Friday, February 8, 2013

பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



பிப்ரவரி 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 5ம் ஞாயிறு
Is 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Cor 15:1-11
Luke 5:1-11

லூக்கா நற்செய்தி (5:1-11)

முதல் சீடரை அழைத்தல்
(மத் 4:18 - 22; மாற் 1:16 - 20)
1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் 'என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
(thanks to www.arulvakku.com)
அடிக்கடி, கடவுள் நாம் கேட்காததை கூட நமக்கு கொடுத்து உதவுகிறார். இன்றைய நற்செய்தியில், இராய்ப்பருக்கும்,ஜேம்சுக்கும், ஜானுக்கும்,  இயேசு அப்படிதான் செய்தார். அங்கே அதிக மீன்களை பிடிக்க உதவினார்.
இயேசுவின்  நோக்கம் என்ன? அவர்களின் படகை இயேசுவுக்கு கொடுத்ததால், இயேசு பதிலுக்கு அவர்களுக்கு நன்மை செய்தாரா? இயேசு உங்களுக்கும் சன்மானமாக கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா?

ஆம், இது சன்மானம் அல்ல. அது மிக பெரிய விசயம்.
நற்செய்தியில், உள்ள கதையை ஒவ்வொன்றாக பார்ப்போம்:
1.   முதலில், மீனவர்களுக்கு இயேசுவை முன்பே தெரியும்; அவர்கள் இயேசுவை “போதகரே” என்று அழைத்தனர். ஏனெனில், அவர்கள் இயேசுவின் சீடர்களாய் இருந்தனர்.
2.   இரண்டாவதாக, இயேசு அவர்கள் எதிர்பார்க்காமலேயே அவர்களுக்கு உதவி செய்தார்.
3.   மூன்றாவதாக, இயேசு அந்த அன்பளிப்பை, அவர்களின் அழைத்தலுக்கானதாக மாற்றினார்.
4.   நான்காவதாக, சீடர்கள் அவர்களுடைய  அனைத்தையும் விட்டு விட்டு, அந்த அழைத்தலுக்கு ஆயத்தமானார்கள்.

கடவுள் நம் வாழ்வில் தலையிடுகிறபொழுது, நம் நன்மைகளுக்காகவும், மற்றவர்களின் நமன்மைகளுக்காகவும் அவர் நமக்கு நல்லது செய்கிறார். நாம் சமூகத்தில் இனைந்து இருக்கிறோம். கடவுள் குடும்ப சமூகத்தில் இருக்கிறோம். தனியாக கடவுளோடு நாம் இனைந்து இருக்க முடியாது. கடவுளோடு ஜெபத்திலும், திவ்ய நற்கருணையிலும், வேண்டுதலிலும், நாம் கடவுளிடம் இருக்கும்பொழுது, மற்றவர்களோடு இனைந்து, , அவர்கள் மேல் அக்கறையோடும், அவர்களின் நலனுக்காகவும் நாம் ஜெபித்து இறையோடு இனைவோம்.
நமக்காக நாம் வேண்டும் ஜெபத்தை கடவுள் கொடுக்காமலிருப்பதும், நம் நன்மைக்கே.  கடவுள் எப்பொழுதுமே பெரிதாக தான் பார்ப்பார். எல்லோரையும் கவனித்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அவர் நன்மை செய்வார்.

உங்கள் மன்னிப்புக்கு கடவுள் செவி சாய்க்காத மாதிரி நமக்கு தோன்றும். ஏனெனில், அவர் மிக பெரிய திட்டத்திற்காக தயார் செய்து வருகிறார். மற்றவர்களுக்கும் சேர்த்து நீங்கள் கேட்ட உதவி எப்படி அவர்களுக்கும் பயன் தரும் என்று எல்லாவற்றையும் சேர்த்தே திட்டமிடுகிறார்.

உங்களின் தேவைகளையும், ஆசைகளையும் அறிந்து கடவுள் உங்கள் மேல் அக்கறை கொள்கிறார். அதே போல் மற்றவர்கள் மேலும் அக்கறை கொள்கிறார். அவர்கள் அனைவரும் கடவுளிடம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்கள் அனைவர் மேலும் அக்கறை கொள்கிறார். மேலும், உங்கள் தேவைகளை இறைசேவையின் அழைத்தலாக மாற்றுகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், உதவியாக கடவுளிடம் கேட்க ஆரம்பித்தவுடன், கடவுளின் உதவியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். நம்மை தாண்டி மற்றவர்களுக்காக நாம் யோசிக்க ஆரம்பித்த உடன், நமது ப்ரச்சினைகள் முடியும் மட்டும், அதனை தாங்கி கொண்டும், அதிலே, நாம் அமைதியையும், நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கைவிடாமல் பெறுதல் வேண்டும். இது தான் நாம் அனுதினம் செய்ய வேண்டிய இறைசேவை ஆகும்.
© 2013 by Terry A. Modica


No comments: