Saturday, April 11, 2015

ஏப்ரல் 12, 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை


ஏப்ரல் 12, 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31

யோவான் நற்செய்தி


இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா 'என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று வாழ்த்தினார்.27பின்னர் அவர் தோமாவிடம்,' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் 'என்றார்.28தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29இயேசு அவரிடம்,' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் 'என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

(thanks to www.arulvakku.com)







"என் ஆண்டவரே! என் கடவுளே! “ என்று தோமையார் சொல்வதை நாமும் ஒவ்வொரு திருப்பளியிலும் இயேசுவின் நற்கருணை எழுந்து அருளும்பொழுது நாம் சொல்கிறோம். ஒவ்வொரு முறையும் இதனை புதுபித்து கொள்வது நல்ல பயிற்சியாகும். நம் நெஞ்சம் நிறைந்த, சந்தோசத்துடன் நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்து , அவர் தான் கடவுள், அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் இருக்கிறார் என்று நாம் பறை சாற்றுகிறோம்.


இரண்டாம் ஜான் பால் அவர் கடிதத்தில், திவ்ய நற்கருணை பற்றி : கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் பல இடங்களில் கண்டு உணர்ந்தாலும், பல் வேறு மாதிரியான உருவங்களில் அவர் வந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் திவ்ய நற்கருணையில் உடலும் இரத்த்தமும் ஆக இருக்கிறார்.


இயேசு எவ்வாறு சீடர்களை , தாம் உண்மையாகவே உடலுடன் திரும்பி வந்ததை எப்படி காட்டி அவர்களை சமாதனாபடுத்தினார் என்பதை பாருங்கள். முதலில் அவரை ஆவி என்று நினைத்தனர் , எப்படி முடிவெடுப்பது என்று கூட தெரியவில்லை. உய்ரிதேழுந்தா புனிதத்தை உண்மையாக ஏற்று கொள்ளள , ஆளுக்கு அது மிக பெரியகாக , ஆச்சரியமான செயலாக இருந்தது.


இயேசு அவர்களின் ஞான கண்களை திறந்து, அவரின் காயங்களை காட்டினர் . ஒவ்வொரு திருப்பலியிலும், நமக்கும் இதையே தான் செய்கிறார்.

நம் சொற்ப அறிவில், அதனை தெரிந்து கொள்ள, நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது திவ்ய நறுகருனையில் புனிதமான செயலால், இயேசுவின் உடலும், இரத்தமும் , 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு எபபடி இரத்தமும் சதையுமாக இறந்தாரோ அதே உடல் தான் அங்கே திருப்பலியில் இருக்கிறது. அங்கே உயிர்த்த இயேசுவும் இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அல்லது நமக்கு புரிவதில்லை.
திருப்பலியில் நித்திய வாழ்விற்கு நாம் நுழைய , வாழும் கிறிஸ்துவிடமிருந்து நாம் பயனடைகிறோம் . பெரிய வெள்ளி அன்று , இயேசு செய்த தியாகங்களால் நாம் ஒவ்வொருவரும் பயனடைகிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளும்பொழுது , நம் பாவத்திற்காக அவர் தியாகம் செய்தார் என்று அறிகிற பொழுது , நாம் அவரின் காயங்களை பார்க்க ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு தான் திவ்ய நர்கருனையின் உண்மையை நாம் அறிந்து கொள்கிறோம்.

அற்புத செயலாக திவ்ய நற்கருணை இருக்கிறதை நாம் நம்புவதற்கு , இயேசுவின் இறப்பும், நம் பாவங்களை போக்க அவர் இறந்து உயிர்த்தெழுந்தார் , அதன் முலம் நாம் மோட்சம் செல்வோம் என்பதனை நாம் நம்ப ஆரம்பிக்க வேண்டும். கடைசி முயற்சியாக , நாம் இயேசுவோடு இணைந்து செல்ல நாம் ஆசைப்பட்டு , அவரின் பிரசன்னம், நம்மில் முழுமையாக இறங்கி நம்மில் ஒன்றாக வேண்டும். அன்பு இயேசு நம்மில் சரீரத்தோடு இறங்கி வர நாம் ஆசைபடுகிறோம். எந்த மாதிரியாக அவர் வந்தாலும், அதனை ஏற்று கொள்ள , அதன் மூலம் நம்மை அவர் போல மாற்ற , நாம் விரும்புதல் வேண்டும்.
இந்த ஆசைதான் , நாம் அவரை திவ்ய நற்கருணையில் பார்க்கும் பொழுது, நாம் ஆவலுடனும், ஆர்ப்பரிப்போடும், “என் ஆண்டவரே, என் கடவுளே !” என்று .சொல்ல வைக்கிறது

Terry Modica



No comments: