Friday, February 25, 2011

பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 27, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Is 49:14-15
Ps 62:2-3,6-9
1 Cor 4:1-5
Matt 6:24-34


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 6


கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
24 ' எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
25 ' ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? ' 26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!27 கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.30 நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய நற்செய்தி, இயேசு மலைகள் மேல் கொடுத்த ப்ரசங்கத்தின் ஒரு பகுதியாகும். இது இயேசு வாழ்ந்தது போல், எப்படி பரிசுத்தமாகவும், முன் மாதிரியாகவும் வாழ்வேண்டும் என்று நமக்கு அறிவுறை சொல்கிறார். இதே அறிவுரை, இயேசு கூறிய "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " ஜெபத்திலும் "எங்கள் அனுதின உணவை இன்று அளித்தருளும்" என்றும் இருக்கிறது. ஜெபத்திலும், ப்ரசங்கத்திலும், நமது அனுதின தேவைகளுக்கு நாம் கடவுளை நம்பி இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய நற்செய்தியின் நோக்கம்.


ஒவ்வொரு நாளும், நமது தேவைகளுக்கு, நாம் கடவுளை நம்பியிருக்க வேண்டும் அல்லது இவ்வுலக வழியில் நாமாக நமது முடிவை எடுக்க வேண்டும். நாம் இரண்டு பேருக்கும் பணியாளனாய் இருக்க முடியாது. நமது மதச்சடங்குகள் மூலம் நாம் ஒரு காலை மோட்சத்திற்கும், இன்னொரு காலை, இவ்வுலக வாழ்வின் முறைகளிலும் வைத்து கொண்டு நாம் நம்மையெ ஏமாற்றி கொள்ள கூடாது.


"செல்வம்" என்ற வார்த்தை அரமாயிக் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் என்னவென்றால், "செல்வம்" அல்லது "சொத்து" ஆகும். ஒரு காலத்தில் ஒரு கதை உண்டு, யாரோ ஒருவர், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் வேண்டிகொண்டார்களாம் அதற்கு கடவுள், "உங்களிடம் ஏற்கணவே உங்கள் உணவு உள்ளது, மற்றவர்கள் உணவையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கூறினாராம். மற்றவர்களுக்கு தேவையானதை ஏன் நாம் சேமித்து வைத்திருக்கிறோம் ? நாம் நமது எதிர்காலத்திற்காக நாம் சேமித்து வைக்கிறோம். ஆனால் பலர், நம்மிடம் அதிகம் உள்ளதை தினமும் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். அவர்களிடம் அதை கொடுத்து விட்டால், நமக்கு பிற்காலத்தில் கிடைக்காமல் போய்விடுவோமா என்ற பயம் நம்மிடம் இருக்கிறது.

அப்படி ஒரு எண்ணம் நமக்கு இருந்தால், நாம் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம். கடவுள் நம்மை கவனிக்கமாட்டார் என்ற கொள்கையுடன் இருக்கிறீர்கள். நாம் எப்படி மற்றவர்களிடம் தாரளமாக இருக்கிறோமோ, அப்படி ஒன்றும் கடவுள் இருக்கமாட்டார் என்று அனுமானித்து விடுகிறோம். அதனால் தான் இயேசு "நீங்கள் ரொம்பவே கவலைபடுகிறீர்கள்!, உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வைத்து இருந்தால், கவலை படவேண்டாம்" என்று கூறுகிறார். நாம் நமது கவலையை விட கடவுள் எவ்வளவு நல்லவர் என்று நீங்கள் நினைக்க வேண்டும்.


"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார். அவர் உங்களை கவனித்து கொள்வார்! நீங்கள் இறையரசிற்காகவும், கடவுளின் வழியிலும் செல்ல முனைந்தால், உங்களுக்கு தேவையானது ஒவ்வொன்றும் கிடைக்கும், அதனால் கவலைபடுவதை நிறுந்துங்கள் " என்று இயேசு கூறுகிறார்.

கவலைபடுவது ஒரு பாவமாகும், இது நம்மை இயேசுவின் மீது உள்ள கண்களை விலக்கிவிடும். கவலை சாத்தானின் வேலையாகும், , இது நம்மை மற்றவர்களிடம் நாம் காட்ட வேண்டிய இயேசுவின் தாராள குணத்தையும், அன்பையும் பிரித்து விடும்.


(www.gnm.org)

No comments: