Friday, July 6, 2007

july 8th sunday : நற்செய்தி
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Gal 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். 2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ' அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். 3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். 5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ' இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! ' என முதலில் கூறுங்கள். 6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். 7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். 8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். 9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். 10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 11 ' எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள் ' எனச் சொல்லுங்கள். 12 அந்த நாளில் அவ்வ+ர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, ' ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன ' என்றனர். 18 அதற்கு அவர், ' வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். 19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. 20 ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் ' என்றார்.


http://www.arulvakku.com

மறையுரை:

இன்றைய நற்செய்தியில், "அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்." கடவுளிடம் வேண்டும் படி யேசு தனது சீடர்களிடம் கூறுகிறார். அடுத்த வார்த்தையாக "நீங்களெல்லாம், வேலையாட்கள், புறப்பட்டு போங்கள்" என்று கூறுகிறார்.

நீங்கள் கடவுளிடம் அதிக அருட்பணிக்கு அதிகம் பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டுவதுன்டா? அதுதான் யேசு உங்களிடம் கேட்கிறார். யேசு உங்களை "புறப்பட்டு செல்லுங்கள்" என்று கூறுகிறார். "உங்கள் அன்பளிப்புகள், திறமைகள், ஆற்றல்கள் அனைத்தையும் உபயோகியுங்கள்" என்று கூறி, ஆண்டவரின் அறுவடைக்கு உதவுங்கள் என்று சொல்கிறார்.

யேசு எப்போதுமே ஒன்றிணைந்து சேவை செய்பவர். இறைசேவக்கு தேவையான் ஆட்கள், நாம் எல்லாம், திருச்சபை குருக்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோரோடு சேர்ந்து தான் , எல்லாருடைய திறமை, ஆற்றல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, இறைசேவையை தொடர வேண்டும்.

இறைசேவைக்கு போதுமான ஆட்கள் இருக்கிறார்கள், என்ற நிலை வர, "வேறு பலர் இதனை செய்வார்கள்" என்ற நிணைப்பை விட்டு விட வேன்டும். நம்மில் சிலர் 'எல்லாவற்றையும் மிக சரியாக செய்ய வேண்டும்' என்ற நினைப்பை விட்டு விலக்க வேண்டும். மேலும், 'நான் என்னை பார்த்து கொள்வேன்' என்று நினைத்தால், மற்றவர்கள் உமக்கு சேவை செய்ய கிடைக்க வேண்டிய சந்தர்பம் இல்லாமல் போய்விடும்.

மற்றும் சிலர், தனது சுய கட்டுபாடு இழந்து விடுவோமோ ? என்ற பயத்தை போக்க வேண்டும். "நான் தான் மற்றவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று சொல்வேன்" என்று சொல்பவர்கள், திறமையான பல சேவையாளர்களை விரட்டி விடுவர். யேசு சொல்கிறார்"நீங்கள் எந்த பொருளும் எடுத்து செல்ல வேண்டாம், நமக்கு என்ன கொடுக்கபடுகிறதோ, அதையே பெற்றுக்க்கொள்ள வேண்டும்"

இறைசேவைக்கு நிறைய ஆட்கள் அதிகரிக்க, நாம் இறைவனிடம் வேண்டுவது, நம்முடைய ஒன்ரினைந்த சேவையிலிருந்து கிடைக்கிறது. திருச்சபைக்கு பல முன்மாதிரியான ஆட்கள் இருந்து மற்றவர்களை ஈர்க்க வேண்டும். ஆனால், இல்லறத்தாரும், நாம் எப்படி எதிர்பார்க்கிறோமோ , அதே எதிர் பார்ப்போடு இறைவனுக்கு சேவை செய்ய வேன்டும்,
அதே பரிசுத்தத்துடன் தொடர்ந்து செய்ய வேன்டும்.

http://gnm.org

No comments: