Saturday, March 29, 2008

மார்ச் 30 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 30 2008, ஞாயிறு நற்செய்தி மறையுரை



யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார். 29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

thanks to Www.arulvakku.com


ஈஸ்டர் வெற்றியோடு அனுபவித்து வாழ்வது என்பதற்கு என்ன அர்த்தம்.? நாமெல்லாம் ஈஸ்டர் மக்கள். ஏனெனில் யேசு மரனத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பது தெரிந்து நாம் கொண்டாடுகிறோம். இருந்தாலும், நாம் எப்பொழுதும் "அல்லேலுயா" என்று சொல்லி கொண்டிருப்பதில்லை. நாம் இந்த வெற்றியை கொண்டாடுவதில் எந்த எண்ணமும் இல்லாமால், நிணைப்புமில்லாமல், திருப்பலியிலும், வெளியேயும், நாம் சந்தோசமடைவதில்லை, அந்த சந்தோசம் மற்ற சகோதரர்கள் மணமாற உதவியாக இருக்கும்.

பெரிய வெள்ளியின் சிலுவைகளை தொடர்ந்து தூக்கி செல்வதில் நாம் முடித்து கொள்ள முடிவதில்லை.
இன்றைய நற்செய்தியில், ஈஸ்டர் வெற்றியை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது: விவரிக்க முடியாத சந்தோசத்துடனும், புகழுடனும் கொண்டாட படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் எப்படி?

சந்தோசமடைவதற்கு தேவையான மண நிலை, சிலுவை போல் உள்ள துன்பங்கள் முடிவதிலிருந்து ஆரம்பிப்பது இல்லை. அல்லாமல், கிறிஸ்து, நமக்காக இறந்து நம்மையெல்லாம் இரட்சித்தார், அதன் மூலம் கடவுளின் அபரிதமான அன்பும், அமைதியும், நமக்கு கிடைக்கும் என்று நிணைத்து நமது சந்தோசம் ஆரம்பமாகும். சாகாவரம் பெற்ற இந்த அன்பளிப்பு நமக்கு கிடைத்த இந்த இன்பத்தினால் நாம் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் யேசு அதனை நமக்காக தயாராய் வைத்திருக்கிறார். நாம் மரனமடையும்போது, நாம் இந்த அன்பளிப்பை பெறுவோம். இந்த அன்பளிப்பு நாம் கடவுளை ஏற்று கொண்டதால், கடவுள் நமக்காக காத்து வைத்திருக்கிறார். நமது விசுவாசம் இந்த அன்பளிப்பை பெற்று கொடுக்கிறது.

நம்பிக்கையின் முழு அர்த்தம் என்னவென்றால், பின்னால் நடக்கபோவது உறுதி என்று தெரிந்து, அதனை நாம் கொண்டாடுவதில் தான் உள்ளது.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள், மீட்பும், மோடசமமும் கிடைக்காது என்று பயம் கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. இன்றிலிருந்து இறக்கும் காலம் வரையில், யேசுவிடமிருந்து விலகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள். நீயும் அப்படி பயப்படுகிராயா? : உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்? உங்கள் துன்ப நேரங்களில், கடவுளை ஒதுக்கி தள்ளுகிறீர்களா அலலது அவரிடம் ஓடி செல்கிறீர்களா?
நாம் கடவுள் மேல் கோபம் கொண்டால் கூட, நாம் அவரோடு அருகில் தான் இருக்கிறோம். நாம் அவர் மேல் வைத்த நம்பிக்கையால், நாம் எதிர்பார்ப்பதை கடவுளிடமிருந்து வராமல் இருக்கும் போது, நாம் அவர் மேல் கோபப்படுகிறோம். அவர் மேல் விசுவாசம் இல்லாமல், கோபம் கொள்வதில்லை. நமது சோதனையில் தான், நமது விசுவாசம் சுத்தப்படுத்தபடுகிறது. ஈஸ்டர் மக்களாகிய நாம், நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் தற்காலிகமானது தான். நித்திய இன்பத்தை ஒரு நாள் பெறுவோம். அதனைதான் நாம் இப்போது தான் கொண்டாடுகிறோம்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: