Friday, August 12, 2016

ஆகஸ்டு 14, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு 14, 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டும் 20ம் ஞாயிறு
Jeremiah 38:4-6, 8-10
Ps 40:2-4, 18 (with 14b)
Heb 12:1-4
Luke 12:49-53

லூக்கா  நற்செய்தி

பிளவு ஏற்படுதல்
(மத் 10:34 - 36)
49மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

50ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

51மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.

53தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.
(thanks to www.arulvakku.com)

இந்த உலகை மாற்றும் தீ  

இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசு "நாம் அமைதியை ஏற்படுத்த இந்த உலகிற்கு வரவில்லை " என்கிறார். தீ மூட்டவே வந்தேன் என்கிறார். இயேசு பரிசுத்த ஆவியின் தீயை அதன் நெருப்பை , ஒவ்வொருவரும் அவர்கள் உள்ளத்திலே பெறவேண்டும் என ஆசைபட்டார். இது தான் இந்த உலகை மாற்றுகிறது. இது தான் நிலையான அமைதியை தருகிறது, முதலில் நம்மிடையே அமைதியை தருகிறது, பிறகும், நம்மில்லிருந்து மற்றவர்களுக்கு செல்கிறது.  

நம்மில் உள்ள தீ நம்மில் உள்ள குறைகளை -- அன்பில்லாத நடத்தைகள் , தீய குணகங்கள் --நீக்கி சுத்தமாக்குகிறது. இவைகள் அனைத்தும், நம்மில், விரோதம், ஒற்றுமையின்மை, விவாதங்கள், மற்றும் போரை உருவாக்குகின்றன. பரிசுத்த ஆவி நம்மை சுத்தமாக்குவதால்,  நமது சோதனைகள், போராட்டங்கள் மத்தியிலும் நம்மால் அமைதியை உணர முடியும்.இதன் மூலம் கடவுளின் அமைதியை இந்த உலகத்திற்கு  எடுத்து வரும்  கருவியாக நாம் இருப்போம். பரிசுத்த ஆவியின் தீயை நாம் உணரவில்லை என்றாள், இயேசு உங்கள் மேல் வேதனையுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.

உங்களை சுற்றி உள்ள பேய்களை , அதனை நிறுத்த வேண்டும் என்று  நாம் நினைப்பவைகளை மனதில் கொண்டு வாருங்கள், இதற்கு, இயேசு நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்  ?  , பரிசுத்த ஆவியின் தீ , உங்களின் எந்த குறைகளை எரிக்க வேண்டும், அதன் மூலம் தெய்விகம் அந்த சாத்தானை விரட்டி அடிக்கும். ?  இயேசு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். என்ன மாதிரியான ஞானஸ்நானம் பற்றி இயேசு கூறுகிறார்? தண்ணீரால் ஆன ஞானஸ்நானம் அவர் ஏற்கனவே பெற்று விட்டார். தன்னையே வேதனைக்கு உட்படுத்தும் திரு முழுக்கை பற்றி நமக்கு சொல்லி, நமக்காக , பாவங்களை நம்மை விட்டு நீக்குவதற்காக அவராகவே முழு விருப்பத்துடன் தன்னை ஆட்படுத்தி கொண்டார்.

சாத்தானை நிறுத்த , நாம் இயேசுவை போல மாற வேண்டும். மர்ரவர்களுக்காக நம்மை தியாகம் செய்ய நாம் விருப்பத்துடன் இருப்பது, கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை காட்டுகிறது. நித்திய வாழ்வின் அமைதியை மற்றவர்கள் பெற , நம் இருதயமும், ஆன்மாவும் , ஜெபத்திலும் , செயல்களிலும் ஒரு தீயை போல ஈடுபாடு கொள்தல் வேண்டும். அப்பொழுது தான் நம் உள்ளத்தில் அமைதி ஏற்படும் என்ற வேட்கையுடன் செயல் பட வேண்டும்.

தீ குடும்பத்தை பிளவு படுத்தும் என்று இயேசு குறிப்பிடுகிறார் . எவரும், சுய நலத்துடன் இருப்பவரை நம்மை விட்டு பிரிக்கிறது. மேலும், தியாகம் செய்ய மறு ப்பவர்களுடனும் பிரிவு ஏற்படுகிறது. எனினும், நாம் அவர்கள் மேல் அன்பு செலுத்த வேண்டும். தொடர்ந்து நம் அன்பு பரவும்போழுது, நம்மில் தீ வளர்கிறது , அது மேலும், நம்மை புனிதமக்குகிறது, தொடர்ந்து, இந்த உலகம் மாறுகிறது.

 ©

No comments: