Friday, November 1, 2013

நவம்பர் 3 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 3 2013  ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Wisdom 11:22–12:2
Psalm 145:1-2,8-11,13,14
2 Thessalonians 1:11–2:2
Luke 19:1-10

இயேசுவும் சக்கேயுவும்
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் 'என்றார்.அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர்.சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார்.இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் என்று சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் சக்கேயுவின், தீவிரத்தை தீர்மானமாக இயேசுவை க்கான அவர் எடுத்து கொண்ட முயற்சியை பார்த்தீர்களா? இயேசுவை அவரால் பார்க்க முடியவில்லை. ஆனால் அது ஒன்றும் அவர் இயேசுவை பார்ப்பதை தடை செய்யவில்லை. மக்கள் கூட்டமும், குள்ளமாக இருப்பதாலும், அவருக்கு பெருந் தடையாக இருந்தது. இருந்தும் , இயேசுவை பார்க்கும் அவர் நோக்கம் ஒன்றும் அவர் விடவில்லை.

இயேசுவை அவர் பார்த்தே ஆகவேண்டும், அவரை அருகாமையில் இருந்து அவர் செய்வதை பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தில், மரத்தின் மேல் ஏறினார். அவர் மரக்கிளையில் ஏறி நிற்பதால், அவருக்கு அவமானமாக கூட இருந்திருக்கலாம். அவரை பார்ப்பவர்கள், அவரை ஒரு மாதிரியாக கூட பார்த்திருக்கலாம். சிலர் கீழ்த்தரமாக கூட பேசியிருக்கலாம். மரத்தின் கடினமான உராய்வு கூட அவரின் சட்டையை கிழித்திருக்கலாம்,  ஆனால் இதெல்லாம் சக்கேயுவை நிறுத்தவில்லை.

நமக்குள்ளும் பல குறைகள் உள்ளன – தவறான கண்ணோட்டம், தவறான பயிர்ச்சிகள், பயம், தெய்வ விசயத்தில் சோம்பல், பயம், சந்தேகம், இன்னும் பல – இவையெல்லாம் நாம் இயேசுவை பார்ப்பதற்கு தடையாக இருக்கின்றன. நமக்குள்ளும், பல குறைவான குணங்கள் உள்ளன. கடவுளோடு ஒப்பிடுகையில், நாம் மிகவும் சிறியவர்களே, கடவுளின் மேலான குணங்கள் , அவர் பார்ப்பது போன்று நம்மால் பார்க்க இயலாது, நம் குறைவான குணங்களால் , இயேசு நம்மை நிராகரித்து விட்டார் என்று நாமாக ஒரு முடிவிற்கு வந்து விடுகிறோம். அதன் பிறகு தனிமையாகி விடுகிறோம்.
மாறாக, நாம் சக்கேயுவை போல இருக்க வேண்டும். இயேசுவை முழுதுமாக பார்க்க வேண்டும் என்று விருப்பத்துடன், எல்லா வகையான வழியிலும், முயற்சி செய்து, எல்லா தடைகளையும் மீறி அவரிடம் செல்ல வேண்டும்.

சக்கேயு மரத்தின் மேல் ஏறியவுடன், இயேசு தனியாக அவரை கண்டறிந்ததை பாருங்கள், மேலும், அவரை தனியே அழைத்து, அவருக்கு உறுதியளிக்கிறார். சக்கேயு அதற்கு எவ்வாறு பதிலுரைத்தார், எப்படி எப்படி ஏற்றுகொண்டார், உடனடியாக மரத்திலிருந்து இறங்கி ஓடோடி வந்து, இயேசுவை சந்தோசமாக ஏற்றுகொண்டார்.  மிகவும் உற்சாகத்துடன் வந்து, அவருடைய பாவங்களுக்காக, அதன் தண்டனையாக பல மடங்கு ஏற்றுகொள்ள தயாரானார்.

திருப்பலியில் இயேசுவை திவ்ய நற்கருணையில் பார்க்கிறீர்களா? கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு எவ்வாறு சக்கேயு நடந்து கொண்டாரோ, அதே போல், நாம் நடந்து கொள்கிறோமோ, அப்படி இல்லையெனில், நம்மில் இன்னும் தடைகள் இருக்கின்றன என்று அர்த்தம், இன்னும் நாம் மேலே போக வேண்டும்.

© 2013 by Terry A. Modica

No comments: