Friday, February 22, 2013

பிப்ரவரி 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 24, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு
Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17–4:1
Luke 9:28b-36
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1 - 8; மாற் 9:2 - 8)
28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று,  இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்  என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)


இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் என்று கடவுள் கூறியதையும், இயேசு , அவரின் உண்மையான கடவுள் என்பதையும் இன்றைய நற்செய்தியில் நமக்கு காண்பிக்கபடுகிறது.

உண்மையான கிறிஸ்துவை ஒவ்வொரு முறை அவரின் நற்செய்தியை கேட்கும்பொழுதும், பரிசுத்த ஆவியானவர் நம்மை வழி நடத்த அனுமதிக்கும் போதும், நாம் அறிந்து கொள்கிறோம்.

இதுவரையிலும் பார்க்காத ஒளியை கொண்டு, நம்மிடம் இன்னும் இருக்கும் தீயவற்றை முழுதுமாக எடுத்து கொள்ள, நாம் இயேசுவின் நற்செய்தியை கேட்க வேண்டும். அதன் மூலம் நம்மில் உள்ள தீயவற்றை அழிக்க நாம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதன் பிறகு, நம்மை சுற்றியுள்ளவர்கள், இயேசுவை நம்மிடமிருந்து அனுபவிப்பார்கள். ஏனெனில் இயேசுவை நம்மில் கான்பார்கள். நமது செயலிலும், இரக்கத்திலும், மன்னிப்பிலும் கான்பார்கள். இதன் மூலம் நாம் இயேசுவை இவ்வுலகிற்கு காட்டுகிறோம்.


தவக்காலத்தில், கிறிஸ்து நம் மேல் ஒளியை நிரப்பி நம் தீயவைகளை அழிக்க அதிகம் நாம் கிறிஸ்துவை நோக்கி ஜெபிக்கவேண்டும். நம்மில் அவர் ஒளி பட்டால் தான் நாம் மனம் திருந்த முடியும். மன்னிப்பை கேட்டு பெற்று, பரிசுத்த ஆவியின் ஆற்றலால்,   நாம் மனம் திரும்ப முடியும். அதே போல் கிறிஸ்துவை போல மாற முடியும். கிறிஸ்துவோடு இனைந்து நாம் இன்னும் ஒளிருவோம். இவ்வுலகை மீட்கும் இயேசுவின் இறைசேவையில் முழுதுமாக இனைவோம். இந்த இறைசேவையில் கஷ்டம் இருந்தாலும், பெரிய வெள்ளியின் வலிக்கு பிறகு, ஈஸ்டர் அன்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது.

இந்த தியாகத்திலும், சோதனையிலும் – நமது சிலுவையும் – இவ்வுலகை பரிசுத்தமாக்குகிறது.  கல்வாரி வரைக்கும் இயேசுவோடு செல்ல தைரியாமக இருக்கிறீர்களா? ஈஸ்டருக்கு செல்ல அது ஒன்று தான் வழி.! நமது சோதனைகளில், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் சிந்துகிறது. நமது வலியெல்லாம், கிறிஸ்துவின் வலியாகும். இயேசுவோடு நாம் ஏற்கனவே சிலுவையில் இருக்கிறோம்!. ஏன் இதனை அப்படியே முழுமனதுடன்  நம்மை ஏமாற்றியவர்களுக்கும், துன்பபடுத்தியவர்களுக்காகவும் ஏற்று கொண்டால் என்ன.?

நம்மை அன்பு செய்யாதவர்களை நாம் அன்பு செய்வதாலும், நம்மை மதிக்காதவர்களை மன்னித்தும், சாத்தானை விரட்டி இறையரசை கொண்டுவர கடின உழைப்பு கொடுத்தும், இருளில் உள்ளவர்களுக்கு நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோம்.

© 2013 by Terry A. Modica

Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Deut 26:4-10
Ps 91:1-2, 10-15
Rom 10:8-13
Luke 4:1-13

லூக்கா நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(மத் 4:1 - 11; மாற் 1:12 - 13)
1 இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.3 அப்பொழுது அலகை அவரிடம், ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும் ' என்றது.4 அதனிடம் இயேசு மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,6 அவரிடம், ' இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன்.7 நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும் ' என்றது.8 இயேசு அதனிடம் மறுமொழியாக, ″ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக ″ என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.9 பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்;10 ' உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் ' என்றும்11 ' உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றது.12 இயேசு அதனிடம் மறுமொழியாக, ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் ″ என்றும் சொல்லியுள்ளதே ' என்றார்.13 அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.
(thanks to www.arulvakku.com)

நாம் நமது விசுவாசத்தில், மனப்பூர்வமாக இருந்தால்,  இயேசுவின் வாழ்வு தான் நம் வாழ்வாக இருக்கும், இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெற்று கொண்டும், நாம் அவரோடு இனைகிறோம். நற்செய்தி வாசகம் மூலம், அவரை பார்த்து, அவரோடு மோட்சத்திற்கு செல்கிறோம்.

இந்த தவக்காலத்தில், திருச்சபை ஒவ்வொரு திருப்பலியிலும் கொடுக்கும் நற்செய்தி வாசகங்கள், நமது பயணத்தை செம்மை படுத்த உதவுகிறது. அதனை முழு மனதோடு கேட்டு, அதனை நம் வாழ்வோடு ஏற்று கொண்டால், நாம் கிறிஸ்துவோடு இனைகிறோம்.

இன்றைய நற்செய்தியில்,  நாம் இயேசுவோடு பாலைவனத்திற்கு செல்கிறோம். சோதனைக்குள்ளான உங்கள் ப்ரச்சினைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பாவங்கள் உங்களை வாழ்வை எப்படி பாலைவனமாக்கியது என்று நினைத்து பாருங்கள்.

இயேசுவோடு நாம் இனைந்து நடக்கும்போது, அவரின் சாத்தானின் போராட்டத்தோடு,  துன்பத்தோடு நம்மை இனைத்து கொண்டு, சாத்தானை வெற்றி கொள்கிறோம். நமது சோதனைகள், தவறு செய்ய தூண்டும் உணர்வுகள், இயேசுவினுடையதாகிறது. மேலும் அவரோடு இனைந்து நாம் இருப்பதால், நமது சோதனைகள் அவருடையதாகவும் ஆகிறது. அவரோடு இனைந்து, நாம் சாத்தானை ஒதுக்கி, பரிசுத்த வாழ்வில் இருக்கிறோம். சுய கட்டுபாடுடனும் இருக்கவும், சுய நலத்தை விரட்டி அடிக்கவும், திருச்சபை இந்த தவக்காலத்தில் நமக்கு உதவுகிறது: விரதமிருத்தல், மற்றவர்களுக்கு உதவுவது, மனம் திரும்புதல், விசுவாச முனைப்பு,  பாவங்களை தவிர்த்து வாழ்தல், நற்செய்தி வாசகங்களை வாசித்தல், இன்னும் பல.

ஒவ்வொரு முறை நாம் உணவை தவிர்த்து, ஒவ்வொரு பாவத்தை நாம் பாவ சங்கீர்த்தனத்தில், கூறி மனம் திரும்புவதும், ஒவ்வொரு தியாகமும், அதிகரிக்கும் ஜெபங்களும், நற்செய்தி வாசகங்களும், நாம் அனுதின வாழ்வை சுய கட்டுபாடுடனும், அழைத்து சென்று இயேசுவோடு இந்த பாலைவனத்தில் நம்மை இனைக்கிறது.

சாத்தானோடு உண்டான சோதனையில் ,இயேசு உணவை தவிர்த்தார், உடல் அசதியின்றி ஜெபத்தில் ஈடுபட்டார். அதன் மூலம், இந்த தவக்காலத்தின் பின்பு வந்த இறைசேவையில், திடத்துடன் அவரால் ஈடுபட முடிந்தது. இதே போல தான் நமக்கும் இந்த தவக்காலம் இருக்க வேண்டும்.
சாத்தானை பார்த்து நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. இயேசு ஏற்கனவே அவர்களை  நமக்காக தோற்கடித்துவிட்டார். முதலில் பாலைவனத்திலும், பிறகு சிலுவையிலும் சாத்தானை தோற்கடித்து விட்டார்.  நமது போராட்டமோ, நம்மை தவறு செய்ய தூண்டும். உணர்வுகளுடனும், நமது பலவீனங்களுடனும், பாவத்தில் விழாமல் இருப்பதற்கும் நாம் போராட வேண்டியுள்ளது  

எப்பொழுதுமே நாம் இயேசுவை பின் செல்ல விரும்புவதில்லை. இதனை தான் இயேசுவிடம் இந்த தவக்காலத்தில் அர்ப்பனித்து விட வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஈஸ்டர், நமக்கு அத்தமுள்ளதாய் இருக்கும். இந்த தவக்காலத்திலிருந்து நாம் ஆற்றலுடனும், உறுதியுடனும் நம் விசுவாசத்தோடு வருவோம்.
© 2013 by Terry A. Modica

Friday, February 8, 2013

பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11

லூக்கா நற்செய்தி (5:1-11)

முதல் சீடரை அழைத்தல்
(மத் 4:18 - 22; மாற் 1:16 - 20)
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் 'என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(thanks to www.arulvakku.com)
அடிக்கடி, கடவுள் நாம் கேட்காததை கூட நமக்கு கொடுத்து உதவுகிறார். இன்றைய நற்செய்தியில், இராய்ப்பருக்கும்,ஜேம்சுக்கும், ஜானுக்கும்,  இயேசு அப்படிதான் செய்தார். அங்கே அதிக மீன்களை பிடிக்க உதவினார்.
இயேசுவின்  நோக்கம் என்ன? அவர்களின் படகை இயேசுவுக்கு கொடுத்ததால், இயேசு பதிலுக்கு அவர்களுக்கு நன்மை செய்தாரா? இயேசு உங்களுக்கும் சன்மானமாக கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா?

ஆம், இது சன்மானம் அல்ல. அது மிக பெரிய விசயம்.
நற்செய்தியில், உள்ள கதையை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
1.   முதலில், மீனவர்களுக்கு இயேசுவை முன்பே தெரியும்; அவர்கள் இயேசுவை “போதகரே” என்று அழைத்தனர். ஏனெனில், அவர்கள் இயேசுவின் சீடர்களாய் இருந்தனர்.
2.   இரண்டாவதாக, இயேசு அவர்கள் எதிர்பார்க்காமலேயே அவர்களுக்கு உதவி செய்தார்.
3.   மூன்றாவதாக, இயேசு அந்த அன்பளிப்பை, அவர்களின் அழைத்தலுக்கானதாக மாற்றினார்.
4.   நான்காவதாக, சீடர்கள் அவர்களுடைய  அனைத்தையும் விட்டு விட்டு, அந்த அழைத்தலுக்கு ஆயத்தமானார்கள்.

கடவுள் நம் வாழ்வில் தலையிடுகிறபொழுது, நம் நன்மைகளுக்காகவும், மற்றவர்களின் நமன்மைகளுக்காகவும் அவர் நமக்கு நல்லது செய்கிறார். நாம் சமூகத்தில் இனைந்து இருக்கிறோம். கடவுள் குடும்ப சமூகத்தில் இருக்கிறோம். தனியாக கடவுளோடு நாம் இனைந்து இருக்க முடியாது. கடவுளோடு ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், வேண்டுதலிலும், நாம் கடவுளிடம் இருக்கும்பொழுது, மற்றவர்களோடு இனைந்து, , அவர்கள் மேல் அக்கறையோடும், அவர்களின் நலனுக்காகவும் நாம் ஜெபித்து இறையோடு இனைவோம்.
நமக்காக நாம் வேண்டும் ஜெபத்தை கடவுள் கொடுக்காமலிருப்பதும், நம் நன்மைக்கே.  கடவுள் எப்பொழுதுமே பெரிதாக தான் பார்ப்பார். எல்லோரையும் கவனித்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அவர் நன்மை செய்வார்.

உங்கள் மன்னிப்புக்கு கடவுள் செவி சாய்க்காத மாதிரி நமக்கு தோன்றும். ஏனெனில், அவர் மிக பெரிய திட்டத்திற்காக தயார் செய்து வருகிறார். மற்றவர்களுக்கும் சேர்த்து நீங்கள் கேட்ட உதவி எப்படி அவர்களுக்கும் பயன் தரும் என்று எல்லாவற்றையும் சேர்த்தே திட்டமிடுகிறார்.

உங்களின் தேவைகளையும், ஆசைகளையும் அறிந்து கடவுள் உங்கள் மேல் அக்கறை கொள்கிறார். அதே போல் மற்றவர்கள் மேலும் அக்கறை கொள்கிறார். அவர்கள் அனைவரும் கடவுளிடம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்கள் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். மேலும், உங்கள் தேவைகளை இறைசேவையின் அழைத்தலாக மாற்றுகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உதவியாக கடவுளிடம் கேட்க ஆரம்பித்தவுடன், கடவுளின் உதவியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். நம்மை தாண்டி மற்றவர்களுக்காக நாம் யோசிக்க ஆரம்பித்த உடன், நமது ப்ரச்சினைகள் முடியும் மட்டும், அதனை தாங்கி கொண்டும், அதிலே, நாம் அமைதியையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கைவிடாமல் பெறுதல் வேண்டும். இது தான் நாம் அனுதினம் செய்ய வேண்டிய இறைசேவை ஆகும்.
© 2013 by Terry A. Modica


Friday, February 1, 2013

பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 – 13:13
Luke 4:21-30


21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால், இயேசு போன  வாரம் உள்ள நற்செய்தியை வாசித்து முடித்து (' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்) , தொழுகை கூடத்தில் உள்ளவர்களிடம் , நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார். மேலும் அவர்கள் இயேசுவை பற்றி மிக உயர்வாக பேசினர். ஆனால், அந்த நற்செய்தியின் முடிவில்,  கடம் கோபம் கொண்டனர்.  எது அவர்களின் குணத்தை மாற்றியது?


அவர்களின் வியப்பு, அச்சம், “ஜோசப்பின் மகன் அல்லவர் இவர்? “ என்று பேசிகொண்டு இன்னும் குழம்பினர்.  புதிதாக இயேசுவை பார்த்தவர்களை விட, இயேசு குழந்தையாக இருந்தபோதே பார்த்து வந்த இவர்களுக்கு இயேசு வேறாக தெரிந்தார்.  தச்சு தொழில் செய்த போது, கையில் காயம்பட்டு இரத்தம் சிந்தின இளைஞன் இயேசுவையும், அவர் தந்தை சூசை இறந்தபோது அழுத இயேசுவையும் இவர்களுக்கு தெரியும்.


அவர்களது குணம், இயேசு சொல்வதை பரிசுத்த ஆவியின் துனையின்றி கேட்ட பொழுது, மாறியது. ஏனெனில், அவர்கள், ஏற்கனவே அறிந்த்திருந்த யேசுவின் மேல் ஒரு பிம்பத்தோடு அத்தனையும் கேட்டனர். அதனால் தெய்வீக உணர்வு அவர்களை விட்டு போய்விட்டது. அங்கே தெய்வத்துடன் உள்ள தொடர்பு அறுந்து விட்டது.


உங்களை ஒருவர் , அவர் எதிர்பார்ப்பது போல் நீங்கள் நடந்து கொள்ளாமல், வேறு மாதிரியாக நடந்து கொண்டால்,  நிச்சயம் அவர் குழம்பி விடுவார். உங்களை மிகவும் இளையவர் என்றோ, அல்லது, மிகவும் முதியவர் என்றோ, அவர்கள் நினைத்து அதற்கு மாறாக நீங்கள் நடந்து அல்லது, தகுதியான கல்வி அறிவை பெறாமல் இருந்து , அல்லது அவர்கள் என்ன கேட்க ஆசைபடுகிறார்களோ அதனை சொல்லாமல் இருப்பதும், அவர்களை குழப்பி மிகவும் உங்களுக்கு எதிராக கோபமடைய செய்கிறது.


நாம் அவர்கள், நம்மை நம்பவேண்டும் மற்றும், பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் நம்மை நம்பவில்லையெனில், நம்மை ஆச்சரியபடுத்தி, மேலும் நம்மை குழப்புகிறது, அதனால்,  நாம் உணர்ச்சி வயப்பட்டு அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம். ஆனால், இயேசுவை அவர்கள் இவ்வாறு நடத்தியபின்பு,  இயேசு எப்படி நடந்து கொண்டார்? பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால்,  பொறுமையாக இயேசு உண்மையை பேசினார். உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்தாரா? கண்டிப்பாக, ஏனெனில், அவரும் மனிதனாக தான் இருந்தார். கடவுள் நம்மை படைக்கும்போது  உணர்வுகளுடன் தான் படைத்துள்ளார். நாம் பரிசுத்த ஆவியின் துனையில்லாமல் கேட்கும்பொழுது தான், நமக்கு ப்ரஸ்னை ஏற்படுகிறது.


© 2013 by Terry A. Modica