Friday, January 25, 2013

ஜனவரி 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



ஜனவரி 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 3ம் ஞாயிறு
Neh 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Cor 12:4-11
Luke 1:1-4; 4:14-21

லூக்கா நற்செய்தி
1. அர்ப்பணம்
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்: 2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

4. கலிலேயப் பணி
கலிலேயப் பணியின் தொடக்கம்

(மத் 4:12 - 17; மாற் 1:14 - 15)
14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(மத் 13:53 - 58; மாற் 6:1 - 6)
16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவே அவரது இறைபணியை பற்றி அறிவிப்பதை காண்கிறோம்:  ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று '


அவருடைய இறைசேவை, இயேசு மோட்சத்திற்கு எழுந்தருளி சென்ற பின் மறைந்துவிட்டதா? இவ்வுலகைவிட்டு அவர் சென்றவுடன் இறைசேவையும் சென்றுவிட்டதா?  கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் வாசகத்தில் எழுதப்பட்டுள்ளது போல, நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலாக இப்பூமியில் இருக்கிறோம்.

நாம் அனைவரும் – ஒவ்வொருவரும் – இந்த உடலில் முக்கியமான அங்கமாக இருக்கிறோம்!. நீங்களே உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள். கடவுள் உங்களை உருவாக்கி, இந்த திருச்சபையோடு இனைத்துள்ளார். ஏனெனில், கன்டிப்பாக உங்களால் ஒரு முயற்சியை கான்பிக்க முடியும் என்ற நம்பிக்கையால் தான். உங்களால் செய்ய முடிந்ததை, இன்னொருவரால் செய்ய முடியாது. கடவுள் உங்கள் மூலம் ஒரு திட்டத்தை இவ்வுலகில் செய்ய முனைந்தாரானால், அதன் மூலம் இவ்வுலகை இன்னும் நல்ல நிலையில் கொண்டு செல்ல முடியும் என்று அவர் திட்டமிட்டால், அதனை உங்களால் மட்டுமே செய்ய முடியும். நாம் கிறிஸ்தவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் உடலாக இவ்வுலகில் ஒரு சமூக இனைப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும், திவ்ய நற்கருணையை நாம் பெறுகிறபொழுது, நாம் நம்மையே வாங்குகிறோம். , அதன் மூலம், நாம் கிறிஸ்துவின் இறைசேவையை, புதுபித்து கொள்கிறோம். அவரின் செயற் திட்டமே நம் திட்டமும் ஆகும்.

இயேசுவை திவ்ய நற்கருணையில் நாம் பெறுகிற பொழுது, அவரை மனிதனாகவும், தெய்வமாகவும் நாம் முழுதாக பெற்று கொள்கிறோம். அதே போல அவரது இறைசேவையையும் நாம் ஏற்று கொள்கிறோம். கடவுள் தூய ஆவி நம் மேல் வருகிறது. ஒவ்வொரு திருப்பலியில் நாம் நமது அழைப்பை புதுபித்து கொள்கிறோம். நற்செய்தியை ஏழைகளுக்கு அறிவிக்கவும், பார்வை இழந்தவர்களுக்கு பார்வை பெறவும், அடிமைதனத்திலிருந்து விடுதலை பெறவும், கடவுளுக்கு உகந்ததை மக்களுக்கு அறிவிக்கவும் நாம் அழைக்கபட்டுள்ளோம்.

இதையே வேறு மாறாக, சொல்வதென்றால், இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது போல, ஒவ்வொரு முறையும் இயேசுவை திவ்ய நற்கருணையில் வாங்கும்பொழுது, நாம் இயேசுவை பின்பற்ற வேண்டும்.

பாவங்கள் இதனை எல்லாம் செய்ய தடையாக இருக்கின்றன.

நாம் கேட்கும் ஜெபங்களுக்கு  நமக்கு சரியான வரம் கிடைக்க வில்லையென்றாலும், சாத்தான் வெற்றி பெறும் தருவாயிலும், இயேசுவின் மீட்பை, அதன் செய்தியை கேட்காமல் ஆன்மா துயறுரும்போதும், நாம் யோசித்தோமானால், கிறிஸ்துவின் இவ்வுலக உடல் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கிறது என்று அர்த்தம்.  கடவுள் இவ்வுலகிற்கு தேவையான அனைத்தும் நம் மூலமாக் கொடுத்தருளுகிறார். இயேசு அவரது இறைசேவையை நம் மூலம் இவ்வுலகில் தொடர்கிறார்.

© 2013 by Terry A. Modica

No comments: