Friday, November 18, 2011

நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்து அரசர்
Ezek 34:11-12, 15-17
Ps 23:1-3, 5-6
1 Cor 15:20-26, 28
Matt 25:31-46


மத்தேயு நற்செய்தி

அதிகாரம் 25
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ' என்பார்.37 அதற்கு நேர்மையாளர்கள் ' ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்? ' என்று கேட்பார்கள்.40 அதற்கு அரசர், ' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார்.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். '
(thanks to www.arulvakku.com)
நாம் ஆயர்களை என்றுமே அரசர்களாக மன்னர்களாக நினைப்பதில்லை. ஆனால் இன்றைய நற்செய்தியோ, நமது நல்லாயன் இயேசுவின் ஆற்றலை, சக்தியை இங்கே விளைக்கி சொல்கிறது. மன்னர்கள் தனது படை பலத்தினால், தனது ராஜ்ஜியத்தை பெரிதாக்கி, தனது ஆட்சியை நல் வழியில் நடத்துவார்கள். அதனால் தான் இயேசு சொல்கிறார். "சிறியோர்களுக்கு நீங்கள் செய்த அனைத்தும் எனக்காக செய்தீர்கள்".

எடுத்து காட்டாக, நமது நல்லாயனும், மன்னருமாகிய இயேசு பசியாய் இருப்போருக்கு உணவளிக்க விரும்பினால், அவர் இறையரசிடமிருந்து எப்படி கொடுப்பது? நம்மில் சிலருக்கு அதிகமான உணவை கொடுத்து , யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்.


அரசரின் கட்டளைகளை நாம் செய்யா விட்டால் என்ன ஆகும்? பசியாய் இருப்போர் , கடவுள் தயாள குணமுடையவர் என்று நினைப்பார்களா? கடவுள் என்ன செய்ய சொன்னாரோ, அதனை நாம் செய்யும் பொழுது தான், அவர்கள் கடவுள் இரக்கமுள்ளவர் என்று நினைப்பார்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நினைத்து பாருங்கள். ஒவ்வொருவரும், நமக்கு கடவுள் நல்லவர் என்று கான்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளனர்.

உங்களுக்கு அதிகம் பிடிக்காதவர்கள் யார்? அவர் உங்களை கோபப்படுத்தியிருக்கலாம் அல்லது பயமுறுத்தியிருக்கலாம், அல்லது காய்ப்படுத்தியிருக்கலாம். அதெல்லாம் இருக்கட்டும்: அவர் எதனை அடைய ஆசைப்பட்டார்? உங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் பரிசுத்த ஆவியை கேளுங்கள் , அந்த நபரை நன்றாக கவனித்து, அவர் அடிமனதில் என்ன வலியோடும், பயத்தோடும் இருக்கிறார் என்று அறிய முற்படுங்கள்.


அவருக்கு கொடுப்பது மாதிரி , உங்களிடத்தில் கடவுள் அளவிற்கு அதிகமாக எதனை கொடுத்திருக்கிறார் , மேலும் கிறிஸ்து அரசரிடமிருந்து நீங்கள் பெற்று அவரிடம் நமது அரசர் எவ்வளவு தாராள குணமுள்ளவர் என்று நீங்கள் கான்பிக்க வேண்டாமா?
நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை , நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நாம் மறுக்கும் பொழுது, ஆயனிடமிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஆட்டினை போல் ஆகிறோம். மாறாக நாம் கடவுளின் பணிக்கு ஆம் என்று சொல்லி அதில் ஈடுபடும்பொழுது கடவுள் அரசரின் நல்ல விசயங்கள் எல்லா இடமும் பரவும், மேலும் நாம் எல்லோரும் ஆசிர்வதிக்கபடுவோம்.

© 2011 by Terry A. Modica

No comments: