Friday, November 27, 2009

29 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

29 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thes 3:12-4:2
Luke 21:25-28, 34-36
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21
25 ' மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்.26 உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.27 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள்.28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. ' ' 34 மேலும் இயேசு, ' உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.35 மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.36 ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் ' என்றார்.


(thanks to www.arulvakku.com)
உங்கள் சந்தோசத்தை, இன்பத்தை எது எடுத்து கொண்டு போகிறது? இந்த திருவருகை காலத்தில், நமது சந்தோசத்தை, இன்பத்தை திருப்பி கிடைக்க யேசுவிடம் வேண்டுவோம். தற்போதைய உலகத்தில், இந்த பொருளாதார தடுமாற்றம் உள்ள காலத்தில், கிறிஸ்துவை நாம் பின் செல்வது, நமக்கு நம்பிக்கை தருகிறது. இந்த கஷ்டமான காலங்களில் கூட, நாம் சந்தோசமாக இருக்க முடிகிறது.

இன்றைய உலக நிலையில், கத்தோலிக்கர்கள் அனைவரும் திருப்பலிக்கு செல்வது நல்லது என்று நாம் அனைவர்களும் நம்புகிறோம். கிறிஸ்துவின் ப்ரசன்னத்தில், திருப்பலியிலும், கோவிலிலும் கண்டு நாம் மாறுகிறோமா? அப்படி மாறினால், நீங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு, சந்தோசத்திலும், அன்பிலும் நிறைந்து இருக்கிறீர்களா? சரிதானே? மற்றவர்கள் உங்கள் சந்தோசத்தை உங்களில் பார்க்கிறார்களா? சரிதானே?
நமது விசுவாசத்தின் உண்மையை தெரிந்து வைத்திருப்பதற்கும், அதனை அப்படியே நம் வாழ்வில் கடைபிடித்து வாழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த போலியற்ற நம்பதக்க வாழ்வை தான் நம்மிடமிருந்து மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீங்கள் யேசுவிடம் வேண்டி இன்னும் அவரிடமிருந்து எந்த வேண்டுதலுக்கு அவரின் ஆசியையும், கொடையையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறீர்கள் ? திருப்பலியில் அந்த வேண்டுதலை அவரிடம் வைக்கும்போது, நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா? அந்த நம்பிக்கையை நாம் அனுபவிக்கவில்லை என்றால், நமக்குள் சந்தோசம் வராது.

திவ்ய நற்கருணையை குருவானவர் புனிதப்படுத்தும் பொழுது, குரு யேசுவிடம் நமது மனக்கவலைகளிலுருந்து நம்மை விடுவிக்க வேண்டுகிறார். நமது கவலைகள் , யேசு நம்மிடம் திவ்ய நற்கருணை மூலமாக வருகிறார் என்பதனை நாம் அறிய முடியாமல் தடுத்து விடுகின்றன. அதனால் நாம் நம்பிக்கை இழந்து விடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில், யேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இதனை நம் தின வாழ்விலும் இனைத்து ஆய்வு செய்யலாம். நம் வாழ்வில் புதிதாக தோன்றியுள்ள தொந்தரவுகள் ப்ரஸ்னைகள் நமக்கு இன்னும் புரியாமலிருக்கலாம், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம். யேசு இதனை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி செய்ய ஆசைபடுகிறார். எனினும், நமது கவனமெல்லாம், நமக்கு ஏற்பட்டுள்ள ப்ரச்சினையில் தான் இருக்கிறது, மாறாக, கிறிஸ்துவின் மேல் இல்லை. நம்மை நமது மனக்கவலைகளும், சஞ்சலங்க்களும் தான் ஆட்சி செய்கிறாது, கண்டிப்பாக கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கையுமில்லை, அதனால் நமக்கு மகிழ்ச்சியும் இல்லை.
நமது இதயம் இறைவனின் பால் இருக்க சோம்பலாய் இருக்கும்போது, யேசுவின் மத்தியில் நாம் இருக்க மறந்து விடுகிறோம். பரிசுத்த ஆவியின் அறிவுறுத்தலை, நாம் கேட்க நிராகரிக்கிறோம். ஆனால், நமது மகிழ்ச்சியை நமக்கு மீண்டும் கிடைக்க யேசுவிடம் வேண்டினால், நாம் விழிப்புடனும், எதிர்பார்ப்புகளுடனும், எல்லாம் அறியும் நிலையில் இருக்க முடியும், நாம் யேசுவை நம்பி இருந்தால் தான், நாம் சக்தியுடனும், தைரியத்துடனும், நம் வழியில் வரும் எந்த ஒரு ப்ரச்சினையும் நாம் எதிர்கொள்ள முடியும்.

இந்த உலகம் பல கவலைகளால், பயத்துடன் வாழ்கிறது -- ஆனால் கிறிஸ்தவர்களோ - யேசுவை நம்புவதால், நமக்கு மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது. அவரை நம்பி, மகிழ்ச்சியாக இருப்பது, அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை. தொடர்ந்து முயற்சியுடனும் யேசுவை நம்ப நாம் அவரை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் இதில் சோம்பலாய் இருந்தால், நமது வாழ்வு மிக மோசமாகவே இருக்கும்.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Friday, November 20, 2009

நவம்பர் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 22, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
Dan 7:13-14
Ps 93:1-2, 5
Rev 1:5-8
John 18:33b-37
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 18
33 பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்டான்.34 இயேசு மறுமொழியாக, ' நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா? ' என்று கேட்டார்.35 அதற்கு பிலாத்து, ' நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்? ' என்று கேட்டான்.36 இயேசு மறுமொழியாக, ' எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல ' என்றார்.37 பிலாத்து அவரிடம், ' அப்படியானால் நீ அரசன்தானோ? ' என்று கேட்டான். அதற்கு இயேசு, ' அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர் ″ என்றார்.


(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து அரசர் தானா என்ற கேள்வி எழும்போது, யேசு அதற்கு பதிலளிக்காமல், கடவுளரசின் உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார். அவர் அரசர் என்பதை மறுக்காமல், "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்" என்று கூறுகிறார். அவர் எந்த ஒரு நாட்டிற்கும், அல்லது இந்த உலகத்திற்கோ அரசர் இல்லை, மாறாக, அவர் உண்மையின் அரசர், நேர்மையின், இயற்கையின் அரசர்.


யேசு நமக்கு ஆசிரியராகவும், உண்மையை எடுத்துரைக்கும் குருவாகவும் இல்லாவிட்டல், இந்த உலகத்தில் நடக்கும் பொய்யான பாசாங்குகளால் நாம் இழுத்து செல்லப்படுவோம், இந்த உலகை பொய்யினால் ஆளும் சாத்தானின் பிடியில் மாட்டுவோம். ஆனால், கடவுளின் உலகை சாத்தான் ஆள்கிறது என்பதே உண்மையை திரிக்கப்பட்டதாகும்.நிச்சயமாக சாத்தான் இந்த உலகை ஆளவில்லை. யேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்து கடவுளின் எல்லா உயிரனங்களையும் மீட்டார் என்பதை நினைவில் கொள்க. கிறிஸ்துவின் அரசை ஏற்றுகொண்டு, அவரின் குரலை கேட்டு அறிந்து, உண்மையின் வழி வாழ்வபவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள், அவர்கள் கடவுளரசில் இருக்கிறார்கள்.
நாம் பாவம் செய்யும்போது, அந்த நிலைமையின் உண்மையை புரிந்து கொள்வதில்லை. நமது வாழ்வின் முழு அரசராக யேசு இன்னும் இருக்கவில்லை.
எடுத்து காட்டாக, யாராவது ஒருவர், உங்களிடம் எதையோ கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியவில்லை என்று வைத்து கொள்வோம். அது கோவில் கட்டும் பணியாக இருக்கலாம். பக்கத்து வீட்டு நோயாளிக்கு உதவி செய்வதாக இருக்கலாம், அல்லது வேலை ஸெய்பவர்களாக இருக்கலாம், அவர் உங்களை விட விசுவாசம் குறைந்தவராக இருக்கலாம்.
அவர்கள் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? உங்களுடைய சொந்த வேலைகளால் நீங்கள் மிகவும் அசதியாகவும், மிகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறீர்களா? அதனால் மற்றவர்களின் தேவைகளை உங்களால் நிறைவேற்ற முடியவில்லையா? நமது உடல் தான் நாம் ஏற்கனவே அதிகமாக மற்றவர்களுக்கு செய்கிறோம், அதனால், நாம் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டியது அதிகம் இருக்கிறது என்று சொல்லும். இது தான் தீய எண்ணங்களால் உண்மையான நிலையை நாம் அறியாமலிருப்பது. நம் தேவைகளை , விருப்பங்களை அடைந்தால் தான் நமக்கு சந்தோசம் , ஆனால் மற்றவர்களுக்கு உதவிசெய்வதால், ஒன்றும் இல்லை என்று நாமாக நினைத்து கொள்கிறோம்.
நிதர்சனமான நிலையில், யேசுவின் குரலை கேட்டு, அந்த பழக்கத்தை தொடர்வோமானால், அது ஒரு பெரிய இன்ப அனுபவமாகும். மேலும், யேசு "இன்னும் அதிகமாக செல்" என்றும் "நல்ல சமாரித்தன் போல் மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள் " என்றும் கூறுகிறார். யேசு கூறும் நற்போதனைகளை கேட்டு, அதனை நாம் விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றினால், நாம் கடவுளை, அவர் குரலை புரிந்து கொள்வதில் முன்னேறுவோம். நாம் செய்த நற்செயல்களால், விளையும் சந்தோசத்தில், நாம் இன்னும் கடவுளை புரிந்து கொள்பவர்களாக ஆவோம். அந்த நற்கணிகளை அடையாளம் கொள்வோம். ஆனால், நாம் பாவம் செய்யும்போது, நல்ல செயல்களால் நமக்கு கிடைக்கும் கணிகளை நாம் அறிந்து கொள்வதில்லை. கிறிஸ்து அரசரின் ஆட்சியின் கீழும், பரிசுத்த ஆவியின் ஞானத்தாலும், நாம் நமது பாவ சிந்தனையிலும், நடத்தையிலிருந்து மீள்வோம்.

© 2009 by Terry A. Modica
This work is NOT in Public Domain, and should NOT be copied without permission. For PERMISSION and info on how to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, November 14, 2009

15 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

15 நவம்பர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு

Dan 12:1-3
Ps 16:5, 8-11
Heb 10:11-14, 18
Mark 13:24-32
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 13
24 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.28 ' அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30 இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.32 ' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், யேசு அவரின் இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே அவர் இன்னும் அவரின் முதல் வருகையையே முடிக்கவில்லை. அந்த சீடர்களுக்கு எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்.

யேசு இறந்து, உயிர்த்தெழுந்து, மோட்சத்திற்கு எழுந்தருளிய பிறகும், அவர் இரண்டாவது வருகை காலம் தாமதமாக இருப்பதால், சீடர்கள் இன்னும் குழம்பி போனார்கள். "இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது" என்று அவர் கூறியது அவர்களுக்கு இன்னும் நினைவில் இருந்தது. இருந்தும் காலம் தான் கழிந்தது, அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பித்தார்கள், ஆனாலும் யேசு மீண்டும் வராமலிருந்தார், மேகங்களிடையே இன்னும் ப்ரசன்னமாகவில்லை. ஆனாலும் இந்த துயரம் இன்னும் போகவில்லை.
முடிவில்லாத ப்ரச்சினைகள் உங்களுக்கு ஏதாவது இருக்கிறதா? யேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்: "இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் " . அவர் எந்த ஒரு தேதியையும் அறுதியிட்டு சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, குறியீடும் கொடுக்கவில்லை. அல்லது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடை கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!. (ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது) , அப்ப எதனை சீடர்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறார்.

அவர் நெருங்கி வருகிறார்!
கடந்த 2000 வருடங்களாக, நாம் "இந்த தலைமுறையின்" அங்கமாக இருக்கிறோம், அவரின் இரண்டாவது வருகை வரைக்கும், நாம் இந்த தலைமுறைதான். கிறிஸ்துவின் மனிதகுலத்தின் தலைமுறையில் இருக்கிறோம். கிறிஸ்துவின் உடலாக இந்த திருச்சபையில் நாம் இருக்கிறோம். கடவுள் தனது மகனை தியாகம் செய்த தலைமுறையில் நாம் அங்கத்தினராக உள்ளோம்.
கடவுளின் மீட்பின் திட்டம், ஈஸ்டர் ஞாயிறிலிருந்து தொடங்குகிறது. அந்த "கடைசி நாட்கள்" அன்றிலிருந்து தொடங்கி, கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரை இருக்கும். இது பரிசுத்த ஆவியின் காலம் ஆகும். அது என்னவென்றால், கிறிஸ்து இவ்வுலக இறைசேவையை முடித்து, மோட்சத்திற்கு எழுந்தருளியுள்ளார், ஆனால், பரிசுத்த ஆவியை நமக்கு வழங்கி உள்ளார்.
அத்தி மரத்தின் போதனை, கோடைகாலம் நெருங்கி வரும்போது நமக்கு தெரியும். நமக்கு நல்ல நேரம் எது , கெட்டது எது என்று தெரியும். அது என்னவெனில், யேசு நம்மிடம் நெருங்கி வருகிறார். உடலோடு இல்லை (திருப்பலியில் திவ்ய நற்கருணையில் வருகிறார். அதனை தவிர்த்து) , ஆனால் பரிசுத்த ஆவியாக.

உங்களின் அடுத்த அடிக்கு அருகில், யேசு வாசல் கதவின் அருகே இருக்கிறார். உங்கள் அடுத்த கால் அடி, மோட்சத்திற்கு செல்லும் அடுத்த அடியாக இருக்கும். கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கும், அதன் மூலம், நாம் மோட்சத்திற்கு செல்ல முடியும். யேசு உங்களுக்காக அந்த கதவை இப்போது திறக்கிறார். அந்த கதவு பரிசுத்தமும், அன்பும் நிறைந்தது. முழு வாழ்க்கை வாழ , அந்த கதவின் வழியே செல்லுங்கள், அந்த முழு வாழ்வை தான், கடவுள் உங்களுக்காக திட்டமிட்டிருக்கிறார்.

© 2009 by Terry A. Modica

Friday, November 6, 2009

நவம்பர் 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 8, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32வது ஞாயிறு
1 Kgs 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Heb 9:24-28
Mk 12:38-44

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 12
38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ' மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ' என்று கூறினார்.41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். 43 அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ' இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்று அவர்களிடம் கூறினார்.

(thanks to www.arulvakku.com)

யேசுவின் பின்செல்வதற்கு, நாம் அதிக விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் யேசு நம்மை பல இடங்களுக்கு , நாம் எதிர்பாராத இடத்திற்கு எடுத்து செல்கிறார், அதற்கு நாம் தயாராக வேண்டும், தியாகம் செய்ய வேண்டும், நமக்கு வசதியான வாழ்க்கையை விட்டு , மிகப் பரிச்சயமான எல்லைகளை விட்டு வெளியே வர வேண்டும்.

இன்றைய நற்செய்தியிலும், முதல் வாசகத்திலும் வரும் விதவைகளை பாருங்கள், தன்னால் இதனை செய்ய முடியாது, நமக்கு உணவு இல்லை என்று தெரிந்தும், அவர்கள் எப்படி தன்னிடம் உள்ளதை கொடுத்தார்கள்? கடவுள் அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வார் என்று கண்டிப்பாக தெரிந்து தான் தன்னிடம் உள்ளதை கொடுத்தார்களா? இல்லை அவர்களுக்கு தெரியாது. கடவுளின் மேல் உள்ள அன்பினால், அவர்களிடம் உள்ள அனைத்தையும் இறைவனுக்கு கொடுத்தார்கள்.
விசுவாசம் தான் ஒரு நல்ல அன்பின் அடையாளம் ஆகும். அது என்னவென்றால், கடவுளை நம்புவதற்கு நாமே முடிவு செய்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை உள்ள நாம், நமது கஷ்டமான நேரங்களில், நமக்கு தெரிந்த பலர் கைவிட்ட பிறகும், கடவுள் நம்மை கைவிடமாட்டர் என்று நாம் நம்பினால், அவர்களை எந்த தடையுமின்றி, நாம் அன்பு செய்ய முடியும். எந்த வித நிபந்தனையின்றி, நாம் நமது விருப்பப்படி, நமது நண்பர்களை அன்பு செய்யலாம். ஆனால் கடவுள் நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன், மற்றவர்கள் மேல் நாம் அன்பு செய்ய வேண்டும்.
விதவை தாய் எதை தொலைக்க கூடாதோ, எதை விட்டு விட முடியாதோ, அதனை கடவுளுக்கு கொடுத்தாள். நமக்கு தொந்தரவு செய்பவர்களையும், நம்மை துயரத்தில் ஆழ்த்தியவர்களையும், நம்மை ஒதுக்கி விட்டவர்களையும், நம்மால் அன்பு செய்ய முடியாது, இருந்தும் யேசு நம்மிடம், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு நல்லது செய்து, அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
சில நேரங்களில் சிலரை அன்பு செய்வது கூட மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் ஒரு எல்லையை கடந்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. யேசுவை தொந்தரவு செய்தவர்களை, அவர் என்ன செய்தார் என்று நினைத்து பாருங்கள். புனித வெள்ளி வர, யேசு எப்போதுமே, அவர்களிடமிருந்து விலகி வந்து விடுவார். ஆனால், அவர்கள் மேல் அன்பு செய்வதை நிறுத்தி விட வில்லை. கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டு, எப்போது பேச வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்று தெரிந்து அதன் படி நடக்க வேண்டும்.
சில நேரங்களில், மிகவும் கடின மனதுடையவர்களை அன்பு செய்தாலும், அவர்கள் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் அழைத்து வர நாம் முயற்சிக்க வேண்டும். அவர்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றுவதை விட, அவர்களை அதில் கஷ்டபட்டு வெளியே வர செய்யவேண்டும். நாம் மனம் வருந்தி திருந்துவதற்கு முன், கடவுள் நம் பாவங்களை சுத்தம் செய்வாரா? என்று நினைத்து பாருங்கள். நாம் மனம் திருந்திய பின்பும் கடவுள் அதனை அகற்றப்போவதில்லை.
மற்றவர்களை அன்பு செய்வதற்கு, நாம் தியாகம் செய்ய வேண்டும், கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, அவர் ஆறுதல் தருவார் என்ற உற்சாகத்துடன் நாம் மற்றவர்கள் மேல் அன்பு செய்ய வேண்டும். கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார். கண்டிப்பாக நாம் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு இறங்கலாம். மற்றவர்களுக்காக நம் ஜாடியிலிருந்து கொடுக்கும் அன்பும், மற்றும் எல்லோமுமே என்றைக்கும் குறையாது.

(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm