Thursday, April 5, 2007

புனித வெள்ளி april 6 2007

Today's Readings:
Isaiah 52:13 -- 53:12
Ps 31:2, 6, 12-13, 15-16, 17, 25
Heb 4:14-16; 5:7-9
John 18:1 -- 19:42
http://www.usccb.org/nab/040607.shtml
http://www.arulvakku.com/

யேசுவின் மரணம், அதன் பிறகு அவரின் உயிர்ப்புக்கு பிறகு, பல நூற்றாண்டுகளாக யேசு நற்செய்தியாளர்களுக்கு, சமய அறிஞர்களுக்கு, "யார் அவருடைய ஆர்வமான அல்லது அவர் கொடுக்கும் முக்கிய செயலை நினைத்து தியாணிக்கிறார்களோ" அவர்கள் அனைவரும் ஆண்டவரால் விரும்பப்படுபவர்கள். புனித அகுஸ்தினார் இப்ப்டி எழுதியுள்ளார்." யார் கடவுளின் ஆழ்ந்த விருப்பத்தை தினமும் தியாணம் செயவது, நமது ஆண்மாவிற்கு அதிக லாபம் கொடுக்கும் செயலாகும்".

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம், இந்த காலங்களில் நாம் பார்ப்பது, யேசு நம் மீது உள்ள அன்பினால், அவர் அடைந்த கொடூரமான வேதனைகளை நீக்கி விட்டு காட்டப்படும் உருவம். இன்று அந்த அன்பை நினைத்து தியானம் செய். அந்த அன்பு அளவிட முடியாதது, பிரமாண்டமானது. அவர் சந்தோசமாகவும், ஆர்வத்துடனமும் தன்னையே இந்த மிக பெரிய வேதனைக்கு கையளித்து, பல வேதனைகளை அடைந்தார், ஏனெனில், அவர் உன்னை முழுமையாக அன்பு செய்கிறார். அவருக்கு இந்த வேதனை உனக்கு நல்லது செய்யும் என்பது தெரியும்.

இந்த மிக பெரிய அன்பளிப்பு, யெசெஉ உனக்கும், எனக்கும் கொடுத்தது, மற்றும் எல்லோருக்கும் , அதனை ஏற்றுகொள்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இன்றைய நற்செய்தியை படித்து, அதில் ஒவ்வொரு வலிக்கும், காயங்களுக்கும் எவ்வளவு வேதணைபட்டார் என்பதை புர்ந்து கொள், அத்தனை வேதனையும், வலியும், உன் நலனுக்காக கொடுக்கப்பட்டது, உன் பாவங்கள் உன்னை அழிக்காமல் இருப்பதற்காக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் எவ்வளவு உன்னை பாதுகாக்கிறார் என்பதை புரிந்து கொள்.

யேசுவின் சிலுவையை உற்று நோக்கு அது உன்னை பற்றிய தாழ்வான மதிப்பை குணமாக்கும். ஏனெனில் யேசு எவ்வளவு உயரத்தில் நம்மை தூக்கி வைத்தார் என்பதை இந்த சிலுவை நமக்கு காட்டுக்கிறது. இவ்வளவு உனக்கு இதனை செய்த பின்பு , உனக்கு வேறு தேவையானவற்றை செய்யாமலிருப்பார? அவர் உன் உணமையான் நலம் விரும்பியாக இருந்தால்.? எந்த வேதனை இது மாதிரியான சந்தேகத்தை எழுப்பியது, உன்னைபற்றிய இரக்கமற்ற யோசனை என்ன? நீ உன்னை பற்றி தாழ்வாக எதை நினைத்து கொள்கிறாய். இதனையெல்லாம் சிலுவைக்கு எடுத்து செல், அதனை அந்த வீரர்களிடம் கொடு, அவர்கள் அதனை அந்த ஆணியோடு அறைவதை பார், இந்த காயங்கள் யேசுவோடு மரணமடையட்டும். அவர் இதன் வேதணைகளை உனக்காக அவர் ஏற்கனவே வாங்கிவிட்டார்.

கத்தோலிக்க கோவில்களில், புனித வெள்ளியனன்று, மிக பெரிய மரியாதை செலுத்தும் விதமாக சிலுவையை முத்தம் செய்கிறோம். உஙகளுடைய முத்தம், யேசுவிற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கட்டும்.

பிறகு, புனித சனியன்று, யேசுவின் கல்லறையோடு சேர்ந்து அமைதியாக ஓய்வெடு. கடவுள் உன் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார், என்பதை நினைத்து அமைதியாக ஓய்வெடு. ஈஸ்டர் ஞாயிறு அன்று உனக்காக மிக பெரிய மீட்பை, உயிர்த்தழுதலை கொடுக்க இருக்கிறார்.

கல்வாரி மலைக்கு இறுதி அடி எடுத்து வை: உன்னை பற்றி தவறாக நினைக்கும் விசயங்களை பட்டியலிடு. உஙகளை ஏளனம் செய்த, அவமானம் செய்தவர்களின் பெயர்களை பட்டியலிடு. உன்னை பற்றி மதிப்பில்லாதவன் என நினைத்த நேரங்களை பட்டியலிடு. உன்னை குறைவாக மதிப்பிட செய்யும் எல்ல விசயங்கலும் பட்டியலிடு. அதற்கு பிறகு, யேசுவின் சிலுவையை பார்த்து அவரின் தியாகம் செய்த அன்பினை நினைத்து தியாணம் செய். அவர் சந்தோசத்தோடும், மிகவும் விருப்பத்துடனும் இந்த வலியையும் வேதனையையும் ஏற்றுக்கொண்டார், ஏனெனில், கடவுள் உங்களை அன்பு செய்கிறார்.இந்த வேதனையும், வலியும் உஙகளை வின்னக அரசுக்கு அழைத்து செல்லும் என்று அவருக்கு தெரியும்.

http://www.gnm.org

No comments: