Friday, September 3, 2010

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 5, 2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom 9:13-18b
Ps 90:(1) 3-6, 12-17
Philemon 9-10, 12-17
Luke 14:25-33

லூக்கா நற்செய்தி


அதிகாரம் 14



இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
25 பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:26 ' என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.27 தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.28 ' உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?29 இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக,30 ' இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை ' என்பார்களே!31 ' வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?32 எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?33 அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

(thanks to www.arulvakku.com)

உங்கள் வாழ்க்கையில் கடவுளின் உறவை விட,வேறு எதற்கு முதன்மை இடம் கொடுக்கிறீர்கள்? இன்றைய நற்செய்தியில், யேசு எதற்கு முதன்மையிடம் கொடுக்கிறீர்கள் என்று பார்க்க சொல்கிறார். உங்கள் நன்பர்களுக்கா ?, உங்கள் வேலைக்கா? உங்கள் சொத்துக்கா? உங்கள் லட்சியங்களுக்காகவா? இல்லை உங்கள் அனுதின செயல்களுக்கா?

எந்த சிலுவையிலிருந்து விலக விரும்புகிறீர்கள்? அதிலிருந்து விலகுவதால், இயேசுவை ஒதுக்கி தள்ளுகிறீர்களா? (குறிப்பாக: அன்பிற்காக எந்த தியாகத்தை செய்ய நீங்கள் விரும்பவில்லை? )

நாம் அவருடைய சீடராக இருப்பதற்கு முழுமையான பற்றுதலோடும், ஒத்துழைப்போடும் இல்லாமல் இருந்தால், அவரை போல மாறாமலும், அவரிடமிருந்து கற்காமலும் இருந்தால், நமது வாழ்வில் மற்ற வேலைகளுக்கும் நாம் சரியாக தயார் படுத்தவில்லை என்று இயேசு கூறுகிறார்.


மாறாக சொல்வதானால், நாம் நமது முக்கிய நோக்கத்திற்காக, நமது வேலைகளை சரியாக செய்து வந்தாலும், கிறிஸ்துவோடு உள்ள நமது உறவு எல்லாவற்றிற்கும் மேலான , முதன்மையான குறிக்கோளாக இல்லையெனில், நாம் மிகச்சரியான முடிவிற்கு செல்ல முடியாமால் இருப்போம். ஏனெனில், இவ்வுலக சிந்தனைகளால், மிகவும் தொந்தரவிற்கு உள்ளாவோம். அதனால் பாதிக்கபடுவோம், வெற்றியாளராக இல்லாமல், பாதிக்கப்பட்டோராய் இருப்போம். இவ்வுலகில் நாம் செய்து முடிக்கும் எந்த வெற்றியும் தற்காலிகமானதே, ஏனெனில், அந்த வெற்றியில், கடவுளரசின் நோக்கங்களோ, அல்லது நித்திய வாழ்விற்கான ஆயத்தங்களோ இல்லை.



சீடர் என்பவர் மானவர் ஆவார். யேசுவிடமிருந்து, மற்றவர்களை அன்பு செய்வது எப்படி என்று கற்று கொள்கிறோம். சில் நேரங்களில், இதுவே, நமக்கு மிகப்பெரிய சிலுவை ஆகும். யேசு நமக்கு எப்படி , அன்புடனும், சந்தோசத்துடனும், நிபந்தனையற்ற அன்புடனும், மன்னித்து வாழவும் வாழ கற்று தருகிறார். நமது பரிசுத்த வாழ்வில் தொந்தரவு செய்பவர்களையும் நமது எல்லைக்குள் வரவிடாமல் இருக்கவும் யேசு நமக்கு கற்று தருகிறார். இதுவே நமக்கு ஒரு சிலுவையாக இருக்க கூடும்.

இயேசுவை பின் செல்வதிலும், அவரை போலவே மாறுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றால், தொடர்ந்து நாம் முயற்சி செய்து, நமக்கு வரும் சிலுவையை தூக்கி கொண்டு , நம்மையே யேசுவோடு இணைத்து, அவரின் சிலுவையோடு, நாமும் இனைந்து, அவரது ஆற்றலோடு நாமும் இனைந்தால் தான், நம்மால் அவர் பின் செல்ல முடியும். கிறிஸ்துவோடு உள்ள இனைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லையென்றால், நாம் நமது முயற்சியில் தோல்வியடைவோம். சிலுவையின் பாரத்தால், நாம் கீழே விழுவோம். ஆனால் இயேசு செய்ததை போல , மற்றவர்களின் அன்பிற்காக நாம் தியாகம் செய்ய முயற்சித்தால், யேசுவை முழுமையாக அனைத்து, அவரோடு முழு இனைப்பில், நாம் செய்ய வேண்டியதை செய்வோம். இது எந்த் ஒரு ஜெபமும், அல்லது மற்ற முறைகளையும் விட மிகவும் அதிக பலனை தரக்கூடியது.
http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2010 by Terry A. Modica

1 comment:

Chittoor Murugesan said...

"யந்திரன் விழாவில் போப்புக்கு அவமானம்" பதிவை படிக்க கீழ் காணும் தொடுப்பை க்ளிக் செய்யவும்
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_1570.html