Friday, August 20, 2010

ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 22, 2010, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Ps 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 13


இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ' 25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28 ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29 இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியின் வாசகங்கள், மோட்சத்தின் கதவுகள் மிகவும் குறுகியது என்று கூறும் சாலையோர போர்டுகளாகும். கடவுளுக்கு நமது செயல்களும், எண்ணங்களும் தெரியும் என்று இசையா கூறுகிறார். நமது செயல்களை புனிதமாக்கவும், எண்ணங்களை தூய்மையாக்கவும், அதன் மூலம், நாம் இறக்கும்பொழுது, கடவுளின் முழு புகழொளியை நாம் முழுமையாக பார்க்க முடியும் . அதற்காக கடவுள் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார், அது தான் இயேசு. அவரின் வாழ்வு, எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் என்பதெல்லாம், நமக்கு பல அடையாளங்களாக, நம்மை மோட்சத்திற்கு செல்லும் வழியாகும். அதன் மூலம், நாம் மோட்சதிற்கு சென்று நமது முழு வாழ்வை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார்: தகுதியற்று , போதுமான ஆற்றலுடன் நிறைய பேர் மீட்பிற்காக முயற்சிப்பார்கள் என்று சொல்கிறார். அந்த போதுமான தகுதி என்ன?
நற்செய்தியில் எல்லா இடத்திலும் இயேச் இதற்கு பதில் சொல்கிறார்: நமது அன்பில் பரிசுத்தமான முழுமையான அன்பாக இருக்க வேண்டும். மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அதனை தூக்கி எறிந்தால், நாம் சாவியையும் தூக்கி எறிகிறோம்.

நாம் எப்பொழுதுமே அன்பினை தூக்கி எறிவதில்லை, நாம் பாவியாக இருந்தாலும். ஆனாலும், நாம் நமது அன்பில் பரிசுத்தமாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், எப்பொழுதுமே, எவ்வித நிபந்தனையுமின்றி , தியாகத்துடனும் அன்பு செய்ய வேண்டும்.
முழுமையான அன்பு செய்ய வேண்டும் என்றால், நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் வசித்து , அதன் மூலம், மற்றவர்களிடம் அவர் சென்றடைய வேண்டும். அப்பொழுதுதான் அது முழுமையான அன்பாகும்.
ஆண்டவரின் அன்பில் நாம் திளைக்க வேண்டும் என்றால், அவரின் அன்பை தடுக்கும் எதனையும் நாம் தூக்கி எறிய வேண்டும்: மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்குதல், நீடித்து இருக்கும் கோபம், மகிழ்ச்சியை வெறுப்பது, மேலும் மற்றவர்களின் தேவைகளை நிராகரிப்பது.
கடவுளின் ஒழுங்கை அவமதிக்க வேண்டாம் என்று இன்றைய வாசகம் கூறுகிறது. நமக்கு கஷ்டமாகவும், சோதனையாகவும் இருப்பவற்றை , கடவுள் உபயோகப்படுத்தி, நமது அன்பு முழுமையாக இருக்க உதவுகிறார். இதனையெல்லாம், நாம் அன்பினில் வளரும் வாய்ப்பாக நாம் எடுத்து கொண்டு , கடவுளின் உதவியை நாடி, அவர் நம்மை அன்பு செய்ய வைப்பார். அப்பொழுது, நாம் யேசுவை போல் மாறுவோம். மோட்சத்திற்கு நேரான பாதையை ஏற்படுத்து கிறோம்.மேலும் நமது பரிசுத்த வாழ்வில் உள்ள குறைகளும் குணமாக்கபடுகின்றன.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

No comments: