Friday, August 5, 2016

ஆகஸ்டு 7, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஆகஸ்டு 7, 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 19ம்  ஞாயிறு

Wisdom 18:6-9
Ps 33:1, 12, 18-22
Heb 11:1-2, 8-19
Luke 12:32-48

லூக்கா நற்செய்தி

32சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.
33உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.

34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)

35உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.

36திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

38தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

39எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

40நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
41அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

42அதற்கு ஆண்டவர் கூறியது: 
தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?
43தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.

44அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

45ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்
46அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.

48ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.

(thanks to www.arulvakku.com)
கடவுள் கொடுக்கும் அனைத்தையும் பெற்று கொள்வது எப்படி ?

இன்றைய நற்செய்தியில், இயேசு, விண்ணரசை நம் எல்லோருக்கும் கொடுக்க திருஉளம் கொண்டுள்ளார் என்றும், அது விண்ணக வாழ்வும் , இந்த உலகில் உள்ள அனைத்தும் , அவரின் அன்பும், இன்னும் பல உங்களுக்கு சந்தோசமாக கொடுக்க ஆசைபடுகிறார் என்றும்  நமக்கு சொல்கிறார் .

எந்த ஒரு நல்லதையும் கடவுள் நம்மிடம் மறைப்பதில்லை. ஆனால், நாம் அதனை பெற்று கொள்கிறோமா ?

கடவுளின் அன்பையும்    அவரது ஆசிர்வாதத்தையும் மற்றவர்களுடன்  பகிர்ந்து கொள்ளாமல், இந்த உலக செல்வங்கள் மேல் நாம் பற்று கொண்டிருந்தாள், நம் கையில் நிலையான சொத்து என்று ஒன்று கிடையாது என்று இயேசு விளக்கி சொல்கிறார். உங்கள் பண பைகள் முழுதும் இந்த உலக ஆசைகளில் நிரம்பி இருந்தால், மற்றவர்களை அது தள்ளியே வைத்திருக்கும், மேலும், உங்கள் வாழ்வில் கடவுளடன் உண்டான பரிசுத்த  தொடர்பு உங்களை விட்டு சென்று விடும், கடவுளுடைய வியத்தகு காரியங்களுக்கும், நித்திய வாழ்வின் அன்பளிப்புகளுக்கும் உங்கள் வாழ்வில் இடம் இல்லாமல் போய்விடும் .
"34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." என்று இயேசு கூறுகிறார்

கடவுளுக்கு உகந்தது அல்லாத அனைத்தும், நிலையில்லா வாழ்வை கொண்டவை. அவை அனைத்தும், நம்மை கடவுளிடம் கொண்டு செல்பவை அல்ல, இவை அனைத்தையும், கடவுளிடமிருந்து வரும் அரிய வியத்தகு செல்வத்திற்காக நாம் விட்டு கொடுக்க வேண்டும்.

நம்மிடம் உள்ள எல்லா பொருட்களையும் விற்று விட்டு, பரலோக சொத்திற்காக காத்திருக்க வேண்டும் என இயேசு சொல்ல வில்லை. நம்மிடம் உள்ள இந்த உலக பொருட்கள் எல்லாம் வின்னகத்திற்கான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும். என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும். அவைகள் எல்லாம் இறையரசிற்காக உபயோகமாக இருக்கிறதா? இல்லை இந்த உலக ஆசைகளுக்காக செலவிடபடுகிறதா ?
கடவுளோடு நம்மை இணைக்கும் அனைத்தும், அது மட்டுமே நம்மிடம் உள்ள செல்வம் ஆகும். அது நித்திய இன்பத்தை நமக்கு தரும்.

இந்த உலக சொத்துகளுக்காக நம் நேரத்தை செலவிட வேண்டாம் என இயேசு நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். எப்பொழுது வீட்டின் தலைவன் வருவார் என நமக்கு தெரியாது. அவர் நம்மை இங்கிருந்து எடுத்து நிலையான கடவுளுடன் ஆன வாழ்விற்காக அழைத்து செல்வார் என நமக்கு தெரியாது. நாம் தயாராய் இருக்கிறோமா? அல்லது இந்த உலக வாழ்விற்காக , அதன் ஆசைகளுக்குண்டான வேலைகளை செய்து கொண்டிருகிறோமா  ?

அதனால் தான் நம் மேல் பேரிரக்கம் கொண்டு, நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை கொடுத்துள்ளார். இந்த உலக செல்வங்கள், பாவங்களை விட்டு நாம் விலக , நமக்கு வலி ஏற்படும், அதன் மூலம் மோட்சத்தின் நல்லவைகள் மேல் நாம் அசை கொள்வோம். இதனை தான் இயேசு "அடிபடுவான் " என்று வேலையாட்களுக்கு சொல்கிறார்.

ஏன் இதற்காக காத்திருக்க வேண்டும், இப்பொழுதே , நாம் விண்ணக அரசிற்கான செல்வத்தை தேடுவோம், கடவுளின் மாட்சிமையில் பங்கு கொள்ள நாம் முனைவோம். அந்த செல்வத்தை எந்த திருடனும் திருடவோ அழிக்கவோ முடியாது.


 © Terry Modica

No comments: