Friday, February 18, 2011

பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 20 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
Lev 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Cor 3:16-23
Matt 5:38-48


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5


பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

(thanks to www.arulvakku.com)

இரக்கம் தான் இந்த வார நற்செய்தியை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுனையாகும். அன்பு தான் மற்றவர்களின் இதயத்திற்குள் நாம் நுழைய முதல் கதவு என்று யோசியுங்கள். அவர்கள் அந்த கதவை மூடினால் நீங்கள் இரக்கத்தின் மூலமாக பின் கதவு மூலமாக நீங்கள் செல்லுங்கள்.

முற்காலத்தில், யாராவது ஒருவர் ஒருவரின் கண்ணை நோண்டி எடுத்தால், அவர் அவரது குழுவினருடன் சேர்ந்து கொண்டு, நோடியவரின் உற்றார் உறவினரையும் திருப்பி அடிப்பார். அதனால், கடவுள் அவர்களெல்லாம் அன்பினால் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று கடவுள் அவர்களுக்கு இந்த சட்டத்தை கொடுத்தார். அதனால், உங்களின் கண்ணை யாராவது காயப்படுத்தினால், நீங்கள் அதற்கு மேல் அவர்களை ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். அதுவே அன்பு இல்லாத செயல் தான், இருந்தாலும் அவர்களை எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.

இயேசு இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வந்தவர், "யாராவது உங்களை துன்ப்புறுத்தினால், அவர்களை அன்பு செய்" என்று கூறுகிறார்.

மற்றவர்கள் நம்மிடம் பாவம் செய்யும்பொழுது, அவர்கள் கடவுளுக்கும், அவரது அன்பிற்கும் அவர்களின் இதயத்தை மூடிவிட்டார்கள். ஆனால், நாம் அவர்களிடம் அன்பினை கொடுத்தால், நாம் அவர்களுக்கு பின் கதவு வழியாக கடவுளை கொடுக்கிறோம்.

இதன் மூலம், நாம் அப்படியே நமக்கு தீங்கு நடக்க வேண்டும் என்றே இருந்து விட வேன்டும் என்றில்லை. ஆனால், நாம் தொடர்ந்து அன்பு செய்து கொண்டே இருந்தால், நாம் கடவுளையும், அவரது குணப்படுத்தலையும் பெறுவோம்.

நியாயமற்ற முறையில், உங்களிடம் யாராவது பணத்தையோ அல்லது வேறு ஏதாவது எடுத்து கொண்டால், அவர்களின் பேராசையை நீங்கள் தடுக்க முடியாது, ஆனால், உங்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் பாவத்தை தடுக்க முடியும்: அவர்கள் கேட்பதை சந்தோசமாகவும், இலவசமாகவும் கொடுங்கள். தாராளமான அன்பினால், உங்களிடம் உள்ளதை அதிகமாகவே கொடுங்கள், அதை தான் இயேசு சொல்கிறார்.


உங்களை யாராவது நியாயம் அற்ற முறையில் ஏதாவது செய்ய சொன்னால், இந்த குரூரமான பாவத்தை தடுக்க, அந்த செயலை நீங்களாகவே, தானாகவே முன் வந்து ஏற்று செய்தால் நல்லது.

நமது அன்பை அன்பளிப்பாக அவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்பதை, அவர்களுக்கு தெரியபடுத்த வேன்டும். நாம் அவர்களின் பாவத்திற்கு உட்பட்டவர் அல்ல என்பதனை அவர்களுக்கு தெரியபடுத்த வெண்டும். நாம் கடவுளின் அன்பை மற்றவர்களுக்கு கொடுப்பதில் முன் மாதிரியாக செய்யும்போது, அந்த அன்பு சாத்தானை வெற்றி கொள்ளும்.
இது தான் மிகச்சரியாக இருப்பதற்கு சமம். மிகச்சரியாக இருப்பதற்கு பைபிளில் இருக்கும் அர்த்தம் - முழுமையான அன்பு, பூரனமான, முழுமையான, நிரம்ப, எல்லையில்லாத அன்பும், இரக்கமுள்ள அன்பும் ஆகும்.



© 2011 by Terry A. Modica

No comments: