என்பதற்கு அறிகுறியாகும். நமது துன்பங்களை யேசுவிடம் காணிக்கையாக்கும் போது, அதனுடைய உண்மையான மதிப்பை அறிகிறோம். நாமும், நமது ஆன்மாவில் அவருடைய ஐந்து காயங்களையும் அனிந்திருக்கிறோம். மேலும் கடவுளரசில் நாமும் இணைந்திருக்கிறோம்.
கண்டிப்பாக, நாம் யேசுவின் பேரரசில் சேர்வோம். நாம் யேசுவோடு ஏற்கனவே இனைந்து விட்டொம்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, November 17, 2007

நவம்பர் 18 2007 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை

நவம்பர் 18 2007 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21

5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார். 7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள். 8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். 9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார். 10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். 11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். 12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். 13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். 14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். 17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். 18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. 19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

thanks to http://www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில்,
"ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ", இந்த பூமியில் உள்ள எல்லாமும் தற்காலிக்மானவை என்று நினைவூட்டுகிறார். அனைத்தும் நிரந்தரமானவை இல்லை.

இந்த உலகில் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள், அவையெல்லாம் தற்காலிகமானவை. எவையெல்லம் உங்களை துன்புறுத்துகிறது. அதுவும் நிரந்தரமானதில்லை. இந்த உலகத்தில் நீ எவர்றை சார்ந்திருக்கிறாய்.? அவைகளும் தற்காலிகமானவை. நீ எதனை பார்த்து அதிசயிக்கிறாய்? நம்பிக்கை வைக்கிறாய், நீ எதுவெல்லாம் திட்டமிடுகிறாய், நீங்கள் நிறைவேற்ற துடிக்கும் சாதனைக்காக, எவ்வள்வு நேரம் செலவழித்தாலும், மிகப்பெரிய அவார்டு கிடைத்தும், அதன் பிறகு மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தாலும், அவையெல்லாம் தற்காலிகமானவை. அவையெல்லாம் கடவுளுக்காக (அவரது அரசிற்காக) செய்யபடும்போது அது உன்மையான உபயோகமாகும்.

நாம் கடவுளின் நோக்கத்தோடு தான், ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும் என்பது தெரிந்து வைத்திருக்கிறோம். அந்த செயல்கள் எல்லாம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும். ஆனால், இந்த கண்மூடிதனமான நம்பிக்கையை விரும்பவில்லை. நாமும் யேசுவின் சீடர்களை போல, கடவுள், இவ்வுலகில் நடக்கும் தீமையானவைகளையும், அநீதிகளையும் பழி வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.யேசு இரண்டாம் முறையாக இவ்வுலகில் வந்து, எல்லாவகையான தீமைகளையும் நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசைபடுகிறோம்.

நமது ஒவ்வொரு நாளிலும், நாம் இறைவனின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், நமது நம்பிக்கைக்கு தகுந்தாற்போல், அந்த உதவி கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கடவுள் என்ன திட்டம் நமக்காக வைத்திருக்கிறார் எனபதை அறியாத ஒரு பய உணர்வை நாம் விரும்புவதில்லை. பார்க்க முடியாத கடவுளை சார்ந்திருப்பதை விட, நாம் கண்ணால் என்ன பார்க்கிறோமோ அதையே சார்ந்திருக்கிறோம். அதனால், கடவுளிடம் எடுத்துகாட்டு அல்லது குறியீடுகளை எதிர்பார்க்கிறோம்.

எப்படியிருந்தாலும், கடவுளோடு நாம் ஒன்றாய் பயனம் செய்ய, நாம் ஒரு காலை எடுத்து தூக்கி கொண்டு அடுத்த அடி வைக்கும் முன்: "கடவுளே அடுத்த அடியை எங்கே வைப்பது? " என கேட்போம்.

கடவுளரசோடு சேர்ந்து அதற்காகவே வாழ்வது என்பது, எப்போதுமே நமது காலை தூக்கி நிறுத்தி கொண்டு காத்திருக்க வேண்டும், இந்த நிலையில், நாம் ஒற்றைகாலில், தள்ளாடமல், சமனாய் நிற்க வேண்டும். கடவுளை சுற்றியே நமது வாழ்வு இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால், நாம் தடுமாறி வீழ்ந்துவிடுவோம். கடவுள் நாம் அடுத்த அடியை எங்கே வைக்கவேண்டும் என்று சொல்லவில்லையெனில், நாம் வீழ்ந்து இறப்போம். நாம் ஒன்று வேறு எங்கேயாவது வீழ்வோம், அல்லது கடவுளின் கைகளில் விழுவோம். அது எப்போதுமே நம்மை தாங்கி கொன்டுதான் இருக்கிறது. (நமக்கு தெரிந்தோ தெரியாமலோ) அதன் பிறகு, நமது சொந்த விருப்பங்களும் முடிந்து /இறந்து , மேலும் அடுத்து எங்கே போகவேண்டும் என தெரியும்.

கடவுளின் கைகள், எப்போதுமே நிரந்தரமானவை. அவருடைய கைகள் தான் நித்தியத்திற்கும் நிரந்தரமானவை. அவருடைய கைகள் தான், நமக்கு உன்மையான காவல், முடிவில்லாத காவலாயிருப்பார். எல்லா ஆற்றலும், எல்லாம் தெரிந்த அன்புமாயிருப்பார். அவருடைய அன்பும், காவலும், என்றுமே தோல்வி அடைவதில்லை.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 9, 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20

27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30 இரண்டாம், 31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர். 34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார். 38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.
thanks to www.arulvakku.com

மறையுரை
உயிர்த்தெழுதலில் உங்களுக்கு நம்பிக்கையுன்டா? இந்த கேள்வியைதான் இன்றைய நற்செய்தியில் யேசு சுற்றி வளைத்து கேட்கிறார். இதனை சதுசேயர்களின் கேள்விக்கு பதிலாக கூறுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு நாள், நாமும் யேசுவை போல, இன்றைய உலக வாழ்விலிருந்து மறைந்து, உயிர்த்தெழுந்த வாழ்வில் நிலைத்திருப்போம் என்று நம்புகிறோம். யேசுவை பின் செல்லும் எல்லா விசுவாசிகளும் வான தூதர்கள் போல் வாழ்வர். அதனால் தான், கத்தோலிக்க கடைசி திருப்பலியில் (மரணம்), உயிர்த்தெழும் திருப்பலியாக நிறைவேற்றப்படுகிறது. திருப்பலி உடைகளும் வெள்ளை உடைகளாகும்,(கருப்பு அல்ல)

ஆனால் நீ அன்பின் உயிர்த்தெழுதலை நம்புகிறாயா? யேசு திருமணத்தின் மூலம் நடைபெறும் உயிர்த்தெழுதலை விளக்குகிறார். திருமணம் என்பது கடவுளின் அன்பை பிரதிபலிக்கும் சாதனமாகும். திருமணத்தின் மூலம், ஆனும் பெண்ணும், இனைந்து, நீடித்த அன்போடு இருப்பது ஆகும். அந்த அன்பு கடவுளிடமிருந்து வரும் அன்பு ஆகும். திருமணம் கடவுளின் அன்பை காட்டும் சாட்சியாக இருக்கிறது. இதன் மூலம் கடவுளின் நம்பிக்கையையும், பொறுப்பையும் காட்டுகிறது.

யேசு எதனால் திருமணம் உயிர்த்தெழுதலில் இல்லை என்று கூறுகிறார்? , ஏன் இவ்வுலகில் நடைபெற்ற திருமணம், தொடர்ந்து விண்ணுலகிலும் இருப்பதில்லை? மன்னுலகில், அன்பு முழுமையாக கொடுக்கபடுவதுமில்லை, முழுமையாக ஏற்றுகொள்ளப்படுவதுமில்லை. அதனால், அன்பான தொடர்ந்து மடிந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது. ஒவ்வொரு நாளும், கணவனும் மனைவியும், மற்றவர்கள் மேல் பச்சாதாபம் கொண்டு மனம் திரும்பி, மன்னிக்கின்றனர்.

கடவுள் தான் முழுமையான அன்பானவர். நாம் அவரின் உன்மையான சந்ததியாக இருந்துகொன்டு, நமது சகோதர சகோதரிகளை கடவுள் அன்பு செய்வது போல அன்பு செய்கிறோம். இன்று நாம் குறையுள்ள குழந்தகளாக இருக்கிறோம். உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது குறைகள் களையபடுகின்றன. அதற்கு பிறகு, மோட்சத்தில், நாம் கடவுளை போல, குறைகளற்றவர்களாக இருப்போம்.
திருமனம் மோட்சத்தில் இருப்பதில்லை ஏனெனில், இது, கடவுளின் அன்பை குறைகளோடு பிரதி பலிக்கிறது. நாம் நமது துனையை, மற்றவர்களை விட அதிகமாக நேசிக்கிரோம். மோட்சத்தில், நமது முன்னால் மனைவி உட்பட அனைவரையும் முழுமையாகவும், ஒரே மாதிரியாகவும் அன்புசெய்வோம். நம்மை குறைவாக அன்பு செய்தவர்கள், நமது துனை அன்பு செய்வதை விட அதிகமாக அன்பு செய்வர்.

திருமனம் என்பது, மோட்சத்தில் ஒவ்வொருவரும் எப்படி அன்பு செய்வார்களோ, அதனை கணவனும் மனைவியும் இவ்வுலகில் காட்டுவதாகும்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 2, 2007

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:

ஞாயிறு நவம்பர் 4 2007 , நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 19

1 இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். 2 அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். 3 இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். 4 அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். 5 இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் ' என்றார். 6 அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். 7 இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர். 8 சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார். 9 இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் ' என்று சொன்னார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், சக்கேயுவின் மன உறுதியை பாருங்கள். யேசுவை பார்க்க பல வழிகளில் அவருக்கு தடுப்பு உண்டாக்கபட்டது. யேசுவை சுற்றியிருந்த கூட்டம், அவர் அருகில் நுழைய வழி விடவில்லை. மேலும், அவர் குள்ளமானதால், அவரால் தொலைவில் இருந்து பார்க்க முடியவில்லை. இருந்தும் அவர் யேசுவை பார்ப்பதை விடவில்லை. எந்த ஒரு தடையையும், ஏற்று, அவர் விலகவில்லை. மரத்தின் மேல் ஏறி முழுமையாக யேசுவை கண்டார்.

மேலும், யேசுவை காணவேண்டும் என, கடுமையான ஒரு செயலை செய்தார். பயம் ஏதுமின்றி, ஒரு மரத்தின் மேல் ஏறினார். பல தடைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்: மரக்கிளை தொங்கி விழலாம், மற்றவர்கள் அவரை கேலியாக பார்க்கலாம், சிலர் அவரை இறங்கசொல்லலாம். மரத்தின் மேல் அவர் தோள்பட்டை தேய்ந்திருக்கலாம். இந்த் தடைகள் எல்லாம், அவரை நிறுத்தவில்லை.

கிறிஸ்துவ வாழ்க்கை, சுலபமானது இல்லை. நாம் எல்லாருமே ஒரு வகையில், ஊனமுற்றவர்கள் தான். - தவறான எண்ணங்கள், தீங்கு உண்டு பன்னுதல், தவறான பயிற்சி அளித்தல், ஆன்மிக விசயத்தில் சோம்பலாய் இருப்பது, பயம் மற்றும் சந்தேக எண்ணங்கள், இன்னும் பல. இவைகளெல்லம், நாம் யேசுவை காண தடையாக இருக்கின்றன. நாம் இறைவனின் உதவிக்காக, ஜெபம் செய்வோம். நமது ஜெபத்தை (அ) வேண்டுதலை இறைவன் பதில் அளிக்க வில்லையெனில், கடவுள் நம்மை நிராகரித்து விட்டார் என எண்ணிகொள்கிறோம். மேலும், எவ்வித நிபந்தனையுமின்றி, மற்றவர்களை அன்பு செய்வதில்லை. சிலர் மீண்டும், மீண்டும், நம்மை தொந்தரவு செய்தால், அவர்களை மன்னிக்க நமது மனம் இடம் கொடுப்பதில்லை. அதனால் யேசுவும், நம்மை மன்னிப்பதில்லை என எண்ணுகிறோம்.


யேசுவை பின் செல்வது என்பது, கஷ்டங்களிடையே நடந்து செல்வது போன்றது, மற்றும், மற்றவர்களின் நிராகரிப்பால், தவறான குற்றசாட்டுகளால், பல கடின சிலுவைகளை நாம் சுமக்கும் போது, யேசு நம்மிடம் வரவில்லை என நினைக்கிறோம். யேசு நம்மை இந்த சோதனைகளிலிருந்து நமக்கு வழி காட்டவில்லை என நினைக்கிறோம். அதற்கு பதிலாக, சக்கேய்உவை போல நாம் இருக்க வேண்டும். யேசுவை முழுமையாக பார்க்க வேண்டும் என்று எண்ணவேண்டும். அவர் செய்தது போல், எல்லா வகையான வழிகளிலும், தடைகளை தான்டி சென்று அவரை பார்க்க வேண்டும். அவர் நிஜமாகவே நமக்கு செய்வதை புரிந்து கொள்ள வேண்டும்.

சக்கேயு மரத்தில் மேல் ஏறியவுடன், யேசு என்ன செய்தார், அவரை பேர் கூப்பிட்டு, அவர் மேல் தனி கவனம் செலுத்தினார். சக்கேயு அவர் அழைத்தலை எவ்வாறு ஏற்றுகொண்டார்? மரத்திலிருந்து கீழே இறங்கி மிகவும் சந்தோசத்துடன் யேசுவை வரவேற்றார். அவர் எவ்வளவு சந்தோசப்பட்டார் என்றால், அவரின் பாவங்களுக்கு சன்மானமாக மூன்று மடங்கு தருகிறேன் என்று வாக்கு கொடுத்தார்.

நாம் யேசுவை கண்டவுடன் இதுமாதிரியான, பதிலுரைகள தராவிட்டால், நாம் மேலு உயர சென்று யேசுவைக் காண வேண்டும். ஏனெனில், நமக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன.

thanks to www.gnm.org coypright by Terry Modica

Saturday, October 27, 2007

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:


Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.


thanks to www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், நம்முடைய எல்லா செயல்களுமே, நம்து சுய லாபத்திற்காகவும், சுய நலத்தினால் தான் நடக்கின்றன, அன்பினால் அல்ல என்பதையும் பார்க்கிறோம். "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் ". இதனை எல்லோரும் புரிந்து கொள்கிறார்களோ, சீக்கிரமோ அல்லாது மெதுவாகவோ, தன்னை தானே உயர்த்தி கொள்பவர்கள், கண்டிப்பாக தாழ்த்தப்பெறுவர். இது மாதிரி தன்னை தானே உயர்த்தி கொள்பவர்களை, தினமும் பார்க்கும் மக்கள், அவர்களை மிகவும் உயர்வாக நினைக்க மாட்டார்கள். மேலும் உறுதியாக கடவுளும் அவர்களை உயர்வாக நினைப்பதில்லை.

மாற்றாக, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தினால், நாம் தாழ்த்தபடுவோம். அன்பில்லாத, நமது நோக்கங்களில், நாம் செய்வது தான் சரியென்று, நமக்கு தோனும், நமக்கு நாமெ கடவுள் என்று சாத்தான் போல் நினைத்து, கடவுள் போல் இல்லாமல் இருக்கிறோம். நாம் மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் போது, நாம் உண்மையாகவே அவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம். தாம் செய்வது தான் சரியென்று நினைக்கும், நமது சுய கொளரவம், உங்கள் தாழ்ச்சியினால் சரி செய்யப்படும்.
நாம் மற்றவர்கள மேல் கொண்டுள்ள அன்பினால், நாம் சரியாக்கப்படுவோம். சுய கட்டுப்பாடும், நாம் சுயமாகவும், சரியாகவும் இருந்தால், மற்றவர்களுக்கு நல்லது செய்ய நம்மை தூண்டி விடும். நாம் யாரையாவது நிந்தனை செய்தால், இழிவு படுத்தினால், யாரையாவது, நம்மை விட தாழ்ந்தவர்கள், என்று நினைத்தீர்கள் ஆனால், இன்றைய நற்செய்தில் வரும் பரிசேயரும் நாமும் ஒன்றானவர்கள்.

இதற்கெல்லாம், தீர்வு என்னவென்றால், கடவுளின் அக்கறையுடன், நாம் அன்பு செய்ய கஷ்டப்படும் அன்பர்கள் மீது நாம் தொடர்பு கொன்டு அவர்களோடு, கடவுள் அவர்கள் மேல் வைத்த அன்போடு இணைய வேண்டும். இதனால். நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்ள ஆரம்பிப்ப்போம். இதனை செயல்படுத்துவதற்கு சரியான மற்றும் வெற்றி வழி, நற்கருணை வழிபாடுதான். அதுதான் நமது தீமைகளை முழுதும், எடுத்து கொண்டு, கடவுளின் சிறந்த அருளை கொடுத்து, தெய்வீக அன்பை நமக்கு கொடுக்கும்.



© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 19, 2007

ஞாயிறு நற்செய்தி மறையுரை: அக்டோபர் 21 2007 (sunday reflection)

Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 -- 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். 2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். 4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், 7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? 8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.

(http://www.arulvakku.com) thanks.


இன்றைய நற்செய்தியில், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்குவார் என்று யேசு உறுதி கூறுகிறார். நாம் மற்றவர்களால், நிந்திக்கபடும்போது, நிராகரிக்கப்படும்போது, அலட்சியபடுத்தபடும் போது, துஷ்பிரயோகம் நடத்தப்படும் போது, கடவுள் உங்களை காப்பாற்ற வருகிறார். மிகவும் விரைவாக உன்னிடம் கேட்கிறார். "எப்படி?" என்று. உனக்கு தொந்தரவு செய்பவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவர் உனக்கு கொடுத்த உறுதியை காப்பாற்றவில்லையா?

கடவுள் மிகவும் மெதுவாக நமக்கு உதவுவது போல் தெரிந்தாலும், அது மாதங்களானாலும், ஒரு வருடமானாலும்(பல நேரங்களில்), அந்த ப்ரச்னைகள், தீர்க்கப்படுவதற்கு முன், யேசு உனது அருகில் தான் இருக்கிறார், நீ அவரிடம் வேண்டிய உடன், சாத்தானிடமிருந்து உன்னை மீட்டு, உனக்காக காத்திருக்கிறார்.

உன்மையான கேள்வி என்னவென்றால்: "யேசு எங்கே?", "ஏன் அவர், என்னை சீக்கிரமே உதவி செய்யவில்லை?", அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின், கடைசி வரிகளில் உள்ளது: யேசு நமக்கு உதவ வரும்போது, நாம் நம்பிக்கையோடு அவரை எதிர்கொள்கிறோமோ? அல்லது பயத்தோடு , அசுவிசுவாசத்தோடு இருக்கிறோமோ?

உனது ப்ரச்னைகளை மேலும் இழுக்க பல வழிகள் உள்ளன. நீ கடவுளிடம் வேண்டி, இன்னும் உனது ப்ரச்னை இன்னும் போக வில்லையென்றால், சுற்றிபார், யேசு உனக்கு அருகில் தான் நிற்கிறார். உன்னை , நீ நினைக்கும் பாதையில் செல்லாமல், வேறு பாதையில் செல், உனது ப்ரச்னை சுலபமாக விலகும் என்று வேண்டி கூறுகிறார்.நமது கண்கள், யேசுவின் மேல் இல்லாமல், நமக்கு ப்ரச்னை செய்பவர்கள் மேல் இருந்தால், அவர் செய்யும் உதவியை நாம் இழந்து விடுவோம்.

யேசு உணமையின் கூர்முனையால், உனக்கு எதிராக சதி செய்யும் தீய ஆவியினை எதிர்த்து வாள் வீசுகிறார். யேசு தீய ஆவிகளை ஓட ஓட விரட்டுகிறார். ஆனால், அவர் கூறும் உண்மைகள நமக்கு பிடிக்காமல் போகும்போது, நாம் சாத்தானின் சோதனையில் விழுந்து விடுகிறோம்.

யேசு நம்மிடம் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டுகிரார். நமது எதிரியின் மேல் உள்ள அன்பினால், கடவுளின் கருணையும், அவரின் காத்திருக்கும் நேரமும், அவர்களுக்கு கொடுத்தால், அதன் மூலம், யேசு, அவர்கள் வீழ்ந்து கிடக்கும் தீய செயலகளிலிருந்து அவர்களை காப்பாற்ற உதவும். இந்த காத்திருக்கும் வேளையில், கடவுளின் அமைதியையும், பொருமையையும், தாங்கும் ஆற்றலையும், நாம் அனுபவிக்கிறோம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
எந்த மாதிரியான அநீதிகள், உங்களை இன்று பயமுறுத்துகிறது. என்ன தீமை உங்களுக்கு எதிராக நடந்தது? உண்மையான விசுவாசத்துடன், யேசுவை பின் செல்ல இன்று நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். கடவுள் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்க என்ன மாதிரியான செயலை செய்ய போகிறீர்கள்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, October 13, 2007

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். 12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, 13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். 14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. 15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; 16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். 17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார். 19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.

thanks www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், பத்து பேரில், ஒன்பது பேர் நன்றி கூற ஏன் வரவில்லை? அவர்கள் ஒன்பது பேரும், அவர்களின் குடும்பத்தினரிடமும், நன்பர்களிடமும் அவர்களுக்கு நிகழ்ந்த அதிசயத்தை கூற சென்றிருக்கலாம். இன்னும் கூட, அவர்கள் குடும்பத்தினரிடம், நாங்கள் முழுமையாக குணமாகிவிட்டோம், உங்களோடு கூட நாங்களும் சேர்ந்து வாழலாம் என்று நிரூபிக்க கூட சென்றிருக்கலாம். அல்லது, அவர்களின் வாழ்வின் தேவைக்கு அவர்கள் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கலாம், இனிமேல், அவர்களுக்கு தொழுநோயாளிகளுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.
இவையெல்லாம், மிகவும் சரியான மற்றும் செல்லுபடியாகும் காரனங்கள் ஆகும்.

யேசுவிடம் திரும்பி வந்த சமாரிய தொழு நோயாளிக்கு உள்ள வேற்றுமை என்ன? அது என்ன வென்றால், அவனது ஆவியில் தான் வேற்றுமை உள்ளது. அவன் யேசுவின் மீது வைத்த விசுவாசம் அவனது உடலையும், ஆவியையும் காப்பாற்றியது. அவனது குறைகள் குணப்படுத்தப்பட்டது. யார் குணப்படுத்தினாரோ அவரை பாராட்டினார், நன்றி கூறினார். அவருக்காக கடவுளிடம் வேண்டவில்லை. கடவுளுக்காக சென்றார். அவரிடமிருந்த சில்வற்றை யேசுவிடம் காண்பித்தார். அவருடைய பாராட்டுதல், போற்றுதல், மேலும் கடவுளுக்கு வணக்கம். இதயெல்லாம், அந்த சமாரியார் கடவுளுக்கு கொடுக்க விரும்பினார்.
நாம் திருப்பலிக்கு செல்லும்போது, நமக்காக செல்கிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் செல்கிறோமோ? நம் தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டும்போது, கடவுளுக்காக செய்கிறோமோ? நாம் நமது ஆன்ம வாழ்வில் முன்னேறினாலோ அல்லது ஓர் நல்ல விசயத்தை முடித்தாலோ, கடவுளுக்காக செய்கிறோமோ? கடவுளுக்கு அவராலே அவருக்கு கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும் நம்மிடமிருந்து வரவேன்டும். இந்த புகழையும், போற்றுதலையும் குறைந்து மதிப்பிடவேண்டாம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

அன்மையில் கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு கொடுத்த ப்ரேயர் என்ன? இன்று அவர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார், உற்று கவனி. கடவுளின் காலடியில், முழந்தாளிட்டு, அவருக்கு நன்றி கூறியிருக்கிறாயா? அவர் உனக்கு உதவுவதற்கு முன்பே அவருக்கு போற்றுதலையும் நன்றியையும் கூறியிருக்கிறாயா?

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 28, 2007

செப்டம்பர் 30 , 2007 - ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 30 , 2007
ஞாயிறு நற்செய்தி மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். 22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். 23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். 24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார். 25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார். 27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார். 29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார். 30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார். 31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '

thanks to www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், செல்வந்தரின் பாவம் என்ன? அவர் இறந்த பிறகு, ஏன் கடுமையான சித்திரவதைக்கானார்.? செல்வந்தராக இருந்தது தான் பாவமாம்? அவர் செய்த பாவம் என்னவென்றால், அவரின் செல்வத்தை, உணவை லாசரோடு, பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இருந்தும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

மரணம் வாழ்க்கையின் முடிவல்ல; அது முழு உணர்வுடன், மனத்துடனும், முழுமையாக உண்மையில் வாழ்வது ஆகும். மரணம் தான் கடவுளின் முழு உண்மையில் நம்மை எழுப்புகிறது. இதன் மூலம் தான் கடவுள் யார், நமக்கு கிடைத்த அவருடைய அன்பளிப்புகள், மேலும், நாம் எப்படி அவரின் அன்பளிப்பை, எப்படி வீணக்கினோம் என்பது தெரியும்.

நாம், கடவுளின் அன்பளிப்பை, நமக்கு கிடைத்த திறனை, மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், நாம் கடவுளரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின், பொருளாதாரத்தில், நம் முதலீடுக்கு பல மடங்காக திரும்ப வரும். நாம் கொடுப்பதை விட அதிகமாகவே திரும்ப கிடைக்கும், அதை கொண்டும் மேலும், நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

மாறாக, நமக்கு உள்ளதை, நம்மிடையே வைத்து கொண்டால், பெட்டிக்குள் அடைக்கப்பட்டு, கசங்கிய மலர் போல், அந்த திறமைகள், செல்வங்கள் அழிந்து போகும். பெட்டிக்குள் உள்ள பூக்கள் மங்கி போகும், அது போல், நம்மில் அடைத்து வைக்கபட்டிருக்கும் நம் பொருட்களும், செல்வங்களும், உபயோகமில்லாமல் போகும். ஆன்மிகத்திலும், நமது சுய உணர்வுகளுடனும் தேங்கி நிற்போம். அவரின் அன்பளிப்பு அழுகிபோகும். தாராள மனசின் தலைவராய் உள்ள, கடவுளோடு சேரும் இணைப்பை, நமது சுய நலம் அழித்து விடும்.

ஒவ்வொரு நாளும், நாம் பகிர்ந்து கொள்ள நமக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கடவுளின் ஆசிர்வாதங்களும் நாம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. நற்செய்தியில் வரும் செல்வந்தர், ஏன் லாசரை ஒதுக்கினார். ஏனெனில், லாசருக்கு தொழு நோய் இருந்தது, அருவருக்கதக்க உருவில் இருந்தான்.

இது ஒர் கேள்வியை எழுப்புகிறது: நாம் மிகவும் குறைவாக பகிர்ந்து கொள்கிறோமோ? நாம் மற்றவர்கள் மேல் குறைவான மதிப்பையே வைத்திருக்கிறோமோ? அவர்களை கண்டு நாம் ஒதுங்குகிறோமோ? நமது கோபத்தால், நாம் ஒதுங்கியே இருக்கிறோமோ? இப்படி ஒர் நிலையில் இருந்தால், நாம் கடவுளோடு இணைய முடியாது. நமது அன்பு நம்மை உற்சாகபடுத்தி, இன்னும் தாராளமாக இருக்க உதவ வேண்டும்.

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது. யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றைய விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்கள?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 21, 2007

ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார். 3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. 4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். 6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார். 7 பின்பு அடுத்தவரிடம், ' நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார். அதற்கு அவர், ' நூறு மூடை கோதுமை ' என்றார். அவர், ' இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும் ' என்றார். 8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். 9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். 10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். 11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? 12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? 13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '


thanks to www.arulvakku.com


ஞாயிறு 23 செப்டெம்பர் 2007 , நற்செய்தி , மறையுரை:

இன்றைய நற்செய்தியில் எப்படி ஒருவர், ஒரே நேரத்தில் செல்வந்தராகவும், பரிசுத்தமாகவும் இருக்க முடியும் என்பதை விளக்குகிறது. பணமும் , சொத்துக்களும் தான் நமது கடவுளாக இருந்தால், நாம் பரிசுத்தமானவர்கள் இல்லை. நாம் கடவுளிடம் இருந்து பிரக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், நம்மிடம் உள்ள சொத்துக்களையும், பணத்தையும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை கடவுளின் வார்த்தைகள் முக்கியபபடுத்துகிறது.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்வதை விட, சொத்துக்கள சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ள சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்ற திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடபடுகிறது.

நாம் எல்லாரும், ஏதாவது ஓர் திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்க போகிறோம்?

"நேர்மையற்ற செல்வங்கள்" என்று யேசு குறிப்பிடுவது யாதெனில், "மற்றவர்களுக்கு உரியதையும்" சேர்ந்தே ஆகும். எடுத்து காட்டாக மற்றவர்கள் பணத்தை உபயோகிக்கும்போது (வங்கி கடன்), நம்முடைய பயன்களுக்காக மட்டும் உபயோகித்தல், அது நேர்மையற்ற செல்வங்களாகிவிடும். கடவுளரசிற்கு உபயோகமில்லாமல், நாம் ஊழியம் செய்தால், நாம் நம்பிக்கயுள்ள ஊழியனாக இருக்க முடியாது.

அதே போல, மற்றவர்களுக்காக ஒதுக்க வேண்டிய நேரத்தை, தவறாக உபயோகப்படுத்தினால், நாம் கடவுளரசிற்காக அவர் கொடுத்த அந்த நேரத்தை உபயோகிக்கவில்லை. இதன் மூலம் நாம் கடவுளரசிற்கு வேலை செய்யாமல் இருக்கிறோம். நமது பணியில் நமக்கு கொடுக்கபட்ட பணிகளை செய்யாமல் இருந்தால், நாம் நமது முதலாளியின் பணத்தை திருடுகிறோம் என்று அர்க்தம். நமது சுய தேவைகளுக்காக, நம குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையோ, நன்பர்களின் தேவைகளையோ, ஏழைகளின் தேவைகளையோ புறக்கனித்தால், ஒதுக்கினால், "உனக்கு தேவையானதை யார் கொடுப்பார்கள்" என்று யேசு கேட்கிறார்.

நம்முடையது எது? நாம் நம்பிக்கையான உன்மையான ஊழியனாய் இருந்தால், அது தான் உண்மையான சொத்தா? அது என்ன வென்றால், பணக்காரர்கள், நம்முடனே நித்தியத்திற்கும் இருப்பார்கள். நம்மோடு எப்போதும் இருப்பது, ஆவ்யின் செல்வங்கள், கடவுள் நம்மை புகழ்வதும், அவர் நாம் ஊழியத்தை ஏற்பதும், முழு அன்புமாகும். இவையாவும் நமக்கு கிடைக்கும் சொத்துக்கள்.

பரிசுத்தத்துடனும், செல்வங்களுடனும் எப்படி இருப்பது? , முதலில், நாம் மற்றவர்களுக்கு உரிய அன்பை நம்பிக்கையோடு அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அந்த அன்பு கடவுள் மற்றவர்கள் மேல் வைத்துள்ளது. நிரந்தரமற்ற இவ்வுலக பொருள்களையும், நித்திய மோட்சத்திற்குரிய விசுவாசம், ,ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்த படுகிறது.

சுய பரிசோதனைக்கான் கேள்வி:
நீ எதை பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறாய்? அந்த பொருளை கடவுளுக்கு அர்ப்பனித்தால் அதை அவர் பனிக்காக உபயோகித்தால், என்ன ஆகும் என்று எதனால் பயப்படுகிறாய்? இந்த் பயத்தை போக்க நீ என்ன செய்ய்வேண்டும் என நினைக்கிறாய், அது போன பின், நீ உன்மையான கடவுளின் மதிப்பிற்கு உரிய ஊழிய்னாய் இருப்பாய்.

thanks to www.gnm.org


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 14, 2007

செப்டம்பர் 16 2007 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

செப்டம்பர் 16 2007 ஞாயிறு நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 15

1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர். 3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 4 ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? 5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; 6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார். 7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 8 ' பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? 9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார். 10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். ' 11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17 அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார். 20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார். 22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23 கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார். 27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார். 28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார். 31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '


http://www.arulvakku.com

மறையுரை:


இன்றைய நற்செய்தி, இழந்ததையெல்லாம், திரும்ப கிடைக்க வேண்டும் என்ற கடவுளின் விருப்பத்தை உறுதிமொழியாக குறிப்பிடபடுகிறது. நமது கடவுள், சமரசத்திற்கும், புதுபித்தலுக்குமான இறைவன் ஆவார். உண்மையை விட்டு விலகி செல்பவர்களை மீண்டும் கொண்டுவர அவர்கள் பின் செல்கிறார்.

ஏனெனில், அவர் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். அவர், உங்களையும், என்னையும் விட, நம்மில் கானாமல் போனவர்கள் மேல் அக்கறை கொள்கிறார். நம்மை ஒதுக்கி தள்ளுபவர்கள், திருச்சபையின் வாழ்வை விட்டு போனவர்கள், அல்லது தனது விசுவாசத்தை ஒதுக்கியவர்கள், மிக வெகுமதியான் பொருளை இழந்தவர்கள் ஆவர்.இன்றைய நற்செய்தியில் குறிப்பிடபடும், 'காசு' ஆகும்.

அவர்களின், குடும்பத்திற்கும், திருச்சபைக்கும் தேவையான மதிப்பு, இங்கே இழக்கபடுகிறது. அவர்கள் இல்லாமல் இருப்பது, சமூகத்தின் சக்தியை குறைக்கிறது. சமூக வாழ்க்கையின் சக்தி ஊற்று ஆக இருக்கிற கடவுள், எல்லா வகையான வழிகளிலும், அவர்களை சமூகத்தோடு இணைக்க முயற்சிக்கிறார். அவர்கள் ஒன்றினைத்து, திருந்தி வாழவும், பாதுகாப்பாக திரும்ப வரவும் கடவுள் உதவுகிறார்.


நாம் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டு விட்டு, அவர் பார்த்துகொள்வார் என்று இருந்து விட கூடாது. அவரோடு சேர்ந்து அவர் பணிகளை செய்ய வேண்டும். அவர் நம் மூலம் அவரின் பணிகளை செய்கிறார். ஆனால் நாம் முயற்சி செய்யும் போது, நமது செல்வாக்கு ஒன்றுமில்லை. கடவுள் அந்த எல்லா ப்ரசனைகளிலும் தொடர்ந்து, அவர் கவனித்து , அதனை விலக செய்கிறார். யேசு அந்த ப்ரச்னைகளை தொடர்ந்து விரட்டிகொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவோம். அந்த எதிர் மறை விசயங்கள், யேசுவை கண்டவுடன், ஓடி ஒளிகின்றன. அவைகள் யேசுவை புறந்தள்ளினாலும், அவர் அந்த ப்ரச்னைகளின் அருகில் தான் இருக்கிறார்.

நாம் இவையெல்லாம் விட்டு விலகாமல், கடவுளை விட்டு விலகி போனவைகளை, இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால், யேசுவிற்கு, நாம் ஏன் செய்யவில்லை என்று பதில் சொல்ல வேண்டும். நாம், ஏன் பாவிகளை அன்பு செய்வதில், நம்மை விட்டு விலகி செல்பவர்கள், நம்மை ஒதுக்கியவர்கள் அன்பு செய்வதில், தோற்கிறோம். யேசு அவர்கள் மேல் கொண்ட அன்பு போல், நம்மால் செய்ய முடியவில்லையே? நாம் அவர்களை ஒதுக்கி விட ஏதாவது செய்தோமோ?

நாம் நமது குற்ற உணர்வுகளிடமிருந்து மணம் திரும்பி மாற வேண்டும். நாம் தாழ்மையுடனும், அடக்கத்துடனும், இருந்தால், நமது பூர்த்தியடையாத அன்பிலிருந்து விடுபட்டு, யேசுவின் அன்பை மற்றவர்கள் முழுமையாக புரிந்து கொள்வர், அவர் அவர்கள் பின் செல்வது போல்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
உங்கள் குடும்பங்களில்,உங்கள் பங்கில், யாரெல்லாம், காணாமற் போனவர்கள், இழந்த வெகுமதியான பொருள் எது? யேசுவிடம் அவர்களை கொண்டு செல்ல , அவரின் அன்பை அவர்களுக்கு வழங்க இந்த வாரம் என்ன செய்ய போகிறாய். பங்கு மன்றம், அல்லது மண மாற்றத்திற்கான புத்தகம், அல்லது பயிற்சி புத்தகங்கள் உங்களுக்கு சொல்லி கொடுக்கலாம். அதன் மூலம், மற்றவர்களை யேசுவிடம் கொண்டு செல்லுங்கள்.
http://www.gnm.org

Friday, September 7, 2007

செப் 9 2007, ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

செப் 9 2007, ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 14

25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே! 31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

http://www.arulvakku.com

கடவுளின் உறவை விட உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்த்தது எது? அதனை தான் யேசு இன்றைய நற்செய்தியில் பார்க்கச்சொல்லி குறிப்பிடுகிறார். எந்த மாதிரியான வேலைகள்? , என்ன சோதனைகள்? , சொத்துக்கள்?, வாழ்க்கயின் நோக்கங்கள்? மற்றும் எந்த மாதிரியான செயல்கள்? உங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த மாதிரியான சிலுவைகளை நீங்கள் அகற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? நீங்கள் அதிலிருந்து வெளியேறினால், அது கிறிஸ்துவை அவரின் சிலுவையிலிருந்து கைவிடுகிறீர்கள் என்று அர்த்தமாகாதா?

உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. அப்படி செய்யாதவர் எவரும், மற்ற செயல்கள் செய்ய தயாராய் இல்லாதவர் ஆவர். நாம் நல்ல நோக்கத்திற்காக, நம்மை தயார்படுத்தி, அதனை நோக்கி முன்னேறி செல்லலாம். ஆனால், சரியான முடிவை அடைய முடியாமல் இருக்கிறோம். ஏனெனில், உலக உடைமைகளாலும், பாவங்களாலும் தடுமாறுகிறோம். நாம் இந்த சோதனைகளில் தாக்குதலுக்கு உட்பட்டு தோல்வியடைந்தவர்களாகிறோம், வெற்றியாளராக இல்லாமல். நாம் பெறும் எல்லா நன்மைகளும், தற்காலிகமானவை, ஏனெனில், இந்த நன்மைகள், கடவுளரசின் தரத்தில் சிறிது குறைந்தது. மேலும் கடவுளரசின் மதிப்பிற்கு சரிசம்மானது அல்ல.

ஒரு சீடர் என்பவர் ஒரு மானவன் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று கற்றுகொள்கிறோம். மேலும், நமது பரிசுத்த வாழ்விற்கு குறுக்கே வரும் எவரையும் அனை போட அவரிடமிருந்து கற்றுகொள்கிறோம். இவைகள் தான் நமது சிலுவைகள். நாம் தினமும், நம் முன் வரும் சோதனைகளையும், கஷ்டங்களையும் வெற்றி கொண்டு, நமது பரிசுத்த வாழ்வை, நிபந்தனையற்ற, எப்போதுமே மன்னிக்க கூடிய அன்புடன் வாழ்வை தொடரவில்லையெனில், நாம் சிலுவையின் எடையினால், தடுமாறி விழுந்துவிடுவோம். ஆனால், நாம் அந்த சிலுவைகளை அரவணைத்து, நமது சொந்த பரிசுத்த வாழ்வில் அதனை நமக்கு கிடைத்த ஆசிர்வாதமாக நினைத்து, நாம் யேசுவை போல், மற்றவர்களுக்கு தியாகம் செய்தால், நாம் மேலும், யேசுவை முழுவதுமாக அனைத்து, அவரோடு இணைவோம். இது மற்ற ஜெபம் மற்றும் அவரிடம் வேண்டுவதால் கிடைக்கும் நெருக்கத்தை விட, அதிக முக்கியத்துவத்தை தரும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
யேசுவிடம் ஜெபிப்பது, நற்செய்தி படிப்பது, மற்ற விசுவாச நடவடிக்கைகள் இவை எல்லாவற்றை விட நீ அதிகம் எதை முக்கியபடுத்துகிறாய். உனக்கு முக்கியமானவைகள் எவை? உன்னுடைய தின நடவடிக்கைகள் இந்த முக்கிய பட்டியலோடு ஒத்து வருகிறதா?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 31, 2007

செப்டம்பர் 2 , நற்செய்தி மற்றும் மறையுரை :

செப்டம்பர் 2 , நற்செய்தி மற்றும் மறையுரை :

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 14

1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். 9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். 10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். 11 தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே 13 மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். 14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.

http://www.arulvakku.com/

இன்றைய நற்செய்தி நம்மிடம் ஒரு கேள்வி கேட்க வைக்கிறது. "நான் நல்ல விசயங்கள், சேவைகள் செய்யும்போது என்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன? (என்னுடைய நோக்கம் என்ன? ) ". "சுய லாபங்களுக்காக" ? சுய நலத்தினால்? .. நம் நோக்கம் ஏதாவது நமக்கு கிடைக்கும் என்று நினைத்து மற்றவர்களுக்கு உதவி செய்தால், அந்த நோக்கம் தவறானது. இது கிறிஸ்துவை போல் வாழும் வாழ்வு அல்ல.

நற்செய்தியின் எடுத்துகாட்டு, நாம் புனித மாக வாழ வேண்டும் என்றால், இயலாதவர்களூக்கு நாம் விருந்து படைக்க வேன்டும் என்று அர்த்தமில்லை. யேசு அதனை சொல்லவில்லை. இந்த எடுத்துகாட்டை அப்படியே எடுத்து கொண்டால், நாம் முக்கியமான விசயத்தை விட்டு விடுகிறோம்.

உண்மையான செய்தி என்னவென்றால், நாம் எது செய்தாலும், நம் சுய லாபத்திற்கு அல்லாமல், அன்பிற்காக செய்ய வேண்டும். நாம் மற்றவர்களுக்கு அவர்கள் நன்மைக்காகவே செய்யவேண்டும். நம்மை எதிர்த்து யாராவது பாவம் செய்தால் கூட, நாம் அவர்களுக்காக, பாவம் விட்டு மாறவேண்டும் என்று கடவுளிடம் வேன்டுகிறோம். நமது ஜெபம், அவர்களுடைய ஆன்மாவிற்காக இருக்க வேண்டும். அதனால் நாம் கடவுளிடம் பெறும் ஆசிர்வாதம், ஒரு ஊக்கமாகும், அதுவே நோக்கமாக இருக்க கூடாது.

நமது நோக்கத்தையும், எதிர்பார்ப்புகளையும், நன்றாக தெரிந்து கொண்டால், நாம் யேசுவை போல் வாழ முடியும், "உனக்குள்ள பலன்களை உயிர்த்தெழும்போது, மிக சரியாக உனக்கு கிடைக்கும்" என்று உறுதியளிக்கிறார். இந்த உறுதியளிப்பின், முழுமை பெறும் நாள், எப்போது , நாம் உயிர்த்தெழுந்த யேசுவை போல வாழ ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.
அப்பப்பொழுது,யேசு நமக்கு கிடைக்கும் அருட்கொடையானது, நம்மை யேசு என்ன வெல்லாம் செய்ய சொல்கிறாரோ, அதனை எந்த ஒரு சுய நலமில்லாமலும், தூய மனத்துடனும், , தாராளமாகவும் செய்ய நம்மை தூண்டுகிறது. மேலும் பல நன்மைகளும், கொடைகளும் பெறுவோம், ஆனால் அதனால் தான், நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கிடையாது.

http://www.gnm.org

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 25, 2007

agust 26th :நற்செய்தி மறையுரை

நற்செய்தி & மறையுரை :


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 13

22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். 23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: 24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார். 26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள். 27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார். 28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். 29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். 30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '

http://www.arulvakku.com


இன்றைய நற்செய்தி தான் மோட்சத்தில் உள்ள குறுகிய கதவின் வாயிலுக்கு அழைத்து செல்லும் சாலை குறியீடுகள் ஆகும். கடவுளுக்கு நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தெரியும் என்கிறார் இசையா. அப்படி தெரிந்து கொண்டு, நம் பாவங்களை கழுவி, நம் எண்ணங்களை சுத்தபடுத்த உதவுகிறார். இதன் மூலம் கடவுளின் பிரகாசத்தையும், புகழொளியையும் நாம் மரணமடையும் போது பார்க்கலாம். கடவுள் நம்மிடையே ஓர் அடையாளத்தை கொடுத்துள்ளார். அது தான் யேசு கிறிஸ்து. அவருடைய வாழ்வு. --எப்படி வாழ்ந்து மற்றும் எப்படி இறந்தார் -- என்பது, நமக்கு மோட்சத்தை எப்படி அடைய வேண்டும் என்பதற்கான அடையாளமாகும். இன்றைய நற்செய்தியில் "பலர் மோட்சத்தின் உள்ளே செல்ல முயற்சி செய்வார்", என்று யேசு கூறுகிறார். அவர்கள் அதிக வலிமையும் திறமையும் சக்தியும் உடையவராகவும் இருப்பர் என்று கூறுகிறார். அந்த வலிமை போதுமானதா? நற்செய்தி வாசகம் முழுவதும், இதற்கான பதிலை கூருகிறார். நாம் அன்பு செய்வதில் பிழையற்று இருக்க வேண்டும். முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் செய்யும் தவறுகளும், பிழைகளும் , நம்மை மோத்சத்திற்கு அழைத்து செல்லாது என்று அர்த்தமில்லை. மோத்சத்தின் கதவுகளுக்கு சாவி அன்பு ஒன்று தான். நாம் அன்பை தூக்கி எறிந்தால், அந்த சாவியை தூக்கி எறிந்ததற்கு சமமாகும்.

அன்பில் நாம் பிழையற்று இருக்க வேண்டும் என்றால், கடவுளின் அன்பை நாம் கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மிடையே கொண்டிருக்க வேண்டும், அதன் மூலம் அவர் நம் மூலம் மற்றவர்களை அடைகிறார். நாம் தனியாக, முழுமையான அன்பை கொடுக்க முடியாது. அதனால், கடவுளை வேண்டு, அவரை சார்ந்து, மற்றவர்களுக்கு அவரின் முழு அன்பை கொடுக்க முடியும். அவரின் அன்பில் நாம் சார்ந்து இருக்க வேண்டுமென்றால், அதன் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுத்து நிறுத்தும், எல்லா விசயங்களையும் நம்மிடமிருந்து விலக்க வேண்டும். மன்னிக்காமல் இருப்பது, பழிவாஙும் எண்ணம், தவறான எண்ணங்கள், எதிர் மறையான சிந்தனைகள், இரக்கமில்லாமல், மற்றவர்களை ஒதுக்கி தள்ளுவது ஆகியன, கடவுளின் அன்பை நம்மிடம் கிடைக்க விடாமல் செய்வது ஆகும்.

அடுத்த வாசகத்தில், கடவுளின் ஒழுங்கை அவமரியாதை செய்யாதீர்கள் என்று குறிப்பிடபடுகிறது. நம்முடைய சோதனைகளயும், கஷ்டத்தையும், கடவுள் உபயோகித்து, நமது அன்பை முழுமையாக்குகிறார். நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நமது அன்பின் வாழ்வில் வளர்ந்தோமானால், நாம் கடவுளை வேண்டி, நமது அன்பை வளர்க்க கோரினால், அவர் உதவியுடன், யேசுவை போல் மாறிவிடுவோம். இதன் மூலம் மோட்சத்திற்கான வழியை நாம் நேராக பெற்று விடலாம். மேலும் நமது குறையுள்ள, முடமான நமது பரிசுத்த வாழ்வு குணமாக்கப்படும்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
உமது வாழ்வில் யாரை அன்பு செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறது. (நீயே உன்னை அன்பு செய்ய மறுப்பதையும் நினைத்துகொள்). எப்படி இவர்களிடம் முழுமையான, பரிசுத்தமான் அன்பை, கடவுள் மூலம் அவர்களை முழுமையாக அன்பு செய்யும் சக்தியை பெற்று, அவர்களை முழுதுமாக அன்பு செய்யலாம்.?


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 18, 2007

ஆகஸ்டு 19 2007 , நற்செய்தி & மறையுரை:

ஆகஸ்டு 19 2007 , நற்செய்தி & மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

49 ' மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். 51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 52 இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். 53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர். '


http://www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், யேசு "மண்ணுலகில் தீமூட்ட வந்தேன்" , மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வரவில்லை என்று கூறுகிறார். அவர் பரிசுத்த ஆவியை திருமுழுக்கு மூலம் பெற ஆவலோடு இருந்தார். அதுவரை மிகவும் மண நெருக்கடியோடு இருந்தார். அதே போல், அவரை பின்பற்றி செல்பவர்களும், பரிசுத்த ஆவியுடனும் எப்போது இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது தான் உலகை மாற்றும். இது தான் நிரந்தர அமைதியை தரும். நம் மூலம் மற்றவர்களுக்கும் நிரந்தர அமைதி பரவும்.

பரிசுத்த ஆவியானவர் நெருப்பு, அந்த நெருப்பு நமது குறைகளை துடைத்து எறிகிறது. நம்மை தூய்மைபடுத்துகிறது. அன்பற்ற செயல்கள், நமது தவறான எண்ணங்கள் மூலம், கிடைக்கும் பலன்கள் அமைதியின்மை, ஒற்றுமையின்மை, கருத்து வேற்றுமைகள், மற்றும் போர் ஆகும். அதனால் தான், பரிசுத்த ஆவியின் அருளால், எவ்வளவு பிரச்னைகளிலும் நாம் அமைதியாக இருக்க முடிகிறது. பரிசுத்த ஆவியினால், இவ்வுலகில் , நாம் கடவுளின் அமைதி பரிசை எடுத்து செல்லும் கருவியாகிறோம். நீ பரிசுத்த ஆவியின் நெருப்பை, உணரவில்லையெனில், அது கிறிஸ்துவின் அமைதியை பரப்ப உங்களை தட்டி எழுப்ப வில்லையெனில், யேசு உன்மேல் கடுந்துயரம் அடைகிறார்.

உங்களோடு ஒட்டியிருக்கும் ஒரு பாவத்தை நினைத்துகொள்ளுங்கள், அதை விரைவில் நிறுத்தி விடுவோம் என்று நீங்கள் நினைத்தை நிணைத்து கொள்ளவும். யேசு உன்னை என்ன செய்ய சொல்கிறார் என்றால், பரிசுத்த ஆவ்யின் நெருப்பை கொண்டு, அந்த பாவத்தை கொளுத்தி, உங்கள் வாழ்வு அந்த பாவத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறுகிறார். யேசு என்ன செய்ய வேண்டும் என்று பார். எந்த மாதிரியான ஞானஸ்நானத்தை அவர் குறிப்பிடுகிறார். தண்ணீரால் ஆன ஞானஸ்தானம் இல்லை, அவர் ஏற்கனவே அதை பெற்று விட்டார். அவர் குறிப்பிடுவது மிகவும் வலி கொடுக்க கூடிய சுய தியாகம் ஆகும். அந்த வலியை பொறுக்க கூடிய மண உறுதி, அன்பிற்காக ஏங்கிய வலி தான் யேசுவை முழுதுமாக ஆட்கொண்டிருந்தது. அதன் மூலம் பாவத்திலிருந்து மீட்பை கொடுக்க வலியுறுத்தியது.


பாவங்களை நிறுத்த, நாம் யேசுவை போல் மாறவேன்டும். நாம் உளமார மற்றவர்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பது, கிறிஸ்துவ வாழ்வின் முழுமை பெறுவது ஆகும். நமது உள்ளத்தில், நமது அன்பும் , வேலைகளும், நமது சகோதரர்களை நித்திய அமைதிக்கு வித்திட வேண்டும் என்று நமது உள்ளம் கொழுந்து விட்டு எறிய வேண்டும்.

யேசு இந்த நெருப்பு தான் ஒவ்வொரு வீட்டிலும், பிரிவை உண்டாக்குகிறது என்கிறார். இது தான், நம் வீட்டில் உள்ளவர்கள் சுய லாபத்தோடு வாழ்வு நடத்தும்போது, நம்மிடமிருந்து அவர்களை பிரிக்கிறது. எது எப்படி இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து அவர்களிடம் அன்பு செய்ய வேண்டும். இந்த செயல், நம்மிடம் உள்ள நெருப்பை இன்னும் வளர செய்யும். நம்மை மேலும் சுத்த படுத்தும். தொடர்ச்சியாக, உலகமும் மாறும்.

http://www.gnm.org

Saturday, August 11, 2007

ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி மறையுரை:

ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி & மறையுரை:

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

32 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். 33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். 35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். 36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். 37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். 39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். 40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார். 42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்? 43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். 44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். 45 ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் 46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். 47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். 48 ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.


http://www.arulvakku.com
ஆகஸ்டு 12, 2007 ஞாயிறு நற்செய்தி & மறையுரை:

இன்றைய நற்செய்தியில், கடவுள் மிகவும் சந்தோசமாக அவரது விண்ணரசை உங்களிடம் கொடுக்க தயாராய் இருக்கிறார். இந்த விண்ணக அரசு, விண்ணையும், இந்த பூமியில், அவருடைய அன்பினால் கிடைக்கும் ஆதாயங்களையும் , பூமியில் கிடைக்கும் நல்ல பலன்களும் சேர்ந்து தான் குறிப்பிடபடுகிறது.
கடவுள் எதையுமே அவரிடம் வைத்து கொள்வதில்லை. நாம் அதையெல்லாம், கடனமாக உழைத்து அதனை பெற வேண்டியதில்லை. ஆனால், நாம் அதனை உபயோகபடுத்துகிறோமோ? கடவுள் கொடுக்கும் அனைத்தையும், எப்படி பெற வேண்டும் என்று யேசு விளக்குகிறார்: உனது இதயத்தை பரிசோதனை செய். உலக பொருட்களுக்காக நீ ஏங்குவாய் ஆனால், உனது கைகளில், இருக்கும் பொருட்கள் எல்லாம், ஒன்றுமில்லாமல் போகும். உனது பண பைகள் எல்லாம் உலக பொருட்களுக்காக திட்டத்துடன் இருந்தால், அல்லது கடவுளுக்கு உகாத உறவுகள் கொண்டிருந்தால், கடவுளுடைய மிகப்பெரும் பிரமாதமான அருட்கொடைகள் உனக்கு வர இடமில்லை. இந்த உலக பொருட்செல்வங்கள் எல்லாம், நிரந்தரமானவை அல்ல , அதனால், இதனையெல்லாம், கடவுளின் அழிய முடியாத வெகுமதிக்கு, இந்த உலக விசயங்களை விட்டு விடுங்கள்.

இந்த நற்செய்தி, நம்முடைய செல்வங்கள் எல்லாவற்றையும், கடவுளின் அருட் செல்வத்திற்காக, விற்று விடவேண்டும் என்று அர்த்தமில்லை. எது முக்கியம் என்றால், நம் எண்ணம், நோக்கம், எல்லாம், கடவுளின் அருட்செல்வத்திற்காக ஏங்க வேண்டும் அதனை பெற முயற்சிக்க வேண்டும். அந்த செல்வங்கள் எல்லாம், கடவுளரசிற்கு சேவை செய்கிறதா? அல்லது நிரந்தரமற்ற நோக்கங்களுக்காக உபயோகபடுகிறதா?

எதுவெல்லாம், கடவுளோடு உன்னை இணைக்கிறதோ அதனை ஊக்கப்படுத்துகிறதோ? அதுதான் உனக்கு நித்திய வாழ்வின் வெகுமதி.

நம் வாழ்வில், உலக பொருட்களுக்காக, வீணடிக்காமல், கடவுளுக்காக அவரது அருட் கொடைகளுக்காக வாழ வேண்டும் என்று யேசு எசசரிக்கிறார். தலைவர் எப்போது வருவார் என்று நமக்கு தெரியாது, மேலும் நித்திய இளைபாற்றிக்கு , கடவுளோடு நிரந்தர இணைப்புக்கு நம்மை அழைத்து செல்வார் என்று தெரியாது. நாம் தயாராய் இருக்கிறோமா? அல்லது உலக வெகுமதிக்காக, நம்முடைய விருப்பம் செல்கிறதா?

இதனால் தான், கடவுள் அவருடைய மிக பெரிய இரக்கத்தால், நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை கொடுத்துள்ளார். உலக வெகுமதியில் இருந்து வெளி வருவது என்பது மிகவும் வலியை கொடுக்கும். இதனை யேசு 'அடிபடுவான்' , தலைவருடைய பேச்சை கேட்காதவர்கள் என்று கூறுகிறார். ஏன் அதற்காக காத்திருக்க வேண்டும். இப்போது சரியான நேரம், கடவுளரசை தெரிந்து, அந்த நோக்கத்திலேயே இருந்து , நாம் கடவுளின் அன்பளிப்பை, அவரின் வெகுமதியை பெற்று வளர்வோம். அப்போது தான், எந்த திருடனும் நம்மை அழிக்க முடியாது.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
நாளை நீ மரணமடைய போகிறாய் என்று தெரிந்தால், நீ எதை தயார் செய்வாய்? எந்த மனோ நிலையில் , என்ன நோக்கத்தில், என்ன திட்டம் கடவுளரசிற்கு உபயோகமில்லை என நினைக்கிறீர்கள்? எந்த பழக்க வழக்கங்கள், எந்த மாதிரியான அடிமைதங்கள், அன்பற்ற நடைமுறைகள், மன்னிக்க முடியாத, குழப்பங்கள் உள்ளன. இந்த மதிப்பற்ற பொருட்களை கிறிஸ்துவிடம் எடுத்து செல்லுங்கள். இதன் மூலம் கடவுளின் வெகுமதிக்கு போதிய இடம் உங்கள் உள்ளங்களில் கிடைக்கும்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 4, 2007

ஆகஸ்டு 5 2007., ஞாயிறு நற்செய்தி , மறையுரை:

ஆகஸ்டு 5 2007., ஞாயிறு நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 12

13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், ' போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் ' என்றார். 14 அவர் அந்த ஆளை நோக்கி, ' என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? ' என்று கேட்டார். 15 பின்பு அவர் அவர்களை நோக்கி, ' எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது ' என்றார். 16 அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ' செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. 17 அவன், ' நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! ' என்று எண்ணினான். 18 ' ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ' . 19 பின்பு, ' என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு ' எனச் சொல்வேன் ' என்று தனக்குள் கூறிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ' அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? ' என்று கேட்டார். 21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. '

(http://www.arulvakku.com)
பேராசையின் பிரச்னை என்ன என்றால், அது மற்றவர்களை வேதனைபடுத்துகிறது, காயப்படுத்துகிறது. உலகச் செல்வங்களால், நம்மை தற்பெருமை உள்ளவனாகவும், மற்றவர்களை சாராமலும் இருப்போம். நாம் நம்மையும், நம்மிடம் உள்ள செல்வங்களையும் சார்ந்து இருப்பதால், கடவுளை நம்புவதில்லை, நாம் சுயநலமிகளாக இருப்போம், அதன் மூலம் மற்றவர்கள வேதனைபடுவர். நாம் நம்முடைய செல்வங்களை , நம் வீட்டில் அடைத்து வைப்பதால், மற்றவர்களுக்கு தேவையானதை கொடுப்பதில்லை. இன்றைய நற்செய்தியில், தற்பெருமையும், சுய சார்பு நிலையும், கடவுளின் புனிதத்திற்கு எதிரானது என்று குறிப்பிடுகிறார்.

நமக்கு கிடைக்கும், அறுவடை கடவுளிடமிருந்து வருகிறது. நமக்கு கிடைக்கும் அபரிதமான பணம், சந்தோசம், ஞானம், அனுபவ பாடங்கள் எல்லாம், கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், ஆற்றல், சக்தி மூலம் நமக்கு கிடைத்தது. உனது சொந்த முயற்சியால், பெற்ற வெற்றி, அனைத்தும், உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்தது. நமக்கு கிடைக்கும் எல்லாவற்றிர்கும், கடவுள் தான் ஊற்று, அவை எல்லாம், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க படவேண்டியவை, ஏனெனில், இதன் மூலம் தான், மற்றவர்களின் வேண்டுதலுக்கு கடவுள் பதில் கொடுக்கிறார். நமக்கு கிடைப்பதை, மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, கடவுளின் கைகளாக இருக்கிறோம்.

கடவுள் தான் நமக்கு எல்லாம் கொடுக்கிறார், என்று புரிந்தால், தாராள மனப்பாங்கு நம்மிடம் வளரும். மேலும், நாம் கொடுக்க கொடுக்க அவரும் கொடுத்து கொண்டேயிருப்பார்.

கடவுளின், தாராள மனத்தை புரிந்து கொள்தல் தான் உண்மையான செல்வம்: நம் வாழ்வு, சோதனைகளிலும்,அமைதியாகவும், வளமானதாகவும் இருக்கும். ஆபத்தான நேரங்களிலும், நமக்கு நம்பிக்கை வளரும். நமக்கு உள்ளதை எல்லாம், மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அவர் சொத்து நம்முடையாதாகும். இது தான், திருச்சபையின், கடவுளரசின் அடிப்படை பொருளாதாரமாகும். மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது தான், யேசுவின் உடல் அப்போதுதான் சுபிட்சம் பெறும். இதனை தான், புனிதர்களின் புனித இணைப்பு என்று கூறுகிறோம்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, July 28, 2007

ஜூலை 29 2007, நற்செய்தி மறையுரை:

ஜூலை 29 2007, நற்செய்தி & மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 11

1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார். 2 அவர் அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! 3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். 4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் ' ) என்று கற்பித்தார். 5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. 6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். 7 உள்ளே இருப்பவர், ' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது ' என்பார். 8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். 10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? 12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? 13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! '

http://www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், எப்படி விசுவாசத்தோடு, வேண்டுவது என்று யேசு நமக்கு சொல்லி கொடுக்கிறார். அவர் கூறும் நீதி கதையில், நாம் கேட்பதெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று குறிப்பிடபடுகிறது. எல்லாமே நமக்கு நன்மை தராது. 'உணவு' என்று இந்த நற்செய்தியில் குறிப்பிடபடுவதன் அர்த்தம் 'புனித வாழ்வு' ஆகும். -- "வாழ்வின் உணவு" யேசுவே. புனித வாழ்வு தான், பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு ஆகும். அவர் தான் நமக்கு வாழ்க்கை கொடுப்பவர்.

இந்த நீதிகதையின் வரும் அன்பர் கடவுளின் நண்பர் ஆவார். அவர் புதியவர் அல்ல. அவர் தனது நண்பரோடு உணவை பகிர்ந்து கொள்ள விரும்பினார். இது ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர்கள், கடவுளின் நட்பை ( "மூன்று ப்ரெட் - திரித்துவம்" ) மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆனால், நானோ, நீயோ இந்த செயலை/ கடமையை செய்ய போதுமான தகுதி இல்லை.

நாம் நம்முடைய தகுதியின்மைக்காக, அதனை நிறைவு செய்ய வேண்டி கடவுளின் இதயத்தை தட்டும்போது அவர் பரிசுத்த ஆவியை தருகிறார்.பரிசுத்த ஆவி முழுமையானவர். அவரிடமிருந்து எல்லாமே நமக்கு கிடைப்பதில்லை. நாம் இறைவனிடம் வேண்டும் போதெல்லாம், நாம் யேசுவின் பரிசுத்த ஆவ்யின் மூலம் கடவுளோடு சேர்கிரோம். அதனால், ஒவ்வொரு ஜெபத்திலும், நாம் இறைவனோடு அருகில் சேருகிறோம், மேலும், நமது புனிதம் அதிகமாகிறது.ஆனால், புனிதம் அவ்வளவு சீக்கிரத்திலோ அல்லது சுலபமாக வந்துவிடாது. நாம் நமது வாழ்வில் இடைவிடாது ஜெபிக்க வேண்டும். நமக்கு தவறு செய்ய தூண்டப்படும் நேரங்களில், தொடர்ந்து கடவுளிடம் சென்று அவரிடம் ஜெபிக்க வேண்டும்.


நாம் எதை கடவுளிடம் கேட்டாலும், நமக்கு தேவையான பொருட்களை கேட்டாலும், அந்த வேண்டுதல், நமது ஆண்மாவை வளர்க்க உதவியாக இருக்க வேண்டும். இதனை தான், நாம் ஜெபத்தில், அவரிடம் கேட்கிறோம் , "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" அது ஆண்ம உணவு. இடைவிடாது ஜெபியுங்கள், இந்த உணவு ஒரே இரவில் கிடைப்பதில்லை. (நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்பவர்கள்)

சாத்தான் தான், நீங்கள் கேட்பதெல்லாம் விரைவில் கிடைக்கும் என்று கூறுகிறது. இன்றைய நாகரிகமும், புதிய மந்திர முறைகளும், விரைவு உணவு தெய்வீகமாகும். அது தவறான நம்பிக்கையும், தேவையில்லாத கொழுப்பையும் கொடுக்கும். இவைகளால், பரிசுத்த ஆவ்யின் மூலம் கிடைக்கும், நமது புனித வாழ்வின் வளர்ச்சி தடைபடுகிறது. நிறைய பேர், தொடர்ந்து புனித வாழ்வின் பாதையில் செல்ல விரும்புவதை விட, மந்திர , ஜாதக முறையை தான் நோக்கி செல்கின்றனர்.

பரிசுத்த ஆவ்யின் மூலம் கிடைக்கும் நிறைவான தகுதிகள், நாம் கேட்க கூடியதுதான். ஏனெனில், நம்முடைய ஞானஸ்நானத்தில் நமக்கு பரிசுத்த ஆவியின் கொடைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும், கடவுளின் முழு தெய்வீக ஆற்றலில் வாழ்வதற்கு, நாம் இடைவிடாது ஜெபித்து , தொடர்ந்து நமது பாவங்களை கண்டறிந்து, மனம் திருந்தி, நம் சுய ஆசைகளை தூக்கிபோட்டு விட்டு, பரிசுத்த ஆவியின் புனித வாழ்விற்கு தாழ்மையுடன் மனம் திறந்து அவரை ஏற்று கொள்ளுங்கள்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

எந்த அளவிற்கு தினமும் பரிசுத்த ஆவியை சார்ந்து இருக்கிறீர்கள். எத்தனை முறை கடவுளிடம் தாழ்மையுடன் வேண்டி, அதிக புனிதத்திற்காக ஜெபம் செய்கிறீர்கள்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, July 21, 2007

ஜூலை 22 மறையுரை & நற்செய்தி

ஜூலை 22 2007


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. 39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார். 41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.

(http://www.arulvakku.com)
மறையுரை

இன்றைய நற்செய்தியில், யேசு நம் மன கவலைகளையும், மற்றும் வேதனைகளையும் பற்றி பேசுகிறார். இதனால், நாம் தடுமாறுவோம். கவனத்தை திசை திருப்பும். அந்த கவலைகள் உங்களை பாதிக்கும், ஏனெனில், அந்த கவலைகள் எல்லாம், நாம் கடவுள் மேல் எப்போதுமே வைக்க வேண்டிய கண்களை, அவரையே சார்ந்திருக்கும் நமது வாழ்வை திசை திருப்பி, நம் கவலைகளால் ஏதாவது தவறாகிவிடுமோ, நமது நிலை இன்னும் கீழ் நிலைக்கு தள்ளப்படுமோ? என்கிற எண்ணமே நம்மில் இருக்கும். அண்ணை மரியாள், "நல்ல விசயத்தை/முடிவை" தெரிவு செய்தாள். அவளுடை வாழ்வின் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், அவள் எப்போதுமே யேசுவிடமிருந்து கற்றுகொண்டிருந்தாள். நாம் நம்முடைய சுறுசுறுப்பான வாழ்க்கையை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, யேசுவிடமிருந்து கற்றுகொள்வோம். நாம் நம் கவலைகள் நிஜமாகவே கவலைக்குறியது அல்ல என்று யேசுவிடம் கற்றுகொள்வோம். நாம் யேசுவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் கேட்டால் தான், நாம் நம்பிக்கை பெறுவோம். அந்த நம்பிக்கை மன சஞ்சலத்தை போக்கும், மன கவலைகளை போக்கிவிடும். யேசுவின் மூலம் பெறும் ஞானத்தால், இந்த சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம். மார்த்தாள் படும் கவலை போல், மிக சிறிய கவலைகூட, நம் கண்களை யேசுவிடமிருந்து எடுத்து சென்று விடும். இது மாதிரி சிறு கவலை கூட பாவமாகும். யேசுவிடமிருந்து நம்மை திசை திருப்பும் எதுவும் பாவமாகும்.

நாம் ஏசுவை கவனித்து, அவரிடமிருந்து எப்படி பரிசுத்தத்துடன் இருப்பது என்று கற்றுகொண்டால்தான், நாம் பரிசத்துடனும், புனிதத்துடனும் வளர முடியும். அவர் அன்பு செய்வது போல் நம்மால் அன்பு செய்ய முடியாது. நாம் மற்ற்வர்களிடமிருந்து அன்பை பெற முடியாது. நாம் அமைதியான முறையில் யேசுவோடு அமர்ந்து, அவரோடு அரவணைப்பில் சிறிது நேரம் செலவிட்டால் தான் நாம் அவரை போல் அன்பு செய்ய முடியும், யேசுவை போல வாழ முடியும். கார் ஓட்டும் போது, அல்லது மர்றவர்களிடம் பேசும்போதும் ஜெபம் செய்வதும், அல்லது ஞாயிறு அன்று பிரசங்கம் கேட்பதும் போதுமானது அல்ல.

மனக்கவலைகள், குழப்பங்கள் எல்லாம் பயத்திலிருந்து வருபவை. பயம்தான் நம்மை யேசுவை நம் காட்சியிலிருந்து தொந்தரவு செய்கிறது. நாம் பயத்தை புரிந்து கொண்டு, அது மாதிரி நேரங்களில், யேசுவிடம் சென்று, அவரோடு அமர்ந்து, உங்கள் ப்ரச்னையை யேசுவிடம் பேசுங்கள். அவரிடம் அதற்கு பதில் இருக்கும். அவரிடமிருந்து உஙக்கு தேவையான உற்சாகமும், உறுதியும் கிடைக்கும்.

சுய பரிசோதனிக்கான கேள்வி:

உங்களிடம் எந்த கவலை அதிகம் கவலை கொள்ள செய்கிறது. எது உன்னை அதிகம் ஆர்வத்தை, எந்த ப்ரச்னை உன்னை பயமுறுத்துகிறது. அதையெல்லாம், ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அதனை யேசுவிடம் எடுத்து செல்லுங்கள். பரிசுத்த ஆவியிடம் வேண்டுங்கள். யேசு உனக்கு கற்று கொடுக்கும் பாடத்தை கற்றுகொள்ள பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவுவார். பைபிளை தேடுங்கள், உங்க்ளுக்கு உற்சாகமான செய்தி கிடைக்கும்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, July 14, 2007

july 15th sunday - நற்செய்தி & மறையுரை

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், ' போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார். 26 அதற்கு இயேசு, ' திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? ' என்று அவரிடம் கேட்டார். 27 அவர் மறுமொழியாக, ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ' என்று எழுதியுள்ளது ' என்றார். 28 இயேசு, ' சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் ' என்றார். 29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்டார். 30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ' ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். 32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ' இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன் ' என்றார். 36 ' கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? ' என்று இயேசு கேட்டார். 37 அதற்கு திருச்சட்ட அறிஞர், ' அவருக்கு இரக்கம் காட்டியவரே ' என்றார். இயேசு, ' நீரும் போய் அப்படியே செய்யும் ' என்று கூறினார்.

(http://www.arulvakku.com)


மறையுரை:

அன்பின் எதிர்பதம் வெறுப்பு அல்ல, "அக்கறையின்மை": ஒரு தேவையான விசயத்தை ஒதுக்கி தள்ளுதல், ஒரு துன்பத்திலிருந்து விடுபட, நாம் ஏதாவது செய்ய வேண்டிய நேரத்தில், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது, அக்கறையோடு இல்லாமல் இருப்பது தான் அன்பின் எதிர் செயல்கள் ஆகும். இன்றைய நற்செய்தியில், நல்ல சமாரியனின் கதையை விளக்குகிறார். நாம் கடவுளை நமது முழு உள்ளத்தோடும், நமது முழு சக்தியோடும் அன்பு செய்தோமானால், தாமாகவே மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவர்கள் புதியவர்கள் ஆக இருந்தாலும், அல்லது நாம் நமக்கு பிடிக்க தேவையில்லை என்று இருந்தாலும், அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் உள்ள ப்ரச்னைகள், மேலும் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம், நாம் கிறிஸ்தவர்கள், எதிலும் ஈடுபடாமல் இருப்பதுதான். கிறிஸ்துவின் மூலம், நம்மால் இந்த உலகை மாற்ற முடிந்தாலும், நாம் அதை செய்வதில்லை. நாம் நம் நேரங்களை, நம்முடைய சுய விருப்பங்களை தியாகம் செய்து, மற்ற விசயங்களில் ஈடுபடுவதில்லை. பல பிரச்னைகள், நம் குடும்பத்தில் அல்லது அலுவலகங்களில், நம் பங்கில் தொடர்ந்து கொண்டிருப்பத்தற்கு, நாம் மற்றவர்கள் மேல் அக்கறையின்றி இருப்பதே காரனம். நாம் முழுமையாக கடவுளை நேசித்து, இது மாதிரியான பிரச்னைகளில் நுழைந்து, அவர்கள் மேல் அக்கறை காட்டினால், எல்லாம் நல்லபடியாக முடியும்.

எந்த அளவிற்கு, நீ கடவுளை அன்பு செய்கிறாய்.இதற்கு பதில், நீ எவ்வளவு மற்றவர்களுக்காக உன்னையே தியாகம் செய்கிறாய் என்பதை பொறுத்து இருக்கிறது. இதுதான் அன்பின் இலக்கனம், இதை தான் யேசு இன்றைய நர்செய்தில் இந்த உவமானம் மூலம் விளக்குகிறார். நாம் யாருமே கடவுளை மிக சரியாக அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஆன்ம ஸ்தலத்தில் தான், நாம் முழுமையாக அன்பு செய்யாததற்கு, நாம் மனம் வருந்துவோம். அதன் மூலம், கடவுளின் முழு அன்பில் திளைத்து மோட்சத்தில் நுழைவோம். அது வரை, நமக்கு நம் வாழ்வை வலியில்லாமல் சுத்தமாக்குவதற்கு நமக்கு வாய்ப்புகள் உண்டு. நமக்கு , நாம் எவ்வளவு அன்பு செஇய்கிறோம் என்பதற்கு, நமக்கு சோதனைகல் கிடைக்கும். அதன் மூலம் மற்றவர்களை அன்பு செய்வதை முன்னேற்றி கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியிடம் கேள், அவர் தான் உனது ஆசிரியர், உனது அரசர், உனது புனிததின் வேர், அவரிடம் நீ கிறிஸ்துவை போல மாற உதவி கேள். யேசு மற்றவர்களை அன்பு செய்வது போல, நீயும் அன்பு செய்ய உதவுமாறு, பரிசுத்த ஆவியிடம் கேள். இந்த ஆவியின் பயிற்சி, நாட்களாக, வாரங்களாக தொடர, நீ கடவுளை மேலும் அன்பு செய்கிறோம், என்பதை அறிவாய். மேலும் அவரின் அன்பை முழுமையாக உள்ளுனர்வோடு அனுபவிப்பாய்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
நீ யாரையாவது, அவர்கள் வலியோடு இருக்கும்போது ஒதுங்கி சென்றிறுக்கிறாயா? யாராவது உன்னிடமிருந்து விலகி சென்று இருக்கிறார்களா? உங்களின் தற்பெருமயால், மன்னிக்காமல் இருப்பதால், தவறான் எண்ணத்தால், விலகியிருக்கிறார்களா?. நீ இதனால், அக்கறையில்லாமல், இருக்காதீர்கள். உன்னுடைய குற்றத்தை ஒத்துக்கொள். அதனை நற்கருணை ஆண்டவரிடம் எடுத்து சென்று, பாவ மன்னிப்பு கேள், அதன் மூலம் கடவுளின் முழு அன்பினை பெற்று, மர்றவர்களை மேலும் முழுமையாக அன்பு செய்.
(http://gnm.org)