Friday, March 20, 2015

மார்ச் 22 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 22 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலம் 5ம் . ஞாயிறு

Jer 31:31-34
Ps 51:3-4, 12-15
Heb 5:7-9
John 12:20-33

யோவான் நற்செய்தி


கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23இயேசு அவர்களைப் பார்த்து,' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் 'என்றார்.
மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும்
27மேலும் இயேசு,' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் 'என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30இயேசு அவர்களைப் பார்த்து,' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் 'என்றார்.33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)


கடவுளை விசுவசித்து, அவர் மேல் எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள நாம் ஆசைபடுவதும்,இயேசு நம்மை எங்கு அழைத்து சென்றாலும் அவர் பின் செல்ல தயாராய் இருப்பதும், அதே வேளையில் , இந்த ஆசைக்கு ஒரு ஒரு சில இடர்பாடுகள் ஏற்பட்டால், அது ஒன்றும் பாவம் இல்லை.

ஆம் , நமது வாழ்வில் உள்ள முக்கியமானவைகளை இழப்பதற்கு தயாராய் இருக்கிறோம். (நம் சொந்த நிகழ்ச்சிகள், நமது சொந்த ஆசைகள், நமக்கான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என நாமாக முடிவு செய்வது, இன்னும் பல ) இதன் முலம் நாம் கிறிஸ்துவோடு இணைந்து , அவரின் இறைசெவையின் நோக்கத்தோடு இணைகிறோம். நம் சொந்த இழப்பை இழப்பாக கருத வேண்டியதில்லை.


இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் உயிர் தியாகத்தை நினைத்து கலக்கமுற்றார் என்பதை பார்க்கிறோம். ஆமாம், இயேசுவே கலக்கமுற்றார்! கடவுள் அவரை மகிமை படுத்தினார்.

இயேசு இந்த உலகத்திற்கு வந்து, கடவுளின் வழிகள், அவரின் அன்பையும் நமக்கு காட்டி, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்ல வந்தார். இப்போது, நாம், அவரை பின் பற்றுபவர்களாக , கடவுளின் வழியை நாம் இந்த உலகிற்கு சொல்ல அழைக்கப்பட்டிருக்கிறோம், இது நம் கடமையாகும், அருட்சாதனங்கள் முலம் நாம் தயார் படுத்த பட்டிருக்கிறோம். கடவுளின் அன்பையும், கடவுளின் வழியையும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும். அதன் முலம் இயேசு அவர்களை மோட்சத்திற்கு அழைத்து செல்ல முடியும் . இது தான் நமக்கும் குருவானவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இறை சேவை ஆகும்.

ஞானஸ்நாணம் திருவருட்சாதனம் நம்மை இறைபணி அழைப்பிற்கு முதல் முயற்சியாக / அழைப்பாக . இருக்கிறது. உறுதி பூசுதல் நம்மை இறைபணி செய்ய உத்தரவிடுகிறது. பாவ சங்கிர்த்தனம், இதனை இன்னும் சரியாக செய்ய நம்மை தயார் படுத்துகிறது. திருமணமும், பரிசுத்த தளங்களும் நமக்கு இறைசேவை சரி படுத்தி கொள்ள வாய்ப்பு கொடுக்கிறது. நோயாளிகளை மந்திரிப்பது, கிறிஸ்துவின் இரக்கத்தை நாம் சாட்சியாக நோயிலும் நாம் சொல்ல வாய்ப்பாக அமைகிரது. திவ்ய நற்கருணை இயேசுவின் கருணையிலும், இரக்கத்திலும் , சிலுவை பாடுகளிலும் நம்மை முழுமையாக இணைக்கிறது. நாம் செய்ய வேண்டிய இறை சேவையிலும் நம்மை இணைக்கிறது.

நம் அணு தின இறைசேவை : இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல, நாம் மற்றவர்களை அன்பு செய்வது, இயேசு அவர்களுக்கு என்ன செய்வாரோ அதனையே நாமும் செய்வது, நற்செய்தியை அறிவித்து இறைசெவையை தொடர்வோம்.

இயேசுவை மாட்சிமை செய்தது போல , தந்தை கடவுள் நம்மை மாட்சிமைபடுத்துவார் . இரக்கத்துடன் , வெகுமதியுடனும், அவரின் ஏற்புடனும் நாம் மகிமைபடுத்துவார்

நாம் எதிர் நோக்கும் சவால்களால், சில நேரங்களில் கலக்கம் அடையலாம், ஆனால் அதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள் நம்மை ஒவ்வவொரு முறையும் எழ செய்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிலுவைக்கு பின் மீட்பு எப்பொழுது உண்டு

© 2015 by Terry A. Modica




No comments: