Saturday, February 25, 2017

பிப்ரவரி 26, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி  26, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  8ம்  ஞாயிறு
Isaiah 49:14-15
Ps 62:2-3,6-9
1 Corinthians 4:1-5
Matthew 6:24-34

மத்தேயு நற்செய்தி
கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?

26வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!

27கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?

28உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.

29ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

30நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?

31ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.

32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

33ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

34ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
 (thanks to www.arulvakku.com)

எந்த அளவிற்கு கடவுள் மேல் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?

இன்றைய நற்செய்தி இயேசுவின் மலை பிரசங்கத்திலிருந்து ஒரு பகுதியாகும். இயேசு பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து காட்டி, எப்படி வாழவேண்டும் என்றும் போதிக்கிறார். இதே வழிகாட்டுதலை, இயேசு அவர் சொல்லி கொடுத்த ஜெபத்திலும் கோடிட்டு கட்டுகிறார். "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " என்று அவர் சொல்லி கொடுத்த ஜெபத்தில், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் " என்றும் சொல்லி கொடுத்து, இந்த இரண்டு இடங்களிலும், நம் அனுதின வாழ்வில் கடவுளை நாம் நம்பி, அவர் மேல் நமது பார்வை என்றும் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஒவ்வொரு சோதனையிலும் , ஒவ்வொரு சவால்களிலும் , ஒவ்வொரு கஷ்டத்திலும், நாம் ஒன்று கடவுளை நம்பி இருப்போம், அல்லது, நமக்கு தெரிந்த அறிவை கொண்டு, நாம் ஒரு முடிவுக்கு வந்து இந்த உலக வழியில் செல்வோம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஒரு காலை மோட்சத்தை நோக்கி வைத்தும் , இன்னொரு காலை , இந்த உலக வழியில் வைத்தும் நம்மால் இருப்பது போல கற்பனை செய்து பாருங்கள், , இது நாமாக ஏற்படுத்தி கொள்கிற முட்டாள் தனம்.

"மம்மான்" என்ற வார்த்தை அராமைக் மொழிளிருந்து வந்தது . அதன் அர்த்தம் "சொத்து" அல்லது "செல்வம்" என்று அர்த்தம் ஆகும். சிலர் சொல்வடையாக சொல்வதுண்டு, ஒருவர் கடவுளிடம், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் கேட்ட பின்பு, கடவுள், அவரிடம் "உங்கள் உணவு ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது, மற்றவர்களுடைய  உணவும், உங்களிடம் இருக்கிறது" என்று கூறினார் என்று நம்மில் பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு தேவையான எதனை நாம் வைத்திருக்கிறோம்? நம்மிடம் தாராளாமாக உள்ள ஒன்று நமது எதிர்காலத்துக்காக சேமித்து வைத்து இருக்கிறோம் ஆனால் பலர் இப்போதே அது கிடைக்காமல், அவர்கள் போராடி வருகின்றனர். நாம் சேமித்து வைத்ததை மற்றவர்களிடம் கொடுக்க நமக்கு பயமாக இருக்கலாம், இன்னும் சில நாட்கள் கழித்து நமக்கே தேவைப்படலாம் என்று நாம் பயப்படலாம், (இதனால், தான், கத்தோலிக்கர்கள் பலர், கோவிலுக்கு தாராள நந்கொடை கேட்கும்பொழுது , அவர்கள் எண்ணம் தடுமாறுகிறது)

இது மாதிரியான எண்ணம் நமக்கு இருக்குமாயின், நாம் கடவுளை முழுதுமாக நம்பவில்லை , அவர் நம்மை காத்து கொள்வார் என்று நாம் விசுவாசிக்கவில்லை என்று அர்த்தம் . நாம் தாராள மனதுடன் இல்லாமல் இருப்பது போல கடவுளும் இருப்பார் என்று நாம் அனுமானிக்கிறோம்.

அதனால் இயேசு இப்படி சொன்னார், "நீங்கள் அதிகம் கவலைபடுகிறீர்கள்"  , நாம்  கவலைகளை பற்றியே சிந்திக்காமல், கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நாம் நம் சிந்தனை முழுதுமாக இருக்க வேண்டும்.

"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார், உங்களை அவர் பார்த்து கொள்வார், இறையரசை நோக்கி நாம் சென்றால், நம் அனுதின  வாழ்வில் இறையரசை நோக்கிய வாழ்வாக இருக்கட்டும் என்று இயேசு சொல்கிறார். மேலும், உங்களுக்கு தேவையானது அனைத்தும் கிடைக்கும். என்றும் இயேசு சொல்கிறார்.

இயேசுவை விட்டு விட்டு அவர் மேல் நம் பார்வை இல்லாமல், கவலையிலே நம் மனம் இருந்தால், , அது பாவம் ஆகும். இயேசு நம் முலம் கொடுக்க நினைப்பதை மற்றவர்களுக்கு நாம் பகிராமல் இருப்பதும் பாவம் ஆகும்.


© 2017 by Terry A. Modica

Saturday, February 18, 2017

பிப்ரவரி 19,2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 19,2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
Leviticus 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Corinthians 3:16-23
Matthew 5:38-48
மத்தேயு நற்செய்தி


பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

40ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.

41எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
42உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாகஎனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

45இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

47நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

48ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
(thanks to www.arulvakku.com)
எப்படி இரக்கத்துடன் கூடிய அன்பை கொடுப்பது?
இன்றைய நற்செய்தியின் முதல் முக்கிய நோக்கம்-இரக்கம் - தான். அன்பு தான் மக்களின் இதயத்தை திறக்கும் என்பதை நினைத்து பாருங்கள். அவர்கள் இதயத்தை மூடும் பொழுது , இறக்கம் தான் பின் வாசல் வழியாக அவர்கள் இருதயத்தை தோடும் கருவியாகும்.
அன்றைய காலத்தில் , யாராவது ஒருவர் கண்ணை பாதிக்கும் வகையில் குத்திவிட்டால், அவர் தனது உறவினர்களுடன் சென்று , கண்ணை குத்தியவரின் கண்ணையோ அல்லது அவரை சார்ந்தவர்களின் கண்களை அவர்கள் தாக்குவர்.   அதனால், கடவுள் அந்த மக்களிடம், எல்லோரும் அன்புடன் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொடுக்கிறார். யாராவது உங்கள் கண்களை காயபடுத்தினால், அதே செயலை அவகளுக்கும் நீங்கள் செய்யலாம், ஆனால் இது அன்பு செயல் ஆகாது, இருந்தும் இது ஒரு நியாமான நடவடிக்கை ஆகும்.

இயேசு இந்த உலகத்திற்கு வந்த பின், அதனை இன்னும் உயர்வான நிலைக்கு கொண்டு சென்றார்: யாராவாது உங்களை தாக்கினால், அதே தாக்குதல் வேண்டாம், அனால் அவர்களை அன்பு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
மக்கள் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால்,  அவர்கள் இதயத்தை கடவுளுக்காக , மேலும் அவரின் அன்பையும் பெற , திறக்காமல் மூடி கொள்கிறார்கள் , அதனை அவர்களும் புரிந்து கொள்வதில்லை. ஆனால், நாம் அவர்களை அன்பு செய்தால், நாம் அவர்களிடம் கடவுளை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறோம்.
இப்படி செய்வதால், நீங்கள் தொடர்ந்து துன்பபட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால், தொடர்ந்து நாம் அன்பு செய்து கொண்டே இருந்தால், -- நாம் கடவுளை அவர்களிடத்தில் கொண்டு வந்து, அவர்களுக்கு குனமாக்குதலை உண்டாக்குகிறோம்.
யாராவது , உங்கள் பொருளை எடுத்து விட்டாலோ, நியாயமின்றி உங்களிடம் நடந்து கொண்டால், அவர்கள் செருக்கை கர்வத்தை நீங்கள் தடுத்து விட முடியாது, ஆனால், அவர்கள் உங்களுக்கு எதிராக பாவம் செய்வதை தடுத்து விட முடியும். தாராள அன்பை தொடர்ந்து வழங்குங்கள், இன்னும் கூடுதலான அன்பை கொடுங்கள். இது சரியான செயலாக இருக்காது என்று எனக்கே தெரிகிறது. ஆனால், இயேசு சொல்வது சரியாக தான் இருக்கும், தெய்வம் எப்பொழுதுமே சரி தான்.
யாராவது உங்களிடம், அவர்கள் செய்யும் வேலையை , அவர்கள் சோம்பலினால், உங்களிடம் செய்ய சொன்னால், நீங்கள் அவர்கள் பாவம் செய்வதை தடுக்க முடியும், அந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டு, அதனை செய்யுங்கள், அப்பொழுது அவர்கள் பாவம் செய்யாதவர்களாக இருப்பர்.
இயேசுவின் இந்த திட்டம், நம் மூலம் , கடவுளின் மேலான அன்பே பிரதானமானது .  இவ்வாறாக செய்யும்பொழுது, நாம் சாத்தானை தோற்கடிப்போம்.
இதனை தான் நாம் சரியான வழி என்று எடுத்து கொள்ள வேண்டும். சரியான வழி - பைபிளில் குறிப்பிடுவது என்னவெனில் - அன்பு, முழுமை, அளவில்லாதது, இரக்கத்துடன் கூடிய அன்பு.

© 2017 by Terry A. Modica

Friday, February 3, 2017

பிப்ரவரி 5, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 5, 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Isaiah 58:7-10
Ps 112:4-9
1 Corinthians 2:1-5
Matthew 5:13-16
மத்தேயு நற்செய்தி

உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

14நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.

15எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.

16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

(thanks to www.arulvakku.com)
உங்கள் விசுவாசம் மூலம் இந்த உலகத்திற்கு உப்பாய் இருங்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசு: "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று கூறுகிறார். உப்பாய் இருப்பது என்றால், அதன் அர்த்தம் என்ன ? உப்பு என்ன செய்கிறது என்று பாருங்கள். இது சாப்பாட்டிற்கு ருசியை சேர்க்கிறது.
மேலும், இயேசு உப்பு உவர்ப்பற்று போனால், எப்படி திருப்பி கொண்டு வருவது ? அதற்கு பதில்:
உங்கள் ஞானஸ்நானத்தில்,  உப்பாய் இருக்க ஆசிர்வதிக்கப்பட்டு உங்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன், கடவுளின் அன்பும், அமைதியும், சந்தோசமும், இன்னும் பல கொடுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம், கடவுளின் வாழ்வை -- கடவுளின் அன்பு கொண்டு, அமைதியை, சந்தோசத்தை கொண்டு, மற்றவர்களை மனம் மாற்றுகிறார்களோ, அவர்கள் அனைவரும் பயனளிக்கும் கிறிஸ்தவர்கள் ஆவர்.
ஆனால், அதற்காக அதிகமாக முயற்சி செய்யாதீர்கள்! சாப்பாட்டிற்கு அதிக உப்பு சேர்ந்தால் என்ன ஆகும்? ருசியாக இருக்காது. நமது எண்ணம் நல்லதாக இருந்தாலும், நாம் அதிகமாக அவர்களை இழுத்தாலும், நாம் அதிக சேதத்தை தான் கொடுக்கிறோம்.
இறைவனின் அன்பை, அவரின் அமைதியை,  நம் மூலம் அவர்கள் அனுபவிக்கும் பொழுது, பலர் இயேசுவை நோக்கி திரும்புவர். நாம் எப்படி அவர்களை மதித்து நடத்துகிறோமோ  , நம் வாழ்வின் மூலம் அவர்கள் இயேசுவின் சந்தோசத்தை பார்க்கும் பொழுது , அவர்கள் இயேசுவிடம் கண்டிப்பாக திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் , அதே நிலையில் அப்படியே இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும் , இயேசு மிகவும்  மென்மையானவர் , ஆனாலும் அவர்களை அழைப்பதில் மிகவும் உண்மையாக இருப்பவர், மற்றவர்களின் கஷ்டத்தை , பிரச்சினைகளை , ஆசிர்வாதமாக மாற்றி சந்தோசத்தை கொடுப்பவர்.
இயேசு மேலும் நாம் ஒளியாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் -- ஆனால் அந்த ஒளி மற்றவர்களின் கண்களை மறைக்க கூடிய ஒளியாய் இருக்க கூடாது. இயேசுவின் பிரசன்னத்தை, மற்றவர்களின் வாழ்வில் நாம் கொண்டு வர, இயேசு அவரது ஒளியை நம் மூலம் கொண்டு வர நாம் முயல வேண்டும். மற்றவர்கள் கிறிஸ்துவின் ஒளியை நம்மில் காண வேண்டும்.
கூடுதலாக, இயேசு நகராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், நாம் தனியாக மனமாற்றம் செய்ய முடியாது. நகர் என்றால், கிறிஸ்தவர்கள் சேர்ந்த குழு: குடும்பம், அல்லது பங்கின் உள்ள சங்கங்கள் ஆகும். கிறிஸ்தவர்கள் என்பதே ஒரு குழுவாக இருப்பது தான். நம் ஒளி மற்றவர்களின் ஒளியோடு இணையும் பொழுது , அந்த ஒளி இன்னும் அதிகமாக கிறிஸ்துவின் ஒளியை இந்த உலகத்திற்கு காட்டும். ஏன்? நாம் ஒருவரோடு ஒருவர் அன்புடன் இருக்கும் பொழுது , எவ்வித நிபந்தனையும் இன்றி, தாராளமாக ஒவுவருக்கு ஒருவர் சேவை மனப்பான்மையில் அன்பு செய்கின்றதை பார்த்து மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பை அவர்கள் பெற்று மனம் மாறுவார்கள்.
நாம் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியை பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்களுக்கு நாம் ருசியை கூதடுக்கிறோம். மற்றவர்கள் உதவி இல்லாமல், நம் ஒளி குறைந்து விடுகிறது, நம் உவர்ப்பு தன்மை குறைந்து விடுகிறது, மேலும், இறையரசில் உபயோகமற்றவராக ஆகி விடுகிறோம்.

© 2017 by Terry A. Modica