Friday, February 4, 2011

பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

பிப்ரவரி 6 , 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு

Is 58:7-10
Ps 112:4-9
1 Cor 2:1-5
Matt 5:13-16


மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 5



உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34 - 35)
13 ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

(thanks to www.arulvakku.com)


"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறுகிறார். உப்பாய் இருப்பதாக இருப்பது என்றால், அதற்கு என்ன அர்த்தம். உப்பு என்ன செய்யும் என்று யோசித்து பாருங்கள். சுவையில்லாத உணவிற்கு சுவையை கூட்டுகிறது. மேலும் உப்பு உவர்ப்பற்று போனால் என்ன ஆகும் என்று இயேசுவே ஒரு கேள்வியை கேட்கிறார். எப்படி மீண்டும் அந்த உவர்ப்பை எப்படி பெறுவது? அதற்கு பதில்: கடவுள் நம்மிடம் அதனை மீண்டும் சேர்க்க செய்ய அவரிடம் சரண்டைய வேண்டும்.

உங்கள் ஞானஸ்நானத்திலேயே, கடவுள் உங்களுக்கு எல்லா சுவைகளையும் வழங்கியிருக்கிறார். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கடவுளின் வாழ்வான, கடவுள் அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவை கூட்டி அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள்.

ஆனால், எல்லாவற்றிற்கும் அதிகமான உழைப்பை கொடுத்தால் என்ன ஆகும் என்று நினைவில் கொள்ளுங்கள்!. உணவிற்கு அதிக உப்பு இருந்தால் என்ன ஆகும் என்றும் யோசியுங்கள். அதன் சுவை ஏற்று கொள்ள முடியாது. நாம் நல்ல எண்ணத்தில் அதிகமாக அந்த சுவையை கொடுத்தாலும், அது ஏற்று கொள்ளபடுவதில்லை, நல்லது செய்ய போய், அழிவை தான் கொடுப்போம்.

இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பெறும் அனைவரும், இயேசுவை நோக்கி திரும்புவார்கள். இயேசுவின் அமைதியை நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து பெறுபவர்கள், இயேசுவின் வாழ்வை நாம் வாழ்ந்து காமிக்கும்பொழுது, பலர் இயேசுவிடம் திரும்புவார்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே, இயேசு அவர்களை அன்பு செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும், ஆனால், இயேசு அவர்களை மனப்பூர்வமான தெய்வீக வாழ்வை துவங்க வேண்டும் என்று விரும்புகிறார், அப்போது தான், இயேசு அவர்களின் ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும், சோதனைகளையும் ஆசிர்வாதங்களாகவும், சந்தோசமாகவும் இயேசு மாற்றுவார்.

மேலும் இயேசு நம்மை ஒளியாய் இருக்க சொல்கிறார். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியாது ஆனால், அந்த ஒளியை நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் குருடாக்கும் ஒளியை நாம் வீசக்கூடாது. நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். நம் ஒளியையும் கிறிஸ்துதான் ஒளியூட்ட வேண்டும். அதனால் மற்றவர்கள் அந்த ஒளியை நோக்குவார்கள்.

மேலும், இயேசு நம்மை மலை மேல் இருக்கும் நகர் போல இருக்க சொல்கிறார். நாம் ஒருவர் மட்டும் மணமாற்றுதல் செய்ய முடியாது. ஒரு "நகர்" என்பது கிறிஸ்தவர்களின் குழு : ஒரு பங்கு, ஒரு குடும்பம், பங்கு குழு, இன்னும் பல. கிறிஸ்தவர்களாக இருப்பது என்பது நாம் ஒரு குழுவில் இருக்கிறோம் என்பது ஆகும். நமது ஒளி மற்றவர்களின் ஒளியோடு சேரும்போது, எல்லாம் சேர்ந்த வெளிச்சம் கிறிஸ்துவை இவ்வுலகிற்க்கு காட்ட பலமான ஒளியாக இருக்கும். ஏன்? ஏனெனில், கிறிஸ்துவை நம்பாதவர்கள், நாம் எல்லாம் சேர்ந்து ஒருவரையொருவர் அன்பு செய்யும்பொழுது, கிறிஸ்துவின் அன்பு உண்மையானது என்று அவர்கள் நம்பி, கிறிஸ்துவின் அன்பை புரிந்து கொள்வார்கள். எவ்வித நிபந்தனையின்றி, தாராளமாகவும், பணி செய்யும் பன்பும் அவர்களிடம் கிறிஸ்துவின் அன்பை காமிக்கும். நாம் ஒருவொருக்கு ஒருவர் கிறிஸ்துவின் ஒளியாய் இருக்கிறோம். நாம் ஒருவர்க்கு ஒருவர் சுவையூட்டுகிறோம். மற்றவர்கள் இல்லையென்றால், நமது ஒளி மங்கிவிடும். நமது சுவை குறைந்து விடும், கடவுளரசிற்கு வேண்டாதவர் ஆகி விடுவோம்.

© 2011 by Terry A. Modica

No comments: