Saturday, October 27, 2007

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:

ஞாயிறு 28 அக்டோபர் 2007 : நற்செய்தி மறையுரை:


Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.


thanks to www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், நம்முடைய எல்லா செயல்களுமே, நம்து சுய லாபத்திற்காகவும், சுய நலத்தினால் தான் நடக்கின்றன, அன்பினால் அல்ல என்பதையும் பார்க்கிறோம். "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் ". இதனை எல்லோரும் புரிந்து கொள்கிறார்களோ, சீக்கிரமோ அல்லாது மெதுவாகவோ, தன்னை தானே உயர்த்தி கொள்பவர்கள், கண்டிப்பாக தாழ்த்தப்பெறுவர். இது மாதிரி தன்னை தானே உயர்த்தி கொள்பவர்களை, தினமும் பார்க்கும் மக்கள், அவர்களை மிகவும் உயர்வாக நினைக்க மாட்டார்கள். மேலும் உறுதியாக கடவுளும் அவர்களை உயர்வாக நினைப்பதில்லை.

மாற்றாக, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தினால், நாம் தாழ்த்தபடுவோம். அன்பில்லாத, நமது நோக்கங்களில், நாம் செய்வது தான் சரியென்று, நமக்கு தோனும், நமக்கு நாமெ கடவுள் என்று சாத்தான் போல் நினைத்து, கடவுள் போல் இல்லாமல் இருக்கிறோம். நாம் மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் போது, நாம் உண்மையாகவே அவர்கள் மேல் அக்கறை கொள்கிறோம். தாம் செய்வது தான் சரியென்று நினைக்கும், நமது சுய கொளரவம், உங்கள் தாழ்ச்சியினால் சரி செய்யப்படும்.
நாம் மற்றவர்கள மேல் கொண்டுள்ள அன்பினால், நாம் சரியாக்கப்படுவோம். சுய கட்டுப்பாடும், நாம் சுயமாகவும், சரியாகவும் இருந்தால், மற்றவர்களுக்கு நல்லது செய்ய நம்மை தூண்டி விடும். நாம் யாரையாவது நிந்தனை செய்தால், இழிவு படுத்தினால், யாரையாவது, நம்மை விட தாழ்ந்தவர்கள், என்று நினைத்தீர்கள் ஆனால், இன்றைய நற்செய்தில் வரும் பரிசேயரும் நாமும் ஒன்றானவர்கள்.

இதற்கெல்லாம், தீர்வு என்னவென்றால், கடவுளின் அக்கறையுடன், நாம் அன்பு செய்ய கஷ்டப்படும் அன்பர்கள் மீது நாம் தொடர்பு கொன்டு அவர்களோடு, கடவுள் அவர்கள் மேல் வைத்த அன்போடு இணைய வேண்டும். இதனால். நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்ள ஆரம்பிப்ப்போம். இதனை செயல்படுத்துவதற்கு சரியான மற்றும் வெற்றி வழி, நற்கருணை வழிபாடுதான். அதுதான் நமது தீமைகளை முழுதும், எடுத்து கொண்டு, கடவுளின் சிறந்த அருளை கொடுத்து, தெய்வீக அன்பை நமக்கு கொடுக்கும்.



© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, October 19, 2007

ஞாயிறு நற்செய்தி மறையுரை: அக்டோபர் 21 2007 (sunday reflection)

Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 -- 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். 2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். 4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், 7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? 8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.

(http://www.arulvakku.com) thanks.


இன்றைய நற்செய்தியில், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்குவார் என்று யேசு உறுதி கூறுகிறார். நாம் மற்றவர்களால், நிந்திக்கபடும்போது, நிராகரிக்கப்படும்போது, அலட்சியபடுத்தபடும் போது, துஷ்பிரயோகம் நடத்தப்படும் போது, கடவுள் உங்களை காப்பாற்ற வருகிறார். மிகவும் விரைவாக உன்னிடம் கேட்கிறார். "எப்படி?" என்று. உனக்கு தொந்தரவு செய்பவர்களை எதிர்த்து நிற்கவில்லையா? அவர் உனக்கு கொடுத்த உறுதியை காப்பாற்றவில்லையா?

கடவுள் மிகவும் மெதுவாக நமக்கு உதவுவது போல் தெரிந்தாலும், அது மாதங்களானாலும், ஒரு வருடமானாலும்(பல நேரங்களில்), அந்த ப்ரச்னைகள், தீர்க்கப்படுவதற்கு முன், யேசு உனது அருகில் தான் இருக்கிறார், நீ அவரிடம் வேண்டிய உடன், சாத்தானிடமிருந்து உன்னை மீட்டு, உனக்காக காத்திருக்கிறார்.

உன்மையான கேள்வி என்னவென்றால்: "யேசு எங்கே?", "ஏன் அவர், என்னை சீக்கிரமே உதவி செய்யவில்லை?", அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின், கடைசி வரிகளில் உள்ளது: யேசு நமக்கு உதவ வரும்போது, நாம் நம்பிக்கையோடு அவரை எதிர்கொள்கிறோமோ? அல்லது பயத்தோடு , அசுவிசுவாசத்தோடு இருக்கிறோமோ?

உனது ப்ரச்னைகளை மேலும் இழுக்க பல வழிகள் உள்ளன. நீ கடவுளிடம் வேண்டி, இன்னும் உனது ப்ரச்னை இன்னும் போக வில்லையென்றால், சுற்றிபார், யேசு உனக்கு அருகில் தான் நிற்கிறார். உன்னை , நீ நினைக்கும் பாதையில் செல்லாமல், வேறு பாதையில் செல், உனது ப்ரச்னை சுலபமாக விலகும் என்று வேண்டி கூறுகிறார்.நமது கண்கள், யேசுவின் மேல் இல்லாமல், நமக்கு ப்ரச்னை செய்பவர்கள் மேல் இருந்தால், அவர் செய்யும் உதவியை நாம் இழந்து விடுவோம்.

யேசு உணமையின் கூர்முனையால், உனக்கு எதிராக சதி செய்யும் தீய ஆவியினை எதிர்த்து வாள் வீசுகிறார். யேசு தீய ஆவிகளை ஓட ஓட விரட்டுகிறார். ஆனால், அவர் கூறும் உண்மைகள நமக்கு பிடிக்காமல் போகும்போது, நாம் சாத்தானின் சோதனையில் விழுந்து விடுகிறோம்.

யேசு நம்மிடம் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டுகிரார். நமது எதிரியின் மேல் உள்ள அன்பினால், கடவுளின் கருணையும், அவரின் காத்திருக்கும் நேரமும், அவர்களுக்கு கொடுத்தால், அதன் மூலம், யேசு, அவர்கள் வீழ்ந்து கிடக்கும் தீய செயலகளிலிருந்து அவர்களை காப்பாற்ற உதவும். இந்த காத்திருக்கும் வேளையில், கடவுளின் அமைதியையும், பொருமையையும், தாங்கும் ஆற்றலையும், நாம் அனுபவிக்கிறோம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
எந்த மாதிரியான அநீதிகள், உங்களை இன்று பயமுறுத்துகிறது. என்ன தீமை உங்களுக்கு எதிராக நடந்தது? உண்மையான விசுவாசத்துடன், யேசுவை பின் செல்ல இன்று நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். கடவுள் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்க என்ன மாதிரியான செயலை செய்ய போகிறீர்கள்.

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, October 13, 2007

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை

ஞாயிறு அக்டோபர் 14, 2007 , நற்செய்தி , மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். 12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, 13 ' ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் ' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். 14 அவர் அவர்களைப் பார்த்து, ' நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் ' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. 15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; 16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். 17 இயேசு, அவரைப் பார்த்து, ' பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! ' என்றார். 19 பின்பு அவரிடம், ' எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது ' என்றார்.

thanks www.arulvakku.com

இன்றைய நற்செய்தியில், பத்து பேரில், ஒன்பது பேர் நன்றி கூற ஏன் வரவில்லை? அவர்கள் ஒன்பது பேரும், அவர்களின் குடும்பத்தினரிடமும், நன்பர்களிடமும் அவர்களுக்கு நிகழ்ந்த அதிசயத்தை கூற சென்றிருக்கலாம். இன்னும் கூட, அவர்கள் குடும்பத்தினரிடம், நாங்கள் முழுமையாக குணமாகிவிட்டோம், உங்களோடு கூட நாங்களும் சேர்ந்து வாழலாம் என்று நிரூபிக்க கூட சென்றிருக்கலாம். அல்லது, அவர்களின் வாழ்வின் தேவைக்கு அவர்கள் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கலாம், இனிமேல், அவர்களுக்கு தொழுநோயாளிகளுக்கு கிடைக்கும் இலவச பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.
இவையெல்லாம், மிகவும் சரியான மற்றும் செல்லுபடியாகும் காரனங்கள் ஆகும்.

யேசுவிடம் திரும்பி வந்த சமாரிய தொழு நோயாளிக்கு உள்ள வேற்றுமை என்ன? அது என்ன வென்றால், அவனது ஆவியில் தான் வேற்றுமை உள்ளது. அவன் யேசுவின் மீது வைத்த விசுவாசம் அவனது உடலையும், ஆவியையும் காப்பாற்றியது. அவனது குறைகள் குணப்படுத்தப்பட்டது. யார் குணப்படுத்தினாரோ அவரை பாராட்டினார், நன்றி கூறினார். அவருக்காக கடவுளிடம் வேண்டவில்லை. கடவுளுக்காக சென்றார். அவரிடமிருந்த சில்வற்றை யேசுவிடம் காண்பித்தார். அவருடைய பாராட்டுதல், போற்றுதல், மேலும் கடவுளுக்கு வணக்கம். இதயெல்லாம், அந்த சமாரியார் கடவுளுக்கு கொடுக்க விரும்பினார்.
நாம் திருப்பலிக்கு செல்லும்போது, நமக்காக செல்கிறோமோ? அல்லது கடவுளுக்காகவும் செல்கிறோமோ? நம் தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டும்போது, கடவுளுக்காக செய்கிறோமோ? நாம் நமது ஆன்ம வாழ்வில் முன்னேறினாலோ அல்லது ஓர் நல்ல விசயத்தை முடித்தாலோ, கடவுளுக்காக செய்கிறோமோ? கடவுளுக்கு அவராலே அவருக்கு கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும் நம்மிடமிருந்து வரவேன்டும். இந்த புகழையும், போற்றுதலையும் குறைந்து மதிப்பிடவேண்டாம்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

அன்மையில் கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு கொடுத்த ப்ரேயர் என்ன? இன்று அவர் உங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார், உற்று கவனி. கடவுளின் காலடியில், முழந்தாளிட்டு, அவருக்கு நன்றி கூறியிருக்கிறாயா? அவர் உனக்கு உதவுவதற்கு முன்பே அவருக்கு போற்றுதலையும் நன்றியையும் கூறியிருக்கிறாயா?

© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm