Friday, August 28, 2009

ஆகஸ்டு 30, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 30, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
1 ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. 5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ' உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ' என்று கேட்டனர்.6 அதற்கு அவர், ' வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.7 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ' என்று அவர் எழுதியுள்ளார்.8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.9 மேலும் அவர், ' உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.10 ' உன் தந்தையையும் தாயையும் மதித்துநட ' என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ' என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!11 ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ' நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ″ கொர்பான் ″ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று ' என்றால்,12 அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.13 இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள் ' என்று அவர்களிடம் கூறினார்.14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ' நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.15 வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.16 ( 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' ) என்று கூறினார். 17 அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,18 அவர் அவர்களிடம், ' நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?19 ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது ' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.20 மேலும், ' மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.23 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், பரிசேயர்களை கடிந்துரைக்கிறார். ஏன், அவர்கள் கடவுளை தங்கள் உதட்டில் மட்டுமே வைத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், உள்ளத்தில், கடவுளை விட்டு வெகு தூரத்தில் இருக்கின்றனர். யூத சட்டங்க்களை யேசுவும், அவரின் சீடர்களும் சரியாக நிறைவேற்றவில்லை, என்று பரிசேயர்கள் குறை கான்பதில் கொஞ்சம் கூட அன்பு இல்லை என்று யேசு குறிப்பிடுகிறார்.

மனிதர்களை விட அவர்களுக்கு சட்டங்கள் தான் முக்கியமானதாக இருந்தது. பரிசேயர்களிடத்தில், தான் தான் சரி என்ற எண்ணம் இருந்தது. "உன்னை விட எனக்கு அதிகம் தெரியும், உன்னை விட பெரியவன் நான், நான் கட்டளைகளை சரியாக கடைபிடிக்கிறேன் , ஆனால் நீங்கள் கடைபிடிப்பதில்லை" என்று கூறி கொள்ளும் மனப்பான்மை.


கீழ்படிதல், சட்டங்களின் பிடிப்பால் ஏற்படக்கூடியதாக இருந்தால் அது கபட வேஷம் ஆகும். இது தான் , தான் என்ற அகந்தை. அது சட்டங்களினால் , தான் மேன்மை பெற்றவன் என்ற நினைப்பாகும். இந்த மாதிரியான விசயங்களை நாம் இப்போது கூட பார்க்கிறோம். திருப்பலியில் பாதிரியார்கள், திருப்பலியை இப்படி தான் செய்ய வேண்டும் என்று நடைமுறைகள் உள்ளன ஆனால் பாதிரியார்கள் சில மாற்றங்கள் செய்தால், நம்மில் சிலர் அதனை குறை கூறுகிறோம்.

இப்படி நடக்கும் போது, "வீணான தற்பெருமைக்காக என்னிடம் ஜெபம் செய்கிறார்கள்" என்று யேசு கூறுகிறார். இதனால், திருப்பலியின் உண்மையான அர்த்தம் போய்விடுகிறது.

நடைமுறைகளுக்கும் , சட்டங்களுக்கும், எது முதல், எது அடுத்தது என்று ஓர் வரைமுறை உள்ளது. இதில் சில நடைமுறைகள் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைவது உண்டு. அதில் மிக முக்கியமானது, பத்து கட்டளைகள் ஆகும், இது எப்போதுமே மாறுவதில்லை. இந்த நடைமுறைகள் எல்லாம், நமக்கு மோட்சத்திற்கு செல்ல உதவியாக இருக்கிறது.

தவறான நடவடிக்கைகளை நாம் பார்க்கும்போது, அதனை நாம் எதிர்த்து பேசியே ஆகவேண்டும். ஏன் நாம் அதனை செய்ய வேண்டும் எனில், அந்த தவறுகளை செய்பவர்களின் பாவங்களை போக்கவும், அவர்களின் தூய வாழ்வின் வளர்ச்சிக்கும் நாம் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அவர்களின் தவறுகளுக்கு உண்டான மூல காரணத்தை அறிந்து, அந்த தவற்றை களைய பரிந்துரைத்தோமானால், உண்மையான அன்பும், அவர்களிடத்தில் தோன்றி, அந்த தவறுகளும், அதற்கு மேல் நடைபெறாது. அப்போது தான், நமது முயற்சி வெற்றியடையும்
இப்படி நடந்து கொண்டால் தான், இரண்டாவது வாசகத்தில் உள்ளது போல, "செயல்களினாலும் கடவுளிடம் நாம் செல்லலாம்" என்பதை நாம் ஏற்றுகொண்டு நடந்து வருகிறோம். யாக்கோபு சொல்வது போல, "உண்மையான மதம்" என்பது மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளும். ஆனால் பரிசேயர்களோ, சீடர்களின் பசியை பொருட்படுத்தவில்லை, மாறாக சட்டதிட்டங்க்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.



(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, August 22, 2009

ஆகஸ்டு 23, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 23, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
60 அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, ' இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? ' என்று பேசிக் கொண்டனர்.61 இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், ' நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?62 அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?63 வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.64 அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை ' என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.65 மேலும் அவர், ' இதன் காரணமாகத்தான் ″ என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது ″ என்று உங்களுக்குக் கூறினேன் ' என்றார்.66 அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.67 இயேசு பன்னிரு சீடரிடம், ' நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? ' என்று கேட்டார்.68 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.69 நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் உண்மையான இறை சேவையை அதனுடைய நோக்கத்தை அறிந்த பின் பல சீடர்கள் யேசுவை விட்டு பிரிந்து சென்றதை பார்க்கிரறோம், அவர்கள் அனைவரும், அவரோடு பின் சென்று, அவர் சொல்லியதை கேட்டு, வந்தவர்கள், எப்படி யேசு சொன்னதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. "நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன" என்று கூறினார். அந்த சீடர்கள் அவர் கூறியதை மேலோட்டமாகவே பார்த்தனர். உடலுக்கு எது தேவை என்று ஆராய்ந்தனர். யேசு கூறிய நித்திய வாழ்வை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அந்த வாழ்வு தான் சந்தோசமான வாழ்வு, வெற்றியின் வாழ்வு,மேலும் நித்திய வாழ்வும் ஆகும்.

யேசுவை அவர்கள் புனிதமாக அல்லது தெய்வீகமாக பார்க்கவில்லை. அவரை மனிதனாகவே பார்த்தனர், மெசியாவாக பார்க்க வில்லை. மனிதர்களின் தலைவராகவே பார்த்தனர். ஆன்மாக்களின் தலைமையாக பார்க்கவில்லை. ரோமானியர்களிடமிருந்து அவர்களுக்கு விடுதலையளிப்பவராகவே பார்த்தனர், பாவங்க்களுக்கு விடுதலை அளிப்பவராக பார்க்கவில்லை.

யேசுவின் உடலையும், இரத்தத்தையும், உண்ணவேண்டும் என்று கூறிய அவரது யோசனை, யாராலும் நினைத்து பார்க்க முடியாதது. ஆனால், அதில் உள்ள பரிசுத்த எண்ணத்தை, அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நித்திய வாழ்வை அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. யேசு இயற்கைக்கு மாறாக உள்ள சிந்தனையுடன் உள்ளார், அதனால், அவரை பின் செல்வது கற்பனையான ஒன்றாகும். என்று நினைத்தனர்.

உண்மையான சீடர்கள் - அவரோடவே இருந்து இன்னும் அதிகம் அவரிடம் கற்றரிய வேண்டும் என்று இருந்தவர்கள்- அவர்களுக்கும் யேசு சொன்னதை புரிந்து கொள்ள வில்லை. ஆனால் அவர்கள், யேசுவின் வார்த்தையில் பரிசுத்த ஆவியின் சக்தியை அறிந்து கொண்டனர்.
மற்றவர்கள் மூலமாக யேசு உங்களிடம் வந்துள்ளார், ஆனால், நீங்கள் அவரை அறிந்து கொள்ளாமல் இருந்தீர்கள்? ஏனெனில், அந்த மனிதரை மனிதராகவே பார்த்தீர்கள், மேலும், அவரிடம் கிறிஸ்துவிடம் இல்லாத பழக்க வழக்கங்களை கவனத்தில் எடுத்து கொண்டீர்கள்.

ஒவ்வொரு மனிதரும், கடவுளை போலவே படைக்கபட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும், பரிசுத்த ஆவியின் கொடையால், உயிரோடு இருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடம் கூட கிறிஸ்து இருக்கின்றார். நல்ல வெற்றியுள்ள , கிறிஸ்துவின் அன்பில் வாழ, ஒவ்வொரு மனிதரிடமும், மேலோட்டமாக பார்க்காமல், உள்ளே கிறிஸ்துவை கண்டு, அவர்கள் அனைவரையும், கிறிஸ்துவின் ப்ரசன்னமாகவே பார்க்க வேண்டும்.
திவ்ய நற்கருணையில், யேசுவின் உண்மையான ப்ரசன்னத்தை, உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா? மற்றவர்களிடம் இருக்கும் யேசுவை உங்களிடம் வருபவரை அறிந்து ஏற்றுகொள்ளுங்கள். அதன் மூலம், திவ்ய நற்கருனையை இன்னும் நன்றாக புதிய வழிகளில் பார்ப்பீர்கள்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm
(thanks to www.azhagi.com)

Friday, August 14, 2009

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 16,2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 20ம் ஞாயிறு

Prov 9:1-6
Ps 34:2-7
Eph 5:15-20
John 6:51-58

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '

(thanks to www.arulvakku.com)

"வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்று இன்றைய நற்செய்தியில், திவ்ய நற்கருணையின் கட்டளையை , யேசு நமக்கு சொல்வதை நாம் காண்கிறோம். இது எந்த மாதிரியான வாழ்வு? யேசு கொடுக்கும் வாழ்விற்கும், நீங்கள் பிறந்த வளரும் இந்த வாழ்விற்கும் என்ன வேறுபாடு?

யேசு அவருடைய உடலையும் இரத்தத்தையும் ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கு கொடுக்கிறார், அதனை முழுதும், நாம் வாங்கிகொள்ளலாம், தெய்வீகமாகவும், மனிதனாகவும் நாம் பெறலாம். அவரது அன்பினால், நாம் முழு ஊட்டமுடன் நனைய விரும்புகிறார். அவருடைய ஆற்றலை பெற்று , நமது சோதனையில் தாண்டி வர அந்த ஆற்றல் உதவும். நம் காயங்களை குணப்படுத்த அந்த ஆற்றல் உதவும். மேலும் அவரது வாழ்வு, மோட்சத்திலும் மட்டுமல்ல , இந்த பூமி வாழ்விலும், நமக்கு கிடைக்கின்றது.

யேசுவை நாம் வாங்குவது, அவரை போல நாம் மாற வேண்டும். திவ்ய நற்கருணையில், உண்மையாக யேசுவின் உடலும், இரத்தமும் தான் என்று நாம் நம்பினால், திருப்பலிக்கு பிறகு ஏன் நாம் மாறி வருவதில்லை?

திருப்பலியின் முதலில் நடைபெறும் பாவமன்னிப்பில் முழுமையாக, ஆர்வத்தோடு பங்கேற்று, கவனமாக எல்லா நற்செய்தி வாசகங்களையும் கேட்டு, குருவோடு எல்லா ஜெபங்களையும் சொல்லி, கடவுளின் ஆற்றல் மேல் நம்பிக்கை கொண்டு, "ஆண்டவரே நான் உன்னை பெற தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்" என்று சொல்லி, அவரது உடலை வாங்கினால், அவரது உடலோடும், இரத்ததோடும் ஒன்றாவோம்.

இப்போது, நாமும் அவரின் உடலாகவும், இரத்தமாகவும், இந்த பூமியில் உள்ளோம், அதன் அர்த்தம் என்னவெனில், யேசுவின் பிரசன்னமாக இந்த உலகத்தில் இருக்கிறோம். மற்றவர்கள் நம்மை பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும், அல்லது வேறு விதமாக சொல்வதனால், யேசுவின் ஆற்றல், மற்றவர்களுக்கும் கிடைக்க நாம் உதவியாக இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்கள் மேல் அன்பாக இருக்கும் போது, கடவுளின் அன்பை அவர்கள் பெறுகிறார்கள் , அவர்கள் அந்த அன்பை திரும்பி கொடுக்காவிடில், நமது அன்பை, நம்மை முழுதுமாக அவர்கள் பெற்றுகொள்கிறார்கள். நாம் பெறுவதை விட அதிகமாக கொடுக்கிறோம்.அதே போல, கடவுளரசிற்காக, நமது நேரத்தையும், திறமையையும் கொடுத்தோமானால், நாம் திவ்ய நன்மையாகிறோம். யேசுவின் உடலோடும், இரத்தத்தோடும், ஒன்றாகிறோம்.
மற்றவர்கள், நமக்கு கொடுக்க வேண்டியதை, கொடுக்காத போது, நாம் அழியாமல், முழுமையாக மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டுமானால், நாம் யேசுவிடமிருந்து அவர் ஆற்றலையும் , அனைத்தையும் வாங்கியிருக்க வேண்டும். அதனால் தான், ஒவ்வொரு திருப்பலியிலும், திவ்ய நற்கருணை வழிபாட்டில் ஈடுபட்டு, அவரின் ஊட்டசத்துகளை நாம் பெற வேண்டும். அது தான், நமது வாழ்விற்கு தேவையான சக்தியாக இருக்கிறது.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

(thanks to www.azhagi.com)

Friday, August 7, 2009

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை

ஆகஸ்டு 9 , 2009 ஞாயிறு நற்செய்தி & மறையுரை
ஆண்டின் 19வது ஞாயிறு

1 Kings 19:4-8
Ps 34:2-9
Eph 4:30--5:2
John 6:41-51


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.42 ' இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ″ நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் ″ என இவர் எப்படி சொல்லலாம்? ' என்று பேசிக்கொண்டார்கள்.43 இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ' உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.45 ″ கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார் ″ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். '


(thanks to www.arulvakku.com)


"என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே" நித்திய வாழ்வை நம்புவோர் அனைவருக்கும் நானே உயிர் தரும் உணவு " என்று இன்றைய நற்செய்தியில் யேசு கூறுகிறார்.
திவ்ய நற்கருணையை ஏன் "வாழ்வு தரும் உணவு" என்று கூறினார். ?
இதற்கு பதிலாக அவரே "' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' " என்று கூறுகிறார். இதையே வேறு விதமாக சொல்வதானால், அவரது வாழ்வை நமக்காக கொடுத்தார் - சிலுவையில் - . நமது பாவங்கள் நம்மை இறப்பின் பாதைக்கு நம்மை அழைத்து சென்றது, ஆனால், யேசு எந்த பாவமும் இல்லாதவர், முழு இறைவன் , நமக்காக அவர் இறந்த்தார். அதனால், நாம் நித்திய வாழ்வை அடைய முடியும்.

உயிர்த்தெழுந்த அவரின் உடல், மரணத்தை வென்றது. அதனால், அவரது உடல், சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த்தது, நமது வாழ்விற்கு உணவாக கிடைக்கிறது. இதனை தான் நாம் திருப்பலியில் கொண்டாடுகிறோம். அவரது மரணத்தை நாம் திருப்பலியில் மீண்டும் காட்சியாக கொண்டு வருவதில்லை, மாறாக, அவரது வாழ்வோடு நம்மை இணைத்து கொள்கிறோம்.

"திருப்பலி பீடத்தில் நடக்கும் தியாக" செயல்கள், நாம் கிறிஸ்துவின் முழுமையோடு , அவரின் வாழ்வோடு, அவரது நற்செயல்களோடு, அவரது சிலுவை துன்பங்களுடன், உயிர்த்தெழுதலிலும், மேலும், மோட்சத்திற்கு எழுந்தருளியதோடும், நாம் பங்கு கொள்கிறோம். நமது வாழ்வை அவருக்கு அர்ப்பணித்து, அவரோடு நாம் இணைகிறோம், அதன் மூலம், நாம் இந்த உலகிற்கு அவரின் இறைசேவையை தொடர முடியும். நமது விருப்பங்களை தியாகம் செய்து , அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். இது நம்மை கிறிஸ்துவின் பின் சென்று, மோட்சத்திற்கு அழைத்து செல்லும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் யேசுவின் உடலையும் அவரது இரத்தத்தையும் நமக்கு அருளப்பட்டு, நமது வாழ்விற்கு தேவையான உணவு வழங்க்கப்படுகிறது. எப்பொழுதுமே சாப்பிடத்தகுந்த உணவை பெறுகிறூம். போப் ஜான் பால் குறிப்பிட்டுள்ளதை நாம் நினைவு கூறலாம், இரண்டாம் வாத்திகான் சங்கம் திவிய நற்கருணை தான், கிறிஸ்துவ வாழ்விற்கு ஊற்றாகவும் , ஆதாரமாகவும் உள்ளது என்று கூறுகிறது.


கிறிஸ்துவின் கடைசி இரா உணவிலிருந்து , நமக்கு திவ்ய நற்கருணை தொடர்ந்த்து கிடைத்து வருகிறது. முதல் அப்போஸ்தலர்களிலிருந்து தொடங்கிய திருப்பனி , இன்றும் குருவானவர்கள் மூலம் தொடர்ந்த்து நடைபெற்று வருகிறது. நாம் அனைவரும், இந்த திருப்பலியில் பங்கு கொள்ளும்பொழுது, கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை நாம் கொண்டாட வேண்டும். அந்த திவ்ய நன்மையை பெற உள்ள தடைகளை தூர எறிந்து அவரை பெற வேண்டும்.

அப்போஸ்தலர்களுடன் எப்படி யேசு இரா உணவின் போது இருந்தாரோ, அப்படியே உண்மையாக ஒவ்வொரு திருப்பலியிலும் இருக்கிறார், அங்கே கூறியது போல, "இது என் உடல், என் இரத்தம்" என்று கூறுகிறார். பக்தியுடன், மரியாதையுடனும், அன்புடனும் திவ்ய நற்கருனையில் யேசுவை வழிபட்டால், அவர் தான் நம் மீட்பர் என்று நம்பி அவரை பெற்றால், அது தான், நமது நித்திய வாழ்வின் ஊற்றாகவும், தொடக்கமாகவும் இருக்கும்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm


special thanks to WWW.azhagi.com (tamil editor)