Monday, April 2, 2007

April 3rd , மறையுரை

எசாயா
அதிகாரம் 49
1 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். 2 என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார். 3 அவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் என்றார். 4 நானோ, வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது: என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது என்றேன். 5 யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்: அவர் இப்பொழுது உரைக்கிறார்: 6 அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 13
21 இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று திட்டவட்டமாகக் கூறினார். 22 யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். 23 இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்பு கொண்டிருந்தார். 24 சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ' யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள் ' என்றார். 25 இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ' ஆண்டவரே அவன் யார்? ' என்று கேட்டார். 26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். 27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ' நீ செய்யவிருப்பதை விரைவில் செய் ' என்றார். 28 இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை. 29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர். 30 யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். 31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். 36 சீமோன் பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்? ' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ' நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய் ' என்றார்.



மறையுரை
இன்றைய முதல் வாசகத்தில், எந்த வரிகள் உனக்கு ஆறுதல் தருகின்றது?

நீ எபொழுதாவது, நான் வேண்டபடாதவன் என்றோ, குறைந்து மதிப்பிடப்பட்டோ, அல்லது நிராகரிக்கப்பட்டோ இருந்தால், இன்றைய வாசகத்தில், "கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்" என்ற வார்த்தை கடவுளின் ஆறுதலையும், அரவணைப்பையும் தரும்.

உன்னுடைய திட்டஙகள், கனவுகள், அல்லது கடின உழைப்பு நசுக்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, நீ இந்த வார்த்தைகளிலுருந்து உற்சாகத்தையும், உறுதியையும் காணலாம். "வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதியும் பரிசும் ஆண்டவரிடம் உள்ளது".



நீ அதர்மமான முறையில் நடத்தப்பட்டாலோ, உன்னுடைய திறமை , ஆற்றல் மற்றும் உனது நுண்ணறிவு மற்றவர்களால் தடைபட்டாலோ அல்லது உன்னிடம் ஒரு மதிப்பும் இல்லை என்று மற்றவர்கள் நினைத்தாலோ, உன்ன் மதிப்பை இந்த வார்த்தையிலிருந்து பெறுவாய்."ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்:"

இந்த மாதிரி வேதணை தரும் செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு எதிரான செயல். கடவுள் நம்மிடையே ஒரு சிலரை நம்மை வழிநடத்தவும், நம்மை தூக்கி விடவும் அனுப்புகிறார், ஆனால் அவர்களும் சில நேரஙலிஅல் நம் நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகின்றனர்.

சில வேதனைகள் மிக பெரிய நம்பிக்கை துரோகம், அதிலிருந்து நாம் மீள் முடியாது. நாம் ஆண்டவரிடம் ஜெபித்து, இந்த மாதிரியான காயங்களை குணப்படுத்தவும் இது மாதிரியான நட்பை மீண்டும் சரிபடுத்தவும் வேண்டிகொள்ள வேண்டும். ஆனால், கிறிஸ்துவின் வழி நடக்க உண்மையான விருப்பம் உள்ளவராய் நீ இருந்தால், நாமும் இந்த மாதிரியான துரோகத்தை இன்றைய நற்செய்தியில் யேசு ஏற்றுகொள்வது போல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யேசுவிற்கு இன்றைய இசையாவின் நற்செய்தி தெரியும். சந்தேகதிற்கு இடமில்லாமல், அவருக்கு துரோகம் இழைக்கப்படும்பொழுது, அதனை நினைவு கூர்ந்து கடவுளின் ஆறுதலையும், சக்தியையும் பெற்றார்.

கடவுளின் அன்பிலும், ஆறுதலிலும் அமைதியை பெற வேண்டுமானால், நாம் யேசுவை நோக்கி செல்ல வேண்டும். அதை விட்டு நாம், அந்த துரோகத்தையே நினைத்தோமானால், நமக்கு அமைதி கிடைக்காது. யேசுவுக்கு நாம் எப்படி நினைக்கிறோம் என்று தெரியும். அவர் அந்த துரோகத்தை நம்மோடு சேர்ந்து அனுபவிக்கிறார். அவர் நம் மேல் வைக்கும் அக்கறயினால் நமக்கு குணமாவதையும், புதிய அமைதியையும் காணலாம்.

கிற்ஸ்துவின் சிலுவைக்கு அருகில் அடியெடுத்து வை: உனக்கு ஏற்பட்ட துரோகஙகளை, உனக்கும் யேசுவுக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பாக ஏற்றுக்கொள். அவைகளை கிறிஸ்துவின் சிலுவையில் அறைந்து அதனை போக விடு. அதனுடைய அசிஙகத்திலிருந்து திரும்பி, அந்த துரோகிகளை மன்னித்து விடு. உன்னுடைய வலியை யேசு ஏற்று கொண்டதிற்காக அவருக்கு நன்றி சொல். அவருடைய காயஙகளை முததம் செய்வதாக நினைத்து , அடுத்த முறை நன்மை பெறும்பொழுது அதனை முத்தம் செய். இங்கு தான் உன்னுடைய முதல் மீட்பு தொடங்குகிறது.

No comments: