Saturday, April 14, 2007

april 15h sunday மறையுரை

Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Rev 1:9-13, 17-19
John 20:19-31
http://www.usccb.org/nab/041507.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பு+ட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார். 29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.


மறையுரை:

இந்த வார ஞாயிறு நற்செய்தி, பெந்தகோஸ்தோவிற்கான நாளை முன்னிறுத்துகிறது. யேசு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று கூறி, அவர்களுக்கு ஆவியின் அன்பளிப்பை தருகிறார். இது ஒரு தெய்வீகமான அன்பளிப்பு. இது நம்மில் ஊடுருவி, நம்முடைய சோதனைகளிலும், கக்ஷ்டமான நேரங்களிலும் நம்மோடு இருப்பது. இது ஒரு அமைதி, இது கடவுளின் மன்னிப்பிலுருந்து வரும் அமைதி. இந்த ஒரே சந்திப்பில், இரண்டு முறை யேசு அவருடைய சீடர்களுக்கு கொடுக்கிறார். அதற்கு அப்புறம், தன்னுடைய முதல் அப்போஸ்தலர்களுக்கு, அவர்களை குருத்துவ நிலைக்கு உயர்த்துகிறார் , அதன் மூலம், அவர்கள் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார்.

யேசுவால் கொடுக்கப்பட்ட இந்த அமைதியின் அன்பளிப்பு, தற்போது குருவானவரிடமிருந்து கொடுக்கப்படுகிறது, அதனை தான் நாம் இப்போது, "இறவனில், மீண்டும் இணைதல்" என்று கூறுகிறோம். இதன் மூலம், நாம் தெய்வீகத்துடன் இருக்கும் முயற்சியில் திடமாகிறோம். யேசு இன்னனும், நமக்கு கடவுளின் ஆவியை தருகிறார், அது தான் பரிசுத்த ஆவி. அது தான் நம்மை உயிரோடு வைத்திருக்கிறது. சாவிலிருந்தும், பாவத்தின் அழிவிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. இந்த பரிசுத்த ஆவி கடவுளின் தெய்வீக ஆவி.

நம் பாவங்களை மன்னிப்பதற்காக இரக்கம் நிறைந்த கடவுள் தன்னையே சிலுவை சாவிற்கு அர்ப்பனித்தார். இந்த தியாகத்தினால் தான், நாம் சாவின் அழிவிலிருந்து கடவுளின் நித்திய இளைப்பாற்றலை, அவரின் அன்பை அடைய எழ முடியும்.

"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்ற யேசுவின் செபத்தை, மிகவும் மெதுவாகவும், கவனத்துடனும் சொல்லவும், "எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்" என்ற வாக்கியத்தை கூர்ந்து நோக்கவும். எந்த பாவங்களை, உங்களால் மன்னிக்க விருப்பமில்லாமல், உங்களில் வைத்திருக்கிறீர்கள். இது அவர்களுடைய ஆன்மாவையும், உங்களின் ஆன்மாவையும் பாதிக்கும். ஏனெனில், உங்கள் மூலம் கடவுளின் மன்னிப்பை அவர்கள் அறியும் ஒரு வாய்ப்பை ஒதுக்கி விடுகிறீர்கள். மற்றும், கடவுள் உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கும் உள்ள வாய்ப்பை தவற விடுகீறீர்கள்.
நாம் ஒவ்வொரு முறை மன்னிக்கும் போதும், கிறிஸ்துவின் மீட்பில், உயிர்த்து எழுதலில் பங்கு கொள்கிறோம். அவர்கள் மன்னிப்பு கேட்டாலும், கேட்காவிடினும், நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால், "கொடுப்பதில் தான் நாம் பெறுகிறோம்"

நம் சுய சிந்தனைக்கான கேள்வி:
உங்கள் வாழ்க்கையில், யாரை மன்னிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.? சில சமயம், நீங்களாக கூட இருக்கலாம். எந்த பாவங்களை கடவுள் மன்னிப்பு வழங்கிய பின்பும், நாம் மன்னிக்காமல் நிராகரிக்கிறோம். இந்த வாரம், இந்த பாவங்களை உன்னிடமிருந்து அகற்ற என்ன செய்ய போகிறாய்.?
(http://gnm.org)

No comments: