Saturday, April 18, 2015

ஏப்ரல் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 3ம் ஞாயிறு

Acts 3:13-15, 17-19
Ps 4:2, 4, 7-9
1 John 2:1-5a
Luke 24:35-48

லூக்கா நற்செய்தி

35அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இயேசு சீடருக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
36சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று அவர்களை வாழ்த்தினார்.37அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38அதற்கு அவர்,' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே 'என்று அவர்களிடம் கூறினார்;40இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம்,' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? 'என்று கேட்டார்.42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44பின்பு அவர் அவர்களைப் பார்த்து,' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே 'என்றார்;45அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46அவர் அவர்களிடம்,' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் 'என்றார்.
(thanks to www.arulvakku.com) 

நாம் இப்போது, புதுபிக்கபட்ட மக்கள், - ஈஸ்டர் மக்கள் - இன்றைய நற்செய்திகள் மீட்பின் வாழ்வு வாழ்வதற்கும் , பாவ வாழ்வு வாழ்வதற்கும் உள்ள வித்தியாசங்களை நமக்கு நினைவுறுத்துகிறது. . முதல் வாசகம். மனம் திரும்புங்கள் , அதன் மூலம் உங்கள் பாவங்கள் கழுவப்படும். என்று சொல்கிறது. இரண்டாவது வாசகமோ, “யாரெல்லாம் அவரை தெரியும் " என்று சொல்லிக்கொண்டு , அவரது கட்டளைகள் படி நடக்காதவர்கள் , பொய்யர்கள் , உண்மை அவர்களிடம் இல்லை என்று சொல்கிறது.

நற்செய்தி வாசகமோ , “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என்று எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.”

ஒவ்வொரு நாளும் நாம் எதோ ஒரு வழியில் பொய் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். நம் உதடுகளால், விசுவாசத்தை அறிக்கை செய்து விட்டு, , நாம் வாழ்க்கை நடைமுறையில் அதனை கடைபிடிப்பதில்லை.கிறிஸ்துவின் அன்பை பற்றி நாம் சொல்வதை , நமது செயல்கள் காமிப்பதில்லை. நமது கவலைகளே , நாம் கடவுளை உண்மையாக நம்புவதில்லை என்று ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சொல்கின்றன.

நமது முடிவுகள், உண்மையாக கிறிஸ்துவை நம்புவதில்லை என்று சொல்லும், இயேசுவுக்கு உன் பகைவர்களையும் அன்பு செய்தல் வேண்டும், நம்மை காயபடுத்தியவர்களை நாம் அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னாலும், அவர் நம்மை விட அறிவானவறாக இந்த அறிக்கையில் நாம் நம்புவதில்லை.

எவ்வளவு அதிகமாக இயேசுவை பற்றி நீங்கள் பறை சாற்றுகிரோம் ?

நம்மில் பலர் , இயேசு நமக்காக செய்ததை , குறைத்து மதிப்பிடுகிறோம். அவரின் மரணமும், உயிர்ப்பும், நம்மை மோட்சத்த்திற்கு அழைத்து செல்லும் என்று நாமாக நினைத்து விடுகிறோம் , நாம் ஒவ்வொரு நாளும் நம்மை மனம் மாற்றி , நம்மையே தாழ்த்தி கொண்டு , நம்மை மீட்புக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை ஒதுக்கி விடுகிறோம்.

கடவுள் நம்மை ஒன்றும் அப்படியே புனிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால், நாம் கிறிஸ்துவை போல ஒவ்வவொரு நாளும் மாற வேண்டும் என்ற ஆவலோடு இருக்க வேண்டும். என்று விரும்புகிறார். தொடர்ந்து நாம் ஒவ்வொரு நாளும், நாம் நம்மையே அறிந்து, நமது வாழ்வில் உள்ள தீமைகளை களைந்து , கிறிஸ்துவை நோக்கி முன்னேற வேண்டும் . இந்த மாற்றத்திற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து அதில் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்தாலே , கடவுள் நம் மேல் பெருமிதம் அடைவார்.



© 2015 by Terry A. Modica

Saturday, April 11, 2015

ஏப்ரல் 12, 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை


ஏப்ரல் 12, 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31

யோவான் நற்செய்தி


இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா 'என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.27பின்னர் அவர் தோமாவிடம்,' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் 'என்றார்.28தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29இயேசு அவரிடம்,' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் 'என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

(thanks to www.arulvakku.com)







"என் ஆண்டவரே! என் கடவுளே! “ என்று தோமையார் சொல்வதை நாமும் ஒவ்வொரு திருப்பளியிலும் இயேசுவின் நற்கருணை எழுந்து அருளும்பொழுது நாம் சொல்கிறோம். ஒவ்வொரு முறையும் இதனை புதுபித்து கொள்வது நல்ல பயிற்சியாகும். நம் நெஞ்சம் நிறைந்த, சந்தோசத்துடன் நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்து , அவர் தான் கடவுள், அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் இருக்கிறார் என்று நாம் பறை சாற்றுகிறோம்.


இரண்டாம் ஜான் பால் அவர் கடிதத்தில், திவ்ய நற்கருணை பற்றி : கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் பல இடங்களில் கண்டு உணர்ந்தாலும், பல் வேறு மாதிரியான உருவங்களில் அவர் வந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் திவ்ய நற்கருணையில் உடலும் இரத்த்தமும் ஆக இருக்கிறார்.


இயேசு எவ்வாறு சீடர்களை , தாம் உண்மையாகவே உடலுடன் திரும்பி வந்ததை எப்படி காட்டி அவர்களை சமாதனாபடுத்தினார் என்பதை பாருங்கள். முதலில் அவரை ஆவி என்று நினைத்தனர் , எப்படி முடிவெடுப்பது என்று கூட தெரியவில்லை. உய்ரிதேழுந்தா புனிதத்தை உண்மையாக ஏற்று கொள்ளள , ஆளுக்கு அது மிக பெரியகாக , ஆச்சரியமான செயலாக இருந்தது.


இயேசு அவர்களின் ஞான கண்களை திறந்து, அவரின் காயங்களை காட்டினர் . ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கும் இதையே தான் செய்கிறார்.

நம் சொற்ப அறிவில், அதனை தெரிந்து கொள்ள, நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது திவ்ய நறுகருனையில் புனிதமான செயலால், இயேசுவின் உடலும், இரத்தமும் , 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு எபபடி இரத்தமும் சதையுமாக இறந்தாரோ அதே உடல் தான் அங்கே திருப்பலியில் இருக்கிறது. அங்கே உயிர்த்த இயேசுவும் இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அல்லது நமக்கு புரிவதில்லை.
திருப்பலியில் நித்திய வாழ்விற்கு நாம் நுழைய , வாழும் கிறிஸ்துவிடமிருந்து நாம் பயனடைகிறோம் . பெரிய வெள்ளி அன்று , இயேசு செய்த தியாகங்களால் நாம் ஒவ்வொருவரும் பயனடைகிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளும்பொழுது , நம் பாவத்திற்காக அவர் தியாகம் செய்தார் என்று அறிகிற பொழுது , நாம் அவரின் காயங்களை பார்க்க ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு தான் திவ்ய நர்கருனையின் உண்மையை நாம் அறிந்து கொள்கிறோம்.

அற்புத செயலாக திவ்ய நற்கருணை இருக்கிறதை நாம் நம்புவதற்கு , இயேசுவின் இறப்பும், நம் பாவங்களை போக்க அவர் இறந்து உயிர்த்தெழுந்தார் , அதன் முலம் நாம் மோட்சம் செல்வோம் என்பதனை நாம் நம்ப ஆரம்பிக்க வேண்டும். கடைசி முயற்சியாக , நாம் இயேசுவோடு இணைந்து செல்ல நாம் ஆசைப்பட்டு , அவரின் பிரசன்னம், நம்மில் முழுமையாக இறங்கி நம்மில் ஒன்றாக வேண்டும். அன்பு இயேசு நம்மில் சரீரத்தோடு இறங்கி வர நாம் ஆசைபடுகிறோம். எந்த மாதிரியாக அவர் வந்தாலும், அதனை ஏற்று கொள்ள , அதன் மூலம் நம்மை அவர் போல மாற்ற , நாம் விரும்புதல் வேண்டும்.
இந்த ஆசைதான் , நாம் அவரை திவ்ய நற்கருணையில் பார்க்கும் பொழுது, நாம் ஆவலுடனும், ஆர்ப்பரிப்போடும், “என் ஆண்டவரே, என் கடவுளே !” என்று .சொல்ல வைக்கிறது

Terry Modica