Friday, February 26, 2010

பிப்ரவரி 28, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 28, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்கால இரண்டாம் ஞாயிறு

Gen 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Phil 3:17--4:1
Luke 9:28b-36


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 9

28 இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.29 அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது.30 மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர்.31 மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.34 இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.35 அந்த மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.36 அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.


(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இதுவரையிலும் பார்க்காத வெண்மையான நிறத்தில் யேசு தோன்றி , அவரது உண்மையான உருவத்தை, அவர் யார் என்பதை காட்டுகிறார். கடவுள் "″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் " என்று கூறியதை கேட்கிறோம்.

யேசுவின் உண்மையான அடையாளத்தை, நாம் அவரை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அனுபவிக்கிறோம். மேலும் கிறிஸ்துவின் வார்த்தையின் அர்த்தத்தை பரிசுத்த ஆவியின் துனையுடன் நாம் யேசுவின் கிறிஸ்துவின் வார்த்தையை முழுதாக புரிந்து கொள்ள முடியும், , அவரின் வழி காட்டுதலை அறிந்து கொள்ள முடியும்.


யேசுவின் வார்த்தையை கேட்பதினால், அவரின் பள பளக்கும் வென்மை ஒளி, நம்மில் இன்னும் இருக்கும் இருளை போக்கிவிடும். பிறகு, நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கிறிஸ்துவை அனுபவிப்பார்கள். ஏனெனில், நம் மூலம் யேசுவை கான்கிறார்கள் - நமது நடவடிக்கைகள் மூலமும், நமது இரக்கத்தின் மூலமும், நமது மன்னிப்பின் மூலமும் , மேலும் பல விசயங்களிலும், யேசுவை நம்மில் கான்கின்றனர். இது தான் மணமாற்றம் ஆகும்.




தவக்காலத்தில், நம்மில் உள்ள இருளை கிறிஸ்துவின் ஒளியின் மூலம் போக்குவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். யேசுவின் ஒளி நம்மில் ஓளிர்வதற்கு நாம் அனுமதிக்கும்பொழுது, அதனால், நாம் மனந்திருந்தி, அவரின் மன்னிப்பை கேட்டு, பரிசுத்த ஆவியின் ஆற்றல் பெற்று நம் வாழ்வை மாற்றி , நாம் கிறிஸ்துவை போல மாறமுடியும். நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து ஒளிர்வோம். இந்த உலகை மீட்கும் கிறிஸ்துவின் மீட்பு பணியில் நாம் இனைகிறோம். இந்த மீட்பு பனியில் பல துன்பங்கள் இருந்தாலும், பெரிய வெள்ளியின் துன்பத்திற்கு பிறகு ஈஸ்டர் வெற்றி தொடரும் என்பது நமக்கு தெரிந்ததே.


நமது சோதனைகளும், தியாகங்களும் - நமது சிலுவைகள் - நமது பரிசுத்த வாழ்வு இவ்வுலகை மாற்றும். கல்வாரிக்கு யேசுவை பின் சொல்ல நாம் தைரியமாக இருக்கிறோமா? இது தான் நம்மை ஈஸ்டருக்கு அழைத்து செல்லும்!. நமது சோதனைகள் மூலம், கிறிஸ்துவின் இரத்தம் மீண்டும் வழிந்தோடுகிறது. நமது வலிகள் எல்லாம் கிறிஸ்துவின் வலிகள். நாம் ஏற்கனவே கிறிஸ்துவோடு சிலுவையில் இருக்கிறோம். கிறிஸ்துவோடு நமது நெருங்கிய இனைப்பினால், நாம் ஏன் நமக்கு துரோகம் பன்னுகிறவர்களையும், நமக்கு தண்டனை கொடுப்பவர்களையும் மன்னித்தால் என்ன? நம்மை அன்பு செய்யாதவர்களை அன்பு செய்வதாலும், நம்மை தவறாக நடத்துபவர்களை மன்னிப்பதாலும், இறையரசை இங்கே நிறுவ கடினமாக உழைத்தும், கிறிச்துவின் ஒளியை, இருளில் வாழ்பவர்களுக்கு நாம் காட்டுகிறோம்.

© 2010 by Terry A. Modica

No comments: