Friday, March 7, 2008

மார்ச் 9 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 9 2008 ஞாயிறு நற்செய்தி மறையுரை

தவக்கால 5 வது ஞாயிறு


யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 11

1 பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வு+ரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். 2 இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். 3 இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, ' ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் ' என்று தெரிவித்தார்கள். 4 அவர் இதைக் கேட்டு, ' இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார் ' என்றார். 5 மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். 6 இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். 7 பின்னர் தம் சீடரிடம், ' மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள் ' என்று கூறினார். 8 அவருடைய சீடர்கள் அவரிடம், ' ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா? ' என்று கேட்டார்கள். 9 இயேசு மறுமொழியாக, ' பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. 10 ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை ' என்றார். 11 இவ்வாறு கூறியபின், ' நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் ' என்றார். 12 அவருடைய சீடர் அவரிடம், ' ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார் ' என்றனர். 13 இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். 14 அப்போது இயேசு அவர்களிடம், ' இலாசர் இறந்து விட்டான் ' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 15 ' நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள் ' என்றார். 16 திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், ' நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் ' என்றார். 17 இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. 18 பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. 19 சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20 இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21 மார்த்தா இயேசவை நோக்கி, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் ' என்றார். 23 இயேசு அவரிடம், ' உன் சகோதரன் உயிர்த்தெழுவான் ' என்றார். 24 மார்த்தா அவரிடம், ' இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும் ' என்றார். 25 இயேசு அவரிடம், ' உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26 உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா? ' என்று கேட்டார். 27 மார்த்தா அவரிடம், ' ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன் ' என்றார். 28 இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், ' போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார் ' என்று காதோடு காதாய்ச் சொன்னார். 29 இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். 30 இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். 31 வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். 32 இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் ' என்றார். 33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34 ' அவனை எங்கே வைத்தீர்கள்? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' ஆண்டவரே, வந்து பாரும் ' என்றார்கள். 35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36 அதைக் கண்ட யூதர்கள், ' பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு! ' என்று பேசிக் கொண்டார்கள். 37 ஆனால் அவர்களுள் சிலர், ' பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா? ' என்று கேட்டனர். 38 இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. 39 ' கல்லை அகற்றி விடுங்கள் ' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், ' ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! ' என்றார். 40 இயேசு அவரிடம், ' நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா? ' என்று கேட்டார். 41 அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, ' தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். 42 நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன் ' என்று கூறினார். 43 இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், ' இலாசரே, வெளியே வா ' என்று கூப்பிட்டார். 44 இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. ' கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள் ' என்று இயேசு அவர்களிடம் கூறினார். 45 மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
(www.arulvakku.com)

மறையுரை

தவக்காலம் என்பது வெறும் தியாகங்களுக்கும், வேதணைகளுக்குமான காலமில்லை. இது புது வாழ்விற்கான வழியாகும். பெரிய வெள்ளி ஒன்றும், சாத்தானுக்கும், வலிகளுக்கும், சாவிற்கும் உள்ள நாளாகாது. அதை ஒரு கதவாக உபயொகித்து, யேசு நம்மை புதிய வாழ்விற்கு அழைக்கிறார்.

துன்பமடைதல் என்பது தவக்கால பயனத்தின் ஒர் அங்கமாகும். (அதனை ஒரு வருடத்தின் எந்த காலங்களிலும் அனுபவிக்கலாம்). மேலும், விரதமிருப்பதும், எளியோருக்கு உதவுவதும், சுய கட்டுபாடு மற்றும் பல தியாகங்களும் தவக்காலத்தில் செய்ய வேண்டியது என்று ஒத்துகொள்ளலாம். ஆனால் இவையெல்லாம், புதிய வாழ்வின் பய்னத்திற்கான கருவிகளாகும்.


நாம் அனுமதித்தால், கடவுள் நமது வேதனைகளை உபயோகித்து, அதனை ஒரு கருவியாக்கி, நம்மில் இரக்கத்தையும், கருணையும், இடைவிடாது முயற்சி செய்தலிலும், சேவை செய்வதிலும், வளர செய்கிறார். நமது தியாகங்கள் மூலம் நாம் நமது கட்டுபாடு, ஒழுங்கு முறையுடன் வாழ கற்றுகொள்கிறோம். இதன் மூலம் நாம் நம்மை தூய்மையாக்கி, புனித வாழ்வில் சிறந்து வாழ விழைகிறோம். ஆனால்,இந்த ப்யணம் ஒன்றும் முடிவல்ல, போகுமிடம் இன்னும் இருக்கிறது..

தவக்காலம் என்பது, மீண்டும் உயிர்த்தெழுதல், புதிய வாழ்வை அடைவது ஆகும். புதுபிக்கப்பட்ட விசுவாசம், பழைய பாவங்களிலிருந்து மீண்ட புதிய வாழ்வு, சமாதானமான உறவுகள், முன்னை விட அதிகமாக கடவுளின் ஆவியில் வாழ்வது.

உஙகளுக்கு பெரிய வெள்ளி முக்கியமான நாளா? அல்லது கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளா? மிகவும் பயமடைய செய்கிற கல்வாரி நாள் மிக முக்கியமானது தான், அந்த பெரிய வெள்ளி ஈஸ்டர் திரு நாளுக்கு தேவையான நாள் தான். ஆனால், நாம் இப்பொது உயிர்த்தெழுந்த, சிலுவையிலிருந்து வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கத்தோலிக்கர்கள் அனைவரும் ஈஸ்டர் மக்கள் ஆவர். அப்படியென்றால், யேசுவை நமது வாழ்வில் கடவுளாக ஏற்றுகொண்டால், நமக்கு எதுவும் தவறான நிகழ்ச்சி, விபத்து எதுவும் நடந்து விடாது.

யேசுவே, அவரே மீட்பின் வெற்றி நாயகன் என்று நிருபித்துள்ளார். மேலும் நமது வாழ்வின் வெற்றி நாயகன் என்று வாழ்வின் பிறப்பிலும், இறப்பிலும் வெண்று நமக்கு காட்டியுள்ளார். இப்போது மீண்டும் அதனை நிருபிக்க விரும்புகிறார்- உன் மூலம், மேலும், உன்னை சுற்றி பார்ப்பவர்களுக்கும்.
© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
www.gnm.org

No comments: