Thursday, February 19, 2015

பிப்ரவரி 22 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 22 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு

Gen 9:8-15
Ps 25:4-9
1 Peter 3:18-22
Mark 1:12-15

மாற்கு நற்செய்தி

இயேசு சோதிக்கப்படுதல்
(
மத் 4:1 - 11; லூக் 4:1 - 13)
12உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(
மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் 'என்று அவர் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

சோதனையை வெற்றி கொள்வது

இன்றைய நற்செய்தி , இயேசு ஞானஸ்நாணம் பெற்ற பின்பு, முதலில் அவர் எதிர்கொண்ட நிகழ்ச்சியை நமக்கு எடுத்து காட்டுகிறது. இயேசு சோதனையை எதிர்கொண்டு வெற்றி கொண்டதை நமக்கு எடுத்து கூறுகிறது .

இயேசுவின் ஞானஸ்நாணத்தின் பிறகு , இயேசு தன்னை முழுதும் தந்தையிடம் தன்னை ஒப்படைத்தார் . தந்தையின் விருப்பத்திற்கு தன்னை ஆட்படுத்தி கொண்டார். தண்ணிரிலிருந்து எழும்போது, அவரின் பழைய வாழ்வை விட்டு விட்டு, புதிய வாழ்வான இறைசேவைக்கு தயாரானார்.

இவரே என் அன்பார்ந்த மகன், என்று தந்தை கடவுள் மகிழ்ந்தார், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் மனிதனில் முழுமையாக இறங்கினார். பரிசுத்த ஆவியும், இயேசுவும் ஏற்கனவே கடவுள் தான், அனால், இயேசுவோ முழு மனிதனாக பிறந்து , பரிசுத்த ஆவியின் முழுதும் ஏற்றார். பரிசுத்த ஆவியை பெற்ற பின்பு ,இயேசு முழுதும் உற்சாகத்தோடு இறைசேவை ஆரம்பித்தார் , ஆனால் அடுத்த செயல், சாத்தான் அவரை சோதித்தது .

இதே நடைமுறை தான் நம் வாழ்விலும் நிகழ்கிறது. விசுவாசத்தில் நாம் புதிய வளர்ச்சியை அனுபவிக்க ஆரம்பிக்கிற போதே , அல்லது தந்தை கடவுளின் அழைப்பை ஏற்று இறையசிற்கு நாம் இறைசேவை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் நமது விசுவாசத்தை சோதிக்கும் செயல்கள் நம்மை தாக்கும். எனினும், இது மாதிரி நடக்காவிட்டால், நம் விசுவாசம் ஆழ்ந்த விசுவாசம் என்று நமக்கு எப்படி தெரியும். ? நாம் தெய்வீக ஆவியில் , பக்தியில் நாம் வளர்ந்து விட்டோம் என்று எப்படி நமக்கு தெரியும். ? இறையர்சிற்காக நாம் எப்படி இவ்வுலகில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

சரியாக நாம் சிந்திக்காமல், நாம் விசுவாசத்தில் வளர்ந்து வருவது , மிக பெரிய மாற்றத்தை உண்டு பண்ண கூடியது அல்ல என்று நாமாக ஒரு முடிவுக்கு வருகிறோம். நாம் சாத்தானிடம் தோற்றுவிடுவோம் , என்று பயந்து , நாம் விசுவாசத்தில் வளர்ந்து ஒன்றும் ஆக போவதில்லை என்று நாம் கிறிஸ்துவோடு இணைந்து இறையரசிர்காக எதுவும் செய்யாமல் இருந்தால், தெய்விக வாழ்வில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வோமா ?


ஆக இன்னும் ஒரு சோதனை!
தவக்காலம் தான் , நாம் சோதனைகளை , சபல ஆசைகளை , நாம் தினம் சந்திக்கும் பாவங்களை , மாற்றி விசுவாசத்தில் நம்மை நாமே வளர்த்து கொள்ள சரியான காலம்.

ஒவ்வொரு முறையும் நாம் பாவத்தில் விழுந்து கடவுளின் பாவ மன்னிப்பை கேட்கும் பொழுது, நாம் இன்னும் விசுவாசத்தில் முழு ஆற்றலோடு இருக்கிறோம். பாவ சங்கீர்த்தனத்தில் இன்னும் முழுமையாக இயேசுவின் அருளை குருவானவர் மூலம் பெற்று, சோதனைகளை நாம் இன்னும் முழுமையான ஆற்றலோடு வெற்றி கொள்வோம்.
இவ்வாறு செய்தால், சாத்தானை முழுமையாக வெற்றி கொண்டு, கடவுளின் கொள்கையை , நோக்கத்தை இவ்வுலகில் வாழ்வும் மக்கள் அனைவரிடமும் நாம் கொண்டு செல்ல முடியும்.
சோதனைகளை ஆசிர்வாதமாக ஏற்றுகொள்ளுங்கள், உங்கள் வாழ்வை புதுபித்து கொள்ள ஒரு வாய்ப்பாக சோதனைகளை எதிர் கொள்ளுங்கள். அதன் மூலம் இயேசுவை போல மாற முயர்சிப்ப்போம், விசுவாசத்தில் இன்னும் நன்று வளர்வோம்.

© 2015 by Terry A. Modica

No comments: