Friday, January 30, 2015

பிப்ரவரி 1, 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 1, 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் பொதுகால4ம் வாரம்
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

மாற்கு நற்செய்தி
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(
லூக் 4:31 - 37)
21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ 'என்று இயேசு அதனை அதட்டினார்.26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி இயேசுவின் அதிகாரத்தை நமக்கு எடுத்து காட்டுகிறது. நாமும் நமது வாழ்வில், ஏசுவின் அதிகாரம் உள்ளது என்று அறிந்து அதனை ஏற்று கொண்டால் , கடவுளோடு நாமும் சந்தோசமாய் நமது வாழ்வை கொண்டாட முடியும் , நமது கடினமான காலங்களில் கூட .

ஏன்? ஏனெனில் கிறிஸ்துவின் அதிகாராம் தான் முதன்மையானது, எல்லாவற்றிற்கும் மேலானது. இதன் அர்த்தம் என்னவெனில், கிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் நாம் வைத்த அனைத்தும் கண்டிப்பாக வெற்றியையே தரும். தவறான சூழ்நிலை கூட, தவறானதாக கருதப்படும் நிகழ்ச்சிகள் கூட ஆசிர்வாதமாக மாறும். ஆபத்தானவை கூட வெற்றியை கொடுக்கும். கவலைகள் சந்தோசமாக மாறும். பயன்கள் புதிய வளர்ச்சிக்கு வித்திடும், புதிய அறிவை புதிய அனுபவத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறமையை நமக்கு கொடுக்கும்.

எனினும், நாம் கிறிஸ்துவின் அதிகாரத்தை நிராகரித்து, நாமே நமது பிரச்சினைகளுக்கு முடிவேடுப்பதோ , அல்லது நாமாகவே நமது பிரச்சினைகளை விட்டு வெளியே வர துணிந்தால், இன்னும் பிரச்சினைகள் மோசமாக மாறும். போப் பிரான்சிஸ் அவருடைய கட்டுரையில் (64) நாமே அதிகாரத்தை எடுத்து கொண்டால், சந்தோசத்திற்கு பதில், எல்லாமே பல குழப்பங்களை கொடுக்கும். அவர் இவ்வாறு "நாம் இவ்வுலகில், தற்போது, எல்லா செய்திகளும், ஗஗஗இன்டர்நெட் , தொலைகாட்சி முலம் நமக்கு கிடைக்கிறது. - எல்லாமே ஒன்றாக தான் எடுத்து கொள்ளபடுகிறது - அதனால் பல விசயங்களில் எல்லா முடிவுகளும் எடுக்க நமக்கு துணை யாக இருக்கிறது. ஆனால் , நாம் இதற்கு , இந்த சூழ் நிலைகளுக்கு ஏற்ப முதிர்ச்சியான முறையில் நாம் முடிவெடுக்கும் திறனை பதிலாக எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

மகிழ்ச்சியின் பாதை, இயேசுவின் பாத அடிகளை தொடர்வதில் இருக்கிறது. அவரது அதிகாரத்தில் இருந்து நாம் பயன் பெற, சாத்தானின் சோதனையிலிருந்து வெற்றி பெற , மனித வாழ்வில் துன்பத்திலிருந்து வெளியே வர, இயேசுவின் எடுத்து காட்டான வாழ்வை நாமும் பின் தொடர வேண்டும், அவரது போதனைகளுக்கு கீழ் படிதல் வேண்டும். இயேசுவை முழுதும் நம்ப வேண்டும். அவர் வழி தான் சரியான வழி என்று நாம் புரிந்து கொண்டு அதனை தொடர வேண்டும். அந்த வழி மிகவும் கடினமாக இருந்தால் கூட . இதன் அர்த்தம் என்னவெனில், மீட்பின் வெற்றியை , இயேசுவின் சிலுவை மூலம் நாமும் அடைய தயாராக இருக்கிறோம் .

வெற்றிக்கு குறுக்கு வழி ஒன்று கிடையாது, சாத்தானை வெல்ல சுலபமான வழி கிடையாது. இது உண்மையில்லை எனில், இயேசு சிலுவையில் மரணமடைய தேவை இல்லை.
நல்ல செய்தி - நாம் சந்தோசப்பட காரணம் - மிகவும் அன்புள்ள , எல்லா ஆற்றலும் , எல்லா அறிவும் உடைய கடவுள் இயேசுவின் அதிகாரம் நமக்காக வேலை செய்கிறது . இங்கே கேள்வி நாம் வைப்பது : நாம் நம்மை இந்த இயேசுவின் அதிகாரத்திற்கு அர்ப்பணிப்போமா ?


© 2014 by Terry A. Modica

No comments: