Friday, March 21, 2008

23 மார்ச் 2008 ஈஸ்டர் திருவிழா நற்செய்தி , மறையுரை

23 மார்ச் 2008
ஈஸ்டர் திருவிழா
நற்செய்தி , மறையுரை


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார். 3 இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4 இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. 6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

thanks to www.arulvakku.com

உனக்கு யேசு எப்படி உதவி செய்தார் என்று பிரகடனம் செய்ய தயாராய் இருக்கிறாயா? அல்லது எப்படி உன் வாழ்வின் இறந்த துக்கங்கள்,வெற்றியாக உயிர் பெற்றன என்பதில் ஐயம் இருப்பதால், யேசுவின் உதவியை பிரகடனம் செய்ய தயங்குகிறாயா? எப்படி உன் வாழ்வின் நடந்த ஆபத்துகள், துன்பங்கள், இன்பமாக மாறியது? மிக சிறந்த ஆசிர்வாதமாக மாறியது என்பதை உலகிற்கு சொல்ல தயங்குகிராயா?

இந்த மாதிரியான மண நிலையில் தான், ஈஸ்டர் அன்று எல்லா சீடர்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் புனித பேதுரு "யேசுவை சிலுவையில் கொன்றார்கள், ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உய்ரோடு எழுப்பி, காட்சி அளிக்க செய்தார்" என்று கூருகிறார்.
சீடர்களுக்கு இப்போது தான அவர்கள் அழைப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்கள். யேசு தான மீட்பர், என்று சாட்சி பகர அவர்கள் அழைக்கப்பட்டனர். அந்த வேலையை நற்செய்தி சேவையை முழுதுமாக செய்ய ஆரம்பித்தனர்.

"சாட்சி பகர்தல்" என்பது, நமது சொந்த அனுபவத்திலிருந்து, யேசு நமக்கு கொடுத்த மீட்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்தல் ஆகும். புனித பேதுரு "யாரெல்லாம், யேசுவை நம்பினார்களோ, அவர்கள் யேசுவிடம் , அவர்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவர்" என்று அதிகாரப்புர்வமாக சொல்கிறார். ஏனெனில், பீட்டருக்கு தான் முதன் முதலாய் தெரியும், கடவுளின் மன்னிப்பை எப்படி பெறுவது என்று.

நமது துன்பங்கள், நம்மை எப்படி புதிய வாழ்விற்கு அழைத்து சென்றது என்பதை நாம் மற்றவர்களோடு பேசி பகிர்ந்து கொண்டால் தான், நமக்கு அந்த மீட்பு முழுமையாக புரிய ஆரம்பிக்கும். தெளிவில்லாத நமது உள்ளத்தில் உள்ள விசயங்கள், நமது நெருங்கிய நண்பர்கள், கோவில் நண்பர்களோடு பேச ஆரம்பிக்கும்போதுதான, கொஞ்சம், கொஞ்சம்மாக புரிய ஆரம்பிக்கும். மகதலே மேரியும், அப்படித்தான, அவர்களுடைய குழப்பத்திலிருந்து, மீள்வதற்குள், பேதுருவிடம், அருளப்பரிடம் ஓடி, அவர்களிடம், கல்லறையில் யேசு இல்லை என்பதை பகிரிந்து கொண்டார்கல். அவர்கள் மற்ற சீடர்களிடம் கூறினர். அப்போது தான், அவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் சேந்து சமூக கூட்டமாக ஒன்றானார்கள். அப்போதுதான், பரிசுத்த ஆவியின் உதவியுடன் யேசு அவர்களிடையே தோன்றி, உண்மையை அவர்களுக்கு கூறினார். சீடர்கள் அனைவரும், அந்த உண்மையை உலகம் முழுவதும் எடுத்துரைத்து மணம் மாற்றினர். யார் கேட்டார்களோ, அதை ஏற்று கொண்டார்களோ, அவர்கள் மணம் திரும்பி, யேசுவோடு ஒன்றினைந்தனர்.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Notebook, I hope you enjoy. The address is http://notebooks-brasil.blogspot.com. A hug.