Saturday, November 12, 2016

நவம்பர் 13, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர்  13, 2016   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  33ம் ஞாயிறு
Malachi 3:19-20a
Ps 98:5-9
2 Thessalonians 3:7-12
Luke 21:5-19
லூக்கா நற்செய்தி
எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

6இயேசு,  இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்
 என்றார்.
வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
8அதற்கு அவர், 
நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டதுஎன்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.

9
ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது என்றார்.
10மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: 
நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.

11பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.

13எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

14அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

15ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

16ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.

17என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.

18இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

19நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.
(thanks to www.arulvakku.com)

தற்காலிகம் மற்றும் தெய்வீகம்
இன்றைய நற்செய்தியில், இயேசு கோவிலில் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒன்றோடொன்று சில காலத்தில் சேர்ந்து இருக்காது - அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் - என்று கூறுகிறார், ஏனெனில், ஒரு நாள் கோவில் இடிந்து விழும். இந்த உலகில் எதுவும் நிலையானது இல்லை என நமக்கு நினைவு படுத்துகிறார்.
இந்த உலகில் நீங்கள் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவிக்கும் விசயம் எது. அவை அனைத்தும் தற்காலிகமானவை.நீங்கள் கஷ்டப்படும் விசயம் என்ன ? அதுவும் நிரந்தரமில்லை. இந்த உலகில் எதனை சார்ந்து இருக்கிறீர்கள் அதுவும் தற்காலிகமானது தான். நீங்கள் ரசிக்கும், நம்பிக்கை கொள்ளும்,  சேகரித்து வைத்திருக்கும் , பல நேரங்களை செலவழித்து மிக பெரிய வெற்றியை அடைய நினைக்கும் செயல்கள் அனைத்துமே தற்காலிகமானவை - ஆனால் அவையெல்லாம் இறையரசிற்கு உபயோகமாக இருக்கும் பொழுது கண்டிப்பாக பயன் உள்ளவை.
.
கடவுளை நோக்கியே நம் எல்லா செயல்களும் இருக்க வேண்டும் என்று நமக்கு தெரியும். நித்திய வாழ்வை நோக்கியே நம் செயல்கள் இருக்க வேண்டும் என்றும் நமக்கு தெரியும். ஆனால்  இந்த செயல்களில் நமக்கு அவ்வளவு சவுகரியமில்லை. அநிதிக்கு எதிராக, ஒழுக்க கேட்டிற்கு எதிராகவும் கடவுள் இவ்வுலகில் காட்ட வேண்டும் என்று, நடவடிக்கை எடுக்க வேண்டும் , நீதியை மெய்ப்பித்து காட்ட வேண்டும் என்றும், சீடர்கள் அனைவரும் விரும்பியது போல, நாமும் விரும்புகிறோம். இந்த தற்காலிக உலகில் நடக்கும் போரும், நில நடுக்கத்திற்கும், கொடிய நோய்களுக்கும் மற்றும் பஞ்ச்சத்திற்கும்  கடவுள் நிறுத்த வேண்டும் என நாம் விரும்பிகிறோம்.  இயேசு இரண்டாம் வருகை சீக்கிரமே வந்து இவையெல்லாம் முடித்து வைக்க வேண்டும் என விரும்புகிறோம்.
நம் அனுதின வாழ்வில், நாம் கடவுளின் உதவியை நாடுகிறோம். நமது விசுவாசத்தை நிலைத்திருக்க நாம் உறுதியான விசயத்தை எதிர்பார்க்கிறோம். நமது எதிர்கலாத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைபடுகிறோம். கடவுள் என்ன மாதிரியான திட்டத்தை வைத்திருக்கிறார் என்று அறிய ஆசைபடுகிறோம். பாதுகாப்பில்லாத நிலையை நாம் வெறுக்கிறோம். கடவுள் மேல் சார்ந்து இருப்பதை விட, நம் கண் முன்னாள் நாம் பார்ப்பதை சார்ந்து இருக்கிறோம். கடவுளை நம்மால் பார்க்க முடியாது அதானால், ஏதாவது அடையாளங்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
எனினும், கடவுளோடு இணைந்து முன்னேறி நடக்க, நாம் என்ன செய்ய வேண்டும் எனில், ஒரு ஸ்டேப் எடுத்து வைத்து விட்டு, இன்னொரு அடி எடுத்து வைக்கும் முன்பு கடவுளிடம் - "நான் எனது அடுத்த அடியை எங்கே வைப்பது " என்று கேளுங்கள் .
கடவுளை சுற்றியே நம் செயல்கள் இருக்கலாம் அப்படி இல்லாத பொழுது, நாம் தள்ளாடி கீழே விழுகிறோம். கடவுள் நாம் அடுத்த அடியை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால் ஒன்று நாம் கீழே விழுவோம் அல்லது ஜடவுளின் கைகளில் விழுவோம் .
கடவுளின் கைகள் எப்பொழுதுமே இருப்பவை!. தற்காலிகமானது இல்லை. !. கடவுளின் கைகள் நமக்கு முழு பாதுகாப்பு கொடுப்பவை, அவரின் எல்லையில்லா அன்பும், தெய்வீக ஆற்றலும் , நம்மை காப்பவை. அவரின் அன்பும் பாதுகாப்பும், என்றும் தோற்று போவதில்லை.


© 2016 by Terry A. Modica

No comments: