Friday, May 30, 2008

ஜூன் 1, 2008 , நற்செய்தி , மறையுரை

ஜூன் 1, 2008 , நற்செய்தி , மறையுரை

ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 7

21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். 22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர். 23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன். 24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். 25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். 27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது. '

(www.arulvakku.com)



இன்றைய ஞாயிறு நற்செய்தியில், யேசு நாம் எப்படி அவருக்கு சீடராக இருக்க முடியும் என்று விளக்குகிறார். "என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." யேசுவிடமிருந்து என்ன கற்று கொண்டீர்களோ அதனை செயல்படுத்துங்கள். அவர் நம்மிடையே தொடர்ந்து நற்செய்தி மூலமும், திருச்சபையின் வாயிலாகவும் நம்மிடையே பேசிகொண்டிருக்கிறார். நாம் அப்படியே நற்செய்தி வார்த்தகளை கேட்டு கொண்டு இருப்பவராக இருக்க முடியாது. நமது மீட்பு, நற்செய்தியைன் படியும், கடவுளின் திருவுளப்படியும் வாழ்வதிலும் தான் அடங்கியிருக்கிறது. நாம் யேசுவின் மேல் விசுவாசம் கொண்டுள்ளவர்கள் என்று கூறிகொண்டு, அவர் சொன்னபடி வாழவில்லையெனில், நாம் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று கூவிகொண்டு தான் இருக்கிறோம், அவர் பின் சென்று கடவுளோடு மோட்சத்தில் சேரபோவதில்லை.

யேசு குறிப்பிடுவது போல, நாம் செயல்படுத்த ஆரம்பித்தால், இறையரசின் உண்மைகளை, நமது ஒவ்வொரு நாளிலிலும் ஒன்றினைத்து வாழ்ந்து , நாம் இந்த உலகில் ஒரு வித்தியாசத்தை நாம் காட்ட முடியும். எந்த ஒரு போராட்டத்தையும் நாம் தாங்கிகொள்ள முடியும். எவ்வித வழக்கையும், சோதனைகளையும் நாம் தாண்டி வர முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் இறப்பிலும், அவரது பாவத்தை வென்ற உயிர்ப்பின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரின் ஆற்றலில் வாழ்கிறோம். மேலும் நாம் அவரின் சக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சக்தி இந்த உலகை வென்ற சக்தி ஆகும்.

ஆனால், நாம் யேசுவின் படிப்பினைகள் நம்மை மாற்ற நாம் அனுமதிக்கவில்லயெனில், நமது வாழ்வு, பல் பிரச்னைகளாழ் சூழ்ந்துள்ள போது, அவைகள் நமது அமைதியை, சந்தோசத்தை அழித்து விடும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வையும் அழித்து விடும். நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள , இந்த உலக பாடங்கள் சொல்வது போல, நாம் இந்த சோதனைகளிலிருந்து மீள வேண்டும். மேலும், கிறுஸ்துவின் செல்வாக்கும் நம்மிடம் மெதுவாக வந்து அடையும்.

மேலும், யேசுவின் படிப்பினைகளை இந்த உலகிற்கு எடுத்து சொல்லவில்லையெனில், மற்றவர்கள் இந்த உலகின் அநீதிகள், நிந்தனைகளில் மாட்டி கொண்டு துன்புறும்போது, அதனால், அவர்கள் அழிவிறும்போது, நாமும் அந்த துன்பத்திற்கு ஒரு காரணமாகிவிடுவோம். எந்த ஒரு செயலும் , நற்செய்தி அறிவ்க்காமல் இருக்கும்போதும், யேசுவின் படிப்பினைகளை நாம் உலகிற்கு சொல்லாமல் இருக்கும்போதும், அவர்களின் துன்பத்திற்கு காரணமாகிவிடுவோம். இது மோட்சத்தின் வழி அல்ல. இந்த அக்கறையின்மை மிக பெரிய பாவமாகும். நாம் இறந்த பின்பு, மோட்சத்திற்கு செல்ல, முதலில், யேசுவோடு அவரது சிலுவைக்கு செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் நாம் அக்கறை கொண்டு, அவர்களோடு சேர்ந்து சாத்தானுக்கு எதிராக நின்று, நாம் யேசுவோடு மற்றவர்களை இணைக்க வேண்டும்.
நாம் யேசுவிற்காக, யேசுவோடு சேர்ந்து பல நல்ல செயல்கள் செய்யும்போது, பல சோதனைகள் நம்மை தாக்கும். ஆனால், நாம் வீழ்ந்து விட மாட்டோம். மேலும், இன்னும் அதிக ஆற்றலுடன் வளர்வோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 23, 2008

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா மே 25, 2008

ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா
மே 25, 2008


இணைச்சட்டம் (உபாகமம்)

அதிகாரம் 8
2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். 3 அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

14 நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். 15 அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். 16 உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்

அதிகாரம் 10
16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! 17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. 53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '


(thanks to www.arulvakku.com )



இன்றைய ஞாயிறு நாம் யேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டடுகிறோம். நாம் ஏன் நண்மையை கிறிஸ்துவின் உண்மையான உடலாக, அவரின் உண்மையின் ப்ரசன்னமாக நம்புகிறோம்.

முதல் வாசகம், கடவுள் மனிதர்களின் பசியை ஆற்றியைருக்கிறார், தாகத்தை தீர்த்திருக்கிறார், என்று கூறுகிறது. எப்பொழுதெல்லாம் நாம் கடினமான வாழ்க்கை பயணத்தில் தடைபெற்று, துன்பமடையும்போது, கடவுள் நமக்கு தேவையானதை கொடுக்கிறார். இஸ்ரேயலருக்கு என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம், இப்போதும் நமக்கு துன்ப நேரங்களில் செய்கிறார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னமாக, நமக்கு தேவையானவற்றை தூய நண்மையாகவும், பரிசுத்த ஆவி மூலமும் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நாம் ஞான்ஸ்நானம் பெற்ற போது நம் உடலில் வந்து நம்மில் வாழ்கிறார். பரிசுத்த ஆவியானவர், நல் வழி காட்டி, நமது பரிசுத்த வாழ்வை வளர செய்கிரார்.

இன்றைய நற்செய்தி நாம் திருப்பலியில் பெறும் கிறிஸ்து உண்மையான யேசுவின் ப்ரசன்னம் என்று கூறுகிறது. திரு உடல் ஒன்றும் அன்பின் குறியீடு கிடையாது. நமது பாலைவன வறண்ட வாழ்வில், நமக்கு இந்த திரு உடலும் திரு இரத்தமும் தேவையாய் இருக்கிறது. பாம்புகளும், தேளுகளும் உள்ள துன்ப வாழ்வில், யேசு உணமையான உடலுடனமும், திரு இரத்தத்துடனும், நமது பசியையும், தாகத்தையும் தீர்க்கிறார். நாம் அவரை விழுங்கும்போது, யேசுவும் நம்மை விழுங்குகிறார். அவரை நம்மில் இழுத்துகொள்ளும்போது, அவர் நம்மை அவரில் இழுத்துகொள்கிறார். இந்த ஒன்றினைப்பில், நாம் நமது சோதனையில் நடந்து , அவரின் ஆறுதலோடு , வெற்றி அடைகிறோம்.

இரண்டாவது வாசகம், "திருவிருந்து உண்ணும்போதும், பருகும்போதும், கிறிஸ்துவோடு ஒன்றினைகிறோம்" என்று கூறுகிறது. இந்த திருச்சபை ஒன்றினைப்பின் மூலம், அவர் எல்லாவித உதவிகளையும் நமக்கு செய்கிறார். இந்த ஒற்றுமையில், நமக்கு இல்லாத எந்த ஒரு விசயமும், உணவும், ஆற்றலும், எல்லாருக்கும் பகிரப்படுகிறது. இயேசு நற்செய்தியில் கூறுவது போல, "இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ' " மோட்சத்தின் வாழ்வு நமக்கு என்றும் நிறையுள்ளதாய் இருக்கிரது. அங்கே பசியில்லா குறையில்லா நிறைவாழ்வை குறிக்கிறது.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 16, 2008

மே 18 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 18 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

பரிசுத்த தமத்திருத்துவ பெருவிழா

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியின் பெருவிழாவின் அடுத்த ஞாயிறாகிய இன்று நாம் பரிசுத்த தமத்திருத்துவ விழாவை கொண்டாடுகிறோம்.

முதல் வாசகத்தில், தந்தையாகிய கடவுள் எப்படி அவரது குழந்தையாக இஸ்ரேயல் நாட்டினை பார்த்து கொண்டார் என்று பார்க்கிறோம். "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்: சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்: நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்: கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர். " இவ்வாறு நாமும் தந்தையை பார்க்கவேண்டும். நாம் இப்படி பார்க்கா முடியவில்லையெனில், நாம் பரிசுத்தமடையவேண்டும். நாம் இவ்வுலகின் தந்தையையும், பரிசுத்த தந்தையையும், வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும்.

இரண்டாவது வாசககம் முழு திரித்துவத்தையும் கான்பிக்கிறது: யேசுவின் கருணை, கடவுளின் அன்பு, மேலும், பரிசுத்த ஆவியோடு சேர்ந்து நாம் கொள்ளும் நட்பு. இதனால், இந்த காரணத்தினால், நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். நமது பாதையை திருத்தி, ஒருவர் மற்றவரோடு இணைந்து அன்புடனும் அமைதியுடனும் வாழவேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், இப்படி சொல்லலாம். யேசு நமது பாவங்களுக்காக சிலுவையில் மரணமடைந்து, நம்மையெல்லாம் பாவங்களிலிலுருந்து மீட்டார். அவருடைய அருட்கொடையால், நாம் பாவங்களிலிருந்து வெளியே வர முடியும். யேசு தந்தையின் அன்பையும் நமக்கு கொடுக்கிறார். அதன் மூலம், நாம் ஒருவருக்கொருவர் அன்பு செய்தல் வேண்டும். மேலும், யேசு பரிசுத்த ஆவியையும் கொடுத்து, அவரோடு சேர்ந்து, புனித கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.
நற்செய்தி வாசகம் கடவுளின் அன்பின் ஆழத்தை எடுத்து சொல்கிறது. "அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்." எனவே நாம் கிறிஸ்துவீன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். மூவதொரு கடவுள் மேல் விசுவாசம் கொண்டு அன்பின் மக்களாய் இந்த வாழ்வை தொடர்வோம்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, May 9, 2008

தூய ஆவி பெருவிழா மே 11 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

மே 11 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
தூய ஆவி பெருவிழா

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.



thanks to www.arulvakku.com


" உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" இந்த வசனத்தை தான இன்றைய பதிலுரையில் நாம் பாடுகிறோம். இந்த பரிசுத்த ஆவியால், தான், நமது திருச்சபை இருக்கிறது இன்னும் தொடர்ந்து இருக்கும். நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பரிசுத்த ஆவ்யின் ஆற்றலாலும், இவ்வுலகில் இருப்பதாலும் தான், இந்த உலகை மாற்ற முடிந்தது, இந்த திருச்சபை 2000 வருடமாக தொடர்ந்து இருக்கி முடிகிறது. கிறிஸ்துவின் ஆவி நம்மில் இல்லாமல், யேசு என்ன செய்தாரோ, அதனை நாம் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியின் விழா, திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நாமும், நமது பரிசுத்த ஆவயின் பிறந்த் நாள் விழாவை கொண்டாடுகிறோம். அது என்னவென்றால் நாம் திருச்சபையில் உறுப்பினர், அங்கத்தினர் ஆனதை குறிக்கிறது. இது அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய திருவிழா, மேலும், நமது உறுதிபூசுதலில், பிஷப், நாம் பரிசுத்த ஆவயை, நமது ஞானஸ்நானத்தில் பெற்றுகொண்டோம் என உறுதிபடுத்துகிறார்.

தூய ஆவியின் திருவிழா, அருட்சாதனங்களின் மூலம், நாம் கடவுளின் ஆற்றலை பெறுகிறோம் என்பதனை நினைவுபடுத்துகிறது. அந்த ஆற்றல் மூலம், நாம் பாவங்களிலிரிந்து விடுதலை அடைந்து, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நாம் இந்த உலகை மாற்றவேண்டும். கடவுள் எவ்வாறு இந்த மண்ணகத்தின் முகத்தை நம் மூலமாக புதுபித்தார். முதலில் கடவுள் பரிசுத்த ஆவியை யேசுவுக்கு கொடுத்தார். அதன் மூலம் கடவுளின் திட்டத்தை யேசு கிறிஸ்து நிறைவேற்றினார். இப்போது, தந்தை, அந்த பரிச்த்த ஆவியை நமக்கு கொடுத்திருக்கிறார். அதன் முலம், யேசு செய்த புதுபித்தல் சேவையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். உனக்கு அந்த தகுதிகள் இல்லை என்று நினைத்தால், நாம் செய்வது சரியா தப்பா? வெற்றி கிட்டுமா? என நினைத்தால், அது சரியானது தான், ஆனால், ஆவியின் கடவுள் உன்னுள் புது ஆற்றல்களோடு நீடித்து இருக்கிறார். உன்னுடைய குறைகள் எல்லாம், நிறைகளாகும். இந்த நம்பிக்கையோடு, முன்னேறி செல்.
© 2008 by Terry A. Modica

Friday, May 2, 2008

மே 4, 2008 , நற்செய்தி , மறையுரை

மே 4, 2008 , நற்செய்தி , மறையுரை
ஈஸ்டர் 7 வது ஞாயிறு

http://gnm.org/faithbuilders/Psalm27.htm
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 17

1 இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். 2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். 3 உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. 4 நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். 5 தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும். 6 நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். 7 நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். 8 ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். 9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். 10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன். 11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.

thanks to www.arulvakku.com

இன்றைய நற்செய்தியின் எல்லா வாசகங்களுமே, நமக்கு சந்தோசத்தையும், நன்கு புரிந்து கொள்ளும்ப்படியும், இன்றைய பதிலுரையில், "வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்" என்று நாம் கூறுவது போல உள்ளது. இந்த வசனத்தை, நமக்கு பிடித்தமான வசனமாக நமது வீடுகளில் அல்லது, நமது மேஜையில் எழுதி வைத்து கொள்ள கூடியது. ஏனெனில், நாம் குறையுள்ள வாழ்வின் சமயங்களில், இந்த வசனம நம்மை தூக்கி நிறுத்தும், நம்மை உற்சாகபடுத்தும். இந்த வசனத்தின் முழு படத்தினை, இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அப்பப்பொழுது, எனக்கு இதனை நிணைவுபடுத்திகொள்ள, நான் இந்த வசனைத்தை உபயோகித்துகொள்வேன். கடவுள் நமக்கு கொடுத்த உறுதிமொழிகளை, மீண்டும் உறுதியளிக்கிறார். நாம் நிச்சயம் கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். நமக்கு தேவையானவை கிடைக்க வலி மிகுந்த நாட்கள் அல்லது நேரங்கள் ஆகலாம், கடைசியாக நமக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்கும். அது முழுமையாக கிடைக்கும் வரைக்கும், இந்த வசனம், எனது விசுவாசத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.

நற்செய்தி வாசகம், இந்த உலகில் யேசு தந்தையின், நல்ல விசயங்களை அறிந்து கொண்டார் என்று கூறுகிறது. யேசுவை எப்படி நம்பினார்கள் என்று அந்த விசயத்திற்கு மதிப்பளித்தார் என்பதை கவனத்தில் கொள்வோம். நம்மை நம்புகிறவர்கள் மேல் , நாம் அக்கறை கொள்ளும்போது, அவர்கள் அதை ஏற்றுகொள்ளும்போது, நாம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.

எப்போது அவர்கள நம்மை ஏற்றுகொள்ளவில்லையோ?, அப்போதுதான், நாம் யேசுவிடம் திரும்பி, அவர்கள் நிராகரித்த அன்பை அவரிடம் காட்ட வேன்டும். யேசுவின் வார்த்தையை ஏற்றுகொள்கிறோம். அவர் தந்தையிடமிருந்து வந்தவர் என்று நற்செய்தி கூறியிருப்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். மேலும் தந்தையின் திட்டத்தில், நாம் நம்பிக்கை வைக்கிறோம். யேசு உனக்காக வேண்டிகொண்டிருக்கிறார். அதனால், கண்டிப்பாக உனக்கு தேவையானது, நல்ல விசயங்கள் இந்த உலகில் உனக்கு கிடைக்கும். நீ அதனை கான்பாய்!


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm