Saturday, November 13, 2010

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை

நவம்பர் 14, 2010 ஞாய்று நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு
Mal 3:19-20a
Ps 98:5-9
2 Thess 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 21


எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
5 கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6 இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் ' என்றார்.
வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
7 அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.8 அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.9 ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது ' என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, "ஒரு நாள் வரும், அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்" என்று கூறி இவ்வுலகில் உள்ளதெல்லாம் தற்காலிகமானது தான் நமக்குஅறிவுறுத்துகிறார்.

இவ்வுலகில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசமான எல்லாமெ தற்காலிகமானது தான். உங்களை எது அதிகம் துன்பத்தை கொடுக்கிறது. அதுவும் தற்காலிகமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை அதிகம் சார்ந்து இருக்கிறீர்கள்? அதுவும் தற்காலிகமானது தான். எதனை பார்த்து ஆச்சரியபடுகிறீர்கள்? யாரிடம் நம்பிக்கை கொள்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அதிக நேரம் உழைத்து எந்த குறிக்கோளை அடைய முற்படுகிறீர்கள், மேலும், உங்கள் உழைப்புக்காக , அதன் பரிசாக எங்கே சுற்றுலா கிளம்பிவிட்டீர்கள்? இது எல்லாமெ தற்காலிகமானது தான். அல்லது இதனையெல்லாம், இறையரசிற்காக உபயோகித்தால், அது உபயோகமானதாக இருக்கும்.

கடவுளுடைய அரசிற்காகவும் அவரைபற்றியும், நாம் எப்பொழுதும் நோக்கி அதற்காகவே நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும், அவை தான் நமது இறுதி காலம் வரைக்கும் இருக்கும் என்பதும் நமக்கு தெரியும், ஆனால் இந்த கண்மூடிதனமான விசுவாசம் நம்பிக்கை நமக்கு என்னமோ பிடிப்பதில்லை. நாமெல்லாம் கடவுளின் சீடர்கள், கடவுள் அநீதிக்காக எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், அநியாயத்திற்கு பழிவாங்க வேண்டும் , இந்த அழிவுள்ள உலகில் பழிவாங்களை கடவுள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். போர்கள், நில அதிர்வுகள், ப்ளேக் நோய் மற்றும் பல கஷ்டங்கள். மேலும், இயேசு அவரது இரண்டாம் வருகையை விரைவில் வந்து, இவ்வுலக சாத்தானையும், ப்ரச்னைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என ஆசைபடுகிறோம்.

ஒவ்வொரு நாளும், நமது வாழ்வில், கடவுளின் உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால், மிகச்சரியான ஆணித்தரமான ஒரு ஆதாரத்தை நமது விசுவாசத்திற்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதனை நமக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறோம்; கடவுளின் நமக்கான திட்டம் என்ன என்பதனை நமக்கு தெரியாமல் இருப்பதால் ஒரு வித தவிப்புடனும், பயத்துடனும் இருக்க நாம் விரும்புவதில்லை. நாம் நமக்கு கண்ணுக்கு முன்னே தெரிவதில் தான் நாம் சார்ந்து இருக்கிறோம், கடவுள் நம் கண்ணில் காமிக்காததை நாம் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. அதனால் கடவுளிடம் நாம் அதற்கான குறிப்புகளை கேட்கிறோம், ஆதாரங்களையும் கேட்கிறோம். எனினும், நாம் கடவுளோடு கூட சேர்ந்து நடந்து , முதல் அடியாக ஒரு காலை தூக்கி காற்றில் நிறுத்துங்கள், அடுத்த காலை எங்கே வைப்பது என்று கடவுளிடம் கேளுங்கள்.
இதற்கு நாம் சமநிலையான போக்கை கடைபிடிக்க வேண்டும், நாம் கடவுளை சார்ந்து எப்பொழுது இருக்க வில்லை என்றால், நாம் நிலை தடுமாறி விழுவோம். கடவுள் நமக்கு அடுத்த காலை எங்கே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், நாம் தடுமாறி விழலாம் அல்லது கடவுளின் கைகளில் விழுந்துவிடுவோம்.
கடவுளின் கைகள் தற்காலிகமானது அல்ல! அவரது கைகள் தான் நமக்கு உண்மையான பாதுகாப்பு, அதுவும் கடவுளின் இணையில்லாத, முடிவில்லாது, எல்லா வல்ல ஆற்றல்களுடன், முழு பரிசுத்த அன்புடனும்,அந்த கைகள் நம்மை தாங்கும். இது எல்லாவற்றையும் நாம் எப்பொழுதும் பெறாத மாதிரியாக இருக்கும் ஆனால், அவரது அன்பும், பாதுகாப்பும் என்றுமே தவறுவதில்லை.

© 2010 by Terry A. Modica

No comments: