Friday, April 30, 2010

மே 2, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 2, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35

யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 13

31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.



(thanks to www.arulvakku.com)

நீங்கள் இப்போது மரணமடைய போகிறீர்கள் என்று தெரிந்தால் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு என்ன சொல்வீர்கள்? என்ன அறிவுரை கூறுவீர்கள்? உங்களிடமிருந்து மிகவும் முக்கியமான ஒன்றை அவர்கள் கற்று கொள்வார்கள்?


இன்றைய நற்செய்தியில், யேசுவுக்கு அவரது காலம் மிகவும் குறைவு என்று தெரியும். அவரது நண்பர்களிடம் , யேசு சொல்லும் முதல் வார்த்தையே கடவுளை புகழ்வது தான். கடவுளையும் , தம்மையும் மாட்சிமைபடுத்துவது பற்றி தெரிவிக்கிறார். அவருடைய நண்பர்களை 'குழந்தைகள்' என்று கூட யேசு அழைக்கிறார். அவரே தந்தை கடவுள் போல! இப்படி செய்வதால், அவர் கடவுளோடு இருக்கிறார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதன் மூலம், தந்தை கடவுளுக்கும், மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள சின்ன கோடு தெளிவாக தெரிகிறது. இதனை மிகவும் பணிவுடனும், தாழ்மையுடனும் செய்கிறார். இயேசு இப்படி கூட சொல்லலாம், "நான் கடவுள் என்றும், தெய்வீகமானவன் என்றும் உங்களுக்கு நம்பிக்கை இல்லைஎனில், என்னை வழிபடுங்கள் " என்று சொல்லவில்லை. மாறாக தந்தை கடவுளை மாட்சிமைபடுத்துவை குறிக்கோளாக கொண்டிருந்தார்.


கடவுளின் ப்ரசன்னத்தை புகழொளியை மாட்சிமைபடுத்துவது: அவரின் அன்பை, அவரின் சந்தோசத்தை, அவரின் பரிசுத்ததை, அவரின் அமைதியையும், அவரின் படைப்பையும், மற்றும் பலவும் அவர் கொடுத்ததை, அவர் புகழொளியில் சேர்ந்தது ஆகும். நாம் கடவுளை மாட்சிமைபடுத்தும் பொழுது , அவரின் புகழொளியை நாம் திருப்பி காட்டுகிறோம். இந்த புகழொளி, உங்களில் எவ்வளவு வெளிச்சத்தை கொடுக்கிறது?

தந்தை கடவுள், மகன் யேசுவை மாட்சிமைபடுத்துவதும், மகன் இயேசு தந்தை கடவுளை மாட்சிமைபடுத்துவது உண்டு என்று கூறிய பிறகு, இவ்வுலகிற்கு தேவையான , மிக முக்கியமான அறிவுரை யேசு அவரது சீடர்களுக்கு கொடுக்கிறார்: கடவுளை மாட்சிமைபடுத்துவதில், யேசுவோடு சேர்ந்து கடவுளை போற்றுவதில் நாம் சேரவெண்டும் என்றால், கடவுள் எல்லோரையும் அன்பு செய்வது போல், நாமும் அன்பு செய்ய வேண்டும்..
எவ்வித சுயநலமின்றி கொடுக்கப்படு அன்பு தான் உண்மையான அன்பு ஆகும். இயேசு தன்னை முழுமையாக , எவ்வித சுய நலமின்றி நமக்காக கொடுத்தார். அவரின் மரணத்தையும் சேர்த்து நமக்காக கொடுத்தார். முழு உண்மையான அன்பின்றி யேசுவை பின் செல்பவர்கள், உண்மையாக யேசுவின் பின் செல்பவர்கள் அல்ல, சீடர்கள் உண்மையான சீடர்கள் இல்லை, குருவானவர்கள் உண்மையான குருவாவனவர்கள் இல்லை, பொது மக்கள் உண்மையான பொது மக்களாய் இருக்க மாட்டார்கள், ஒவ்வொருவரும் முழு அன்போடு, கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.



கடவுளை மாட்சிமைபடுத்துவதில், உண்மையான அன்பை முழுமையக கொடுத்தால் தான், தியாகத்துடன் கொடுத்தால் தான் அது கடவுளை மாட்சிமைபடுத்துவதாகும். நாம் ஈஸ்டர் காலத்தில் கொண்டாடிகொண்டிருக்கும் போது , நமக்கு ஏன் யேசுவின் பாடுகளை பற்றிய நற்செய்தி வாசகங்கள் இன்று கொடுக்கப்பட்டிருக்கின்றன? மற்ற வாசகங்கள் ஈஸ்டர் வெற்றியை பற்றி பேசுகின்றன. 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் ' இருந்தாலும், இயேசு, நம்பிக்கை துரோகத்திற்கும், வேதனைகளுக்கும், மரணத்திற்கும் தயாராகிறார். ஏன்?



கடவுளின் மாட்சிமையை, புகழை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை இயேசு தன் மரணத்தின் முன் நம் எல்லோருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளார். யேசு கடவுளை மாட்சிமைபடுத்துவதை ஆரம்பித்து வைத்து, நம்மையும் கடவுளை மாட்சிமைபடுத்த அழைக்கிறார். தியாகத்துடன், நாம் ஒவ்வொருவரையும் அன்பு செய்யும்போது, இயேசு உண்மையான கடவுள் என்பதன் நாம் இவ்வுலகிற்கு காமிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்து விட்டார், நம்மில் வாழ்கிறார்.


© 2010 by Terry A. Modica

No comments: