Saturday, April 18, 2015

ஏப்ரல் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 3ம் ஞாயிறு

Acts 3:13-15, 17-19
Ps 4:2, 4, 7-9
1 John 2:1-5a
Luke 24:35-48

லூக்கா நற்செய்தி

35அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இயேசு சீடருக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
36சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! 'என்று அவர்களை வாழ்த்தினார்.37அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38அதற்கு அவர்,' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே 'என்று அவர்களிடம் கூறினார்;40இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம்,' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? 'என்று கேட்டார்.42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44பின்பு அவர் அவர்களைப் பார்த்து,' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே 'என்றார்;45அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46அவர் அவர்களிடம்,' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.49இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் 'என்றார்.
(thanks to www.arulvakku.com) 

நாம் இப்போது, புதுபிக்கபட்ட மக்கள், - ஈஸ்டர் மக்கள் - இன்றைய நற்செய்திகள் மீட்பின் வாழ்வு வாழ்வதற்கும் , பாவ வாழ்வு வாழ்வதற்கும் உள்ள வித்தியாசங்களை நமக்கு நினைவுறுத்துகிறது. . முதல் வாசகம். மனம் திரும்புங்கள் , அதன் மூலம் உங்கள் பாவங்கள் கழுவப்படும். என்று சொல்கிறது. இரண்டாவது வாசகமோ, “யாரெல்லாம் அவரை தெரியும் " என்று சொல்லிக்கொண்டு , அவரது கட்டளைகள் படி நடக்காதவர்கள் , பொய்யர்கள் , உண்மை அவர்களிடம் இல்லை என்று சொல்கிறது.

நற்செய்தி வாசகமோ , “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என்று எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.”

ஒவ்வொரு நாளும் நாம் எதோ ஒரு வழியில் பொய் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். நம் உதடுகளால், விசுவாசத்தை அறிக்கை செய்து விட்டு, , நாம் வாழ்க்கை நடைமுறையில் அதனை கடைபிடிப்பதில்லை.கிறிஸ்துவின் அன்பை பற்றி நாம் சொல்வதை , நமது செயல்கள் காமிப்பதில்லை. நமது கவலைகளே , நாம் கடவுளை உண்மையாக நம்புவதில்லை என்று ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சொல்கின்றன.

நமது முடிவுகள், உண்மையாக கிறிஸ்துவை நம்புவதில்லை என்று சொல்லும், இயேசுவுக்கு உன் பகைவர்களையும் அன்பு செய்தல் வேண்டும், நம்மை காயபடுத்தியவர்களை நாம் அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னாலும், அவர் நம்மை விட அறிவானவறாக இந்த அறிக்கையில் நாம் நம்புவதில்லை.

எவ்வளவு அதிகமாக இயேசுவை பற்றி நீங்கள் பறை சாற்றுகிரோம் ?

நம்மில் பலர் , இயேசு நமக்காக செய்ததை , குறைத்து மதிப்பிடுகிறோம். அவரின் மரணமும், உயிர்ப்பும், நம்மை மோட்சத்த்திற்கு அழைத்து செல்லும் என்று நாமாக நினைத்து விடுகிறோம் , நாம் ஒவ்வொரு நாளும் நம்மை மனம் மாற்றி , நம்மையே தாழ்த்தி கொண்டு , நம்மை மீட்புக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதை ஒதுக்கி விடுகிறோம்.

கடவுள் நம்மை ஒன்றும் அப்படியே புனிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால், நாம் கிறிஸ்துவை போல ஒவ்வவொரு நாளும் மாற வேண்டும் என்ற ஆவலோடு இருக்க வேண்டும். என்று விரும்புகிறார். தொடர்ந்து நாம் ஒவ்வொரு நாளும், நாம் நம்மையே அறிந்து, நமது வாழ்வில் உள்ள தீமைகளை களைந்து , கிறிஸ்துவை நோக்கி முன்னேற வேண்டும் . இந்த மாற்றத்திற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து அதில் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்தாலே , கடவுள் நம் மேல் பெருமிதம் அடைவார்.



© 2015 by Terry A. Modica

No comments: