Saturday, November 5, 2016

நவம்பர் 6 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 6 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  32ம் ஞாயிறு
2 Maccabees 7:1-2, 9-14
Ps 17:1, 5-6, 8, 15
2 Thessalonians 2:16--3:5
Luke 20:27-38

லூக்கா நற்செய்தி

உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி
(மத் 22:23 - 33; மாற் 12:18 - 27)
27உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,

28போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார்.

29இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.

30இரண்டாம்,

31மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்;

32கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

33அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.
34அதற்கு இயேசு அவர்களிடம், 
இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

35ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.

36இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.

37இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்என்று கூறியிருக்கிறார்.

38
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே
 என்றார்
(thanks to www.arulvakku.com)
விண்ணுலகில் ஏன் திருமணம் செய்து கொள்வது இல்லை ?
உயிர்த்தெழுதலை நீங்கள் நம்புகிறீர்களா? என்கிற கேள்வியை தான் இயேசு வேறு விதமாக சதுசேயரிடம் சவால் விட்டு கேட்கிறார்.
 கிறிஸ்தவர்களாக நாம், மீட்பின் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம், கிறிஸ்துவை போல நாமும் உயிர்த்தெழுவோம் என்கிற நம்பிக்கையோடு , இந்த தற்கால வாழ்வை விட்டு நித்திய வாழ்விற்கு செல்வோம் என்று நாம் காத்திரூக்கிறோம். இயேசுவை பின் செல்பவர்கள் அனைவரும் வான தூதர்களை போல நாமும் எல்லா காலமும் வாழ்வோம் என்ற விசுவாசத்தில் இருக்கிறோம். அதனால் தான், கத்தோலிக்க இறப்பு திருப்பலியில், கருப்பு உடைகளுக்கு பதிலாக, வெண்மை உடை அனிகிறோம்.


அன்பின் உயிர்த்தெழுதலில் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கிறீர்களா? உயிர்த்தெழுதலை இயேசு திருமனம் மூலம் விளக்கி சொல்கிறார். கடவுளின் தீவிர அன்பினை வெளிப்படுத்தும் விதமாக திருமணம் இருக்கிறது. இடைவிடாத, இறுதி வரை அன்பானது திருமணமான ஆணும் பெண்ணுக்கும் இடையே நீடிக்கும், அது தான் கடவுளின் பிரசன்னத்த்தை காட்டும் அன்பு. கடவுள் நம் மேல் உள்ள விசுவாசத்தை, அக்கறையும், இந்த உலகத்தில் திருமணம் எடுத்து காட்டுகிறது.

அப்புறம் ஏன் இயேசு நித்திய வாழ்வில் திருமணம் என்பது இல்லை என்று கூறினார்? ஏன் இந்த திருமணம் , வின்னகத்த்திலும் அதே கணவன் மனைவியுடனும் தொடர்ந்து இருக்க கூதாது ?
இந்த உலகில், அன்பானது முழுமையாக கொடுக்கபடுவதோ அல்லது , முழுமையாக பெறபடுவதோ இல்லை. அதனால் , இந்த அன்பானது இறந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது . ஒவ்வொரு கணவனும் மனைவியும், அன்பின் குறைவினால், மனம் வருந்தி , மன்னிக்கவும் செய்கின்றனர். மற்ற நட்பிலும் இதே போல நடக்கிறது.

முழுமையான சுத்தமான அன்பு கடவுளிடமிருந்து தான் வரும். நாம் கடவுளின் உண்மையான குழந்தைகளாக வாழும்பொழுது, நாம் நம் சகோதரர்களை ,கடவுள் அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்தல் வேண்டும். திருமணம் வின்னகத்தில் இல்லை, ஏனெனில், திருமணத்தில் முழுமையான அன்பு இல்லை, அதிலே குறைகள் இருக்கிறது: நமது துணையை மற்றவர்களை விட அதிகமாக அன்பு செய்கிறோம். ஆனால் வின்னகத்திலோ, ஒவ்வொருவரையும் முழுதுமாக அன்பு செய்வோம். நமது துணை நம்மை எப்படி அன்பு செய்வாரோ அதனை விட ஒரு படி மேலே போய் , நம்மை எதிரியும் கூட அன்பு செய்வார்கள்.
விண்ணகத்தில் இருக்கும் தெய்வீகத்தையும், விசுவாசமும், அளவு கடந்த அன்பினையும் நாம் பகிர்ந்து கொள்வது போல,  இந்த உலகில் முன்னேரே காட்டும் விசயம் தான் திருமணம்.


© 2016 by Terry A. Modica

No comments: