Friday, January 28, 2011

ஜனவரி 30, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி 30, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு

Zep 2:3; 3:12-13
Ps 146:6-10 (with Matt 5:3)
1 Cor 1:26-31
Matt 5:1-12a


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5


மலைப்பொழிவு
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
(லூக் 6:20 - 23)
3 ' ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நமது புனிதராக இருக்கும் காட்சியை கொண்டு வருகிறது. மத்தேயு 5:12ல் 8 பேரின்பங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேரின்பங்கள் இயேசு கிறிஸ்துவை போல இருப்பவர்களுக்கு கிடைப்பவை ஆகும். முதல் நான்கும் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை பற்றியதாகும்; கடைசி நான்கும் நாம் மற்றவர்களோடு உள்ள உறவை குறிப்பிடுகிறது.

நாமே நம்மை புனிதர் என்று சொல்லிகொள்ளலாம்? நினைவில் வையுங்கள், நீங்கள் ஒரு புனிதர், உங்கள் பயனத்தில், நீங்கள் குறையுள்ளவர்களாக இருந்தாலும், யேசுவின் சிலுவையின் மூலம் கடவுள் உங்களை புனிதப்படுத்தியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால், கடவுள் உங்களை ஆசிர்வதித்துள்ளார். மேலும் நீங்களும் மற்றவர்களை கிறிஸ்துவை போல் அன்பு செய்வதால் நீங்களும் ஆசிர்வதிக்கப்படுகிறீர்கள்.

கடவுள் ஆசிர்வதித்த அனைத்துமே பரிசுத்தம் தான்! கிறிஸ்துவை போல், பேரின்பத்தை அடைய முற்படும் யாரும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்,மேலும் அவர்களை நாம் புனிதர்கள் என்று சொல்லலாம்: அவர்கள் கடவுளின் அன்பு நமக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். பரிசுத்த ஆவியின் மூலம் அவர்கள் கவலைக்கு மருந்தும் , ஆறுதலும் தேடிகொள்வர். பரமானந்தத்தின் ஒவ்வொரு பயனும் அடைய அவர்கள் செயல்களை செய்வர், எங்கெல்லாம் அவர்கள் குரல் எங்கே ஒலிக்க வேண்டுமோ அங்கே அவர்கள் நிற்பார்கள், ஏனெனில், அவர்கள் கடவுளை அன்பு செய்பவர்கள். அதனால், அவர்கள் பேரின்பத்தை அடைவார்கள். ஒவ்வொரு சவாலையும் ஏற்று நீங்கள் இயேசுவை போல் நடந்து கொண்டு, புனித வாழ்வில் வாழ் வேண்டும். ஒவ்வொரு ஆசிர்வாதத்தையும் நினைத்து தியானம் செய்யுங்கள்.

திருச்சபை புனிதர்களை புனிதர்கள் என்று அர்ச்சித்து அவர்களை போல நாமும் இருக்க வேண்டும் என கூறுகிறது. அவர்கள் நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார்கள். நாம் அந்த புனிதர்களை போல் பரிசுத்தமாக இல்லாவிட்டாலும், நாமும் அந்த புனிதர்களின் குழுவோடு தான் இருக்கிறோம். மோட்சாத்தை நோக்கி கிறிஸ்துவின் பாதையை பின் செல்பவர்கள் யாவரும் புனிதர்கள் தான், உத்தரிக்கிறஸ்தலத்திற்கு சென்றோ அல்லது போகாமலே நாம் எல்லாருமே புனிதர்கள் தான். நாம் இன்னும் புனித வாழ்வில் முன்னேற , புனிதர்களிடம் நாம் அவர்கள் நம்மை வழிநடத்த சொல்லி கேட்கலாம்.


© 2010 by Terry A. Modica

No comments: