Friday, February 1, 2013

பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


பிப்ரவரி 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Jer 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Cor 12:31 – 13:13
Luke 4:21-30


21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.23 அவர் அவர்களிடம், ' நீங்கள் என்னிடம், ' மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும் ' என்னும் பழமொழியைச் சொல்லி, ' கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் ' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது ' என்றார்.28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியை கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால், இயேசு போன  வாரம் உள்ள நற்செய்தியை வாசித்து முடித்து (' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்) , தொழுகை கூடத்தில் உள்ளவர்களிடம் , நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார். மேலும் அவர்கள் இயேசுவை பற்றி மிக உயர்வாக பேசினர். ஆனால், அந்த நற்செய்தியின் முடிவில்,  கடம் கோபம் கொண்டனர்.  எது அவர்களின் குணத்தை மாற்றியது?


அவர்களின் வியப்பு, அச்சம், “ஜோசப்பின் மகன் அல்லவர் இவர்? “ என்று பேசிகொண்டு இன்னும் குழம்பினர்.  புதிதாக இயேசுவை பார்த்தவர்களை விட, இயேசு குழந்தையாக இருந்தபோதே பார்த்து வந்த இவர்களுக்கு இயேசு வேறாக தெரிந்தார்.  தச்சு தொழில் செய்த போது, கையில் காயம்பட்டு இரத்தம் சிந்தின இளைஞன் இயேசுவையும், அவர் தந்தை சூசை இறந்தபோது அழுத இயேசுவையும் இவர்களுக்கு தெரியும்.


அவர்களது குணம், இயேசு சொல்வதை பரிசுத்த ஆவியின் துனையின்றி கேட்ட பொழுது, மாறியது. ஏனெனில், அவர்கள், ஏற்கனவே அறிந்த்திருந்த யேசுவின் மேல் ஒரு பிம்பத்தோடு அத்தனையும் கேட்டனர். அதனால் தெய்வீக உணர்வு அவர்களை விட்டு போய்விட்டது. அங்கே தெய்வத்துடன் உள்ள தொடர்பு அறுந்து விட்டது.


உங்களை ஒருவர் , அவர் எதிர்பார்ப்பது போல் நீங்கள் நடந்து கொள்ளாமல், வேறு மாதிரியாக நடந்து கொண்டால்,  நிச்சயம் அவர் குழம்பி விடுவார். உங்களை மிகவும் இளையவர் என்றோ, அல்லது, மிகவும் முதியவர் என்றோ, அவர்கள் நினைத்து அதற்கு மாறாக நீங்கள் நடந்து அல்லது, தகுதியான கல்வி அறிவை பெறாமல் இருந்து , அல்லது அவர்கள் என்ன கேட்க ஆசைபடுகிறார்களோ அதனை சொல்லாமல் இருப்பதும், அவர்களை குழப்பி மிகவும் உங்களுக்கு எதிராக கோபமடைய செய்கிறது.


நாம் அவர்கள், நம்மை நம்பவேண்டும் மற்றும், பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் நம்மை நம்பவில்லையெனில், நம்மை ஆச்சரியபடுத்தி, மேலும் நம்மை குழப்புகிறது, அதனால்,  நாம் உணர்ச்சி வயப்பட்டு அவர்கள் மேல் கோபம் கொள்கிறோம். ஆனால், இயேசுவை அவர்கள் இவ்வாறு நடத்தியபின்பு,  இயேசு எப்படி நடந்து கொண்டார்? பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால்,  பொறுமையாக இயேசு உண்மையை பேசினார். உணர்ச்சி வயப்பட்டு ஏதாவது செய்தாரா? கண்டிப்பாக, ஏனெனில், அவரும் மனிதனாக தான் இருந்தார். கடவுள் நம்மை படைக்கும்போது  உணர்வுகளுடன் தான் படைத்துள்ளார். நாம் பரிசுத்த ஆவியின் துனையில்லாமல் கேட்கும்பொழுது தான், நமக்கு ப்ரஸ்னை ஏற்படுகிறது.


© 2013 by Terry A. Modica


No comments: