Saturday, July 14, 2007

july 15th sunday - நற்செய்தி & மறையுரை

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், ' போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார். 26 அதற்கு இயேசு, ' திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? ' என்று அவரிடம் கேட்டார். 27 அவர் மறுமொழியாக, ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ' என்று எழுதியுள்ளது ' என்றார். 28 இயேசு, ' சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் ' என்றார். 29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்டார். 30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ' ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். 32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ' இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன் ' என்றார். 36 ' கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? ' என்று இயேசு கேட்டார். 37 அதற்கு திருச்சட்ட அறிஞர், ' அவருக்கு இரக்கம் காட்டியவரே ' என்றார். இயேசு, ' நீரும் போய் அப்படியே செய்யும் ' என்று கூறினார்.

(http://www.arulvakku.com)


மறையுரை:

அன்பின் எதிர்பதம் வெறுப்பு அல்ல, "அக்கறையின்மை": ஒரு தேவையான விசயத்தை ஒதுக்கி தள்ளுதல், ஒரு துன்பத்திலிருந்து விடுபட, நாம் ஏதாவது செய்ய வேண்டிய நேரத்தில், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது, அக்கறையோடு இல்லாமல் இருப்பது தான் அன்பின் எதிர் செயல்கள் ஆகும். இன்றைய நற்செய்தியில், நல்ல சமாரியனின் கதையை விளக்குகிறார். நாம் கடவுளை நமது முழு உள்ளத்தோடும், நமது முழு சக்தியோடும் அன்பு செய்தோமானால், தாமாகவே மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவர்கள் புதியவர்கள் ஆக இருந்தாலும், அல்லது நாம் நமக்கு பிடிக்க தேவையில்லை என்று இருந்தாலும், அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் உள்ள ப்ரச்னைகள், மேலும் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம், நாம் கிறிஸ்தவர்கள், எதிலும் ஈடுபடாமல் இருப்பதுதான். கிறிஸ்துவின் மூலம், நம்மால் இந்த உலகை மாற்ற முடிந்தாலும், நாம் அதை செய்வதில்லை. நாம் நம் நேரங்களை, நம்முடைய சுய விருப்பங்களை தியாகம் செய்து, மற்ற விசயங்களில் ஈடுபடுவதில்லை. பல பிரச்னைகள், நம் குடும்பத்தில் அல்லது அலுவலகங்களில், நம் பங்கில் தொடர்ந்து கொண்டிருப்பத்தற்கு, நாம் மற்றவர்கள் மேல் அக்கறையின்றி இருப்பதே காரனம். நாம் முழுமையாக கடவுளை நேசித்து, இது மாதிரியான பிரச்னைகளில் நுழைந்து, அவர்கள் மேல் அக்கறை காட்டினால், எல்லாம் நல்லபடியாக முடியும்.

எந்த அளவிற்கு, நீ கடவுளை அன்பு செய்கிறாய்.இதற்கு பதில், நீ எவ்வளவு மற்றவர்களுக்காக உன்னையே தியாகம் செய்கிறாய் என்பதை பொறுத்து இருக்கிறது. இதுதான் அன்பின் இலக்கனம், இதை தான் யேசு இன்றைய நர்செய்தில் இந்த உவமானம் மூலம் விளக்குகிறார். நாம் யாருமே கடவுளை மிக சரியாக அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஆன்ம ஸ்தலத்தில் தான், நாம் முழுமையாக அன்பு செய்யாததற்கு, நாம் மனம் வருந்துவோம். அதன் மூலம், கடவுளின் முழு அன்பில் திளைத்து மோட்சத்தில் நுழைவோம். அது வரை, நமக்கு நம் வாழ்வை வலியில்லாமல் சுத்தமாக்குவதற்கு நமக்கு வாய்ப்புகள் உண்டு. நமக்கு , நாம் எவ்வளவு அன்பு செஇய்கிறோம் என்பதற்கு, நமக்கு சோதனைகல் கிடைக்கும். அதன் மூலம் மற்றவர்களை அன்பு செய்வதை முன்னேற்றி கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியிடம் கேள், அவர் தான் உனது ஆசிரியர், உனது அரசர், உனது புனிததின் வேர், அவரிடம் நீ கிறிஸ்துவை போல மாற உதவி கேள். யேசு மற்றவர்களை அன்பு செய்வது போல, நீயும் அன்பு செய்ய உதவுமாறு, பரிசுத்த ஆவியிடம் கேள். இந்த ஆவியின் பயிற்சி, நாட்களாக, வாரங்களாக தொடர, நீ கடவுளை மேலும் அன்பு செய்கிறோம், என்பதை அறிவாய். மேலும் அவரின் அன்பை முழுமையாக உள்ளுனர்வோடு அனுபவிப்பாய்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
நீ யாரையாவது, அவர்கள் வலியோடு இருக்கும்போது ஒதுங்கி சென்றிறுக்கிறாயா? யாராவது உன்னிடமிருந்து விலகி சென்று இருக்கிறார்களா? உங்களின் தற்பெருமயால், மன்னிக்காமல் இருப்பதால், தவறான் எண்ணத்தால், விலகியிருக்கிறார்களா?. நீ இதனால், அக்கறையில்லாமல், இருக்காதீர்கள். உன்னுடைய குற்றத்தை ஒத்துக்கொள். அதனை நற்கருணை ஆண்டவரிடம் எடுத்து சென்று, பாவ மன்னிப்பு கேள், அதன் மூலம் கடவுளின் முழு அன்பினை பெற்று, மர்றவர்களை மேலும் முழுமையாக அன்பு செய்.
(http://gnm.org)

No comments: