Friday, January 9, 2015

ஜனவரி 11, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜனவரி 11, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

Isaiah 42:1-4,6-7 or Isaiah 55:1-11
Ps 29:1-4,9-10 or Isaiah 12:2-6
Acts 10:34-38 or 1 John 5:1-9
Mark 1:7-11

மாற்கு நற்செய்தி

 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(
மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)


ஏன் இயேசு ஞானஸ்நானம் பெற்று கொண்டார்? அவர் பாவங்கள் இல்லாதவர். அதற்காக இயேசு ஏதாவது பண்ண வேண்டுமா ? சிலுவையில் மரணமடைந்து நாம் பாவங்களை வென்று நம்மை நிலை வாழ்விற்கு அழைத்து சென்றிருக்கலாமே ? அதனையும் தாண்டி இயேசுவிற்கு இன்னும் இருந்தது ?

இயேசு பாவிகளோடு தன்னை இணைத்து கொண்டார். முதலில் அவர் தன்னை தாழ்மை படுத்தி கொண்டு , நம்மில் ஒருவரானார். மனிதனாக இருந்தார், நமக்கு ஒவ்வொரு நாளும் என்ன தேவையோ அதே தேவைகளோடு வாழ்ந்தார். பிறகு, நாம் ஞானஸ்நானம் பெறுவது போல , இயேசுவும் தன்னை அதற்கு உட்படுத்தினார் அந்த தண்ணீரில் நம்மை போலவே வந்து நின்றார். அதிலிருந்து நம்மை புதிய வாழ்விற்கு, பரிசுத்த வாழ்விற்கு , நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார்.

இயேசு செய்யும் ஒவ்வொரு செயலும், நமக்கு முன்மாதிரியாக செய்கிறார். நாம் யார் என்பதை நமக்கு காட்டுகிறார்: தந்தை கடவுள் நம்மை அவரின் குழந்தைகளாக உருவாக்கினார். இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொழுது , பரிசுத்த ஆவின் அவர் மேல் இறங்கி , தந்தை கடவுள் , "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் " என்று கூறுகிறார் .


பரிசுத்த ஆவி உங்கள் மேலும் இறங்கினார், தந்தை கடவுள் : “
, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் " என்று கூறுகிறார் .

திருமுழுக்கு தண்ணீர் கடவுளின் கருவறையாக இருக்கிறது, அதிலிருந்து நாம் மீண்டும் தந்தை கடவுளின் குடும்பத்தில் பிறக்கிறோம். அவரின் இறையர்சிற்காக இறைசேவை செய்ய பிறக்கிறோம். தீர்த்த தண்ணீரின் முலம் நாம் ஒவ்வொரு முறையும் சிலுவை நம் நெற்றியில் இட்டு கொள்ளும்பொழுது நமது ஞானஸ்நானத்தை புதுபித்து கொள்கிறோம் .

யோர்தான் ஆற்றில், இயேசு சாதாராண மனிதனாக வளர்ந்த அவர்,இறையரசின் இறைசேவைக்காக மீண்டும் இறைவாழ்க்காக பிறந்தார். திருமுழுக்கு நமக்கும் இதனையே செய்கிறது. நீங்கள் அதற்கு முன்னர் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டுமா , அதன் மூலம் நாமும் தந்தை கடவுள் எப்படி பரிசுத்தமாக படைத்தாரோ அதே போல தெய்வீக பரிசுத்தமாக , இறைசேவைக்காக மீண்டும் பிறக்கிறோம்.


திருச்சபையின் சாதாராண காலத்தை, நம் திருமுழுக்கை மீண்டும் புதுபித்து கொண்டு தொடங்குவோம். அதன் முலம் நாம் கிறிஸ்துவின் பரிசுத்த வாழ்வை பின் தொடர்ந்து , அவரின் இறைசேவையை தொடர மீண்டும் பிறக்கிறோம்.

சாத்தானை விட்டு விடுகிறீர்களா?
சாத்தானின் செயல்களை புறந் தள்ளுவீர்களா?
சாத்தானின் பொய் வாக்குறுதிகளை ஒதுக்கி தள்ளுவீர்களா ?

கடவுளை நம்புகிறீர்களா ?
தந்தை கடவுள், இந்த உலகை படைத்தவரை நம்புகிறீர்களா


இயேசு கிறிஸ்துவை நம்புகிறிர்களா? கடவுளின் ஒரே மகன், நம் கடவுள், கன்னி மரியாளிடமிரிந்து பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார் , கல்லறையில் அடக்கம் செய்யபட்டார், மரணத்திலிருந்து உயிர்த்து எழுந்தார். தந்தையின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.
பரிசுத்த ஆவியை நம்புகிறிர்களா ? பரிசத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறிர்களா? புனிதர்களை , பாவ மன்னிப்பை, சரீர உத்தானத்தை , நித்தியவாழ்வை நம்புகிறிர்களா?

அன்பு தந்தை கடவுளே, நான் பாவி, சில நேரங்களில் உங்களை என் வாழ்வின் முதல்வனாக வைப்பதில்லை, என்னை மன்னியும். என்னை மாற்றும், என்னை புதுபித்து உன் பிள்ளையாக மாற்றும். இதனை என் வாழ்வில் காட்ட, எனது வாழ்வு முழுதும் நியே என் கடவுளாக இருக்க வேண்டும். இயேசு எவ்வாறு அவரின் வாழ்வை தந்தை கடவுளின் கைகளில் ஒப்படைத்தாரோ, அதே போல, நானும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். யோவானிடம் இயேசு எப்படி தன்னை புதுபித்து கொண்டாரோ , அதே போல என்னையும் புதுபித்து, இறைசேவை செய்ய என்னை ஆசிர்வதியும்.
இவ்வாறு கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்.

மேலும் கடவுள் உங்களை நோக்கி இவ்வாறு சொல்வார்:
"என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் "

© 2014 by Terry A. Modica

No comments: