Friday, January 21, 2011

ஜனவரி 23, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 23, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Isaiah 8:23--9:3
Ps 27:1, 4, 13-14
1 Cor 1:10-13, 17
Matt 4:12-23

மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 4


இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மாற் 1:14 - 15; லூக் 4:14 - 15)
12 யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.13 அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்.14 இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே!16 காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது. '17 அதுமுதல் இயேசு, ' மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
முதல் சீடர்களை அழைத்தல்
(மாற் 1:15 - 20; லூக் 5:1 - 11)
18 இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர்.19 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.20 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.21 அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.22 உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
திரளான மக்களுக்குப் பணி புரிதல்
(மாற் 3:7 - 12;லூக் 6:17 - 19)
23 அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.24
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், இசையாஸ் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறியதை பார்க்கிறோம்: உங்களுக்கு தெரிந்த மக்கள் இருளில் வாழ்பவர்கள் (மேலும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யாதவர்கள்), அவர்கள் மேல் பிசாசின் தீய ஆவி அவர்களை ஆட்கொண்டு, அவர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கும் வேளையில், இயேசுவின் மகிமையால், அவர்களின் வாழ்வு வெளிச்சத்திற்கு வருவதை பார்ப்பீர்கள்.
உங்களின் ஜெபத்தினாலும், விசுவாசமிக்க அன்பினாலும், யேசுவை அவர்களுக்கு வெளிப்படுத்தினோம். அவர்கள் இயேசுவை விட்டு வெளியே இருக்க முயற்சி செய்தாலும், அவரிடமிருந்து மறைந்து இருந்தாலும், ப்ரகாசமான கிற்ஸிதுவின் ஒளியை நிறுத்தி விட முடியாது. கூடிய விரைவிலோ அல்லது சில கால தாமதமானாலும், அவர்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியிலும் , அளவில்லா சந்தோசத்தையும் இயேசுவின் முலம் அடைவார்கள். அது உங்களுக்கும் பரவும்.

மேலும் (லூக்கா 12:49- 50), இயேசு இருளில் இருக்கும் மக்களை பார்த்து: "அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்." உங்களின் வேதனையும் எவ்வளவு என்று இயேசுவிற்கும் தெரியும் என்று இங்கே கூறிகொள்கிறார். ஆனால் இந்த மணவேதனையை இன்னும் ஆழத்துடனும் ,அதிக பற்றுடனும், அவரது வேதனையை கூறுகிறர். நீங்கள் நினைக்கும் வித்ததை விட, எதிர்பார்க்கும் செயல்களை விட, இயேசு அதிகமாகவே செய்கிறார், உங்களின் ஜெபத்தினால், என்ன அடைய விரும்புகிறீகளோ, அதைவிட அதிகமாகவே செய்கிறார். இயேசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, செய்ய முடியாததை கூட செய்து, உங்களுக்கு தேவையான அனைத்தையும் முழுதுமாக கிடைக்க ஏற்பாடு செய்கிறார்.


இருளில் இருக்கும் மக்களின் தீய குணத்தினால் , தவறான விளைவுகள் ஏற்பட்டுவிட கூடாது என இறைவனிடம் ஜெபியுங்கள். கடவுள் மற்றவர்கள் மூலம் அவரின் ஒளியை பரப்ப செய்ய வேண்டுங்கள். தீய ஆவியின் எதிர்ப்புகளை, கலகங்களை நீக்க கடவுள் அவரது வழியில் (நாம் எதிர்பார்க்கும் வழியில் அவர் செய்வதில்லை) செய்ய நாம் ஜெபிக்க வேண்டும். இருளில் இருப்பவர்கள், அவர்களது மணமாற்றத்திற்கு பிறகு, அவர்களும் கிறிஸ்துவின் ஒளியை இன்னும் அதிகமாக எல்லோருக்கும் பரவ செய்ய வேண்டும் என்று கடவுளின் மன்றாடுங்கள். மேலும் அவர்களின் மணம் மாறுதல், ஆழமான மணம் மாறுதலாகவும், நிரந்தரமானதாகவும், உறுதியான மணம் மாற்றமாக இருக்க ஜெபியுங்கள்.

நாம் கடவுளின் மனதை மாற்ற ஜெபம் செய்வதில்லை. கடவுள் ஏற்கனவே இருளில் இருக்கும் மக்களிடம் கிறிஸ்துவின் ஒளியை கொண்டு செல்வதில் முழு முனைப்புடன் இருக்கிறார். நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களை கடவுளின் கைகளில் வைப்பதற்காக ஜெபியுங்கள். ஏனெனில் அவர்கள் அவர்களுக்காக ஜெபிப்பதில்லை.

© 2010 by Terry A. Modica

No comments: