Saturday, March 3, 2018

மார்ச் 4 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச்  4 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலம் 3ம் ஞாயிறு
Exodus 20:1-17
Ps 19:8-11
1 Corinthians 1:22-25
John 2:13-25

யோவான் நற்செய்தி

கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46)
13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;

14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;

15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடுமாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

16அவர் புறா விற்பவர்களிடம்
இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்
 என்று கூறினார்.

17அப்போது அவருடைய சீடர்கள்.
உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம்
என்னை எரித்துவிடும்
என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

18யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.

19இயேசு மறுமொழியாக அவர்களிடம்
இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்
 என்றார்.

20அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்டார்கள்.
21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
இயேசு அனைவரையும் அறிபவர்
23பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.

24ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும்.

25மனிதரைப்பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய ஞாயிறின் நற்செய்தியில் வரும் கடைசியில் வரும் வசனங்கள் மிகவும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன: இயேசு அடையாளங்களாலும், அருட் செயல்களாலும் மனம் திரும்பியவர்களை நம்புவதில்லை. அதன் அர்த்தம்: மனித மனங்களின் அளவினோடு யாரும் இறையரசை பரப்புவதையோ அல்லது சாட்சியாக இருப்பதையோ இயேசு விரும்பவில்லை .
அடையாளங்களாலும், அருங்குறிகளாலும் விசுவாசம் கொள்வது மனித பண்பு: நாம் கண் கூடாக பார்த்து நம்புவது, தொட்டு பார்த்து நம்புவது,  நேராக கேட்பதிலும் நம்புவது என்பது மிகவும் சுலபம். ஆனால் கடவுளோ நம் கண்களுக்கு தெரியாதவர், அவர் குரலும் நமக்கு சத்தமாக கேட்பதில்லை. இப்படி நம்புவது ஒன்றும் இயற்கையை தாண்டியா விசுவாசம் இல்லை. ஆனால் கடவுளோ இயற்கைய தாண்டி அளவிட முடியாதவராக இருக்கிறார்.
நாம் ஜெபம் செய்து செய்து கடவுள் அதற்கு பதிலாக ஒரு பதிலையும் கொடுக்காமல் , எந்த ஒரூ அறி குறியும் தெரியவில்லை என்றால், நமது விசுவாசம் என்ன ஆகும். இதற்கு பதில் தான், நாம் இயற்கையோடு ஒன்றி இருக்கிறோமோ அல்லது அதனை தாண்டிய கடவுளின் தன்மையை நாம் விசுவசிக்கிறோமோ என்று தெரிகிறது. அதன் மூலம் தான் நமது தெய்வீக வாழ்வு தொடர்கிறது.
இயேசுவிற்கு தெரியும், அவர் அங்கே மனிதனாக நிற்பதே மிக பெரிய அறிகுறி என்றும், மிக விரைவில் இவ்வுலகை விட்டு சென்று விடுவார் என்றும் தெரியும். நாமே சில நேரங்களில் இயேசு நம் கண் முன்னே வந்து நிற்க வேண்டும் மேலும், அவர் குரல் நமக்கு கேட்க வேண்டும் ஏன் ஆசைபடுவது இல்லையா ?  அதன் மூலம் நம் விசுவாசம் இன்னும் உறுதி படும் என நினைக்கிறோம்.
நாம் கேட்ட ஜெபத்திற்கு பதில் கிடைத்தால், கடவுளின் அன்பு நமக்கு கிடைக்கும் பொழுதும், நம்மில் அமைதியும் சந்தோசமும் நிலவும் போதும் , நம் விசுவாசம் வளர உதவும் அறிகுறிகளாக நாமே வகைபடுத்தி கொள்கிறோம். ஆனால், நாம் பல துன்பத்திற்கு ஆளாக நேருகிற பொழுது, இருளை சந்திக்கிற பொழுது நம் விசுவாசம் என்ன ஆகும்? நாம் தொடர்ந்தும் கடவுளை நம்புகிறோமோ, நம் வேண்டுதல்களுக்கு அறிகுறிகள் வராத பொழுதும்?
உறவுகளின் நம்பிக்கை மூலம் நமக்கு வரும் விசுவாசமே , நாம் தொடர்ந்து கடைபிடிக்க  வேண்டிய ஆகும். உண்மையாகவே முழு நம்பிக்கை கொள்வது ஆகும். நாம் கடவுளை நம்ப ஒரு முடிவெடுத்தால், அவரின் உண்மை தன்மையை நினைத்தும், அவர் எந்த அளவிற்கு நம் மேல் அக்கறை கொள்கிறார் என்றும்  அவர் மேல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் அறிகுறிகளால் அல்ல.
இதனை நாம் பெற்றிட, நமக்கு இயற்கையை தாண்டிய விசுவாசம் வேண்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தில் நாம் இணையும் பொழுது, அவரின் விசுவாசத்தோடு நாம் இணைகிறோம். பிறகு, எந்த அறிகுறியும் இல்லாமலே நாம் அவர் மேல் விசுவாசம் கொள்வோம்.

அடுத்த முறை, நீங்கள் நற்கருணை உட்கொள்ளும் முன்பு, இதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவர் உடலை மட்டும் நீங்கள் முழுமையாக பெற்று கொள்ளவில்லை, அவர் தெய்வீகத்தொடும் நீங்கள் இணைகிறீர்கள். மேலும், அவர் உங்களோடு தன்னை இணைத்து கொள்கிறார். இதனை உண்மையாக முழுமையாக நம்பினால், உங்களுள் அருஞ்செயல்கள் நடக்கும், அற்புதங்கள் நடக்கும், ஆனால், அது ஒன்றும், அவர் நமக்கு கொடுக்கும் பெரிய அன்பளிப்பு அல்ல,
அவரையே முழுமையாக நமக்கு கொடுக்கிறார்.
© 2018 by Terry A. Modica

No comments: