Friday, March 2, 2012

மார்ச் 4, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 4, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 9
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1 - 13; லூக் 9:28 - 36)
2 ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது.8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது 'என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்
(thanks to www.arulvakku.com)

உங்களுக்கு மலை மேல் நடந்த ஒரு அனுபவத்தை நினைத்து பாருங்கள். அதில் நடந்த முக்கிய தருணம் எது? அது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது? அதன் மூலம் என்ன கிடைக்க பெற்றது? உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? உங்கள் வாழ்க்கையை முழுதுமாக மாற்றியதா? அல்லது கொஞச நேரம் தான் உங்களை உற்சாகப்படுத்தியதா?

பைபிளில் உள்ள அர்த்தத்தின் படி, மலை என்றால், கடவுளுக்கு அருகில் செல்கிறோம் என்று அர்த்தம். உங்கள் அனுபவம் உங்களை கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றதா?

தேபர் மலையின் மேல், இயேசு அவரின் தெய்வீகத்தை அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு காண்பித்தார். "உயந்த மலை" என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது, தேபர் மலை அப்படி ஒன்று பெரிய மலை அல்ல, அதில் பெரிய நிகழ்ச்சி என்ன என்றால், அங்கு நடந்த "இயேசு தோற்றம் மாறியது" தான் பெரியது. --ஏன்?

நமது ஆன்மீக வாழ்வில், நடந்த குறிப்பிட்ட சம்பவங்களில், மலை மேல் நடந்த அனுபவம் போல இல்லை என்று நாம் நினைக்கலாம், ஆனால், உண்மையிலேயே, அது மிக சிறந்த அனுபவம் தான்.
அந்த மூன்று சீடர்களும், கிறிஸ்துவின் தோற்றம் மாறுதலை பார்த்து , இயேசுவின் பிரகாசமிக்க ஒளியை கண்டுனர்ந்து அதன் மூலம் பயனடைந்தனர். ஏனெனில், அவர்கள் தான், இயேசுவின் இறைசேவையை இவ்வுலகில் தொடர அழைக்கப்பட்டிருந்தனர்.

தவக்காலம் என்பது, நாம் எல்லோருக்கும், இது போல மலை அனுபவம் இக்காலத்தில் நடக்கும் என்பதாகும். அவரின் ஒளி நம்மில் உள்ள எல்லா இருளையும் எடுத்து விடும்.
எந்த அளவிற்கு , அவரின் போதனைகளை கேட்டு , அதனை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் கிறிஸ்துவை போல மாறுவோம். எந்த அளவிற்கு நாம் இயேசுவை போல மாறுகிறோமோ அந்த அளவிற்கு அவரின் ஒளியால், நமது வாழ்வு மாறும், அதே போல, நம் அருகில் உள்ள அனைவரின் வாழ்வும் மாறும்.
முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல, ஆப்ரகாம், கடவுளிடம் அவரது மகனை கொடுக்காமலிருக்கவில்லை, அதே போல், கடவுளும் நமக்கு அவரது மகனை முழுமையாக கொடுத்துள்ளார்.
அதே போல, கிறிஸ்தவ வாழ்வின் பொறுப்பான நாம், கிறிஸ்துவை நாம் சந்திக்கும் மனிதர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டும். இரக்கத்துடன் கூடிய அன்பினாலும், புன்னகையினாலும், அவர்களுக்கு உதவி செய்வதாலும், அவர்களின் கவலையை ப்ரச்னையை காது கொடுத்து கேட்பது, தாராளாமாக, பொருட்களையும், இரக்கத்தையும் , மன்னிப்பின் மூலமும், நாம் இயேசுவை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். நாம் கிறிஸ்துவின் கைகளாகவும், கால்களாகவும் இவ்வுலகில் இருக்கிறோம். அவரின் உண்மையின் குரலாக, அவரின் குணப்படுத்தும் கரமாக , இயேசுவின் இவ்வுலக உடலாக இருக்கிறோம். மக்களின் ஜெபத்திற்கு பதிலுரையாக இருக்கிறோம்.
கிறிஸ்துவின் அன்பின் புகழொளியோடு இருக்க , நாம் நமது ஞானஸ்நானத்தின் மூலம் கடவுளிடமிருந்து அருள் பெற்றுள்ளோம். இயேசுவின் இவ்வுலக இறைசேவையை நாம் தொடர அழைக்கப்பட்டுள்ளோம். இந்த தவக்காலத்தின் அனுபவம் நம்மை இன்னும் இறைசேவையிலும், கிறிஸ்துவோடு இனைந்து செல்வதிலும் அதிகமாக்கட்டும்.
© 2012 by Terry A. Modica

No comments: