Saturday, November 29, 2014

நவம்பர் 30 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை திருவருகை காலம்

நவம்பர் 30 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை காலம் முதல் ஞாயிறு
Isaiah 63:16b-17, 19b; 64:2-7
Ps 80:2-3, 15-16, 18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37

மாற்கு நற்செய்தி

மானிடமகன் வரும் நாளும் வேளையும்
(
மத் 24:36 - 44; லூக் 17:26 - 30, 34 - 36)
33கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.34 நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.35அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.36 அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.37நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள். ' 
(thanks to www.arulvakku.com)

இயேசுவுக்கு அன்பளிப்பு

இன்று திருவருகை காலத்தை ஆரம்பிக்கிறோம். கிரிஸ்துமசிற்கு நாம் தயாராகும் பொழுது , எப்படி நம் அன்புள்ளவர்களிடம், மற்றும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் அவர்களை அசத்துற மாதிரியான அன்பளிப்பை நாம் கொடுக்க முயற்சி செய்கிறோம், இருந்தாலும், அந்த அன்பளிப்பு அவர்களுக்கு காலத்திற்கும் உதவியாக இருக்குமா என்று நாம் பார்க்க ஆசைபடுகிறோம், அல்லது அவர்களிடமிருந்து கண்டு கொள்ள முயற்சி செய்கிறோம்

எத்தனை அன்பளிப்புகள் நீங்கள் கொடுத்தது , தூசி தட்டி கொண்டிருக்கிறார்கள். ? எந்த அன்பளிப்புகள் எல்லாம் உண்மையாகவே அவர்காளுக்கு உதவியாகவே இருக்கிறது ?

கிறிஸ்துவின் பிறப்பை நாம் கிறிஸ்துமஸ் அன்று கொண்டாடுவதால், நாம் அவருக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும். என்றும் நிலையான அன்பளிப்பாக இருக்க வேண்டும். எல்லாமே வைத்திருக்கும் ஒருவருக்கு நாம் என்ன அன்பளிப்பு கொடுக்க முடியும்.
அல்லது அவரிடம் இல்லாதது எதுவும் இருக்கிறதா ?

நிலையான மாற்றத்தை நித்திய வாழ்வில் கொடுக்க என்ன அன்பளிப்பை நீங்கள் இயேசுவிற்கு கொடுக்க போகிறீர்கள் ? மற்றவர்கள் கொடுக்காத அன்பள்ளிப்பு , இயேசுவிடம் இல்லாத அன்பளிப்பாக இருக்க வேண்டும் ? அதற்கு பதில்: உங்கள் வாழ் க்கையில் எதனை , எந்த ஆற்றலை , அறிவை இன்னும் இயேசுவிற்காக, இறைபணிக்காக நீங்கள் உபயோகிக்காமல் இருக்கிறீர்கள்? அது உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதாக கூட இருக்கும் .

இன்றைய முதல் வாசகம் கடவுள் நம் தந்தை என்று நினவு படுத்துகிறது. பதிலுரை பாடல் , தந்தை கடவுளை நோக்கி நாம் திரும்ப வைக்க வேண்டும் என்று நமக்கு கடவுள் உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறது. இரண்டாவது வாசகம், தந்தை கடவுள் நமக்கு செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி கூறுகிறது. அதனால், அவர் செய்த எல்லா நன்மைகளுக்கும் என்ன கொடுக்க போகிறீர்கள் ?

நற்செய்தி வாசகத்தில், நாம் எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்று நமக்கு நினைவு படுத்த படுகிறது. கிறிஸ்துவின் வருகைக்காக , நாம் நம் செயல்கள் மூலம் எந்த மாதிரியான வித்தியாசத்தை கொடுக்க முடியும். ? அவரின் இரண்டாம் வருகையை நாம் இங்கு குறிப்பிடுகிறோம். இந்த பூமியின் கடைசி மூச்சு முடியும் பொழுது கிறிஸ்து நமக்காக வருவார். கிறிஸ்துமஸ் அன்று நமக்காக இயேசு வர விருக்கிறார். மேலும் இன்றே இப்பொழுது வர இருப்பவர் .


எதோ புதிய ஒன்றை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறார். முதல் வாசகத்தில் சொல்ல படுவதை போல உங்களுக்கு சரியானதை கொடுப்பதாக அவர் அறிவாரா ? உங்கள் பரிசுத்த , தெய்வீக திறமைகளை (இரண்டாவது வாசகம் ) கிறிஸ்து உபயோகிப்பாரா ? நீங்கள் எல்லாம் ஆயத்தமாக இருக்கிறீர்களா ? (நற்செய்தி வாசகத்தில் )


திருவருகை காலம் தான் கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பளிப்பையும் , நாம் அவருக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பையும் நாம் நினைவு படுத்தி கொள்ளும் வாய்ப்பாகும் . இந்த அன்பளிப்பு நித்திய வாழ்வில் ஒரு வித்தியாசத்தை நமக்கும் , அவருக்கும் ஏற்படுத்துவதாக இருக்கட்டும்.


© 2014 by Terry A. Modica 

No comments: