Friday, February 8, 2008

பிப்ரவரி 10 ஞாயிறு 2007 : நற்செய்தி - மறையுரை

பிப்ரவரி 10 ஞாயிறு 2007 : நற்செய்தி
மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 4

1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். 2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். 3 சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான். 4 அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார். 5 பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது. 7 இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார். 8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது. 10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார். 11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

(thanks to www.arulvakku.com)







- மறையுரை:




நீ சோதனைகளை எப்படி எதிர் கொள்கிறாய்? உங்களுக்கு விடபட்ட தனிப்பட்ட சவாலாக,தவகாலத்தின் முதல் வாரத்தின் நற்செய்தியில் கொடுக்கபடுகிறது. அதனால், நாம் நமது பயனத்தை யேசுவோடு சேர்ந்து ஆரம்பிக்கிறோம். அந்த பயணம், மிக புனிதமான, பரிசுத்தமான இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.

இந்த தவகாலம் முன்னைய தவகாலம் போல அல்ல. கடந்த வருடங்களில், உனக்கு வேறு தேவைகள் இருந்தன, வேறு விதமான புரிதல் இருந்தது. தவக்காலத்தின் பார்வை வேறாக இருந்தது. கடந்த காலங்களிலிருந்து,எவ்வளவோ நடந்திருக்கிறது. இவையெல்லாமே, கடவுள் உனது வாழ்க்கையில் நடத்த போகும் விசயங்களுக்கு தயாரிப்புகளாகும்.

இந்த வருடம் எதில் வெற்றியடைய வேண்டும் என நிணைக்கிறாய்? எதிலிருந்து மீண்டு வர ஆசைபடுகிறாய்? அதையெல்லாம் அடைய, உனது பாதை சிலுவையின் வழி செலுத்தபட்டு, கல்லறைக்குள் சென்று, கடவுளின் ஒளியால் வெளி வந்தால், அவரது அன்பினால், நீ குணமடைந்து, புதிய வாழ்வை பெறுவாய்.

இந்த தவக்காலத்தில், ஒவ்வொரு முறை, நாம் தியாகங்கள் செய்யும்போது, மேலும் நமது துயரங்களை, துன்பங்களை யேசுவின் ஆர்வத்தோடு இணைத்தோமானால், நாம் யேசுவை அவரது சிலுவையோடு பின் செல்கிறோம். மீண்டும் உயிர்த்தெழுகிறோம். இதற்கு, நமது சிலுவைகளை ஏற்று, நாம் அனைத்து செல்ல வேண்டும். கல்வாரி பாதை தான், நம் புதிய வாழ்விற்கு ஒரே வழி அதுதான், வெற்றி வாழ்விற்கும், நீங்கள் ஏங்கி கொண்டிருக்கும் புது அனுபவத்திற்கும் அதுவே சரியான வழி.

உனக்கு ஈஸ்டர், விடுமுறையாகவோ அல்லது, பெரிய விருந்து நாளாகவோ இல்லாமல், அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், நாம் இந்த தவகாலத்தை, 40 நாளும், செய்ய வேண்டிய தியாகத்தையும், விரதம் இருப்பதையும், கோவிலுக்கு செல்வதையும் செய்துவிட்டு இருந்து விட கூடாது. நாம் உயிர்த்தெழுதலின் வெற்றியை, ஆற்றலை அனுபவிக்க வேண்டுமெனில், துக்கத்தின் வலிமையை நாம் உணர்ந்து, நமது பாவங்களிலிருந்து மீண்டு வர வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதனால், நாம் வலிமையற்ற இறப்பை ஒதுக்கி, சுயநலங்களை சாகடிக்கவேண்டும், நமது உலக ஆசைகளுக்க் சாவு மணி அடிக்க வேண்டும். கிறிஸ்துவை போல இல்லாத எதையும் துறக்கவேண்டும்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: