Friday, January 16, 2015

ஜனவரி 18, 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 18, 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொது காலம் இரண்டாம் ஞாயிறு
1 Sam 3:3b-10, 19
Ps 40:2, 4, 7-10
1 Cor 6:13c-15a, 17-20
John 1:35-42


யோவான் நற்செய்தி

முதல் சீடர்களை அழைத்தல்

35மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,'என்ன தேடுகிறீர்கள்?'என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39அவர் அவர்களிடம்,' வந்து பாருங்கள் 'என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து,'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் இயேசு சிமோன் இராயப்பரிடம், “என்ன தேடுகிறீர்கள்? “ என்றும் கேட்பது போல நம் அனைவரையும் பார்த்து கேட்கிறார் :
நீங்கள் ஜெபம் செய்யும் பொழுதும், சிலுவையை நோக்கி பார்க்கும் போதும், இயேசுவின் படத்தை பார்க்கும்போதும், நம்மை பார்த்து இயேசு கேட்கிறார்.
"என்ன தேடுகிறீர்கள்? “


இயேசு "வந்து பாருங்கள்!” என்று கூறுகிறார். எதற்காக இப்படி கூறுகிறார்? அவரின் அன்பினால் ? நோயை குனமாக்குவதால்? தெய்வீக ஆற்றலால் நமது ஜெபங்களுக்கு செவி சாய்த்து, நமக்கு வேண்டியதை கொடுப்பதால்? , நாம் என்ன கேட்டாலும், அது நம்மிடத்தில் இல்லாதது தான், ஆனால் அவரிடத்தில் இருக்கிறது.




தந்தை கடவுளின் வாக்குறுதிகள் அனைத்தையும் இயேசு முழுமையாக நிறைவேற்றுகிறார். இயேசு முழுமையான அன்பாக இருக்கிறார், இரக்கத்தை நம்பக்கு தருபராக இருக்கிறார்., நோய்களை குணமாக்கும் இருக்கிறார். நமக்கு தேவையான அனைத்தையும் பெற்று தருபவராக , நமது கவலைகள் அனைத்து போக்குபவராக இருக்கிறார் . அப்புறம்
ஏன் நமக்கு இன்னும் குறைகள் இருக்கிறது ? நம்மிடம் இல்லாதது எது ? ஏன் நம் வாழ்வில் இன்னும் எதையோ இழந்தது மாதிரி இருக்கிறோம் ? ஏன் நமது வேண்டுதல் பதில் கிடைப்பதில்லை

இரயப்பார் இயேசுவை பின் சென்றதற்கு பிறகு , அவரின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. இதனை கடவுளின் அழைப்பிற்கு சாமுவேலின் பதில்களில் பார்க்கிறோம். பதிலுரை பாடலில் "என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது " என்று பாடுகிறோம்

இயேசுவின் முதன்மையான புதுமைகளை இராயப்பர் நேராக பார்த்தவர், கடவுளின் முழுமையான அன்பை இயேசுவின் கனிவான கண்கள் மூலமாக அனுபவித்தவர், இயேசுவின் குரலில் உள்ள இரக்கத்தையும், இயேசுவின் புன்னகையில் உள்ள மன்னிப்பையும் நேராகவே பார்த்தவர்.


இப்படியெல்லாம் இருந்தும் இராயப்பர் அவருக்கு என்ன தேவையோ , அது கிடைக்கவில்லை, (சில நேரங்களில் எப்படி குழப்பத்துடனும், பயத்துடனும் அவர் இருந்தார் என்பதை நாம் பார்க்கிறோம்) , இறுதியாக, இராயப்பார் , இயேசுவின் அன்பை பகிர , கொடுக்கும் கரங்களாக மாறிய பின்பு , அவருக்கு தேவையானதை கண்டுபிடித்தார் . இயேசுவின் முழுமையை , இயேசு உடலை விட்டு அகன்ற பிறகு தான் கண்டு கொண்டார் . அதன் பிறகு தான் , இயேசுவின் அழைப்பை கிரிசுதுவின் இறைசேவையை தொடர்ந்தார்.

அதே போல தான் நாமும் இருக்கிறோம், இயேசுவின் உண்மையாங்க கண்களை பார்க்கவில்லை, அவரின் குரலை கேட்கவில்லை. நம்மிடம் உள்ளதை பிறரிடம் கொடுக்கும் பொழுது , நமக்கு தேவையானதை கண்டு நாம் பெற்று கொள்கிறோம், ஏன்? ஏனெனில் நமக்கு தேவையானது நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது என்பதை நாம் கண்டு கொள்கிறோம் !. இது தான் புதுமை " என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;

© 2014 by Terry A. Modica


No comments: