Saturday, December 12, 2009

டிசம்பர் 13, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 13, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு

Zeph 3:14-18a
Isaiah 12:2-6
Phil 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 3
10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
(thanks to www.arulvakku.com)

திருவருகை ஞாயிறின் மூன்றாம் வாரத்தில், நாம் ஆவியின் மகிழ்ச்சியை நோக்கி, அதனை கருத்தில் கொண்டு இந்த வாரத்தை கொண்டாடுகிறோம். எல்லா வாசகங்களும், முழுமையான மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் காட்டுகிறது. மேலும் சந்தோசமான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. நற்செய்தியில், யோவான் நற்செய்தியை மக்களுக்கு கூறுகிறார். மக்கள் எல்லோரும், சந்தோசமான எதிர்பார்ப்புடன், கடவுள் என்ன செய்ய போகிறாரோ என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சந்தோசாமாக இருப்பது, மகிழ்ச்சியுடன் நமது செயல்கள் செய்வதுமே இறைசேவையாகும். நீங்கள் அனைவரும் இதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளீர்கள். எங்கெல்லாம், நம்பிக்கையின்மையும், சந்தோசமின்மையும், கலக்கமும் உண்டாகிறதோ , அங்கெல்லாம், நீங்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
யோவான் இந்த இறைசேவையை (மகிழ்ச்சியை பகிரும்) எப்படி செய்தார் என்பதை பார்ப்போம். அவர் சாதாரான ஒட்டக தோலை உடுத்தி, எல்லாரும் மனத்திரும்புங்கள் என்று பயமுறுத்தும், மனிதராக நாம் பார்க்கலாம். ஆனால், கொஞ்சம் உற்று நோக்குங்கள், மக்களை யேசுவின் வருகையை எதிர்பார்த்து அவரை வரவழைக்க தயார்படுத்தினார்.

நீங்களும் நானும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு பொறுப்பானவர்கள் இல்லை. நாம் அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் இறைசேவையை செய்தாலும், அவர்கள் அதனால் சந்தோசப்படவில்லை என்றால், நாம் நம் இறைசேவையில் தோற்று போவதில்லை. அவர்கள் சந்தோசத்தை அடையவில்லை என்றால், அவர்கள் இன்னும் யேசுவை ஏற்று கொள்ளவில்லை என்று அர்த்தம்.
சந்தோசத்தின் ஊற்று யேசு தான். நாம் அவரோடு இனைந்தால், கடவுளின் அன்பில் நாம் திளைத்து, நாம் மிகவும் கடினமான ப்ரஸ்னையில் இருந்தாலும், அவரின் அனுக்கமான அன்பினால் நாம் அமைதியுடனும், சந்தோசத்துடனும் இருக்க முடியும். இந்த இனைப்பை கடவுளோடு மற்றவர்கள் அடைய வேண்டும் என்ற உண்மையை, அவர்களுக்கு உணர்த்தினால், நம் மகிழ்சிசியின் இறைசேவை அவர்களை சென்றடையும். யேசுவின் சந்தோசம் , அவரின் மகிழ்ச்சியின் பக்கத்தை, மற்றவர்கள் தெரிந்து கொள்ள நாம் கடமைபட்டுள்ளோம். மேலும், அவரின் எல்லா போதனைகளிலும் உள்ள மகிழ்ச்சியை நாம் அவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும். அதன் பலனை அவர்கள் தெரியவேண்டும்.

நாம் நமது எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று யேசு நம்மை கேட்டு கொள்கிறார். நமக்கு தொந்தரவு செய்கிறவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு செய்வது நமக்கு ஒன்றும் சந்தோசமில்லை.நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று நாம் கண்டறிந்து, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலம், யேசுவின் சந்தோசமான அன்பினை அவர்களோடும், நம்மோடும் இனைத்து கொண்டு, அவரின் போதனையை நாம் பின்பற்றுவது ஆகும். இதற்காக நாம் மிகவும் துன்பப்பட்டாலும், இந்த இறைசேவையின் விளைவு, மிகவும் மகிழ்ச்சியான சந்தோசத்தை கொடுக்கும்.

யேசு நாம் எப்படி பரிசுத்த மாக வாழ்வது என்று சொல்வதோடு, பரிசுத்த மாக இருக்க நமக்கு ஆற்றலையும் தருகிறார். அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு தருகிறார். யோவான் சொல்வது போல, நாம் மனத்திரும்ப வேண்டும் என்று பயப்பட வேண்டியதில்லை. கிறிஸ்துவுடன் இனையும் மகிழ்ச்சியை, நாம் மற்றவர்களுக்கு காட்டி, பரிசுத்த ஆவி நம்மில் செய்யும் செயலை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். மேலும் யேசு தான் நமது மகிழ்ச்சிக்கு சந்தோசம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica

Friday, November 27, 2009

29 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

29 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thes 3:12-4:2
Luke 21:25-28, 34-36
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21
25 ' மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. ' ' 34 மேலும் இயேசு, ' உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.35 மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் ' என்றார்.


(thanks to www.arulvakku.com)
உங்கள் சந்தோசத்தை, இன்பத்தை எது எடுத்து கொண்டு போகிறது? இந்த திருவருகை காலத்தில், நமது சந்தோசத்தை, இன்பத்தை திருப்பி கிடைக்க யேசுவிடம் வேண்டுவோம். தற்போதைய உலகத்தில், இந்த பொருளாதார தடுமாற்றம் உள்ள காலத்தில், கிறிஸ்துவை நாம் பின் செல்வது, நமக்கு நம்பிக்கை தருகிறது. இந்த கஷ்டமான காலங்களில் கூட, நாம் சந்தோசமாக இருக்க முடிகிறது.

இன்றைய உலக நிலையில், கத்தோலிக்கர்கள் அனைவரும் திருப்பலிக்கு செல்வது நல்லது என்று நாம் அனைவர்களும் நம்புகிறோம். கிறிஸ்துவின் ப்ரசன்னத்தில், திருப்பலியிலும், கோவிலிலும் கண்டு நாம் மாறுகிறோமா? அப்படி மாறினால், நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு, சந்தோசத்திலும், அன்பிலும் நிறைந்து இருக்கிறீர்களா? சரிதானே? மற்றவர்கள் உங்கள் சந்தோசத்தை உங்களில் பார்க்கிறார்களா? சரிதானே?
நமது விசுவாசத்தின் உண்மையை தெரிந்து வைத்திருப்பதற்கும், அதனை அப்படியே நம் வாழ்வில் கடைபிடித்து வாழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த போலியற்ற நம்பதக்க வாழ்வை தான் நம்மிடமிருந்து மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீங்கள் யேசுவிடம் வேண்டி இன்னும் அவரிடமிருந்து எந்த வேண்டுதலுக்கு அவரின் ஆசியையும், கொடையையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறீர்கள் ? திருப்பலியில் அந்த வேண்டுதலை அவரிடம் வைக்கும்போது, நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா? அந்த நம்பிக்கையை நாம் அனுபவிக்கவில்லை என்றால், நமக்குள் சந்தோசம் வராது.

திவ்ய நற்கருணையை குருவானவர் புனிதப்படுத்தும் பொழுது, குரு யேசுவிடம் நமது மனக்கவலைகளிலுருந்து நம்மை விடுவிக்க வேண்டுகிறார். நமது கவலைகள் , யேசு நம்மிடம் திவ்ய நற்கருணை மூலமாக வருகிறார் என்பதனை நாம் அறிய முடியாமல் தடுத்து விடுகின்றன. அதனால் நாம் நம்பிக்கை இழந்து விடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில், யேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இதனை நம் தின வாழ்விலும் இனைத்து ஆய்வு செய்யலாம். நம் வாழ்வில் புதிதாக தோன்றியுள்ள தொந்தரவுகள் ப்ரஸ்னைகள் நமக்கு இன்னும் புரியாமலிருக்கலாம், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம். யேசு இதனை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி செய்ய ஆசைபடுகிறார். எனினும், நமது கவனமெல்லாம், நமக்கு ஏற்பட்டுள்ள ப்ரச்சினையில் தான் இருக்கிறது, மாறாக, கிறிஸ்துவின் மேல் இல்லை. நம்மை நமது மனக்கவலைகளும், சஞ்சலங்க்களும் தான் ஆட்சி செய்கிறாது, கண்டிப்பாக கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கையுமில்லை, அதனால் நமக்கு மகிழ்ச்சியும் இல்லை.
நமது இதயம் இறைவனின் பால் இருக்க சோம்பலாய் இருக்கும்போது, யேசுவின் மத்தியில் நாம் இருக்க மறந்து விடுகிறோம். பரிசுத்த ஆவியின் அறிவுறுத்தலை, நாம் கேட்க நிராகரிக்கிறோம். ஆனால், நமது மகிழ்ச்சியை நமக்கு மீண்டும் கிடைக்க யேசுவிடம் வேண்டினால், நாம் விழிப்புடனும், எதிர்பார்ப்புகளுடனும், எல்லாம் அறியும் நிலையில் இருக்க முடியும், நாம் யேசுவை நம்பி இருந்தால் தான், நாம் சக்தியுடனும், தைரியத்துடனும், நம் வழியில் வரும் எந்த ஒரு ப்ரச்சினையும் நாம் எதிர்கொள்ள முடியும்.

இந்த உலகம் பல கவலைகளால், பயத்துடன் வாழ்கிறது -- ஆனால் கிறிஸ்தவர்களோ - யேசுவை நம்புவதால், நமக்கு மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது. அவரை நம்பி, மகிழ்ச்சியாக இருப்பது, அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை. தொடர்ந்து முயற்சியுடனும் யேசுவை நம்ப நாம் அவரை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் இதில் சோம்பலாய் இருந்தால், நமது வாழ்வு மிக மோசமாகவே இருக்கும்.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 20, 2009

நவம்பர் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
Dan 7:13-14
Ps 93:1-2, 5
Rev 1:5-8
John 18:33b-37
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 18
33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான்.34 இயேசு மறுமொழியாக, ' நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? ' என்று கேட்டார்.35 அதற்கு பிலாத்து, ' நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? ' என்று கேட்டான்.36 இயேசு மறுமொழியாக, ' எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல ' என்றார்.37 பிலாத்து அவரிடம், ' அப்படியானால் நீ அரசன்தானோ? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர் ″ என்றார்.


(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து அரசர் தானா என்ற கேள்வி எழும்போது, யேசு அதற்கு பதிலளிக்காமல், கடவுளரசின் உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார். அவர் அரசர் என்பதை மறுக்காமல், "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்" என்று கூறுகிறார். அவர் எந்த ஒரு நாட்டிற்கும், அல்லது இந்த உலகத்திற்கோ அரசர் இல்லை, மாறாக, அவர் உண்மையின் அரசர், நேர்மையின், இயற்கையின் அரசர்.


யேசு நமக்கு ஆசிரியராகவும், உண்மையை எடுத்துரைக்கும் குருவாகவும் இல்லாவிட்டல், இந்த உலகத்தில் நடக்கும் பொய்யான பாசாங்குகளால் நாம் இழுத்து செல்லப்படுவோம், இந்த உலகை பொய்யினால் ஆளும் சாத்தானின் பிடியில் மாட்டுவோம். ஆனால், கடவுளின் உலகை சாத்தான் ஆள்கிறது என்பதே உண்மையை திரிக்கப்பட்டதாகும்.நிச்சயமாக சாத்தான் இந்த உலகை ஆளவில்லை. யேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்து கடவுளின் எல்லா உயிரனங்களையும் மீட்டார் என்பதை நினைவில் கொள்க. கிறிஸ்துவின் அரசை ஏற்றுகொண்டு, அவரின் குரலை கேட்டு அறிந்து, உண்மையின் வழி வாழ்வபவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள், அவர்கள் கடவுளரசில் இருக்கிறார்கள்.
நாம் பாவம் செய்யும்போது, அந்த நிலைமையின் உண்மையை புரிந்து கொள்வதில்லை. நமது வாழ்வின் முழு அரசராக யேசு இன்னும் இருக்கவில்லை.
எடுத்து காட்டாக, யாராவது ஒருவர், உங்களிடம் எதையோ கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம். அது கோவில் கட்டும் பணியாக இருக்கலாம். பக்கத்து வீட்டு நோயாளிக்கு உதவி செய்வதாக இருக்கலாம், அல்லது வேலை ஸெய்பவர்களாக இருக்கலாம், அவர் உங்களை விட விசுவாசம் குறைந்தவராக இருக்கலாம்.
அவர்கள் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? உங்களுடைய சொந்த வேலைகளால் நீங்கள் மிகவும் அசதியாகவும், மிகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறீர்களா? அதனால் மற்றவர்களின் தேவைகளை உங்களால் நிறைவேற்ற முடியவில்லையா? நமது உடல் தான் நாம் ஏற்கனவே அதிகமாக மற்றவர்களுக்கு செய்கிறோம், அதனால், நாம் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது என்று சொல்லும். இது தான் தீய எண்ணங்களால் உண்மையான நிலையை நாம் அறியாமலிருப்பது. நம் தேவைகளை , விருப்பங்களை அடைந்தால் தான் நமக்கு சந்தோசம் , ஆனால் மற்றவர்களுக்கு உதவிசெய்வதால், ஒன்றும் இல்லை என்று நாமாக நினைத்து கொள்கிறோம்.
நிதர்சனமான நிலையில், யேசுவின் குரலை கேட்டு, அந்த பழக்கத்தை தொடர்வோமானால், அது ஒரு பெரிய இன்ப அனுபவமாகும். மேலும், யேசு "இன்னும் அதிகமாக செல்" என்றும் "நல்ல சமாரித்தன் போல் மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள் " என்றும் கூறுகிறார். யேசு கூறும் நற்போதனைகளை கேட்டு, அதனை நாம் விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினால், நாம் கடவுளை, அவர் குரலை புரிந்து கொள்வதில் முன்னேறுவோம். நாம் செய்த நற்செயல்களால், விளையும் சந்தோசத்தில், நாம் இன்னும் கடவுளை புரிந்து கொள்பவர்களாக ஆவோம். அந்த நற்கணிகளை அடையாளம் கொள்வோம். ஆனால், நாம் பாவம் செய்யும்போது, நல்ல செயல்களால் நமக்கு கிடைக்கும் கணிகளை நாம் அறிந்து கொள்வதில்லை. கிறிஸ்து அரசரின் ஆட்சியின் கீழும், பரிசுத்த ஆவியின் ஞானத்தாலும், நாம் நமது பாவ சிந்தனையிலும், நடத்தையிலிருந்து மீள்வோம்.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, November 14, 2009

15 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

15 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு

Dan 12:1-3
Ps 16:5, 8-11
Heb 10:11-14, 18
Mark 13:24-32
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13
24 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.28 ' அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.32 ' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், யேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே அவர் இன்னும் அவரின் முதல் வருகையையே முடிக்கவில்லை. அந்த சீடர்களுக்கு எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்.

யேசு இறந்து, உயிர்த்தெழுந்து, மோட்சத்திற்கு எழுந்தருளிய பிறகும், அவர் இரண்டாவது வருகை காலம் தாமதமாக இருப்பதால், சீடர்கள் இன்னும் குழம்பி போனார்கள். "இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது" என்று அவர் கூறியது அவர்களுக்கு இன்னும் நினைவில் இருந்தது. இருந்தும் காலம் தான் கழிந்தது, அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பித்தார்கள், ஆனாலும் யேசு மீண்டும் வராமலிருந்தார், மேகங்களிடையே இன்னும் ப்ரசன்னமாகவில்லை. ஆனாலும் இந்த துயரம் இன்னும் போகவில்லை.
முடிவில்லாத ப்ரச்சினைகள் உங்களுக்கு ஏதாவது இருக்கிறதா? யேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்: "இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் " . அவர் எந்த ஒரு தேதியையும் அறுதியிட்டு சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, குறியீடும் கொடுக்கவில்லை. அல்லது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடை கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!. (ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது) , அப்ப எதனை சீடர்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறார்.

அவர் நெருங்கி வருகிறார்!
கடந்த 2000 வருடங்களாக, நாம் "இந்த தலைமுறையின்" அங்கமாக இருக்கிறோம், அவரின் இரண்டாவது வருகை வரைக்கும், நாம் இந்த தலைமுறைதான். கிறிஸ்துவின் மனிதகுலத்தின் தலைமுறையில் இருக்கிறோம். கிறிஸ்துவின் உடலாக இந்த திருச்சபையில் நாம் இருக்கிறோம். கடவுள் தனது மகனை தியாகம் செய்த தலைமுறையில் நாம் அங்கத்தினராக உள்ளோம்.
கடவுளின் மீட்பின் திட்டம், ஈஸ்டர் ஞாயிறிலிருந்து தொடங்குகிறது. அந்த "கடைசி நாட்கள்" அன்றிலிருந்து தொடங்கி, கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரை இருக்கும். இது பரிசுத்த ஆவியின் காலம் ஆகும். அது என்னவென்றால், கிறிஸ்து இவ்வுலக இறைசேவையை முடித்து, மோட்சத்திற்கு எழுந்தருளியுள்ளார், ஆனால், பரிசுத்த ஆவியை நமக்கு வழங்கி உள்ளார்.
அத்தி மரத்தின் போதனை, கோடைகாலம் நெருங்கி வரும்போது நமக்கு தெரியும். நமக்கு நல்ல நேரம் எது , கெட்டது எது என்று தெரியும். அது என்னவெனில், யேசு நம்மிடம் நெருங்கி வருகிறார். உடலோடு இல்லை (திருப்பலியில் திவ்ய நற்கருணையில் வருகிறார். அதனை தவிர்த்து) , ஆனால் பரிசுத்த ஆவியாக.

உங்களின் அடுத்த அடிக்கு அருகில், யேசு வாசல் கதவின் அருகே இருக்கிறார். உங்கள் அடுத்த கால் அடி, மோட்சத்திற்கு செல்லும் அடுத்த அடியாக இருக்கும். கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கும், அதன் மூலம், நாம் மோட்சத்திற்கு செல்ல முடியும். யேசு உங்களுக்காக அந்த கதவை இப்போது திறக்கிறார். அந்த கதவு பரிசுத்தமும், அன்பும் நிறைந்தது. முழு வாழ்க்கை வாழ , அந்த கதவின் வழியே செல்லுங்கள், அந்த முழு வாழ்வை தான், கடவுள் உங்களுக்காக திட்டமிட்டிருக்கிறார்.

© 2009 by Terry A. Modica

Friday, November 6, 2009

நவம்பர் 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32வது ஞாயிறு
1 Kgs 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Heb 9:24-28
Mk 12:38-44

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 12
38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ' மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ' என்று கூறினார்.41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். 43 அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ' இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

யேசுவின் பின்செல்வதற்கு, நாம் அதிக விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் யேசு நம்மை பல இடங்களுக்கு , நாம் எதிர்பாராத இடத்திற்கு எடுத்து செல்கிறார், அதற்கு நாம் தயாராக வேண்டும், தியாகம் செய்ய வேண்டும், நமக்கு வசதியான வாழ்க்கையை விட்டு , மிகப் பரிச்சயமான எல்லைகளை விட்டு வெளியே வர வேண்டும்.

இன்றைய நற்செய்தியிலும், முதல் வாசகத்திலும் வரும் விதவைகளை பாருங்கள், தன்னால் இதனை செய்ய முடியாது, நமக்கு உணவு இல்லை என்று தெரிந்தும், அவர்கள் எப்படி தன்னிடம் உள்ளதை கொடுத்தார்கள்? கடவுள் அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வார் என்று கண்டிப்பாக தெரிந்து தான் தன்னிடம் உள்ளதை கொடுத்தார்களா? இல்லை அவர்களுக்கு தெரியாது. கடவுளின் மேல் உள்ள அன்பினால், அவர்களிடம் உள்ள அனைத்தையும் இறைவனுக்கு கொடுத்தார்கள்.
விசுவாசம் தான் ஒரு நல்ல அன்பின் அடையாளம் ஆகும். அது என்னவென்றால், கடவுளை நம்புவதற்கு நாமே முடிவு செய்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை உள்ள நாம், நமது கஷ்டமான நேரங்களில், நமக்கு தெரிந்த பலர் கைவிட்ட பிறகும், கடவுள் நம்மை கைவிடமாட்டர் என்று நாம் நம்பினால், அவர்களை எந்த தடையுமின்றி, நாம் அன்பு செய்ய முடியும். எந்த வித நிபந்தனையின்றி, நாம் நமது விருப்பப்படி, நமது நண்பர்களை அன்பு செய்யலாம். ஆனால் கடவுள் நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன், மற்றவர்கள் மேல் நாம் அன்பு செய்ய வேண்டும்.
விதவை தாய் எதை தொலைக்க கூடாதோ, எதை விட்டு விட முடியாதோ, அதனை கடவுளுக்கு கொடுத்தாள். நமக்கு தொந்தரவு செய்பவர்களையும், நம்மை துயரத்தில் ஆழ்த்தியவர்களையும், நம்மை ஒதுக்கி விட்டவர்களையும், நம்மால் அன்பு செய்ய முடியாது, இருந்தும் யேசு நம்மிடம், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு நல்லது செய்து, அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
சில நேரங்களில் சிலரை அன்பு செய்வது கூட மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் ஒரு எல்லையை கடந்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. யேசுவை தொந்தரவு செய்தவர்களை, அவர் என்ன செய்தார் என்று நினைத்து பாருங்கள். புனித வெள்ளி வர, யேசு எப்போதுமே, அவர்களிடமிருந்து விலகி வந்து விடுவார். ஆனால், அவர்கள் மேல் அன்பு செய்வதை நிறுத்தி விட வில்லை. கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டு, எப்போது பேச வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்று தெரிந்து அதன் படி நடக்க வேண்டும்.
சில நேரங்களில், மிகவும் கடின மனதுடையவர்களை அன்பு செய்தாலும், அவர்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் அழைத்து வர நாம் முயற்சிக்க வேண்டும். அவர்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றுவதை விட, அவர்களை அதில் கஷ்டபட்டு வெளியே வர செய்யவேண்டும். நாம் மனம் வருந்தி திருந்துவதற்கு முன், கடவுள் நம் பாவங்களை சுத்தம் செய்வாரா? என்று நினைத்து பாருங்கள். நாம் மனம் திருந்திய பின்பும் கடவுள் அதனை அகற்றப்போவதில்லை.
மற்றவர்களை அன்பு செய்வதற்கு, நாம் தியாகம் செய்ய வேண்டும், கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, அவர் ஆறுதல் தருவார் என்ற உற்சாகத்துடன் நாம் மற்றவர்கள் மேல் அன்பு செய்ய வேண்டும். கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார். கண்டிப்பாக நாம் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு இறங்கலாம். மற்றவர்களுக்காக நம் ஜாடியிலிருந்து கொடுக்கும் அன்பும், மற்றும் எல்லோமுமே என்றைக்கும் குறையாது.

(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 30, 2009

நவம்பர் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 1, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
அனைத்து புனிதர்களின் திருவிழா
Rev 7:2-4, 9-14
Ps 24:1bc-6
1 John 3:1-3
Matt 5:1-12a
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 5
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)
மிகவும் குண்டான மனிதன் குதிரை மேல் ஏறிய கதை உங்களுக்கு தெரியுமா? குதிரை மேல் ஏற முயற்செய்யும்போதெல்லாம், அவன் போராட வேண்டி இருந்தது. அப்போது அவர் எல்லா புனிதர்களிடத்திலும், "மோட்சத்தில் உள்ள எல்லா புனிதர்களே, எனக்கு உதவி செய்யுங்கள்!" என்று வேண்டி கொண்டு, குதிரை மேல் ஏற முயற்சி செய்வார், ஆனால் ஒரு புறத்திலிருந்து ஏறி, மறு புறத்தில் விழுந்து விடுவார். அதன் பிறகு அவர் சொல்வது 'புனிதரில் பாதி பேர் தான் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள், அடுத்த முறை மீதி பாதி பேரும் உதவி செய்ய வேண்டும்" என்று சொல்வார்.

புனிதர்களிடமிருந்து எவ்வளவு உதவி நீங்கள் பெறுகிறீர்கள்? ஏன் கத்தோலிக்க திருச்சபை இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது? மரணமடைந்த சில மனிதர்களை புனிதர்கள் என்று கூறி அவர்களுக்கு மரியாதை செய்து, அவர்கள் சிலையை வைத்து, அவர்களிடம் ஏன் வேண்டிகொள்ள வேண்டும். உண்மையாக நாம் அவர்களிடம் வேண்டுவதில்லை, (கன்னி மரியாளிடம் கூட), ஆனால், அவர்களையும் நமக்காக வேண்டிகொள்ள சொல்கிறோம். (அருள் நிறைந்த மரியே வில், பாவிகளாக இருக்கிற எங்களுக்காக வேண்டி கொள்ளவும்)

உங்கள் நண்பர்களிடம் உங்களுக்காக வேண்டிகொள்ள சொல்லி இருக்கிறீர்கள்? உங்களோடு சேர்ந்து ஜெபிக்க சொல்லியிருக்கிறீர்களா? மோட்சத்தில் நண்பர்களோடு இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்!

புனிதர் பட்டம், திருச்சபையில் கொடுப்பது நமக்கெல்லாம் உறுதியாக சொல்லப்படுகிறது, என்னவெனில், இந்த புனிதர் கடவுளோடு மோட்சத்தில் முழு அருளோடு இணைந்துள்ளார் என்பதனை உறுதியாக திருச்சபை சொல்கிறது. இந்த புனிதர் பட்டம் கொடுக்கும் முன்பு, திருச்சபை முழுதும் பரிசோதித்து, பல அடுக்கு முறை திட்டங்கள் முடிந்த பின்பு தான் கொடுக்கபடுகிறது. அற்புதங்கள் பல கண்ட பிறகுதான் இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது.
திருவெளிப்பாடு 7:2-14 , எல்லா பரிசுத்த ஆண்மாவும் இறைவனோடு சேர்ந்து இருப்பதை குறிக்கிறது. இந்த இனைந்த வாழ்வை, யேசுவின் நண்பர்கள் அனைவரும் பங்கிட்டு கொள்கின்றனர். யேசுவின் நண்பர்கள் அனைவரும், உங்களின் நண்பர்கள், கடவுளோடு இனைந்து முழு பரிசுத்ததுடன் இருப்பவர்கள் நமக்கும் நண்பர்களாவர். புனித அவிலா தெரசா "இறைவனுக்காக அனைவரையும் அன்பு செய்பவர்களை, கடவுள் ஒருபோதும் ஒதுக்கி விடமாட்டார்" (The Way of Perfection, Chap. IX, 3). என்று கூறுகிறார்.

எனினும், புனிதர்களின் நட்பையும், அவர்களின் அன்பையும் புரிந்து கொள்ள, அவர்கள் நம் மேல் உள்ள அக்கறையையும் தெரிந்து கொள்ள, நாம் பரிசுத்த ஆவியுடன் நல்ல உறவுடன், தனிப்பட்ட முறையில் நெருக்கம் உருவாக்கி கொள்ள வேண்டும். கடவுளின் ஆவியில் தான், புனிதர்களோடு நம்மால் தொடர்பும் நட்பும் கொள்ள முடியும்.

எந்த புனிதர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள்? நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் வரலாற்றை , கதைகளை படியுங்கள். அவர்களுடைய சொந்த வார்த்தைகளை கேளுங்கள். யேசுவிடம் கேட்டு, புனிதர்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். பரிசுத்த ஆவியின் மூலம், உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, உங்கள் பரிசுத்த வாழ்விற்கு, இன்னும் என்ன உதவி தேவை என்று கேளுங்கள்.

புனிதர்கள் நமக்கு என்ன உதவி செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாவிட்டாலும் கூட, நமக்கு பல நல்ல செயல்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக நமது பரிசுத்த வாழ்விற்கு உதவி செய்து வருகிறார்கள்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 23, 2009

அக்டோபர் 25, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 25, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.47 நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ' இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று கத்தத் தொடங்கினார்.48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ' தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.49 இயேசு நின்று, ' அவரைக் கூப்பிடுங்கள் ' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ' துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ' என்றார்கள்.50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.51 இயேசு அவரைப் பார்த்து, ' உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ' ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ' என்றார்.52 இயேசு அவரிடம், ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

(thanks to www.arulvakku.com)


யேசு நமது வாழ்வை தொட்டவுடன்- நமது ஜெபங்களுக்கு செவி சாய்த்தவுடன், நமது வாழ்வை மாற்றி , அதன் உள்ள அர்த்தத்தை, நமக்கு விளக்கியவுடன், நமது வாழ்வில் சில வேறுபாடுகளை காட்டியவுடன்- பிறகு நாம் என்ன செய்கிறோம்? நமது தெய்வ அருளாள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எல்லா பலன் களையும் நாம் பெறுகிறோமா?

கடவுள் நம்மை எந்த வழியிலும் செல்ல வற்புறுத்த்தவில்லை. நாம் அவரோடு பேரம் பேசி, "நீர் என்னை குணமாக்கினால், நாம் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" என்று கூறினாலும், யேசு பர்டிமோஸிடம் சொன்னது போல், இன்றைய நற்செய்தியில் குணமாக்கியவுடன் சொன்னது போல், "உன் வழியில் செல், உனது விசுவாசம் உன்னை குணமாக்கியது" என்று நம்மிடம் கூறுகிறார். நாம் எங்கே போவது?
சில நேரங்களில், யேசுவின் போதனை, அல்லது அவரது கட்டளை, நிறைய பொருளை கொண்டிருக்கும். அவர் சில நேரங்களில், யாரையாவது குணமாக்கும் பொழுது, (பாவத்திலிருந்து) , "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார். ஆனால், எங்கே போவது?

நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும், முயற்சியும் மிகவும் முக்கியமானது. அடுத்த அடி எங்கே வைக்கிறோம், எப்படி குணமாகியபின் நாம் அடுத்த செயல் செய்கிறோம் என்பதை பொருத்து, நமக்கு கிடைத்த அருள் பலமடங்காகுமா அல்லது அத்தோடு நின்று விடுமா என்பதாகும். அதனை நம்மால் ஆருடம் கூறமுடியாது. இதனால் நடைபெறபோகும் விளைவுகளை யேசு ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், இதற்கடுத்து நடைபெறபோகும் அனைத்தும் நம் கையில் உள்ளது.

யேசு பர்டிமேயுவை பார்த்து "உன் வழியில் செல்" என்று கூறினார். பர்த்திமேயு இந்த சுதந்திரத்தை வைத்து கொண்டு என்ன செய்தார்? அவர் "யேசுவின் வழியில் பின் சென்றார்". எது நல்ல வழியோ, அவ்வழியை அவர் தெரிந்து கொண்டார். அவரது எதிர்பாராத விதத்தில் மாறியது. அவர் குருடராக இருந்ததால் மட்டுமில்லை, இப்போது அவருக்கு கண் தெரியும், ஏனெனில், அவர் யேசுவிடமிருந்து கற்றுகொள்ள விரும்பினார், மேலும் யேசுவின் பின் செல்பவராக இருக்க விரும்பினார்.


கிறிஸ்துவின் மூலம், நாம் பயன் அடைந்த பின், அவர் அருள் பெற்ற பின், எத்தனை முறை பழைய தவறான வழியில் செல்கிறோம்? யேசுவை பின் தொடர்ந்தால், புது இறைசேவையில் ஈடுபட்டால், நமது வேலையை மாற்றினால், அல்லது நண்பர்களை மாற்றினால், பழைய வாழ்வையே நாம் மீண்டும் ஈடுபட்டால், யேசுவை பின் தொடர்வதற்கு அர்த்தமில்லை. ஆனால் யேசுவை பின் தொடர்வது என்பது, மிகப்பெரிய பந்தயமாகும். நமது விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

யேசுவை பின் செல்வது, அவரிடம் நாம் கற்றுகொள்வது தான் நமது முழு முதல் வேலையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடும் நாம் இணையும் ஒவ்வொரு தருனமும் நம்மை மாற்ற வேண்டும்- திருப்பலியில் கிறிஸ்துவோடு நாம் மீண்டும் மீண்டும் இனைகிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 16, 2009

18 அக்டோபர் 2009 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Heb 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ' போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ' என்று கேட்டார்.37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ' என்று வேண்டினர்.38 இயேசுவோ அவர்களிடம், ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ' என்று கேட்டார்.39 அவர்கள் அவரிடம், ' இயலும் ' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ' நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ' என்று கூறினார்.41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ' பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்.


(thanks to www.arulvakku.com)

இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இறையரசின் நண்மைக்காக, நாம் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.

நம்முடைய சுய விருப்பங்கள், நம் கனவுகள், நமது தேவைகள் எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. கடவுளின் தொண்டனாக இருப்பது ஒன்றும் அவரின் அடிமை என்று அர்த்தமில்லை. இது ஒரு மிகப்பெரும் மரியாதை மற்றும் ஆசிர்வாதம் ஆகும். ஏனெனில், கிறிஸ்து செய்த மீட்பின் பணியாளராக நாம் யேசுவோடு சேருகிறோம்.


கிறிஸ்துவை போல நாமும் கடவுளின் பணியாளராக இருப்பதினால், கடவுள் எப்படி கிறிஸ்துவை நடத்தினாரோ, அதே போல நம்மையும் நடத்துகிறார். நமது கடவுள் நம்மை மரியாதை குறைவாக நடத்த மாட்டார், நமக்காக அதிகம் வேலையும் அல்லது அதிகமாக நமக்கு எதையும் தரப்போவதுமில்லை.

இதற்கு மாற்றாக, நாம் இந்த உலக வாழ்வில், இங்கு உள்ள சொத்துகள், செல்வங்கள் மேல் அதிகம் ஆசை கொண்டு, அதற்கு அடிமையாக இருப்பது ஆகும். இந்த உலகத்தில் அடிமையாக இருப்பது, நம்மை சின்னவனாக காமிக்க போவதில்லை, ஆனால், கடவுள் எப்படி நம்மை அதிக மதிப்புடன் படைத்தாரோ, அதிலிருந்து நாம் குறைந்து விடுகிறோம்.


கிறிஸ்து நமக்கு கொடுக்கும் அதிகாரம், கிறிஸ்துவிற்கு உள்ளது போலவே நமக்கும் கொடுத்திருக்கிறார்: இறையரசின் எல்லா பலன் அனைத்தையும் நாமும் அனுபவிக்கலாம், பரிசுத்த வாழ்வை நமது விருப்பத்துடன் வாழலாம், அதனால் கடவுளின் பார்வையில் மிக பெரியவர்களாக, அவரின் அன்பானவராக இருப்போம்.

இந்த சுதந்திரத்தில், மிக பெரிய சந்தோசம் உள்ளது. எனினும், கிறிஸ்துவின் வழி ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரங்களில் நம்மை சிலுவைக்கு அழைத்து செல்லும், ஆனால் இந்த துயரங்கள் நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகரிக்கும், மேலும் மோட்சத்தில் இன்னும் பெரியவனாக ஆவோம். நமது தியாகங்கள் , மற்றவர்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று அறிந்து, அந்த தியாகத்தினால் நமது பரிசுத்த வாழ்வு வளர்கிறது என்றும் நாம் அறிந்தால், அந்த துயரங்களை நாம் தாங்கி கொள்ள இயலும். அது தான் நமக்கு ஆசிர்வாதம் ஆகும்.

சிலருடைய ஜெபங்கள், வேண்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போனவர்களை உங்களுக்கு தெரியுமா? கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. அவரால் நமக்கு உதவ முடியாது என்று அர்த்தமில்லை. நம்மை அவரின் பணியாளராக கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிறார். யேசு நம் மூலம், பலருக்கு உதவுகிறார்.

நம் முதல் இலக்கு கடவுளோடு உள்ள உறவாகும், அதன் மூலம், அளப்பதற்கரிய பல அன்பளிப்புகளை, நாம் வாங்கி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். நம்மிடம் இல்லாததை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. யேசு நமக்கு பணியாளராய் இல்லையென்றால், நாம் கிறிஸ்துவின் ப்ரசன்னமாய் இருந்து , மற்றவர்களுக்கு நாம் உதவ முடியாது.


(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, October 10, 2009

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28வது ஞாயிறு

Wis 7:7-11
Ps 90:12-17
Heb 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20 அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார்.22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார்.24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார்.26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், \' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? \' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, \' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் \' என்றார். 28 அப்போது பேதுரு அவரிடம், \'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே\' என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு அந்த பணக்கார வாலிபனை கேட்கிறார். "' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே" என்று அவன் பதில் கூறுகிறார். அதில் இரண்டு விதமான செய்தி உள்ளது.

முதலாவதாக, அந்த இளம் வாலிபன், உண்மையாக யேசு நல்லவர் மற்றும் நல்ல குரு என்று நம்புவனாக இருந்தால் (யேசுவை, அவரை புகழ்ந்து அவரோடு சேர்ந்து இருக்க நினைத்திருந்தால்) , மேலும் அவருடைய அற்புத காரியங்கள் மற்றும், பாவமில்லா அவரின் வாழ்வை நம்புவனாக இருந்தால், இவையெல்லாம் யேசு கடவுள் தான் என்று அவன் சொல்வது சரியாக இருக்கும். இரண்டாவது, கிறிஸ்துவின் கேள்வி, அந்த இளைஞனை, இன்னும் தாழ்மையுள்ளவனாக மாற்ற உதவியது. யேசு சொன்னதை, அவன் உண்மையாக நம்பினால், கடவுள் நல்லவர், அவனையும் சேர்த்து, மற்றவர்கள் யாரும் கடவுளை விட நல்லவர்கள் யாரும் இல்லை என்று அறிந்தவனாக இருந்தால், அவருடைய கட்டளைகள் மிக சரியாக கடைபிடிப்பான். இது மாதிரியான ஒரு புரிதல் அவனுக்கு இருத்திருந்தால், அவனுடைய இதயத்தை திறந்து, அவன் யேசுவை நோக்கி திரும்பியிருக்க வேண்டும்.


உங்களுடைய இதயத்தை, இந்த உண்மை எப்படி பாதிக்கிறது? யேசு இவ்வாறு சொல்கிறார், "கடவுளை போல் பரிசுத்தமாக இருப்பதற்கு, இந்த பூமியில் உள்ள உங்கள் செல்வங்கள், நிலபுலங்கள், அபிலாசைகள் இவை அனைத்தையும் விட்டு விட்டு, கடவுளின் இறையரசின் விசயங்களோடு ஒன்றினால் தான் முடியும்"

கடவுள் நம்மை அனாதையாகவோ அல்லது ஏழையாகவோ ஆக சொல்லவில்லை. எல்லாவற்றையும் "விட்டுவிட" வேண்டும் என்பதற்கு அர்த்தம், எல்லாவற்றையும் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதாகும். நாம் நம்முடைய வருமானங்களையும், சொத்தையும் வைத்து கொள்வது என்பது நமக்கு நல்லதுதான், அதுவும் கடவுள் கொடுத்தது தான். (எடுத்து காட்டாக, கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளால், அதன் மூலம் கிடைத்த வருவாய் மூலம், வாங்க்கும் சொத்துகள்), மேலும், அதனை வைத்து, நாம் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால், உண்மையான சந்தோசம், கடவுளின் தோழனாக, அவரின் மகனாக, மகளாக இருந்து கடவுளின் செல்வங்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் கருவியாக இருந்தால் தான் நமக்கு சந்தோசம்.

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், செல்வங்களை மற்றவர்களோடு பகிரிந்து கொள்வது, நமக்கு மிக பெரிய சந்தோசமான விசயம் தான். அப்படி செய்தால் தான், நாம் நம் செல்வங்களை ஆள்பவனாக இருப்போம், இல்லையென்றால், அந்த செல்வங்கள் நம்மை ஆள ஆரம்பித்து விடும்.

நம்மால் மட்டுமே, நாம் சேர்ந்து இருக்கும், நம்மோடு ஒட்டிகொண்டிருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வரமுடியாது. இது மிகவும் கடினமாகும், நம்மோடு இருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வர, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமாகும். அதிலும் எல்லாவற்றையும் , மற்றவர்களின் நலங்களுக்காக கொடுப்பது என்பது அறவே கஷ்டமாகும். ஆனால் இப்படி வாழ்வது தான், முழுமையான வாழ்வாகும்.! இப்படி வாழத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பூமியின் செல்வங்களோடு நாம் சேர்ந்தே இருப்பது, பாவமாகும், அது நம்மை கடவுளிமிருந்து அதிக தூரத்திற்கு இட்டு செல்லும், மேலும் பலரை புன்படவைக்கும்.

நல்ல செய்தி என்ன என்றால், யேசு நம் பாவங்களை ஏற்று, சிலுவையில் மரணமடைந்து வெற்றி பெற்றார், அதன் மூலம் நமக்கு பரிசுத்த ஆவியை பகிர்ந்து கொண்டார். மோட்சத்திற்கு தேவையில்லாத, எந்த ஒரு பொருளோடும், நாம் சேராமல், நமது இந்த பூமி வாழ்வு இருக்க வேண்டும். இப்படி செய்தால், நாம் மோட்சத்தின் செல்வங்களை பெறுவோம்.
(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 2, 2009

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு

Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.11 இயேசு அவர்களை நோக்கி, ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ' என்றார்.13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ' சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

(thanks to www.arulvakku.com)


யாராவது உங்களை விரும்பாமலும், அன்பு காட்டாமலும் உள்ளவரை, நீங்கள் அன்பு காட்டியதுண்டா? கடவுளின் அதீத அன்பை நீங்கள் அனுபவித்து, அதன் மூலம், நீங்கள் மற்றவர்களிடம் அந்த அன்பை கொடுத்ததுண்டா? அவர்கள் கரடுமுரடான ஆளாக இருந்தாலும், கடவுளின் அன்பை அவர்களுக்கு அளித்ததுண்டா?

திருமணம் ஆனவர்கள் அனைவரும்,அவரவர் துணைவரை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அன்பு செய்ய வேண்டும். இப்படி அன்பு செய்வது, இருவருக்கும் பொருந்தும் என நாம் நினைக்கிறோம். நாம் எந்தளவிற்கு ஆர்வத்தோடு அன்பு செய்கிறோமோ அதே ஆர்வத்தோடு, நமது துணைவரும் நம்மை அன்பு செய்வார்கள்.

இருந்தாலும், அதிக திருமணங்களில் ப்ரச்சினைகளை நாம் பார்க்கிறோம், அந்த ப்ரச்சினைகள் களையப்பட , இறைவனின் அன்பும், நமது வாழ்வில் அவரின் பங்களிப்பும் இறுதி வரை தேவைப்படுகிறது. அதனால் தான் நமக்கு திருமண அருட்சாதனம் தேவைப்படுகிறது. சாதாரண அரசாங்க திருமண சடங்குகளை விட, கோவிலில் நாம் திருமணம் செய்கிறோம். தெய்வீக அருள் இருந்தால் தான், நம் திருமணம் நீண்ட காலம் நீடித்து இருக்க கடவுள் விரும்புவது போல், நாம் தொடர்ந்து ஒருமைபாட்டுடன் இருக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில், மோசேயின் சட்டத்தில், விவாகரத்து அனுமதிக்கப்பட்டது, ஏனெனில், மக்கள் கடின மனதுடையவர்களாக இருந்தார்கள், அதனால் தான் விவாகரத்து அனுமதிக்கப்பட்டது என்று யேசு விளக்குகிறார். இது விவாகரத்திற்கு அனுமதி வழங்குவது அல்ல. யேசு நம்மையெல்லாம் அவர் இதயத்தை போல நாம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.


மோசேயின் காலத்தில், திருமணங்கள் பிரச்சினையாகிறபொழுது, அல்லது திருப்தியற்ற நிலையில் உள்ளபோது, அதிக கணவர்கள், அவர்கள் மனைவியை விட்டு விலகி ஒதுக்கி வைத்திருந்தனர். திருமணம் - ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற நியதி இருந்தாலும், விவாகரத்து ஆன ஒரு பெண், மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் , அதற்கான அனுமதி சட்டத்தில் உள்ளது. அந்த சட்டம் அவர்களை காத்து கொள்வதற்கு இப்படி அனுமதி அளித்தது. ஆனால் அதனால், விவாகரத்து என்பதை ஒருபோதும் ஒப்புகொள்ள முடியாது.

இறுதிவரை ஒன்றாக இருப்பது என்பது தெய்வத்தின் அருள், அவரின் அன்பளிப்பு, இது தான் கடவுளோடு நமக்குள்ள தொடர்பிற்கு, நம்மிடம் உள்ள ஆதாரமான விசயமாக உள்ளது. நாம் இதனை நம்பவில்லையென்றால், கடவுள் நம் மேல் எப்பொழுது அன்பு கொண்டிருக்கிறார் என்று நாம் எப்படி நம்ப முடியும்? - நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும்? மேலும், நம்மை பார்க்கிறவர்கள் என்ன நம்பிக்கையில் இருப்பார்கள்.


நினைவில் வைத்து கொள்ளுங்கள்: சில நேரங்களில், உங்கள் காதலரோ , காதலியோ கிறிஸ்துவின் சிலுவைக்கு சென்று அன்பிற்காக ஜெபிக்கலாம். திருமண அருட்சாதனமே, கிறிஸ்துவின் கருணையுள்ள அன்பின் வெளிப்பாடுதான்.

கடவுள் நம்மை, அவரோடு எப்பொழுது இணைந்தே இருக்க வேண்டும் என நம்மை கட்டாயபடுத்தவில்லை. நாம் அவரை விட்டு ஒதுங்கி சென்றாலும், அவர் நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார். அதே போல், அன்பு கிடைக்காத மனைவியோ அல்லது கணவரோ தொடர்ந்து அவர் துணை மேல் அன்பு கொண்டு தான் இருக்கிறார். வெகு தூரத்தில் இருந்தால் கூட. அன்புடன் தான் இருக்கிறார். இந்த குணம் (அன்புடன் இருப்பது) எல்லா நிலையில் உள்ளவர்க்கும் பொருந்தும். (நண்பர்கள், குருவானவர்கள், பொது நிலையினர், தந்தையர்கள்) .


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, September 26, 2009

27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

27 செப்டம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Num 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது..47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு, 'நமக்கு எதிராக யார் யாரெல்லாம் இல்லையோ அவர்களெல்லாம், நம்மை சார்ந்தவர்கள் " என்று கூறுகிறார். இறையரசில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மக்களோடு பழகுவதில், அவர்கள் எண்ணங்கள் , நம்மிடம் அனுகுவது பற்றி பல் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

சில நேரங்களில், ஒரு சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்று நாம் நினைப்போம், ஆனால், உண்மையில் அவர்கள் அது மாதிரியான எண்ணத்தில் இல்லாமல் இருப்பார்கள். எடுத்து காட்டாக , சிலர் ஒரு சில உண்மைகளை ,நம்மிடம் சொல்லும்போது, நமக்கு பிடிக்காத விசயமாக இருந்தால், அவர்களை நம் எதிரி போல் பார்க்கிறோம், ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசி ஆவர்.

வேறு சில நேரங்களில், பலர் அவர்களின் தேவைகளுக்காக, நம்மோடு சேர்ந்து இருப்பது போல் இருப்பார்கள், கடவுள் நம்மை எதற்காக தேர்ந்தெடுத்தாரோ, நம்மை என்ன செய்ய சொல்கிறாரோ , அதனை செய்ய அவர்கள் நமக்கு உதவுவதில்லை.

சில சமயம் இறைபணி செய்பவர்கள், நாம் எதிர்பார்ப்பது போல் அவர்கள் இறைபணி செய்வதில்லை. அதனால், கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை அவர்கள் செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம். நீங்கள் யாரையாவது உங்கள் கருத்துகளுக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்ள சொல்லி, அவர்கள் அந்த கருத்துக்கு எதிராக வேண்டி கொண்டார்களா? இது மாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?

பல வருடங்களுக்கு முன், எனது கணவர் கம்பெனியில் ஆள்குறைப்பு நடந்தது, நிறைய பேர் வேலையிழந்தனர். எனது நண்பர் ஒருவரிடம், எனது கணவருக்கு வேலை போகக்கூடாது என்று இறைவனிடம் எங்களுக்காக வேண்டி கொள்ளஸ் சொன்னேன், ஆனால், அவளோ அந்த கம்பெனி நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அதனால், எனது கணவர் வேலை நிரந்தரமாக இருக்கும் என வேண்டிகொண்டாள். ஆனால் எனது எதிர்பார்ப்போ, எனது கணவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளுடைய ஜெபம் எனக்கு பிடிக்கவில்லை. இறுதியில், அந்த நண்பர் மட்டும் தான் கடவுள் என்ன நினைத்தாரோ, அதையே வேண்டிகொண்டாள்.

நம் நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ நமக்கு நல்லது செய்கிறார்களோ அல்லது நமக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? அல்லது கடவுளின் தூதர்களா? என்று தெரிந்து கொள்வதற்கு, நம்முடைய ப்ரச்சினைகளை ஒதுக்கி , நமது கோப தாபங்களை தள்ளி, யேசுவோடு தனிமையில் அமர்ந்து அவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். நமது பயத்தை , கோபத்தை கடவுளிடம் கொடுத்து விட்டு, நமக்கு எதிரானவர்களை மன்னித்து, இறைபணிக்காக நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும், உண்மையாகவே சிலர் உங்களுக்கு எதிராக இருந்தால், ஜெபத்தில், நாம் தனியாக உட்கார்ந்து, ஞானத்தையும், அறிவையும், பரிசுத்த ஆவியிடம் கேட்டு, கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் முதன்மைபடுத்த வேண்டும். அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து நமது ப்ரச்சினைகளை தாண்டி வர உதவி செய்வார்.

(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 18, 2009

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 20, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு


Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16--4:3
Mark 9:30-37


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ' வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார்.34 அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நாம் பல தீமைகளை பார்க்கிறோம்: பொறாமை நல்லதை அழிப்பதையும், சுய நலம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், தற்பெருமை, வழியில் வருவபவர்களை அழிப்பதையும் பார்க்கிறோம்.

முதல் வாசகம், வெளியாட்களின் தீய நடவடிக்கைகளால், இஸ்ரேல் நாடு எப்படி அமுக்கப்பட்டது. என்று விளக்குகிறது. நற்செய்தியில், தெய்வத்தை விட்டு விலகி நிற்பவர்களின் தீய எண்ணங்களை யேசு கண்டறிகிறார். இதை அனைத்தையும்விட பெரிய இழிவான தீமையை, ஜேம்ஸ் சொல்கிறார். பங்கு திருச்சபையில், கிறிஸ்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை குறிப்பிடுகிறார்.

பொறாமையும், சுய நலத்தின் விருப்பங்களும் தான் ஒவ்வொரு பங்கிலும் நடக்கும் ப்ரச்சினைகளுக்கு மூல காரணம் ஆகும். பங்கு கோவிலின் உள்ள ஊழியர்களிடையே ஏற்படும் பிரிவு, கோவில் சேவை செய்பவர்களிடம் ஏற்படும் ஒற்றுமையின்மை, தான் வெளியே தள்ளப்படுகிறோமோ என்று நினைக்கும் ஒவ்வொரு தொண்டரிடமும், கிறிஸ்துவ குடும்பங்களிடையே ஏற்படும் பிளவுகள், குறைவான விசுவாசம் உள்ளோரை வெளியே தள்ளும் குணங்கள் எல்லாமே பொறாமையாலும், சுய நலத்தாலுமே ஏற்படுகிறது. -- இவையெல்லாமே தீயவை.

எந்த ஒரு பிரச்சினையின் மூலக்கூற்றை அறிய வேண்டுமானால், நமது சுய நலத்துடன் கூடிய விருப்பங்களை பார்த்தோமானல் தெரியும். நேர்மையாகவும், உள்ளார்ந்த நோக்கத்துடனும், பிரச்சினையின் உள்ள நயவஞ்சக நோக்கங்க்களை பாருங்கள். மற்றவர்களிடம் இதனை பார்க்கும்போது,நீங்கள் வருத்தபட்டது உண்டா? அப்படி வருத்தபடவில்லை என்றால்? ஏன்? நீங்கள் இன்னும் உங்கள் சுய நலத்தினால் உள்ள கொளவரத்தினாலும், தற்பெருமையினாலும் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.

இதற்கெல்லாம், யேசு நிவாரண மருந்து தருகிறார்: "யாராவது முதலாவதாக இருக்க நினைத்தால்( இந்த ஆசை நமது சுய நலத்தினால் தோன்றியது) அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் " என்று கூறுகிறார்.
சுய நலத்தினால் நம்மில் உண்டாகும் நோக்கம், பாவமாகும், ஏனெனில், மற்றவர்களிடமிருந்து வெற்றியை தட்டி பறிக்க முயற்சி செய்யும். ஜேம்ஸ் , நமது நோக்கம் என்னவாக இருந்தாலும், அது நல்ல நோக்கமாக இருந்தாலும், கடவுளிடம் வேண்டி, பரிசுத்த ஆவியுடன் இனைந்து , அந்த நோக்கத்திற்காக பாடுபட வேண்டும்- ஆனால், நாம் நமது சுய நலத்தினால், அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என நினைக்க கூடாது.

கடவுள் நமது வேண்டுதலுக்கு செவிசாய்த்து, நாம் கேட்பவற்றை கொடுக்க தயாராய் உள்ளார், ஆனால் அந்த வேண்டுதல், நமது பங்கு திருச்சபைக்கு பயனுள்ளதாகவோ, நமது குடும்பம் முழுதுக்கும் பயனுள்ளதாகவோ, இறைசேவையில் பங்கு கொள்வோருக்கு பயனுள்ளதாகவோ இருந்தால் கடவுள் நமது வேண்டுதலுக்கு செவி சாய்க்கிறார். மற்றவர்களுக்கு எப்படி உதவமுடியும் என்று நமது வேண்டுதல்கள் நினைத்து நாம் இறைவனிடம் வேண்டினால், அந்த ஜெபம் தூய்மையானது, அமைதிக்குரியது, முழு இரக்கத்துடன் உள்ளது, நிச்சயம் அதற்குண்டான கனியை தரும்.


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 11, 2009

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 13, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு

Is 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 8
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.31 ' மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்று கடிந்துகொண்டார்.34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியின், இரண்டாவது வாசகம், கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், அதன் தொடர்புகளையும் விளக்கி சொல்கிறது.

விசுவாசமில்லாத எந்த ஒரு சேவையும், எவ்வளவு நல்ல சேவையாக இருந்தாலும், நம்மை அது மோட்சத்திற்கு இட்டு செல்லாது. நம்மில் சிலர், கோவில் வேலைகளில் ஈடுபட்டு செய்து, இறைவனின் இதயத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறோம், எல்லா ஜெபங்களையும், மிக சரியாக சொல்வதும், அதில் ஒரு அங்கமாகும். இந்த மாதிரியான எண்ணங்கள், நமது குழந்தை பருவத்திலே இருந்து வருகிறது. நாம் நல்ல மாதிரியாக இருந்தால், நமது அம்மா அப்பா, நமக்கு பரிசு தருவார்கள் என நினைக்கிறோம். பள்ளியில் ஒழுங்காக படித்தால், ஆசிரியர் நமக்கு பரிசு தருவார் என்ற எண்ணத்தோடு உள்ளோம்.
பிரச்சினை என்னவெனில், நாம் மோட்சம் செல்லக்கூடிய தகுதியை என்ன செய்தாலும் பெற முடியாத நிலையில் தான் உள்ளோம். அதனால் தான் யேசு இந்த பூமிக்கு வந்து, நமது பாவங்களை சிலுவையில் எடுத்து கொண்டார்.

விசுவாசமற்ற எந்த ஒரு வேலையும், நம்மை மோட்சத்திற்கு எடுத்து செல்லாது. ஏனெனில்:
யேசுவின் மேல் விசுவாசம் கொண்டவர்களாக நாம் இருந்தால், "யேசு நம் மேல் அளவு கடந்த அன்பு கொண்டு, நமக்காக சிலுவை மரணமடைந்து, உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் நித்திய வாழ்வை அடைவோம்" என்ற நம்பிக்கை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இது தான் நமக்கு மோட்சத்தின் கதவை திறக்கும். எனினும், அந்த கதவுக்குள் நாம் நடக்க வேண்டுமானால், நாம் யேசுவை பின் செல்ல வேண்டும். அவரை பின் செல்வதற்கு, அவர் நமக்காக இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று நம்புவதை விட இன்னும் அதிகம் நாம் செய்ய வேண்டியிருக்கிறது, அது என்னவெனில், அவரது வாழ்வையும், எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நம்ப வேண்டும். யேசுவை பின் செல்வது, நமது சொந்த வாழ்வை பாதிக்கும், நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கிறிஸ்துவை போல நாம் மாறவேண்டும்.
நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பதை நாம் செய்யும் நல்ல காரியங்களே நிருபிக்கிறது. யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்பது, அவர் மேல் அதிக அளவு அன்பு செய்து, அவர் யாரையெல்லாம் அன்பு செய்கிறாரோ, அவர்களையெல்லாம் நாமும் அன்பு செய்வதில் உள்ளது. மற்றவர்கள் அனைவருமே அவர்களுக்கு நமது அன்பை பெற அந்த தகுதி இருந்தாலும், இல்லையென்றாலும், நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.

யேசுவின் மேல் உள்ள விசுவாசம் என்பது, நாம் அவர் என்ன சொன்னாலும், அதனை செய்ய தயாராக உள்ளோம் என்பதை காட்டுகிறது. அவரை போலவே நமது எல்லா செயல்களிலும் நடந்து கொள்வது, அவரது குண நலன்களை நாமும் பின் பற்றுவது, அவரது அழைப்பை ஏற்று கொள்வது. (குருவாக, இறைசேவையாளராக).
யேசு இன்றைய நற்செய்தியில் கேட்பது போல் "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" நம்மை கேட்டால், நமது பதில், நீங்கள் எங்களது மெசியா, எங்களை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர், நீங்கள் தான் கடவுள், எப்படி வாழ்வேண்டும் என, எங்களுக்கு சொல்லி கொடுப்பவர், நம் மேல் அதிக அன்பு கொண்டவர், மற்றவர்கள் மேல் நாம் அன்பு கொள்ள நமக்கு அதிகாரம் அளிப்பவர், அதனால், நமக்கு சிலுவை துன்பம் வந்தாலும், நம்மை காப்பவர். என்று சொல்பவர்களாக நாம் இருப்போம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, September 4, 2009

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

Is 35:4-7a
Ps 146:7-10 (with 1b)
James 2:1-5
Mark 7:31-37

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ' என்று பேசிக்கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கடவுள் உடல் ஊணமுற்றவர்கள் மேல் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நமக்கு கான்பிக்கிறது.
நாம் எல்லோருமே ஒரு வகையில், ஊணமுற்றவர்களாக தான் இருக்கிறோம், நமக்கு கண்ணிருந்தும், குருடர்களாக இருக்கிறோம், புனித ஜேம்ஸ் வாசகத்தில் நாம் எவ்வளவு குருடாக இருக்க முடியும் என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது

ஒரு மனிதன் எந்த மாதிரியான உடை உடுத்துகிறான் என்பதை தான் நாம் பார்க்கிறோம், எடுத்து காட்டாக, அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், அவர்களுடைய ஆற்றல்கள், திறமைகள் அனைத்தும், கடவுளின் பிரதிபலிப்பு ஆகும் என்பதை நம்மால் எப்படி அறிய முடியும்?. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம். ஒருவருடைய கல்வியறிவு, சொத்து, சமூகத்தில் அவரின் மதிப்பு ஆகியவற்றால், நாம் கவர்ந்திழுக்கபடுகிறோம், அவர்களின் புனிதத் தன்மையை நாம் பார்ப்பதில்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் அவர்களது ஆர்வம், மற்றும், அவர்கள் உள்ளத்டதில் என்ன உள்ளது என்பதை நாம் பார்ப்பதில்லை. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம்.

கடவுளுக்கு மட்டும் தான் ஒவ்வொருவரின் புனித தன்மை மற்றும் அவர்களிடத்தில் உள்ள நல்ல விசயங்கள் தெரியும். ஆனால், நாமும் கடவுள் போல, அவருக்கு சரிசமமாக, மற்றவர்களை நாம் அனுமானிக்கிறோம். கடவுளுக்கு மட்டும்தான் ஒவ்வொருவரின், மனதுக்குள்ளும், வார்த்தைகளிலும், உள்ள நோக்கங்களும் தெரியும். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரையும் , மற்றவர்கள் சொல்வதை வைத்து , அவர்களை மதிப்பிடுகிறோம்.

தீர்ப்பளிப்பது, நம்மை எவ்வளவு குருடாக இருக்கிறோம் என்பதை தான் காட்டுகிறது.
யேசு நம்மையெல்லாம், கடவுளை நோக்கி, "எப்பத்தா!, உனது கண்களும், காதுகளும், மேலும் மன எண்ணங்களும் திறந்து உண்மை நமக்கு கிடைக்கட்டும்" என்று வேண்டவேண்டும் என ஆசைபடுகிறார். இதன் மூலம் நாம் குணமடையலாம், நமக்கு தெரிந்தவைகளிடமும், கேட்ட விசயங்களிலும், ,கொஞ்சம் மெதுவாக செயல்பட வேண்டும். நாம் பார்ப்பதிலும், கேட்பவற்றையும், நம்ப கூடாது. மெதுவாக, நிறைய நேரம் எடுத்து கொண்டு, ஞானத்திற்காகவும், உள் குணங்களை அறிவதற்கும், தீர்ப்பளிப்பதற்கும், கடவுளிடம் வேண்டி , அதன் பிறகு தான் நாம் அடுத்த முயற்சிக்கு செல்லவேண்டும்.

யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தற்கு, இதுவும் ஒரு காரணமாகும். நாம் கடவுளின் ஆவியை ஒவ்வொரு விசயத்திற்கும், முடிவெடுக்க , அனுமானிக்க அனுமதித்தால், நாமும் கடவுளை போல் செயல்படுவோம். கொஞ்சம் கொஞ்சம் விசயங்களை வைத்து கொண்டு, நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விட கூடாது. விசுவாசத்துடனும், இரக்கத்துடனும், நாம் செயல்படவேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, August 28, 2009

ஆகஸ்டு 30, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 30, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
1 ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. 5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ' உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ' என்று கேட்டனர்.6 அதற்கு அவர், ' வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.7 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ' என்று அவர் எழுதியுள்ளார்.8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.9 மேலும் அவர், ' உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.10 ' உன் தந்தையையும் தாயையும் மதித்துநட ' என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!11 ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ' நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ″ கொர்பான் ″ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று ' என்றால்,12 அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.13 இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ' நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.15 வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.16 ( 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' ) என்று கூறினார். 17 அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,18 அவர் அவர்களிடம், ' நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?19 ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது ' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.20 மேலும், ' மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.23 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், பரிசேயர்களை கடிந்துரைக்கிறார். ஏன், அவர்கள் கடவுளை தங்கள் உதட்டில் மட்டுமே வைத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், உள்ளத்தில், கடவுளை விட்டு வெகு தூரத்தில் இருக்கின்றனர். யூத சட்டங்க்களை யேசுவும், அவரின் சீடர்களும் சரியாக நிறைவேற்றவில்லை, என்று பரிசேயர்கள் குறை கான்பதில் கொஞ்சம் கூட அன்பு இல்லை என்று யேசு குறிப்பிடுகிறார்.

மனிதர்களை விட அவர்களுக்கு சட்டங்கள் தான் முக்கியமானதாக இருந்தது. பரிசேயர்களிடத்தில், தான் தான் சரி என்ற எண்ணம் இருந்தது. "உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட பெரியவன் நான், நான் கட்டளைகளை சரியாக கடைபிடிக்கிறேன் , ஆனால் நீங்கள் கடைபிடிப்பதில்லை" என்று கூறி கொள்ளும் மனப்பான்மை.


கீழ்படிதல், சட்டங்களின் பிடிப்பால் ஏற்படக்கூடியதாக இருந்தால் அது கபட வேஷம் ஆகும். இது தான் , தான் என்ற அகந்தை. அது சட்டங்களினால் , தான் மேன்மை பெற்றவன் என்ற நினைப்பாகும். இந்த மாதிரியான விசயங்களை நாம் இப்போது கூட பார்க்கிறோம். திருப்பலியில் பாதிரியார்கள், திருப்பலியை இப்படி தான் செய்ய வேண்டும் என்று நடைமுறைகள் உள்ளன ஆனால் பாதிரியார்கள் சில மாற்றங்கள் செய்தால், நம்மில் சிலர் அதனை குறை கூறுகிறோம்.

இப்படி நடக்கும் போது, "வீணான தற்பெருமைக்காக என்னிடம் ஜெபம் செய்கிறார்கள்" என்று யேசு கூறுகிறார். இதனால், திருப்பலியின் உண்மையான அர்த்தம் போய்விடுகிறது.

நடைமுறைகளுக்கும் , சட்டங்களுக்கும், எது முதல், எது அடுத்தது என்று ஓர் வரைமுறை உள்ளது. இதில் சில நடைமுறைகள் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைவது உண்டு. அதில் மிக முக்கியமானது, பத்து கட்டளைகள் ஆகும், இது எப்போதுமே மாறுவதில்லை. இந்த நடைமுறைகள் எல்லாம், நமக்கு மோட்சத்திற்கு செல்ல உதவியாக இருக்கிறது.

தவறான நடவடிக்கைகளை நாம் பார்க்கும்போது, அதனை நாம் எதிர்த்து பேசியே ஆகவேண்டும். ஏன் நாம் அதனை செய்ய வேண்டும் எனில், அந்த தவறுகளை செய்பவர்களின் பாவங்களை போக்கவும், அவர்களின் தூய வாழ்வின் வளர்ச்சிக்கும் நாம் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அவர்களின் தவறுகளுக்கு உண்டான மூல காரணத்தை அறிந்து, அந்த தவற்றை களைய பரிந்துரைத்தோமானால், உண்மையான அன்பும், அவர்களிடத்தில் தோன்றி, அந்த தவறுகளும், அதற்கு மேல் நடைபெறாது. அப்போது தான், நமது முயற்சி வெற்றியடையும்
இப்படி நடந்து கொண்டால் தான், இரண்டாவது வாசகத்தில் உள்ளது போல, "செயல்களினாலும் கடவுளிடம் நாம் செல்லலாம்" என்பதை நாம் ஏற்றுகொண்டு நடந்து வருகிறோம். யாக்கோபு சொல்வது போல, "உண்மையான மதம்" என்பது மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும். ஆனால் பரிசேயர்களோ, சீடர்களின் பசியை பொருட்படுத்தவில்லை, மாறாக சட்டதிட்டங்க்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.



(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 22, 2009

ஆகஸ்டு 23, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 23, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை ' என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65 மேலும் அவர், ' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் ' என்றார்.66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67 இயேசு பன்னிரு சீடரிடம், ' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? ' என்று கேட்டார்.68 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் உண்மையான இறை சேவையை அதனுடைய நோக்கத்தை அறிந்த பின் பல சீடர்கள் யேசுவை விட்டு பிரிந்து சென்றதை பார்க்கிரறோம், அவர்கள் அனைவரும், அவரோடு பின் சென்று, அவர் சொல்லியதை கேட்டு, வந்தவர்கள், எப்படி யேசு சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்று கூறினார். அந்த சீடர்கள் அவர் கூறியதை மேலோட்டமாகவே பார்த்தனர். உடலுக்கு எது தேவை என்று ஆராய்ந்தனர். யேசு கூறிய நித்திய வாழ்வை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அந்த வாழ்வு தான் சந்தோசமான வாழ்வு, வெற்றியின் வாழ்வு,மேலும் நித்திய வாழ்வும் ஆகும்.

யேசுவை அவர்கள் புனிதமாக அல்லது தெய்வீகமாக பார்க்கவில்லை. அவரை மனிதனாகவே பார்த்தனர், மெசியாவாக பார்க்க வில்லை. மனிதர்களின் தலைவராகவே பார்த்தனர். ஆன்மாக்களின் தலைமையாக பார்க்கவில்லை. ரோமானியர்களிடமிருந்து அவர்களுக்கு விடுதலையளிப்பவராகவே பார்த்தனர், பாவங்க்களுக்கு விடுதலை அளிப்பவராக பார்க்கவில்லை.

யேசுவின் உடலையும், இரத்தத்தையும், உண்ணவேண்டும் என்று கூறிய அவரது யோசனை, யாராலும் நினைத்து பார்க்க முடியாதது. ஆனால், அதில் உள்ள பரிசுத்த எண்ணத்தை, அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நித்திய வாழ்வை அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. யேசு இயற்கைக்கு மாறாக உள்ள சிந்தனையுடன் உள்ளார், அதனால், அவரை பின் செல்வது கற்பனையான ஒன்றாகும். என்று நினைத்தனர்.

உண்மையான சீடர்கள் - அவரோடவே இருந்து இன்னும் அதிகம் அவரிடம் கற்றரிய வேண்டும் என்று இருந்தவர்கள்- அவர்களுக்கும் யேசு சொன்னதை புரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவர்கள், யேசுவின் வார்த்தையில் பரிசுத்த ஆவியின் சக்தியை அறிந்து கொண்டனர்.
மற்றவர்கள் மூலமாக யேசு உங்களிடம் வந்துள்ளார், ஆனால், நீங்கள் அவரை அறிந்து கொள்ளாமல் இருந்தீர்கள்? ஏனெனில், அந்த மனிதரை மனிதராகவே பார்த்தீர்கள், மேலும், அவரிடம் கிறிஸ்துவிடம் இல்லாத பழக்க வழக்கங்களை கவனத்தில் எடுத்து கொண்டீர்கள்.

ஒவ்வொரு மனிதரும், கடவுளை போலவே படைக்கபட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும், பரிசுத்த ஆவியின் கொடையால், உயிரோடு இருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடம் கூட கிறிஸ்து இருக்கின்றார். நல்ல வெற்றியுள்ள , கிறிஸ்துவின் அன்பில் வாழ, ஒவ்வொரு மனிதரிடமும், மேலோட்டமாக பார்க்காமல், உள்ளே கிறிஸ்துவை கண்டு, அவர்கள் அனைவரையும், கிறிஸ்துவின் ப்ரசன்னமாகவே பார்க்க வேண்டும்.
திவ்ய நற்கருணையில், யேசுவின் உண்மையான ப்ரசன்னத்தை, உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா? மற்றவர்களிடம் இருக்கும் யேசுவை உங்களிடம் வருபவரை அறிந்து ஏற்றுகொள்ளுங்கள். அதன் மூலம், திவ்ய நற்கருனையை இன்னும் நன்றாக புதிய வழிகளில் பார்ப்பீர்கள்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
(thanks to www.azhagi.com)

Friday, August 14, 2009

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு

Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '

(thanks to www.arulvakku.com)

"வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று இன்றைய நற்செய்தியில், திவ்ய நற்கருணையின் கட்டளையை , யேசு நமக்கு சொல்வதை நாம் காண்கிறோம். இது எந்த மாதிரியான வாழ்வு? யேசு கொடுக்கும் வாழ்விற்கும், நீங்கள் பிறந்த வளரும் இந்த வாழ்விற்கும் என்ன வேறுபாடு?

யேசு அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கு கொடுக்கிறார், அதனை முழுதும், நாம் வாங்கிகொள்ளலாம், தெய்வீகமாகவும், மனிதனாகவும் நாம் பெறலாம். அவரது அன்பினால், நாம் முழு ஊட்டமுடன் நனைய விரும்புகிறார். அவருடைய ஆற்றலை பெற்று , நமது சோதனையில் தாண்டி வர அந்த ஆற்றல் உதவும். நம் காயங்களை குணப்படுத்த அந்த ஆற்றல் உதவும். மேலும் அவரது வாழ்வு, மோட்சத்திலும் மட்டுமல்ல , இந்த பூமி வாழ்விலும், நமக்கு கிடைக்கின்றது.

யேசுவை நாம் வாங்குவது, அவரை போல நாம் மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், உண்மையாக யேசுவின் உடலும், இரத்தமும் தான் என்று நாம் நம்பினால், திருப்பலிக்கு பிறகு ஏன் நாம் மாறி வருவதில்லை?

திருப்பலியின் முதலில் நடைபெறும் பாவமன்னிப்பில் முழுமையாக, ஆர்வத்தோடு பங்கேற்று, கவனமாக எல்லா நற்செய்தி வாசகங்களையும் கேட்டு, குருவோடு எல்லா ஜெபங்களையும் சொல்லி, கடவுளின் ஆற்றல் மேல் நம்பிக்கை கொண்டு, "ஆண்டவரே நான் உன்னை பெற தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்லி, அவரது உடலை வாங்கினால், அவரது உடலோடும், இரத்ததோடும் ஒன்றாவோம்.

இப்போது, நாமும் அவரின் உடலாகவும், இரத்தமாகவும், இந்த பூமியில் உள்ளோம், அதன் அர்த்தம் என்னவெனில், யேசுவின் பிரசன்னமாக இந்த உலகத்தில் இருக்கிறோம். மற்றவர்கள் நம்மை பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும், அல்லது வேறு விதமாக சொல்வதனால், யேசுவின் ஆற்றல், மற்றவர்களுக்கும் கிடைக்க நாம் உதவியாக இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கும் போது, கடவுளின் அன்பை அவர்கள் பெறுகிறார்கள் , அவர்கள் அந்த அன்பை திரும்பி கொடுக்காவிடில், நமது அன்பை, நம்மை முழுதுமாக அவர்கள் பெற்றுகொள்கிறார்கள். நாம் பெறுவதை விட அதிகமாக கொடுக்கிறோம்.அதே போல, கடவுளரசிற்காக, நமது நேரத்தையும், திறமையையும் கொடுத்தோமானால், நாம் திவ்ய நன்மையாகிறோம். யேசுவின் உடலோடும், இரத்தத்தோடும், ஒன்றாகிறோம்.
மற்றவர்கள், நமக்கு கொடுக்க வேண்டியதை, கொடுக்காத போது, நாம் அழியாமல், முழுமையாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டுமானால், நாம் யேசுவிடமிருந்து அவர் ஆற்றலையும் , அனைத்தையும் வாங்கியிருக்க வேண்டும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், திவ்ய நற்கருணை வழிபாட்டில் ஈடுபட்டு, அவரின் ஊட்டசத்துகளை நாம் பெற வேண்டும். அது தான், நமது வாழ்விற்கு தேவையான சக்தியாக இருக்கிறது.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

(thanks to www.azhagi.com)

Friday, August 7, 2009

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை
ஆண்டின் 19வது ஞாயிறு

1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30--5:2
John 6:41-51


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். '


(thanks to www.arulvakku.com)


"என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" நித்திய வாழ்வை நம்புவோர் அனைவருக்கும் நானே உயிர் தரும் உணவு " என்று இன்றைய நற்செய்தியில் யேசு கூறுகிறார்.
திவ்ய நற்கருணையை ஏன் "வாழ்வு தரும் உணவு" என்று கூறினார். ?
இதற்கு பதிலாக அவரே "' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' " என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதானால், அவரது வாழ்வை நமக்காக கொடுத்தார் - சிலுவையில் - . நமது பாவங்கள் நம்மை இறப்பின் பாதைக்கு நம்மை அழைத்து சென்றது, ஆனால், யேசு எந்த பாவமும் இல்லாதவர், முழு இறைவன் , நமக்காக அவர் இறந்த்தார். அதனால், நாம் நித்திய வாழ்வை அடைய முடியும்.

உயிர்த்தெழுந்த அவரின் உடல், மரணத்தை வென்றது. அதனால், அவரது உடல், சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த்தது, நமது வாழ்விற்கு உணவாக கிடைக்கிறது. இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம். அவரது மரணத்தை நாம் திருப்பலியில் மீண்டும் காட்சியாக கொண்டு வருவதில்லை, மாறாக, அவரது வாழ்வோடு நம்மை இணைத்து கொள்கிறோம்.

"திருப்பலி பீடத்தில் நடக்கும் தியாக" செயல்கள், நாம் கிறிஸ்துவின் முழுமையோடு , அவரின் வாழ்வோடு, அவரது நற்செயல்களோடு, அவரது சிலுவை துன்பங்களுடன், உயிர்த்தெழுதலிலும், மேலும், மோட்சத்திற்கு எழுந்தருளியதோடும், நாம் பங்கு கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணித்து, அவரோடு நாம் இணைகிறோம், அதன் மூலம், நாம் இந்த உலகிற்கு அவரின் இறைசேவையை தொடர முடியும். நமது விருப்பங்களை தியாகம் செய்து , அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். இது நம்மை கிறிஸ்துவின் பின் சென்று, மோட்சத்திற்கு அழைத்து செல்லும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் யேசுவின் உடலையும் அவரது இரத்தத்தையும் நமக்கு அருளப்பட்டு, நமது வாழ்விற்கு தேவையான உணவு வழங்க்கப்படுகிறது. எப்பொழுதுமே சாப்பிடத்தகுந்த உணவை பெறுகிறூம். போப் ஜான் பால் குறிப்பிட்டுள்ளதை நாம் நினைவு கூறலாம், இரண்டாம் வாத்திகான் சங்கம் திவிய நற்கருணை தான், கிறிஸ்துவ வாழ்விற்கு ஊற்றாகவும் , ஆதாரமாகவும் உள்ளது என்று கூறுகிறது.


கிறிஸ்துவின் கடைசி இரா உணவிலிருந்து , நமக்கு திவ்ய நற்கருணை தொடர்ந்த்து கிடைத்து வருகிறது. முதல் அப்போஸ்தலர்களிலிருந்து தொடங்கிய திருப்பனி , இன்றும் குருவானவர்கள் மூலம் தொடர்ந்த்து நடைபெற்று வருகிறது. நாம் அனைவரும், இந்த திருப்பலியில் பங்கு கொள்ளும்பொழுது, கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை நாம் கொண்டாட வேண்டும். அந்த திவ்ய நன்மையை பெற உள்ள தடைகளை தூர எறிந்து அவரை பெற வேண்டும்.

அப்போஸ்தலர்களுடன் எப்படி யேசு இரா உணவின் போது இருந்தாரோ, அப்படியே உண்மையாக ஒவ்வொரு திருப்பலியிலும் இருக்கிறார், அங்கே கூறியது போல, "இது என் உடல், என் இரத்தம்" என்று கூறுகிறார். பக்தியுடன், மரியாதையுடனும், அன்புடனும் திவ்ய நற்கருனையில் யேசுவை வழிபட்டால், அவர் தான் நம் மீட்பர் என்று நம்பி அவரை பெற்றால், அது தான், நமது நித்திய வாழ்வின் ஊற்றாகவும், தொடக்கமாகவும் இருக்கும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm


special thanks to WWW.azhagi.com (tamil editor)

Friday, July 31, 2009

ஆகஸ்டு 2, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 2, 2009, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18வது ஞாயிறு


Ex 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Eph 4:17, 20-24
John 6:24-35


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ' ரபி, எப்போது இங்கு வந்தீர்? ' என்ற கேட்டார்கள்.26 இயேசு மறுமொழியாக, ' நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் ' என்றார்.28 அவர்கள் அவரை நோக்கி, ' எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார்கள்.29 இயேசு அவர்களைப் பார்த்து, ' கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் ' என்றார்.30 அவர்கள், ' நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்" என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதாக இருந்தால்: உங்களுடைய ஒவ்வொரு தினத்திலும், உங்கள் ஆன்மாவை நல்ல விதமாக பாதுகாத்து, உங்கள் மரண முடிந்து நித்திய வாழ்வை அடையும் வரை அதை பாதுகாத்து செல்ல கடுமையாக உழையுங்கள்.
யேசு "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல் " என்று கூறுகிறார். ஏன் யேசு அதனை "செயல்" என கூறுகிறார்?
முழுமையாக அவரை நம்புவதற்கு, யேசுவின் மேல் உள்ள சந்தேகங்கள் மற்றும் அவநம்பிக்கைகள் நம்மிடம் அப்பப்பொழுது இடையே தோன்றி, நம்மை அவர் மேல் அவநம்பிக்கை உன்டாக்கும், அதனையெல்லாம், முழுவதுமாக துடைத்தெறிய வேண்டும். அவர் கூறிய வார்த்தை மேல் நம்பிக்கை கொன்டு (திருச்சபையின் போதனைகளைய்ம் சேர்த்து) , கிறிஸ்துவின் வழியில் நாம் செல்ல நமது முழு விருப்பத்தையும் உறுதி படுத்த வேண்டும்.

சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்த கூடிய தடைகளை நாம் கண்டறிய வேண்டும் , அதனால் ஏற்படும் பயத்தை போக்கி, உண்மையை இன்னும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பயமும், நமது பரிசுத்த வாழ்வில் இடையூறாக இருந்தால், அது பொய்யினால் பிறந்த பயமாகும்.
இயேசு அவர்களிடம், ' வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார். கிறிஸ்து, ஒவ்வொரு திருப்பலியிலும் அவரே உணவாக நமக்கு கொடுப்பதை இங்கே நமக்கு தெரியப்படுத்துகிறார். திவ்ய நற்கருணையால் உங்களை எப்படி இன்னும் நன்றாக வளர்க்க இன்னும் என்ன என்ன செயல்கள் நீங்கள் செய்ய வேண்டும்.? யேசு தான் திவ்ய நற்கருணையில் இருக்கிறார், உங்களுக்காக காத்திருக்கிறார் என்பதை நம்ப வேறு எதுவும் தடையாக உள்ளதா ?

திவ்ய நற்கருணையை பெறுவதற்கு எதுவும் உங்களை தடுத்து நிறுத்துகிறதா? அந்த தடுப்பிற்கு உடனே பரிகாரம் செய்யுங்கள். உங்கள் நித்திய ஆன்மாவிற்கு நிச்சயம் ஒரு வேறுபாட்டை உணர்வீர்கள். யேசுவோடு இனைவதற்கு உண்மையாக நீங்கள் ஆக்கபூர்வமாக உங்கள் செயல்களை காட்டினால், யேசூ உங்களுக்குள்ள வழியை சீராக்குவார்.



© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 24, 2009

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17வது ஞாயிறு

2 Kings 4:42-44
Ps 145:10-11, 15-18
Eph 4:1-6
John 6:1-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார்.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார்.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார்.10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார்.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள்.15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

(thanks www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நடந்தது எவையும், தெய்வீகமானது இல்லை என்று பலர் கூற நானே கேள்விபட்டிருக்கிறேன், அது என்னவெனில், "உண்மையான அற்புதம் என்னவென்றால், யேசு, எல்லாரும் கொண்டு வந்த உணவை, ஒன்றாக உட்காரவைத்து, அவர்களை பகிர்ந்து உண்ண வைத்தார் " என்று கூறுவது உண்டு. அதோடு,"அவர்கள் கொண்டு வந்த உணவு எல்லோருக்கும் பத்தவில்லை என்றும், எல்லோரு அதனை பகிர்ந்து கொள்ளவும், மக்கள் அவரவர்கள் தியாகம் செய்து தங்கள் உணவை மற்றவர்களுக்கு கொடுத்தனர். அதனால் தான், நிறைய உணவு மிஞ்சியது" என்று கூறுபவர்களும் உண்டு.

இது மிக சரியாகத்தான் இருக்குமோ?! கடவுளால் உணவை பல மடங்காக பெருக்க முடியாதது போல.

ரொட்டி துண்டுகளையும், மீன்களையும் பல மடங்காக ஆக்கியதற்காக எல்லோரும் திருப்தி அடைந்துவிடவில்லை, அவர்களுக்கு என்ன தேவையாக இருந்தது என்றால், திவ்ய நற்கருணை விருந்தை முன் கூட்டியே ஒத்திகை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். திருப்பலியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நன்றாக கவனித்து, அதனை நம் இதயத்தில் ஏற்றுகொண்டால், யேசு நமது பசியை போக்குவார், மேலும், நமக்கு தேவையானதைவிட அதிகமாகவே கொடுப்பார். கோவிலுக்கு செல்வதற்கு முன்பே, உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது? அதனை அதிகமாகவே கொடுக்க முயற்சி செய்கிறார்.


யேசு அற்புதமாக , பல மடங்காக கொடுக்கும் அனைத்தையும் நாம் பெற, நாம் அவரை விசுவசிக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கும் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக, நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே அவர் கொடுக்க விரும்புகிறார் என்பது நிச்சயம்.

அந்த மலையில் இருந்த சிலருக்கு, மீனை விட ஸிடீக்கை விரும்பியிருக்கலாம், ஆனால், அவர்கள் பெற்றது என்ன என்றால் அவர்களுடைய இதயத்தை, முழு விசுவாசத்தாலும், பரிசுத்த ஆவியில் அவர்கள் வளர தேவையானவற்றை கொடுக்கும் மெசியாவை பெற்றார்கள். அவர்களுடைய சோதனையில் இன்னும் சக்தியுடன் அதனை ஏற்று கொள்ள ஆற்றல் பெற்றார்கள். மேலும், கிறிஸ்துவை இன்னும் பலருக்கு வெளிப்படுத்த செல்லும்போது, அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் அன்பை பெற்றார்கள்.

நமது திவ்ய நற்கருணை சடங்குகளில், சின்ன நன்மையும், திராட்சை இரசத்தையும் விட, நாம் பெறுவதற்கு அதிகமான் பொருட்கள், விசயங்கள், அன்பளிப்புகள் உள்ளது. , யேசுவிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை? அதிக விசுவாசம்? அதிக நம்பிக்கை? அதிக அன்பு? நீங்கள் திருப்பலிக்கு செல்லும்போது உங்களுக்கு என்ன தேவை என்று யோசித்து செல்லுங்கள், அப்போது, திருப்பலியில் அதனை எதிர்பார்த்து முழுவதுமாக நாம் பங்கு கொள்ளலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 17, 2009

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 16வது ஞாயிறு

Jer 23:1-6
Ps 23:1-6
Eph 2:13-18
Mark 6:30-34

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.31 அவர் அவர்களிடம், ' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

(thanks to www.arulvakku.com)

இறைசேவையில் உள்ள ஒவ்வொருவரும், அவர்கள் அழைப்பினால், பல நேரங்களில், களைப்படைந்து விடுகின்றனர். எல்லா நேரங்களும், அவர்களின் சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அது குழந்தைகளின் பராமரிப்பாக இருக்கட்டும், வயதானவர்களை பராமரிப்பதாக இருக்கட்டும், நோயுற்ற கணவனோ அல்லது மனைவியை பார்த்து கொள்வதாகட்டும், அல்லது, கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும் இறைசேவையாக இருக்கட்டும், அல்லது கோவிலில் ஒரு பொருப்பாளராக இருப்பது, அல்லது குருவாக இருப்பது, இப்படி எந்த சேவையில் இருந்தாலும், ஒவ்வொருவரும், அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கொள்வது , ஓய்வெடுப்பது முக்கியம். விடுமுறை, அல்லது வெளியிடங்களுக்கு செல்வது என்று இருக்க வேன்டும். அது தான் நீங்கள் இழந்த ஆற்றலை, சக்தியை மீன்டும் பெற்று கொடுக்கும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
இந்த கட்டளையை நாம் ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், நாம் ஒரு தனி மனிதனாக, எல்லோரையும் போல் இல்லாமல் ஆகிவிடுவோம். நமது சுய ஆசைகளுக்காகவும், சரியானபடியும் இல்லாமல் முடிவெடுப்பவர் ஆகிவிடுவோம். முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல தவறான செயல்களை செய்யும், ஆயனாக இருப்போம். இறைசேவைக்கு அழைக்கப்பட்டவர்களை, தவறான வழியில் வழி நடத்தி சென்று பல பிரிவாக அவர்கள் ப்ரிய காரணமாயிருப்போம்.
தொடர்ந்து சேவை செய்யும்போது, நாம் கிறிஸ்துவை போல இல்லாமால், இருப்பதற்கு காரணம், நாம் நம்மிடம் இல்லாததை கொடுக்க முடிவதில்லை.கடவுளின் அன்பை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த, நிறைய சகதி தேவைபடுகிறது. இறையரசிற்கு உற்சாகமாக சேவை செய்வதற்கு நமக்கு நிறைய ஆற்றல் தேவைபடுகிறது. ஆனால், மீன்டும் , நாம் இழந்த ஆற்றலை திரும்ப பெற, ஓய்வெடுத்து, யேசுவிடம் வேண்டி ஜெபம் செய்தால் தான், மீண்டும் நாம் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும், இறையரசை வெளிப்படுத்த முடியும்.
நாம் நம் மேல் அக்கறை கொள்ளாமல், நம்மை ஒழுங்காக வைத்து கொள்ளாமல், மற்றவர்கள் மேல் எப்படி அக்கறை கொள்ள முடியும்? யேசு நம்மில் வாழ்கிறார். ஆனால், அவர் நம்மை மாற்ற நாம் அனுமதித்தால் தான், அவரை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும், நாம் ஆயனில்லா ஆடுகள் போல் உள்ள மனிதர்களை சந்திக்கிறோம்.அவர்கள் யேசுவை தேடுகின்றனார்,அவர்கள் அதனை புரிந்து கொள்ளாமலேயே. அவர்களுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவைபடுகிறது. யேசுவிடமிருந்து, குணப்படுத்தலையும், அமைதியும் வரவேன்டும் என ஆசைபடுகின்றனர். யேசு அவர்கள் மேல் இரக்கப்படுகிறார் மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கின்றார். ஆனால், நாம் யேசுவின் கைகளாகவும், கால்களாகவும் , அவரின் குரலாகவும் இருக்க வேண்டிய நாம், கடினமான வேலைகளால், சோர்வுற்று இருந்தால், பிறகு எப்படி சேவை செய்ய போகிறோம்.?

நமது காயங்கள் கொஞ்சமாக குணப்படுத்தப்பட்டால், மேலும், கிறிஸ்துவின் அமைதியை நாம் பெறாமலும், மற்றவர்களை குனப்படுத்தும், ஆயனாக, அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் கிறிஸ்துவின் கருவியாக இருக்க முடியும்?

நாம், தனியான இடத்திற்கு சென்று யேசுவின் ப்ரசன்னத்துடன், நாம் ஓய்வெடுத்தால் , அவரின் சக்தியூட்டும் அன்போடு திளைத்திருந்து ஓய்வெடுக்க வேன்டும். நாம் தியானத்திற்கோ, அல்லது விடுமுறைக்கோ சென்று விட்டு வந்து, நமது சேவையை தொடரும்போது, மக்கள் நம்மை இன்னும் சாதாரனமாக பார்க்க வில்லை என்றால், நாம் இன்னும் அதிகம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம். நம்மை மீன்டும் புதுப்பிக்கிம், ஆற்றல் பெறும் நேரத்தை குறைத்து விட்டொம். அதிக வேலை சுமையை பற்றி கவலை படாதீர்கள். யேசு நம்மை அழைக்கிறார், "நீங்கள் கொஞசம் என்னோடு ஓய்வெடுங்கள், என்னை போல மாறுவது வரை என்னோடு இருங்கள்" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 10, 2009

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15வது ஞாயிறு

Amos 7:12-15
Ps 85:9-14
Eph 1:3-14
Mark 6:7-13

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர், ' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு விசுவாசத்தை பற்றி நமக்கு போதிக்கிறார். கடவுளின் அன்பின் கருவியாக இவ்வுலகில் நாம் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த அழைப்பிற்கு நாம் முழு முயற்சி எடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டுமானால், கடவுளின் நற்செய்தியை அறிவிப்பவராக நாம் இருக்க வேண்டுமானால், நாம் கடவுளை நம்ப வேண்டும், மேலும் அவர் நமக்கு கொடுத்த ஞானத்தையும்,பல ஆற்றல்களையும் நாம் நம்ப வேண்டும்.


மேலும், நமக்கு என்ன தேவையோ அதனை எல்லாம், கடவுள் எப்பொழுதுமே கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். அவர் கொடுப்பதெல்லாம் நமக்கு போதுமானதாக இல்லாதது போலவே நமக்கு தோன்றுகிறது. ஆனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவர் கொடுப்பதெல்லாம், நம்முடைய சுய ஆசைகளுக்காக அதிகம் அவரிடம் எதிர்பார்க்க கூடாது.

இந்த அழைப்பு ஒவ்வொரு திருப்பலியின் முடிவில் மீன்டும் மீன்டும் புதுப்பிக்கபடுகிறது. யேசுவுடன் நமக்கு உள்ள தொடர்பானது, கடவுளின் வார்த்தையாலும், திவ்ய நற்கருணையிலும், கோவில் குழுக்களோடும் சேர்ந்து , மீன்டும் புதுப்பிக்கப்படுகிறோம். அவர் நம்மோடு இருப்பது, நமக்கு அதிக ஆற்றல் தந்து, வெளியே சென்று நம்ம என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய முடியும். குருக்களின் மூலம், யேசு, நம்மை இந்த உலகிற்கு அனுப்புவது, யேசு நம்முடனே இருக்கிறார், நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு கானத்தகுந்த சாட்சியாகும். திவிய நற்கருணையின் மூலமும், திருப்பலியில் கடைசியில் கொடுக்கப்படும் ஆசிர்வாதத்தின் மூலம், யேசு நமக்கு அதிகாரம் கொடுத்து, கடவுளின் நற்செய்தியை நாம் சந்திக்கும் அனைவரிடமும் அறிவிக்க ஆனையிடுகிறார். அதனால், நாமெல்லாம், மனமாற்றம் செய்பவர்களாக , இந்த உலகத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவருபவர்களாக இருக்க வேண்டும்.

ஆம் , நாம் எல்லாருமே - திவ்ய நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு, முழுமையாக ஒவ்வொரு செபத்தையும், புரிந்து விழிப்புணர்வுடன், அந்த இறையேசுவை வாங்கும் அனைவரும், ஆண்டவரின் அழைப்பிற்கு உள்ளாகிறோம். அதனால், நம்பிக்கையுடன் செல்லுங்கள், யேசு உங்களை கோவிலிலுருந்து வெளியே சென்று பரிசுத்த ஆவியுடன் துனையுடன் அவரது இறையரசை பரப்ப செய்கிறார்.


எனினும், நாம் நமது பைகளை கட்டும்பொழுது, நமது இறைசேவக்காக என்ன எடுத்து செல்ல வேண்டுமோ , அதனை விட அதிகமாக எடுக்கிறோம். இதன் மூலம் கடவுள் நம்பிக்கையை நாம் வெளியே சொல்ல முடிவதில்லை. அதில் தோற்றுவிடுகிறோம்.

ஆக்கப்பூர்வமான மணமாற்றம் செய்ய கூடிய மத போதகராக இருக்க வேண்டுமானால், நாம் கடவுளிடம் நம் சுய ஆசைகளை துறந்கு அதனை ஆண்டவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சமர்ப்பிப்பு, இனிமேலும், நமது சேவையில் இடர் கொடுக்காமல் இருக்க வேண்டுவோம். அப்போதுதான், அது உண்மையான அர்ப்பணிப்பாகும். இனிமேலும், அதனை நாடாமல் இருக்க வேண்டும். அதுவே உண்மையான சரனடைதல் ஆகும். இன்னும், நாம் அவைகள் மேல் சின்ன ஆசையுடன் இருந்தால், ஒரு கயிறால் கட்டப்பட்டு, நாம் இன்னும் அதன் மேல் இழுக்கப்படுவதற்கு ஒப்பாகும். நம் வாழ்வின் உண்மையான நோக்கத்திலிருந்து வெளியே இருக்கிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, July 3, 2009

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14வது ஞாயிறு
Ezek 2:2-5
Ps 123:1-4
2 Cor 12:7-10
Mark 6:1-6


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.2 ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ' இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ' என்றார்.5 அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.6 அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் சொல்வது போல, நமக்கு முன்பே தெரிந்தவர்களிடம், நமது விசுவாசத்தை பகிர்ந்து கொண்டால், நாம் இன்னும் அதிக விசுவாசம் கொள்வோம் , ஆனால் , அவர்களிடம் நாம் பகிர்ந்து கொண்ட பிறகு, நமக்கு அது ஒரு திருப்தியற்ற அனுபவம் ஆகவே இருக்கும்.
யேசுவை போல, நாம் நிராகரிக்கபடுகிறோம், தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம், நம்பிக்கையின்மையுடன், நாம் ஏன் மாறினோம் என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நம்மை முன்மாதிரியாக எடுத்து கொள்ள அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக அவர்கள் மாற வேண்டும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. நாம் அளவு கடந்த சமய வெறி பற்றோடு இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். இதனையே அவர்கள் சாக்காக எடுத்து கொண்டு, நமது சாட்சியை ஒதுக்கி வாழ முற்படுகிறார்கள்.


யேசு கிறிஸ்து, சாதாரன வாழ்வை விட்டு, சாதாரன நகரிலிருந்து மாறி, அவர் மக்கள் சேவையை ஆரம்பித்த பொழுது, அவருக்கு கொடுமை செய்ய பலர் தூன்டுவர் என தெரிந்திருந்தும், அனைவரும், அவரை போல வாழ வேண்டும், அவர் பின் செல்ல வேன்டும் என விரும்பினார். இது எப்படி பைத்திய தனமாக இருக்கிறது?

இன்னும் நிலைமையை மோசமாக்க, யேசுவுடைய எல்லா நேரங்களையும் செலவிட்டு, ஒவ்வொருத்தரின் சாதாரண வாழ்வையு, மற்றவர்களோடு சாதாரனமாக மற்றவர்களோடு தொடர்பில் இருப்பதையும் , அவர்களின் சாதாரன குணத்தையும், மாற்ற வேண்டும் என உழைக்கிறார், மேலும் அவர் பின செல்லாதவர்களும், அவரை போல மாறவேன்டாம் என விரும்புகிறவர்கள், அவரவரின் சாதாரன வாழ்வை விட்டு மாற வேண்டும் என விரும்புகிறார்.

மனிதர்கள் சவால்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதில்லை. மேலும், தற்போது எப்படி இருக்கிறார்களோ, அப்படியே இருக்க விரும்புகிறார்கள், அவர்களுக்கு தெரிந்த இடம், பழகிய முகங்கள், தெரிந்த வாழ்வு, அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எனினும், இந்த காரனங்களுக்காக் நாம் அமைதியாக இருந்து விட கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிறிகு அறிவிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மணமாற்றம், மிக முக்கியமானது என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேன்டும். அப்படிய் செய்ய வில்லை என்றால், நாம் கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்கிறோம். மேலும், யேசுவை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.
இந்த இறைசேவையை நாம், நம்முடைய சொந்த மாற்றத்தையும், நம் ஆன்ம வழிகாட்டுதலையும் கொண்டு அவர்களுக்கு சொல்லி நாம் தொடரவேண்டும். இந்த சேவை அவர்கள் விரும்பி கேட்டு, நாம் செய்வது உகந்தது. அவர்களை கட்டாயப்படுத்தி மாற்ற கூடாது.

நீங்கள் நிராகரிக்கபட்டால், , யேசு உங்களை புரிந்து கொள்வார், உங்கள் துயர எண்ணங்கள் அவருக்கு புரியும். இந்த நிராகரிப்பு எல்லாம், கடவுள் உங்களால் சந்தோசமடைந்துள்ளார் என்று நினைத்தாலே நம் துயரமெல்லாம் பரந்து போகும்.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, June 26, 2009

ஜூன் 28, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 28, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13 வது ஞாயிறு
Wisdom 1:13-15; 2:23-24
Ps 30:2, 4-6, 11-13
2 Cor 8:7, 9, 13-15
Mark 5:21-43

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 5
21 இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23 ' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24 இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28 ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ' என் மேலுடையைத் தொட்டவர் யார்? ' என்று கேட்டார்.31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34 இயேசு அவரிடம், ' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ' என்றார்.35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ' என்று கூறினார்.37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39 அவர் உள்ளே சென்று, ' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ' என்றார்.40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ' தலித்தா கூம் ' என்றார். அதற்கு, ' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ' என்பது பொருள்.42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43 ' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.



(thanks to www.arulvakku.com)

நாமும் யேசுவின் ஆடையை தொட்டு அதை உணர்ந்தால், நமக்கு எப்படியிருக்கும். மிகவும் பெரிதான விசயமாகும். யேசுவின் அருகில் இருந்தாலே, நாம் உடலாலும், உள்ளத்திலும், மனதளவிலும் நாம் குணமடைவோம். நாம் எப்படி அவரின் ஆடையை தொடமுடியும்? அதுவும் 2000 வருடங்களுக்கு பிறகு?

அவரை தொட நம்மால் முடியும். அதனை தான் யேசுவும் விரும்புகிறார். யார் யேசு, அவர் எந்தளவிற்கு நம்மை அன்பு செய்கிறார் என்பது நமக்கு புரிந்தால், நாம் அவரை நெருங்க முடியும். தொழுகை கூட தலைவருக்கு அது தெரிந்ததினால் தான், அவர் விசுவாசத்தோடு, யேசுவிடம், ". நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் " என்று கூறினார். அவர் கண் முன் தெரிந்த விசயங்களை தான்டி அவர் யேசுவை அறிந்து கொண்டதாலேயே அப்படி கூறினார்.

யேசுவை தெரிந்து கொள்வதற்கு, நாம் தெய்வீக வாழ்வை தெரிந்திருக்க வேண்டும். அந்த தெய்வீக வாழ்வுதான், நம்மை இவ்வுலக வாழ்விலிருந்து மாற்றி யேசுவின் வாழ்க்கை போல மாற்றி, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும். இன்றைய முதல் வாசகம்: இறப்பு என்பது, கடவுளின் திட்டத்தில் கன்டிப்பாக இல்லை என்று கூறுகிறது. இதனையே தான், யேசு இன்றைய நற்செய்தியில் , அந்த பென்னை இறந்த பின் தான் அவள் வீட்டிற்கே செல்கிறார். கண்டிப்பாக, கடவுள் யேசு அவர் அந்த வீடு செல்லும் வரை உயிரோடயே வைத்திருக்கலாம், ஆனால், இறப்பிலிருந்து அவரால் உயிர்த்தெழ வைக்க முடியும் என்பதை இந்த உலகத்திற்கு காட்டவே யேசு இவ்வாறு செய்தார்.
நாம் மரணத்திற்கு பயந்தால், கிறிஸ்துவின் அருகாமையை ஏற்றுகொள்ளவில்லை என்று அர்த்தம். அவருடைய துனியை நம்மால் தொடமுடியும். ஆனால் நாம் அதனை பார்ப்பதில்லை, அதனால் அதன் மீது நாம் நம்பிக்கை கொள்ளவில்லை. இந்த மாதிரியான நிலைமையில், நாம் கூவி அழும் மக்களை போன்றவர்கள் . யேசு நம்மையெல்லாம் விரட்டி விட்டு, அவர் அற்புதத்தை தொடர்வார்.
நம்முடைய சோதனைகளினால், நம் வாழ்வு மிக மோசமான முடிவை நோக்கி செல்கிறது என்று நாம் பயப்பட்டால், கடவுள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர் என்பதை நாம் மறந்து விட்டோம். மேலும், நம்மை மீட்க நம் மீது அக்கறையுடன் உள்ளார் என்பதை மறந்துவிட்டொம். நாம் யேசுவின் அருகில் செல்ல வேண்டும். நம் கவனத்தை திசை திருப்பாமலும், எந்த ஒரு சந்தேகம் இல்லாமலும், எவ்வளவு தூரமிருந்தாலும், நாம் யேசுவை நோக்கி செல்ல வேன்டும். நமது கண்கள் யேசுவை மட்டுமே பார்த்து, நமது கைகள் அவரை தொட வேண்டும். இதனையெல்லாம், நமது ஜெபத்தில் செய்ய வேண்டும்.

கடவுள் நம் மேல் தேவையான அளவு அக்கறைபடவில்லை, நமக்கு தேவையான உதவியை செய்ய வில்லை என்று நாம் பயந்தால், யேசு எதற்காக அவரது வாழ்வை நமக்காக தந்தார், தந்தை அவரை அனுப்பினார் என்று இன்னும் நிறைய நேரம் செலவழித்து, நாம் கற்றுகொள்ள வேண்டும்.
(www.gnm.org)