Friday, January 30, 2009

பிப்ரவரி 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4 வது ஞாயிறு

Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

அதிகாரம் 1
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25 ' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28 அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறு நற்செய்தி, யேசுவின் அதிகாரத்தை தெளிவுபடுத்துகிறது. நாமும் அவருடைய அதிகாரத்தை புரிந்து கொண்டு, அதனை ஏற்றுகொண்டால், நாம் இறைவனில் மகிழ்ச்சியோடு இருக்கலாம், என்ன கஷ்டம் நமக்கு வந்தாலும், நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்ளலாம். ஏன்? ஏனெனில், அவருடைய அதிகாரம் தான் எல்லாவற்றிற்கும் மேலானது என்று நமக்கு தெரியும். அதன் அர்த்தம் என்னவென்றால், அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் எல்லாமே, கெட்டதாக இருந்தாலும், நல்லதாக மாற்றப்படும். சோகத்தில் முடியும் எந்த ஒரு நிகழ்வும், வெற்றியாக மாற்ற்ப்படும். கவலைகள் சந்தோசமாக மாறும். செயலற்று போகும் நிலை, நமக்கு புது வளர்ச்சிக்கு திறவுகோலாக மாறும். புதிய அறிவாற்றலையும், மற்றவர்களை மனம் மாற்றக்கூடிய செயல்கள் செய்ய புதிய தெம்பையும் தரும்.

எனினும், கிறிஸ்துவின் அதிகாரத்தை நாம் நிராகரித்தால், (நாம் தான் நமது செயல்களுக்கு பொறுப்பானவர்கள் என்று நினைத்து கொண்டு, நமது ப்ரச்னைகளுக்கு முடிவெடுப்பதிலும், கடனமான தருனத்திலிருந்து வெளியே செல்ல நினைப்பதும்) இன்னும் ப்ரச்னையை தீவரப்படுத்தும்.

சந்தோசத்தின் வழியானது யேசுவின் காலடிதடங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தீயனவற்றிற்கும், நமது துன்பங்களிலிருந்து வெளியே வர , நாம் கிறிஸ்துவின் அதிகாரம் மூலம், பயன் பெற, நாம் அவருடைய முன் மாதிரியை பார்த்து பின செல்லவேண்டும் மேலும், அவரது போதனைகளின் படி வாழவேன்டும்.இதன் அர்த்தம் என்ன வெனில், நாம் அவரை நம்ப வேண்டும். அவருடைய வழிகள் தான் சரியானவை என்று புரிந்து கொண்டு, (கொஞ்சம் கடினமாக இருந்தாலும்), அதன்படி நடக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால், யேசு யேசுவின் உயிர்ப்பை நாமும் யேசுவோடு சேர்ந்து அடைய விருப்பமாக உள்ளோம் என்று அர்த்தம்.

வெற்றியடைய, எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை. தீயவைகளை வென்றிட எந்த ஒரு சுலபமான வழியும் இல்லை. இவைகள யாவும் உன்மை இல்லையெனில், யேசு ஏன் சிலுவையில் இறக்க வேண்டும்?

நல்ல செய்தி - நாம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு என்ன காரனமெனில் - மிகவும் அதிகம் அன்பு செய்கின்ற, மிகவும் ஆற்றலுடைய, அதிக ஞானமுடைய கடவுள் அவருடைய வானளாவிய அதிகாரத்தை நமக்காக உபயோகிகிறார். கேள்வி என்னவென்றால்:நீங்கள் உங்களை அவர் முன் (அதிகாரத்தின்) சமர்ப்பீர்கள?

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 23, 2009

ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 25, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3 வது ஞாயிறு


The Feast of the Conversion of Saint Paul
Acts 9:1-22 (or Acts 22:3-16)
Ps 117:1bc, 2 (with Mark 16:15)
1 Cor 7:29-31
Mark 16:15-18

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் பணி)

அதிகாரம் 9
1 இதற்கிடையில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் திருத்தூதர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி,2 இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.3 இவ்வாறு அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.4 அவர் தரையில் விழ, சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.5 அதற்கு அவர், ஆண்டவரே நீர் யார்? எனக்கேட்டார். ஆண்டவர், நீ துன்புறுத்தும் இயேசு நானே.6 நீ எழுந்து நகருக்குள் செல்: நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர்.8 சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.9 அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.10 தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்.13 அதற்கு அனனியா மறுமொழியாக, ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்.15 அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.16 என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன் என்றார்.17 அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார் என்றார்.18 உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.19 பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.20 உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.21 கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன் தானே இவன் என்றார்கள்.22 சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், இயேசுவே கிறிஸ்து என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 16
15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.



(thanks to www.arulvakku.com)


இன்றைய திருத்தூதர் பணிகளில் வரும் யூதாவும், அனனியாவும் சாதாரன மனிதர்கள். ஆனாலும், திருச்சபையின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். ஏனெனில், திருச்சபையின் மிக பெரிய எதிரியாக இருந்தவருக்கும், மிகவும் கருனையுடன் பவுலுக்கு உதவு புரிந்தனர்.

முதலில், யூதா பவுலுக்காக அவருடைய வீட்டை மிகவும் அதிமுக்க்கியமான காரனத்திற்காக, திறந்தார். அப்படி திறந்தால், பல விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிந்தும், கிறிஸ்துவின் மிக முக்கிஅ எதிரியாக இருந்த பவுலுக்காக திறந்து உதவினார்.

பிறகு அனனியா, அவர் வீட்டில் அமைதியாக ஜெபித்து கொண்டு இருக்கும்போது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, அனனியா என அழைக்க, அவர், ஆண்டவரே, இதோ அடியேன் என்றார்.11 அப்போது ஆண்டவர் அவரிடம், நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.12 அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார் என்று கூறினார்


"கண்டிப்பாக செய்கிறேன், எப்படி நான் அவருக்கு உதவவேண்டும்" என்று அனனியா கேட்டார்.
"அவர் கன்கள் கட்டப்பட்டுள்ளன, நீ போய் அவரது கண்களில், உனது கையை வை, அப்போது அவர் கண்கள் திறக்கபடும்" என்று கூறினார்.

அனனியா இந்த செயலை செய்வதற்கு போதிய தகுதி இல்லாதவர். எனினும், யேசுவின் மூலமாக பல அருஞ்செயல்கள் செய்ய முடிந்ததால், அவர் இதனை ஏற்றார்.

"நான் செய்கிறேன், ஏற்கனவே, என் மூலம் நீங்கள் நோயுற்று இருப்போரை குணமாக்கி உள்ளீர்கள்" என்று கூரினார்.
"ஆமாம், ஆனால், நீ குணமாக்க வேண்டிய நபர் டார்சஸ் நகரின் சவுல் " என்று கடவுள் கூறினார்.
ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.14 உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்றார்
அதற்கு ஆண்டவர் அவரிடம், நீ செல். என்று கூறினார். அனனியா சென்றார்.

யூதாவும், அனனியாவும் தூய பவுலை மனம் மாற்றினார்கள். யேசுவிற்காக அதனை செய்தனர். அதற்கு பிறகு நற்செய்தியில் அவரிக்ள் பெயர் குறிப்பிடபடவில்லை. அவர்கள் தூய பவுலுக்க என்ன செய்தார்களோ, அது அகில உலகிற்கும்,பெரிய நல்ல விளைவை ஏற்படுத்தியது. இன்றும் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம். யேசு பவுலை மிகப்பெரிய இறைதூதராக , பலரை மனமாற்றுபவராக ஆக்குவதற்கு துனை நின்றார்கள்.

நாமும் அனைவரையும் மணமாற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நாமும் தூய பவுலை போல, மிக பெரிய ப்ர்சங்கம் செய்ய வேண்டும் என்றோ, மிகபெரிய பேச்சாளரகவோ இருக்க வேண்டும் என்றில்லை. அல்லது, தினமும் நாம் செய்யும் முயற்சி, மணம் மாறுதலாக இருக்க வேண்டும் என்றில்லை.

மணம் மாற்றுதல் என்பது, தினமும் நாம் செய்கிற சாதாரன செயல்களில் யேசுவை போல் நாம் நடந்து கொண்டு, நம்மிடம் நற்செய்தி கேட்பவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால், அவர்களுக்கு யேசுவை நாம் வெளிப்படுத்தி, மணம் மாற்ற வேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, January 2, 2009

ஜனவரி 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து பிறப்பின் இரண்டாவது ஞாயிறு

Sirach 24:1-4, 8-12
Ps 147:12-15, 19-20
Ephesians 1:3-6, 15-18
John 1:1-18
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 1
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 'அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது' என்னும் சொற்றொடரை 'அவ்வாக்கு கடவுள் தன்மையும் கொண்டிருந்தது' எனவும் மொழிபெயர்க்கலாம். 2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.3 அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.4 அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.'இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை' என்பதை 'இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை' எனவும் மொழிபெயர்க்கலாம். 6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8 அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்' என்னும் சொற்றொடரை 'அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்' எனவும் மொழிபெயர்க்கலாம். 12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.15 யோவான் அவரைக் குறித்து, ' எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன் ' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன.18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்
(thanks to www.arulvakku.com)



கிறிஸ்துமஸ் விழாக்காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று, நாம் யேசுவை கடவுளின் வார்த்தை உருவாக பார்க்கிறோம். ஒவ்வொரு திருப்பலியிலும், வாசிக்கும் வாசகங்களிலும், யேசு நம்மிடம் வார்த்தையாக வருகிறார். கத்தோலிக்க திருச்சபை, நற்செய்தியை (பைபிள்) மையமாக கொண்டு அதனை வழி கொண்டு வாழும் திருச்சபையாகும். அதனால் தான், ஞாயிறு திருப்பலியில் நான்கு வாசகங்களும், மற்ற நாட்களில் 3 வாசகங்களும் வாசிக்கப்படுகின்றன. அந்த் வாசகங்கள் மூலம் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

யேசு நம்மிடம் பேசிகொண்டிருக்கிறார்! அதனால் தான் வாசகம் வாசிப்பவர்களுக்கு அதனை முழுமையாகக, அதிகாரத்துடனும் வாசிக்க வேண்டிய கடமை இருக்கிறது. யேசு நம்மிடம் பேசுகிறார்.! அதனால், நமக்கும் அதனை நன்றாக கவனிக்க வேன்டிய கடமை இருக்கிறது. மேலும் எதாவது ஒரு வார்த்தையோ அல்லது வாக்கியமோ உங்கள் புத்தி சஞ்சலமோ உண்டாக்கினால், கவனமாக கேளுங்கள், ஏனெனில், அந்த வார்த்தைகள் யேசு தான். அவர் முழுவதுமாக அங்கே ப்ரசன்னமாகயிருக்கிறார். உங்களுடன் தனியே பேசுகிறார். உங்கள் மனதில் ஏதாவது ப்ரச்னை இருக்கிறதா? அதனை பற்றிய் யேசு உங்களிடம் பேச விரும்புகிறார்.

சீராக் ஆகமத்தில், (24:1௪, 8- 12), எப்படி ஞாணம் (பரிசுத்த ஆவி) பேசுகிறது என கவனித்து கேளுங்கள். உங்கள் ப்ரச்னையை பற்றி இந்த வார்த்தைகளில் யேசு எவ்வாறு பேசுகிறார்?

இன்றைய பதிலுரையில், (திருப்பாடல்கள் 147: 12 - 15, 19 - 20 ) எவ்வாறு ஆண்டவரின் வார்த்தை விரைவாக வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. கடவுள் கொடுக்கும் எல்லா கட்டளை அனைத்தும் அப்படியே உண்மையாக நிகழ்ந்தது. உமது இதயத்திற்கு தேவையான அமைதியை எப்படி கொடுப்பது என்று யேசு இங்கே யேசு குறிப்பிடுகிறார். இந்த பூமியில் தேவையான அனைத்து நல்ல பொருட்களையும் எப்படி நிரப்பினார் இங்கே குறிப்பிடுகிறார். உனது ப்ரச்னகள் இந்த சங்கீதத்தின் மூலம் எப்படி குறைக்கப்படுகின்றன?


எபேசியர் திருமுகத்தில் (1:3 - 6 , 15 - 18 ) , நமக்கு ஞானத்தின் அன்பளிப்பு (பரிசுத்த ஆவி) எவ்வாறு கொடுக்கபடுகிறது என்று கூறுகிறது. அதனால், கடவுளின் வார்த்தை நம்மிடைய நல்ல சிந்தனையை தூன்டி, அதனை புரிந்து கொள்ள உதவுகிறது. யேசுவின் ஒப்பற்ற அருளை பற்றி என்ன கூறுகிறார். விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். உனது ப்ரச்னைகளுக்கு இந்த அருளெல்லாம், எப்படி நம்பிக்கை கொடுக்கிறது. ?

யோவான் நற்செய்தியில் (1: 1 - 18 ), ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேளுங்கள், அதில் யேசுவின் ஒவ்வொரு தகுதியும், குனாதிசயங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது. உனது அழிவிலிருந்து (ப்ரச்னையினால்), யேசு உனக்கு எப்படி வாழ்வு கொடுக்கிறார் என்பதை பார். இருளில், அவர் எப்படி உண்மையின் ஒளியாய் இருக்கிறார்? நீ கடவுளின் குழந்தையாய் இருப்பதால், உனக்கு எப்படி நம்பிக்கையை கொடுக்கிறது?

கடவுள் என்னவெல்லாம் பேசுகிறாரோ, அது எல்லாம் யேசுதான். கடவுள் நம் வாழ்வை பேசிதான் உண்டாக்கினார். மேலும் யேசு அவரையே தியாகம் செய்து, அழிவின் வாழ்விலிருந்து, நித்திய வாழ்வை நமக்கு கொடுத்தார்.

எப்போழுதெல்லாம் நீ கடவுளிடம் உதவி கேட்கிறாயோ? அவர் "ஆம்" என்று தான் சொல்கிறார். அவர் குறிப்பிடுவது. யேசுவை தான். யேசு உன்னோடு நடந்து கொண்டு, கடவுள் உனக்கு கொடுக்க விரும்பியதையெல்லாம் கொடுக்கிறார்.



நற்கருணை திருவழிபாட்டில், "கடவுளே உம்மை பெற நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆன்மா குனமடையும்" என்று வேண்டுகிறோம். கடவுள் இவ்வாறு பதில் கூறுகிறார். "ஆம், என்னை ஏற்று கொள்", யேசுவை தான் , நாம் ஏற்று கொள்கிறோம். அந்த யேசுவில், கடவுளின் எல்லாவற்றையும் நாம் பெறுகிறோம். யேசுவால் நாம் குணமடைகிறோம். நாம் கோவிலில் உள்ளே செல்லும்போது, யேசுவை பெற்ற பின் நாம் மாறுதலுக்கு உண்டாகி கோவிலை விட்டு வெளியே வருகிறோம். என்ன மாறுதலை நீ எதிர்பார்த்து அப்படி ஆக வேண்டும் என நினைக்கிறாய்?


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm