Friday, July 18, 2008

ஜுலை 20, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஜுலை 20, 2008 ஞாயிறு நற்செய்தி, மறையுரை:

ஆண்டின் 16வது ஞாயிறு

மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 13

24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். 25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. 27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ' ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். 28 அதற்கு அவர், ' இது பகைவனுடைய வேலை ' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ' நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? ' என்று கேட்டார்கள். 29 அவர், ″ வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். 30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ' முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் ' என்று கூறுவேன் ″ என்றார். ' 31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. 32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். 33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ' பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். ' 34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 35 ' ' நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் ' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. 36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ' வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் ' என்றனர். 37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ' நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; 38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; 39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். 40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். 41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; 42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். 43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

(thanks to www.arulvakku.com)


அமெரிக்க பிஷப்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கத்தோலிக்க மதமாற்றத்திற்கும், மணம் மாற்றுதலுக்குமான முறைபடிவங்களை "சீடர்களை உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளனர். இது மூன்று நோக்கங்களை அல்லது மூன்று வாக்கியங்களை கொண்ட்டதாகும். (1) உனது விசுவாசத்தை நல்ல முறையில் வளர்த்திட வேண்டும். (2) மற்ற சகோதரர்களை மத/மண மாற்றத்திற்கு அழைத்தல் (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வில் வாழ்ந்து சமூக மாற்றத்திற்கு உறுதுணையாய் இருத்தால். இன்றைய நற்செய்தியிலும், யேசு, உவமைகள் மூலமாக மத/மண மாற்றத்திற்கான மூன்று நோக்கங்களையும் கூறுகிறார்.

(1)நமது விசுவாசத்தை நல்ல முறையில் வளர்த்திடல்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே இருக்கும் நல்ல கோதுமைகள். அந்த களைகள் உங்களுடைய பரிசுத்த வாழ்விலிருந்து பாவ வாழ்விற்கு இட்டு செல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அவநம்பிக்கை உடையோரிடமும், தீயோஒரிடமும், இடையே வாழும் நீங்கள், உங்கள் விசுவாச வாழ்வு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது? இந்த பயன்கள் கிடைக்க பல முயற்சிகள் செய்ய வேண்டும். நாம் தினமும் முயற்சி செய்து, பரிசுத்த வாழ்வில் வளர்ந்திடாமல் இருந்தால், களைகள் நம்மை மூழ்கடித்து அது வளர்ந்து விடும்.

(2) மற்ற சகோதரர்களை மத/மண மாற்றத்திற்கு அழைத்தல்: கடவுளரசில், நாமெல்லாம், கடுகு போன்ற சிறு விதையாகும். அது புல்வெளிக்குள் வளர்ந்து பெரிய மரமாக தழைத்து, பலர் அதில் இளைப்பாறி, பல பயன்களை பெறுவர். உனது விசுவாசத்தின் மூலம் யார் பயன் பெறுகிறார்கள்? உனது பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி மற்றவர்களை யேசுவோடு வாழ எப்படி அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முழு அதிகாரத்தை கொடுத்து, உங்கள் அனுபவித்திலிருந்து, அவர்களை அழைக்க விரும்பினால், அவர் முழு ஆதரவையும் கொடுத்து ஊக்குவிப்பார்.

(3) சமூகத்தை மாற்றுங்கள்: வின்னகரசில், நாமெல்லாம், புளிப்புமாவிற்கு ஒப்ப்பாவோம். அந்த புளிப்பு மாவும், எப்படி எல்லா மாவையும் புளிப்பாக்கி நல்ல ப்ரெட் உருவாக காரணமாகிறதோ அதே போல், மற்றவர்கள் இறைவனோடு இணைக்க வைக்கும் புளிப்பு மாவு ஆவோம். நீ கிறிஸ்தவனாக இந்த உலகை முன்னேற்ற என்ன காரியங்களில் ஈடுபடுகிறாய்? உனது பரிசுத்த வாழ்வு, உங்கள் வேலையிடத்தில், உங்கள் சமூக குழுவில், உனது பங்கில், எந்த மாதிரியான வித்தியாசத்தை காட்டுகிறது? ஒவ்வொரு திருப்பலியிலும், கிறிஸ்துவின் உடலை நாம் வாங்கும்போது, நீ யேசுவின் உடலாக இந்த உலகத்திற்கு பல நல்ல விசயங்களை வளர்த்திட, உனக்கு அதிகாரம் வழங்கபடுகிறது.

http://www.paulist.org/main/whoare.htm.


© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: